GVPrabu
Posts : 116 Points : 272 Join date : 2010-06-01 Age : 40 Location : Kuala Lumpur
| Subject: காதலாய் ஓர் கடிதம் Wed Jun 02, 2010 2:54 am | |
| காதல் தோழியே,
காற்று பட்டு என் கேசம் கலைந்தாலும் உன் கை விரல் கோதும் ஞ்யாபகம்,
மெல்லிசை என் காதில் கேட்க உன் மென்பேச்சு ஞ்யாபகம்
சொர்பமாய் சில சத்தங்கள் கேட்டாலும் சுகமாய் நீ எனக்கு சொடுக்கெடுக்கும் ஞ்யாபகம்
தென்றல் சுமந்த பூவாசம் சுவாசித்தால் உன் கூந்தல் முகர்ந்த ஞ்யாபகம்
நண்பனோடு நெருங்கி நடந்தாலும், நாம் கடற் கறையில் கால் பதித்த ஞ்யாபகம்
நித்தமும் இப்படி,
நிலவு கண்டால் நீ நெருப்பு சுட்டால் நீ தென்றல் தொட்டால் நீ
நிரங்கள் கண்டால் நீ நித்திரை கொண்டால் நீ மரங்கள் பார்த்தால் நீ மழலை கேட்டால் நீ மெளன நேரம் நீ
என உன் ஞ்யாபகம் கொல்லும் முன்
காதலை சொல்லி விட முனைந்து விட்டேன், மேற்கண்ட கவிதையை கடிதமாய் கிறுக்கிவிட்டேன்
இது போல் என் ஞ்யாபகம் உன்னில் இருந்தால் மட்டும்
காதலை பதிலாய் அனுப்பு
இல்லையெல்,
நினைவுகளை நேர் நிறுத்தி
விரையும் வாழ்கையை
சுகமாய் சுமக்க
சத்தியமாய் சம்மதம் எனக்கு.[/s | |
|