பலபடியாக்க முறையில் (குளோனிங்) அபூர்வ ரக நரியை உருவாக்கி தென்கொரிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். உயிரினங்களின் திசுக்களை எடுத்து அவற்றில் மரபணு மாற்றம் செய்து மீண்டும் அதே அச்சில் எடுத்தது போல் இன்னொரு உயிரினத்தை குளோனிங் முறையில் உருவாக்கி விஞ்ஞானிகள் ஏற்கனவே சாதனை ஏற்படுத்தி உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக டொலி என்ற ஆட்டுக்குட்டியை இங்கிலாந்து டாக்டர்கள் குளோனிங் முறையில் உருவாக்கினர். அதன்பிறகு குளோனிங் முறையில் ஆட்டுக்குட்டி, அபூர்வ ரக குரங்குகள், குதிரை, நாய் போன்றவை உருவாக்கப்பட்டன. இப்போது தென் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் அபூர்வ ரக நரியை உருவாக்கியுள்ளனர். ஒரு நரியின் சொமாட்டிக் கலங்களை எடுத்து அதில் மரபணு மாற்றம் செய்து அந்த கரு முட்டைகளை இன்னொரு நாயின் வயிற்றில் செலுத்தி வளரச் செய்தனர். அந்த நாய் 2 அபூர்வ நரிக்குட்டிகளை ஈன்றது. கலங்கள் எடுக்கப்பட்ட அதே நரியை போலவே இந்த குளோனிங் நரிகள் உள்ளன. சுனூ,சுனூ உல்பி என்று அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளன.