தேவையான பொருட்கள்:
****************************
தோசை மாவிற்கு
தோசை மாவு அரைத்தது இருந்தால் அதையே
============== பயன்படுத்தலாம்)
மைதா - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கரைப்பதற்கு
மசாலாவிற்கு:
***************
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு (பெரியதாக இருந்தால் ஒன்று போதும்)
பச்சை மிளகாய் - மூன்று(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சீராக தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லி தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - ஒரு துளி
உப்பு - தேவையான அளவு
பரிமாறும் பொழுது தேவையானது:
**************************************
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி - சிறிது
லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
===========
# மேலே தோசைக்கு கொடுத்துள்ளவற்றை தோசை மாவு பதத்திற்கு
கரைத்து வைத்து கொள்ளவும்.
# தோசைக்கல்லை சூடேற்றி மெல்லிய தோசைகளாக பண்ணி எடுத்து
ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
# ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு
பொன்னிறமானதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கவும்.
# பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து தக்காளி சேர்க்கவும்.
# தணலை மீடியம்மில் வைத்து தக்காளி கரையும்(எண்ணெய் பிரியும்)
வரை வதக்கவும்.
# பின்பு எல்லா தூள்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.(தண்ணீர்
சேர்க்க கூடாது..முதலிலேயே அதற்க்கு தேவையான அளவு எண்ணெய்
ஊற்றி கொள்ளவும்).
# நறுக்கி வைத்துள்ள தோசைகளை இந்த கலவையில் போட்டு எல்லாம்
ஒன்று சேருமாறு கிளறி இறக்கவும்.
# சுவையான கொத்து சில்லி தோசை ரெடி.
# பரிமாறுவதற்கு முன்பு ஒரு வெங்காயத்தை விருப்பப்பட்ட வடிவில்
வெட்டி அதில் கொத்தமல்லி,எலுமிச்சை சாரை ஊற்றி பத்து நிமிடம் ஊற
வைத்து அதை கொத்து சில்லி தோசையின் மேல் தூவியோ அல்லது
பக்கத்தில் அலங்கரித்தோ தர வேண்டும்..
# இந்த வெங்காயம் தோசையுடன் சேரும் பொழுது சுவை ரொம்ப நன்றாக
இருக்கும்.