காதல் ஒரு
கைக்குழந்தை
வா! என்றழைப் போரிடம்
வாஞ்சையுடன்
ஓட்டிகொள்ளும்
பரிசுத்த ஆன்மாக்களின்
பராக்கிரமம்
அன்புக் களஞ்சியத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அரியவகை உணவு
ஏற்றுக்கொண்டவருக்கு
இறைவன்
இல்லை என்பவர்தம்
பகுத்தறிவு
இரு இதயங்கள்
இரத்தம் பாய்ச்சி
மலரச் செய்யும்
மகோன்னத மலர்
கண்கள் வளர்க்கும்
ரகசியத் தேனி
காமம் இதற்கு
கசப்புத் தீனி
ஒவ்வொரு உயிரியும்
ஒளிவு மறைவாகவேனும்
வாசித்துவிட்டுச் செல்லும்
ஒற்றை வரி
இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது...