கண்கள்
ஈரமாகித்தான் போகின்றன
நாம் பிரிந்து
தூரம் செல்லும் - இந்த
துன்பியலை நினைக்கின்றபோது
கனவு பெருத்து
கல்லூரியில் சேர்ந்தேன்
நினைவுப் பருவாய்
நீ உதித்தாய்
ஒரு தட்டில்
உண்டு மகிழ்ந்தோம்
தெரு நடுவில்
கட்டிப் புரண்டோம்
தொடங்கிய சுவடுகள்
தொலைவதற்குள்ளாக
முடிவுரை என்பதிங்கே
முகிழ்த்ததேனோ?
உன் பிரிவு
ரணமாய் இருக்கிறது எனக்கு
பரவாயில்லை
நாளை நீ நாட்டும்
வெற்றிக் கொடியின்
நிழல் தரும் சுகம்...
அது போதும் எனக்கு
காகிதங்களில்
கண்ணீரை நிரப்பி
பிரிகிறோம் தோழா!
நாம் காணும் வலி நிகராக
கல்லறைச் சோகங்களும்
இருக்காது போலும்
விழிகேள மறுக்கிறது
விடை
தூறல்கள் ஒன்றேதான்
அதனது கொடை
கணினி வழியே
கடிதம் அனுப்பு
முடிந்தால்...
உன் சுவாசகாற்றிடம்
என் முகவரியைச்
சொல்லியனுப்பு
எனக்கு வேண்டும்
இன்னொரு பிறப்பு
அப்போதும்
நானே செய்வேன் - உன்
உயிரின் இடவலம் தொடும்
ஆக்கிரமிப்பு
இலக்கணம் கொண்டது
நமது நட்பு!
இதுவரை இயற்றிய
இலக்கியம் அறியாது
இதனது சிறப்ப