BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Button10

 

 இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:15 pm

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு



வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற
மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது
தெரியவந்துள்ளது. மூளைத் தாக்கினால் இறப்பவர்களை விட இதயத் தாக்கினால்
இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை
உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத்
தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

இதயத்தாக்கிற்கான காரணம்

இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் கரோனரித் தமனிகளில் அடைப்பு ஏற்படும்
போது, அவ்வழியே இரத்தவோட்டம் குறைவதாலோ அல்லது முற்றிலுமாகத் தடைப்படுவதன்
விளைவாகவோ இதயத்தாக்கு உண்டாகிறது. இதயத்திற்குக் கிடைக்கும் இரத்தம்
குறிப்பாக இரு முக்கிய காரணங்களால் தடைப்படுகிறது.

1. இரத்தக் குழாய்களில் லிப்பிடுகள் படிந்து குழாய் விட்டம் குறுகுதல்
2. இதயத் தமனிகளில் இரத்தம் உறைந்து போதல்.

இயல்பான நிலைகளில் இரத்த ஓட்டத்தில் எவ்விதத்தடங்கலும் ஏற்படுவதில்லை.
மேற்சொன்ன இரு கோளாறுகள் உண்டாகும் போது, கரோனரித் தமனிகளின் இரத்தக்
குழாய்கள் தடித்து அவற்றின் உள்விட்டம் குறுகுகின்ற போது இரத்தம் போக
முடியாமல் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடுவதாலும் இரத்தத்திலுள்ள
தட்டையங்கள் பிசுபிசுப்படைந்து இரத்தக் குழாய்களில் ஒட்டிக் கொள்வதாலும்
இரத்தம் உறைதல் தூண்டப்பெற்று இரத்தக்குழாய் அடைப்பையும், இதயத்தாக்கையும்
உண்டு பண்ணுகிறது.

உணவுக் கொழுப்பும், லிப்பிடுகளும்

கொலஸ்ட்ரால் உயர்விற்கும், இதய நோய்களுக்கும் இடையேயான தொடர்பு
நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று. கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருக்கின்ற போது,
லிப்போ புரோட்டீன் எனப்படும் கூட்டுப் பொருட்களுடன் இணைந்தே இருக்கிறது.
இந்த லிப்போ புரோட்டீன் என்னும் கொழுப்புப் புரதங்கள் இரு வகைப்படும்.

1. உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்
2. தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன்

இதில் தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் தான் உடல் நலத்திற்கு ஊறு
விளைவிக்கக்கூடியது என்று கருதப்படுகிறது. இதனுடன் கொலஸ்ட்ரால்
இணைகின்றபோது இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்குகிறது. இதனால்
இரத்தக் குழாய்களில் குறுக்கமும் அடைப்பும் ஏற்பட வாய்ப்பாகிறது.

இதற்கு மாறாக உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்களுடன், கொலஸ்ட்ரால் இணைகின்ற
போது, அது இரத்தச் சுற்றோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவதால் இதய
நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன்களின் அளவு குறைவாகவும், உயர் அடர்த்தி
லிப்போ புரோட்டீன்கள் செறிவாகவும் உள்ள உணவுப் பொருள்களில் மீன் வகைகள்
முதலிடம் பெறுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சரியான விகிதத்தில்
மீன் பொருட்கள் சேருமாறு கவனமுடன் திட்டமிடுவது அவசியம். இதன்மூலம் இதய
நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும். மேலும் மீன் இதயத்திற்கேற்ற அரிய
உணவாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளாலும், மருத்துவர்களாலும்
ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற
மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய
உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு
பாதியாகக் குறைக்கப்படுகிறது. தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும்
ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய்
உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய்
எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது
கண்டறியப்பட்டுள்ளது. மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ
புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே
இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள்
பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில்
இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில்
போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன்
வைட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும்
எண்ணெயில் இவ்வைட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள்
இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

இரத்தக் குழாய்களில் படிந்துள்ள லிப்பிடுகளைக் குறைக்கவும், பல்வேறு
காரணங்களால் இரத்தம் உறைவதை தவிர்க்கவும், நோய் நீக்கவல்ல டோஸ்களில் மீன்
எண்ணெய் தேவைப்படுவதால், தினசரி திட்ட உணவுகளில் மீன்களையும் சேர்த்துக்
கொள்வது நல்லது. மேலும் அன்றாடம் மீன் உணவு உண்போர்கள் இடையே நடத்தப்பட்ட
ஆய்வின் மூலம் அவர்களுக்கு இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே
இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற
மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே
சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும்,
அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன.
இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும்
வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 எனப்படும் கொழுப்புப் பொருள்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
சருமநோய் வராமல் தடுக்கிறது.
முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை
நிவர்த்தி செய்கிறது.
மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு வராமல் காக்கிறது.

தவிரவும் இதயநோய் காரணமாக உடற் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற
வகையில் குறைந்த கலோரித் திறனையே மீன் தருகிறது. 100 கிராம் எடையுள்ள மீன்
உணவை உண்கிற போது, கிடைக்கின்ற கலோரிகள் 100 -க்கும் குறைவானதுவே. மேலும்
100 கிராம் மீன் உண்ணும்போது கிடைக்கக்கூடிய கொழுப்பு 0.1 இருந்து 0.2 வரை
மட்டுமே. ஆனால் இதே அளவு (100கிராம்) ஆட்டிறைச்சி 11ம் கொழுப்பினைக்
கொண்டுள்ளது.

100 - 200 கிராம் அளவு மீனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில்
சேர்த்துக் கொண்டால் அது இதய நோய்களைத் தவிர்க்க உதவும். மீன் சாப்பிடப்
பிடிக்காதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை தக்க மருத்துவரின் ஆலோசனைப்படி
எடுத்துக் கொள்ளலாம்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: ஆகவே மீன் சாப்பிடுங்க!   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:17 pm

ஆகவே மீன் சாப்பிடுங்க!




இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Leg_400
விட்டமின் ஈ உடலில் குறைந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்
என்பது பள்ளிக்கூட நூலகளில் காணப்படும் செய்தி. அது தவிர காலில் உணர்ச்சி
குறைந்து நடக்க இயலாத நிலையும் ஏற்படும் என்பது புதிய செய்தி.

பெரிஃபெரல் ஆர்ட்டரி டிசீஸ் (Peripheral Artery Disease PAD) என்பது
மருத்துவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நோய். கால்களில் ஓடும் ரத்த
நாளங்களின் தடிமன் குறைந்து, அதில் கொழுப்பு உள்படிந்து, தொடர்ந்து
கால்வலியும், நடக்கவே இயலாத நிலையும் ஏற்படும். இது மிகவும் சாதாரண நோய்.
உலகில் எண்பது மில்லியன் பேர்களுக்காவது இந்த நோய் இருக்கலாம்.

புற ரத்தநாள நோய்க்கான காரணம் விட்டமின் ஈ குறைபாடு என்பது ஒரு சர்வேயில்
இருந்து வெளிப்பட்டது. 4839 அமெரிக்கர்களின் விட்டமின் ஈ அளவு
கண்காணிக்கப்பட்டது. கூடவே அவர்களது இரத்த கொலஸ்ட்ரல் இரத்த அழுத்தம்
முழங்கால் -மூட்டு இந்டெக்ஸ் (Ankle-Brachial Index) போன்ற புற இரத்தநாள
நோய் தொடர்பான குறிகளும் அளவிடப்பட்டன. உடலில் விட்டமின் ஈ
அதிகமுள்ளவர்களிடம் மிகக் குறைவாகவே புற இரத்தநாள நோய் இருப்பது தெரிந்தது.

எப்படி விட்டமின் ஈ இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது என்பதை டாக்டர்
மைக்கேல் (Michael Milemad, Dept. of medicine and epidemiology &
Population health science. Albert Einstin college of Medicine)
ஆராய்ந்தபோது இரத்த நாளங்களின் மேல் பரப்பிலேயே விட்டமின் ஈ சென்று
உட்காரக் கூடிய புரதங்கள் இருப்பதைக் கண்ணுற்றார். இதன் மூலம் விட்டமின் ஈ
ஹார்மோன்களின் துணையில்லாமல் நேரடியாகவே இரத்த நாளங்களை விரித்து
நிறுத்திக் காப்பாற்றும் என்பது தெரிய வருகிறது. எனவே மீன் சாப்பிடுங்கள்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: இரத்த சோகை இல்லா இந்தியா...   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:18 pm

இரத்த சோகை இல்லா இந்தியா...



இந்திய மருத்துவர் சங்கம் (இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்) தனது இந்த
ஆண்டின் செயல் திட்டமாக அனீமியா ப்ரீ இந்தியா என்று அறிவித்திருக்கிறது.
அனீமியா என நாம் ஆங்கிலத்தில் சொல்வது இரத்தக் குறைபாடு என்ற பொருள் தரும்
சொல்லாகும். அதை மக்களின் வழக்குச் சொல்லில் இரத்த சோகை என்று
குறிப்பிடுகிறோம். எனவே இரத்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது, அது வராமல்
தடுக்க என்ன செய்ய வேண்டும்? அது வந்துவிட்டால் அதற்கு என்ன சிகிச்சை
அளிக்கிறோம் என்ற செய்திகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில்
விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிச் சொல்ல வேண்டியது இந்திய நாட்டின்
மருத்துவர்களாகிய எங்கள் கடமையாகும். எனவே இந்திய மருத்துவர் சங்கக்
கிளைகள் ஆங்காங்கே பொது மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உயிர் திரவம் என நாம் கருதும் இரத்தம் என்பது உடலிலுள்ள மற்ற உறுப்பு
மண்டலங்களைப் போல திரவ நிலையிலுள்ள உடலுறுப்பு என்று கூடச் சொல்லலாம். இதை
ஒரு இணைப்புத்திசு என மருத்துவ அறிவியல் கருதுகின்றது. குருதிக்குறை என்பது
உடலிலுள்ள இரத்தத்தின் அளவு குறைவதாலும் ஏற்படலாம். அந்த நிலை
விபத்துக்களின் போது உண்டாகும் காயங்களிலிருந்து இரத்தம் உடலிருந்து
அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் ஏற்படும் நிலை.

நம் கண்களுக்கு இரத்தம் சிவப்பு நிற நீர்மமாக, திரவமாக தென்பட்டாலும்
உண்மையில் அதில் நீர்ப்பொருளோடு உடல் திசுக்களுக்கு உணவளிக்கும்
பாதுகாப்பளிக்கும் பல்வேறு அணுக்களும் மறைந்துள்ளன. அவற்றை உருப்பெருக்கி
மூலம் பார்க்கும் போது இரத்தில் என்ன வெல்லாம் உள்ளன என அறிந்துகொள்ள
முடியும்.

முதலில் இரத்ததின் அமைப்பை அறிந்து கொள்வோம். இரத்தத்தில் 55 விழுக்காடு
நீர்ப்பொருளும் 45 விழுக்காடு உயிரணுக்களும் உள்ளன. பிளாஸ்மா என்பது நீர்ம
நிலையில் உள்ள இரத்தப் பகுதியாகும். இதை குருதி நீர் என்று கூறலாம். இந்த
குருதி நீரில் இரத்தச் சிவப்பணுக்கள்
மற்றும் வெள்ளையணுக்கள் லுக்கோசைட்ஸ் மற்றும் தட்டணுக்கள் கலந்துள்ளன.

பிளாஸ்மாவில் இருந்து ஃபைப்ரினோஜன் என்னும் புரதம் நீக்கப்பட்ட நிலையில்
அதை சீரம் என்று அழைக்கப்படுகிறது. சீரம் அல்லது பிளாஸ்மாவின் நிறம் வெண்
மஞ்சள் நிறமாகும். இரத்தம் சிவப்பாயிருப்பதற்குக் காரணம்
சிவப்பணுக்களாகும். அதிலும் குறிப்பாக சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின்
என்னும் நிறமிப் பொருளாகும்.

கிரேனுலோசைட்கள் என்பவை நிறக்குருணைகள் கொண்டவை. அவற்றின் அடிப்படையில்
அவற்றை

1. இயோசினோஃபில் அதாவது இயோசின் நிறமேற்கும் செல்கள்.

2. பேசோஃபில்

3. நியூட்ரோஃபில் நிறமேற்காசெல்கள். இவற்றை பாலிமார் ஃபோ நீயூக்ளியர்
லியூக்கோ சைட்கள் அல்லது பாலிமார் ஃப்கள் என்று அழைக்கின்றோம்.

நிறக்குருணைகள் இல்லாதவை ஏகிரேனுலோசைட்டுகல் ஓரணுக்கள் என்றும்
அழைக்கிறோம். மருத்துவர்கள் இரத்த சோதனைக்கு சீட்டு எழுதித்தரும் போது...

R.B.C, Hb%, T.C, D.C. என்று எழுதித் தருவதை பார்த்திருப்பீர்கள். RBC
என்பது இரத்ததில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையாகும். T.C. என்பது மொத்த
வெள்ளணுக்களின் எண்ணிக்கையாகும். நிண அணுக்கள் D.C என்பது Differential
count அதாவது ஒவ்வொரு வகை வெள்ளணுக்களும் மொத்த வெள்ளணுக்களின் எத்தனை
விழுக்காடு என்பதாகும். இரத்த சோதனை முடிவுகளில் DC எனக்குறிப்பிட்டு
P,E,B,L,M எனக்குறிப்பிடுவார்கள். P என்பது பாலிமார்ப்கள் E% என்பது
இயோசினோ ஃபில்களின் விழுக்காடு ஆகும்.

B% என்பது பேசோஃபில்கள்
L% என்பது லிம்ஃபோசைட்கள்
M% என்பது மானோசைட்களைக் குறிக்கும்

சோதனைச்சாலை முடிவுகளைக் குறிக்கும்போது ஒரு கியூபிக் மில்லி மீட்டர்
இரத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன என்று குறிப்பிடுகிறார்கள். இரத்ததில்
எல்லாவகை வெள்ளணுக்கள் ஒரு கியூபிக் மில்லி மீட்டரில் இயல்பளவு 5000 முதல்
10000 வரை ஆகும். இதை 5000-1000 cells/cumm என குறிக்கப்படும்.

இரத்தச் சிவப்பணுக்கள் இயல்பளவு வளர்ந்த ஆண்களில் 4.5 முதல் 5 மில்லியன்
1கியூ. மி.மீ. பெண்களில் 3.9 முதல் 4.5 மில்லியன் / கியூ மி.மீ.
சிவப்பணுக்கள் வட்ட வடிவாகவும் ஓரங்கள் தடித்தும் நடுப்பகுதி மெலிந்தும்
இருபக்கமும் குழிவுடனும் மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகும்.
சிவப்பணுவில் உட்கரு ஊண்மம் எனப்படும் புரோட்டோபிளாசத்தில் ஹீமோகுளோபின்
எனப்படும் நிறமிப் பொருள்தான் சிவப்பணுக்களுக்கும் இரத்திற்கும் சிவப்பு
நிறத்தை கொடுப்பதாகும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் விழுக்காடு குறைவாக
இருக்கும்போது இரத்த சோகை இருப்பதாகக் குறிப்பிடுகிறோம்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:20 pm

ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’




ஜெர்மனியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல அலோபதி மருத்துவராக இருந்த
சாமுவேல் ஹானிமன் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இது ஊசி,
அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவ முறையாகும். அறுவை சிகிச்சைத் தவிர்க்கவும்
முடியும். 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கையாளப்பட்டு மிகவும்
பிரபலமாகி பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வேரூன்றி, அங்குள்ள
மக்களின் நம்பிக்கையை இம்மருத்துவ முறை பெற்றுள்ளது. தமிழகத்திலும்
400க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.

உடல் கூறில் உள்ள குறைகளை மட்டும் கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல்,
நோயாளியின் மன நிலையையும் கண்டறிந்து ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது
இம்மருத்துவ முறையின் சிறப்பாகும். மேலும் ஆரோக்கியமாக உள்ள வருக்கு எது
நோயை உருவாக்குகிறதோ, அப்பொருளைக் கொண்டே நோய்வாய்ப்படு பவருக்குச்
சிகிச்சை அளிப்பது ஹோமியோபதியின் அடிப்படை உதாரணமாக ஜலதோஷத் துக்குக்
காரணமாக இருக்கும் வெங்காயத்தைக் கொண்டு ஹோமியோபதி முறையில் மருந்து
தயாரித்துக் கொடுத்தால் ஜலதோஷத்துக்குச் சிறந்த மருந்தாக இருக்கும்.

அறிவியல்பூர்வமாக ... நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் உள்ள எக்ஸ்ரே,
ரத்த அழுத்தம், ஈசிஜி போன்ற தேவையான சோதனைகளைச் செய்து நோயின் தன்மையை
அறிவியல் பூர்வமாக உறுதி செய்துகொண்ட பிறகே ஹோமியோபதி மருத்துவ முறையிலும்
சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் பத்தியங்கள் இருந்தன
என்றாலும் தற்போது பத்தியம் மிக மிகக் குறைவு. நாள் ஒன்றுக்கு 6 தடவை காபி
குடிப்பவராக இருந்தால் இரண்டு தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம் என்றுதான்
சொல்வோம்.

பக்க விளைவுகள் கிடையாது : இம் மருத்துவ முறையில் வேதியியல் பொருள்கள்
கலக்காமல் மாத்திரைகள் தயாரிக்கப்படுவதால் நோயாளி களுக்கு எவ்விதப் பக்க
விளைவுகளும் ஏற்பாடாது அலோபதி மருத்துவ முறையைப் போல் நோய்க்கான
மாத்திரைகளை நாங்கள் எழுதித் தருவதில்லை. ஏனெனில் நாங்கள் தரும் ஒரு
மாத்திரையிலேயே வைட்டமின் சத்தும் நிறைந்து இருக்கும்.

தாவர மூரிகைகள், சாதாரண உப்பு உள்பட உப்பு வகைகள், மரப்பட்டை போன்ற இயற்கை
ஆதாரங்களைக் கொண்டே ஹோமியோபதி மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. சர்க்கரை
மாத்திரைக் கலவையைக் கலந்தே அனைத்து மாத்திரைகளும் தயாரிக்கப்படுவதால்
ஹோமியோபதி மாத்திரைகள் கசக்காது. கடுகு போன்ற அளவுக்கே இருக்கும்
மாத்திரைகள் அனைத்தும் இனிக்கும்.

‘பைபாஸ்’ அறுவைச்சிகிக்சையை தவிர்க்கலாம்! :

கொழுப்புப் பொருள்கள் காரணமாக இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு
முதரில் நெஞ்சில் வலி ஏற்படுகிறது. அடைப்பின் அளவு அதிகமாக மாரடைப்பு வரை
செல்கிறது. எண்ணெயில் பொரித்த பண்டங்களை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால்
இதய ரத்தக் குழாயில் கொழுப்பு சேர்ந்து இப்பிரச்சினை ஏற்படுகிறது.
கொழுப்புச் சத்துப் பொருள்களைத் தவிர்த்து, காய்கறிகளையும் பழங்களையும்
அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

அலோபதி மருத்துவத்தில் அடைப்பை நீக்குவதற்கான பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்யப்படுகிறது. அடைப்பின் அளவு 70 சதவீதம் வரை இருந்தால் அறுவை சிகிச்சை
இல்லாமல் ஹோமியோபதி மருத்துவ முறையில் ஓராண்டுக்குள் நல்ல பலன் கிடைக்கும்.

சிகிச்சை முறை : அலோபதி மருத்துவ முறையைப் போன்றே அடைப்பின் அளவை அறிய
‘ஆஞ்சியோகிராம்’ சோதனை செய்ய வேண்டும். ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு
அளவுகளை ‘டிரட் மில்’ கருவி மூலம் அறிந்து சிகிச்சை தொடங்கப் படும்.
ஆஞ்சியோகிராம் சோதனைக்கு ரூ. 25ஆயிரம் வரை செலவாகும். அடிப்படை மருத்துவச்
சோதனைகளைச் செய்த பிறகு தினம் ஒரு ஹோமியோபதி மாத்திரையைச் சாப்பிட்டால்
போதும். நான்கு மாதம் கழித்து அதிகச் செலவு பிடிக்கும் ஆஞ்சியோகிராம்
செய்யாமல், தாரியம் ஸ்கேனிங் படச் சோதனை செய்து இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட
அளவு மூலம் நோயாளியின் முன்னேற்றத்தை மதிப்பிட முடியும். மாரடைப்பு
ஏற்படும் நோயாளிகள் தங்களது எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

ஆஸ்துமா : சுற்றுச்சூழல் மாசுகள், காற்றில் அதிக ஈரப்பதம், சுத்தம் இல்லாமை
ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, பரம்பரைத் தன்மை ஆகியவை காரணமாக ஆஸ்துமா
நோய் ஏற்படு கிறது. நாய், பூனை போன்ற வீட்டு வளர்ப்புப் பிராணிகளால்
ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா நோய் வர வாய்ப்பு உண்டு. சுவாசக் குழல் வழியாகச்
சரியான முறைப்படி நுரையீரலுக்குக் காற்று வந்து செல்லாது. சுவாசக் குழாய்
சுருங்கி விடுவதால் மூச்சு முட்டும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி
குறையும்போது இந் நோய் தாக்குகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை யாரையும்
எப்போது வேண்டுமானாலும் இந்நோய் தாக்க வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள் : சாதாரணமாக உட்கார்ந்திருக்கும்போது ஓய்வு எடுக்கும்போதும்
மூச்சு வாங்குதல், இருமல், சளியுடன் இருமல் ஆகியவை ஆஸ்துமாவின்
அறிகுறிகளாகும். இது தொற்றுநோய் அல்ல. ஹோமியோபதி மருத்துவ முறையில்
ஆஸ்துமாவைக் குணப்படுத்துவதற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
மாத்திரைகள் உள்ளன. ஒவ்வாமைப் பொருள்கள் சுவாசக் குழாயைத் தாக்குவதை
மாத்திரைகள் தடுத்து விடுகின்றன.

நோய் தீவிரம் இல்லாத சாதாரண நோயாளி தொடர்ந்து ஆறு மாதங்கள் மாத்திரைகள்
சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு மாத்திரை வீதம் மொத்தம் 180
மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் மருத்துவரை நோயாளி சந்திக்க
வேண்டும். நோயாளியின் உடல் நல முன்னேற்றத்துக்கு ஏற்ப மாத்திரைகளின்
வீரியத்தை மாற்றி மாற்று மாத்திரைகள் அளிக்கப்படும்.

உணவுப் பொருள்கள் காரணமாகவும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, சாக்லேட் கலந்த இனிப்புகள் ஆகியவை
ஒத்துக்கொள்ளாதவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஹோமியோபதி மருத்துவ
சிகிச்சையில் ஆஸ்துமாவுக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

அறுவை சிகிச்சை இல்லாமல் சிறு நீரகக்கற்களை அகற்றுதல் :

உப்புத் தன்மை கலந்த குடிநீரைத் தொடர்ந்து குடித்து வருவதாலும் தக்காளி
போன்ற யூரிக் அமிலம் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும்
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். பசலைக் கீரையை அதிகம் சாப்பிடுவதாலும்
கற்கள் உருவாகும். நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் பெரும்பாலும்
சிறுநீரகக் கற்கள் பிரச்சினை ஏற்படுகிறது.

அறிகுறிகள் : விலா எலும்புகளுக்குக் கீழ் கடும் வலி, சிறுநீர் கழிக்கும்
போது எரிச்சல், சிறு நீரில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை சிறுநீரகத்தில்
கற்கள் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் எக்ஸ் ரே அல்லது அல்ட்ரா சோனோகிராம்
செய்து கற்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். அல்ட்ரா சோனோகிராம்
சோதனையில் கற்கள் இருப்பது உறுதியாகிவிட்டால் தக்காளி, பசலைக் கீரையை
உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஹோமியோபதி முறையில் தினம் ஒரு மாத்திரை
வீதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும். கற்கள் சிறியதாக இருந்தால் ஒரு வாரத்திற்
குள்கூட கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும். சிறுநீரைச் சேகரிப்பதன்
மூலம் கற்கள் வெளியேறுவதை நோயாளியே உறுதி செய்து கொள்ளமுடியும்.

1 செமீ. விட்டமுள்ள பெரிய கற்களாக இருந்தால் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து
மாத்திரை சாப்பிட்டால் பலன் கிடைத்துவிடும். பிரச்சினை தீர்ந்தவுடன்
மீண்டும் அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் முழுமையாகக் கரைந்துவிட்டதை
உறுதி செய்து கொள்ள முடியும்.

அலோபதி மருத்துவ முறையில் சிறுநீரகக் கற்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்
படுகிறது; அல்லது ‘ரிதோடிரிப்ஸி’ என்ற கருவி சிகிச்சை மூலம் கற்கள்
உடைக்கப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேறுகின்றன. மீண்டும் மீண்டும் கற்கள்
உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால் ஹோமியோபதி மருத்துவ முறை சிகிச்சையில் கற்கள்
மீண்டும் உருவாக வாய்ப்பே இல்லை. ஆயுள் முழுவதுக்கும் கற்கள் குறித்துக்
கவலை இல்லாமல் இருக்கலாம்.

பித்தப் பையில் கற்கள்:

கல்லீரலுக்குப் பின்புறம் பித்தப்பை உள்ளது. பித்தப் பையில் உள்ள நீர்
கொழுப்புச் சத்துப் பொருள்களைக் கரைத்து ஜீரணிக்க உதவுகிறது. கொழுப்புச்
சத்து அதிகம் உள்ள பால் பொருள் களை அதிகம் சாப்பிடுவதால். கொழுப்புச்
சத்துகள் கரையாமல் பித்தப் பையிலேயே படிந்து கற்களாக மாறுகின்றன. பித்தப்
பையில் கற்கள் உருவாவது ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது.

அறிகுறிகள் : பித்தப் பையில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல் பாகத்தில்
கடும் வலி இருக்கும். உடனடியாக ஹோமியோபதி மருந்துக் கடைக்குச் சென்று
‘மேக்னீஷியா ஃபாஸ்’ மாத்திரைகளை வாங்கி வந்து, அரைமணி நேரத்துக்கு 2
மாத்திரைகள் வீதம் மொத்தம் 4 மாத்திரைகள் சாப்பிட்டால் வலி நிவாரணம்
கிடைக்கும். பின்னர் மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொள்வது அவசியம்.

பித்தப் பையில் உள்ள கற்களையும் அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி
மருத்துவ முறையில் அகற்றிவிடலாம். அலோபதி மருத்துவத்தில் பிரச்சினையைத்
தீர்க்க பித்தப்பையை அகற்றி விடுகிறார்கள். ஆனால் ஹோமியோ பதியில் 6 மாதம்
தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து
மலத்தில் வெளியேறி விடும். ஆறுமாதம் கழித்து எக்ஸ்ரே எடுத்தோ அல்லது
அல்ட்ரா சோனோகிராம் செய்தோ கற்கள் வெளியேறி விட்டதை உறுதி செய்து
கொள்ளலாம். அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை!

குடல்வால் அழற்சி (அப்பண்டிசைட்டிஸ்) :

குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. வயிற்றின் கீழ்ப்
பாகத்தில் கடும் வலி இருக்கும். ஹோமியோபதி மருத்துவ முறையில் குடல் வாலைச்
சுற்றியிருக்கும் நோய்த் தொற்றுக் குச் சிகிச்சை செய்து அறுவை சிகிச்சையைத்
தவிர்த்து விடலாம். வலி லேசாக இருந்தால் ஒரு வாரத்தில் நிவாரணம்
கிடைக்கும். நோயின் தன்மை தீவிரமாக இருந்தால் ஹோமியோபதியில் மூன்று மாதம்
தொடர்ந்து மாத்திரை சாப்பிட பிரச்சினை தீர்ந்துவிடும்.

மூட்டு வலிகள் : உடலில் எலும்புகள் இணையும் இடத்தில் உராய்வு ஏற்படுவதாலும்
எலும்புகள் இணையும் இடத்தைச் சுற்றி இருக்கும் சைனோவில் திரவம் அதிகம்
உற்பத்தி ஆவதாலும் மூட்டு வலி உண்டாகிறது. பரம்பரைத் தன்மையும் காரணமாக
இருக்கலாம். எலும்புகளுக்கு இருபுறங் களிலும் உள்ள தசைகளில் தளர்வு
ஏற்படுவதால் இடைவெளி உண்டாகி மூட்டுவலி ஏற்படுகிறது. மூட்டுவலிகளில் பல வகை
உள்ளன. கை அல்லது கால் பெரு விரலில் ஏற்படும்மூட்டு வலிக்கு கவுட் என்று
பெயர். இது உடலில் யூரிக் அமிலம் அதிகம் ஆவதால் ஏற்படுகிறது. காச நோய்,
சோரியாஸிஸ் போன்ற தோல் நோய் காரணமாகவும் மூட்டு வலி ஏற்படலாம்.

ஹோமியோபதி மருத்துவமுறையில் தரப் படும் மாத்திரைகள் மூட்டுகளைச் சுற்றி
உற்பத்தியாகும் சைனோவில் திரவ உற்பத்தியை இயல்பான நிலைக்குக் கொண்டு வரும்.
தசைகளை வலுப்படுத்தும். சாதாரண மூட்டு வலிக்கு 3 முதல் 6 மாதங்கள்
தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் முழுப் பலன் கிடைத்துவிடும். ஆனால் 15
ஆண்டுகளாக மூட்டு வலியுடன் கஷ்டப்படு பவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குத்
தொடர்ந்து ஹோமியோபதி மாத்திரை சாப்பிட்டால் முழுத் தீர்வு கிடைக்கா
விட்டாலும் திருப்திகரமான பலன் கிடைக்கும்.

எச்சரிக்கை : அலோபதி மருத்துவத்தில் மூட்டு வலிக்காக ஸ்டீராய்ட்
(ஹார்மோன்களை ஊக்குவித்து வலி நிவாரணம் பெறுதல்) மாத்திரைகளைச்
சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து புதிய நோய்கள்
வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பக்க விளைவுகளை முழுமையாகத் தெரிந்து கொண்டே
அலோபதி மருத்துவத்தில் மூட்டுவலிக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

முதுகு வலி : இது உலகப் பிரச்சினை. இது இல்லாதோர் மிகச் சிலரே. இஷ்டம் போல்
உட்காருவது. திரும்புவது. வேலை செய்யும்போது இஷ்டம் போல் நாற்காலியில்
உட்காருவது. ‘ஷாக் அப்சார்பர்’ போதிய அளவுக்கு இல்லாத வாகனங்களில் பயணம்
ஆகியவை காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது.

முதுகு எலும்புத் தண்டுவடத்தில் உள்ள எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு,
எலும்பு களுக்கு இடையே உள்ள இடைவெளி குறுகி நரம்புகள் அழுத்தப்படுவதால் வலி
ஏற்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ முறையில் எலும்புகளை அகலப்படுத்தி
நரம்புகள் அழுத்தப்படுவதைத் தடுக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில உடல்
பயிற்சிகள் மூலம் நிவாரணம் கிடைக்கும். ஹோமியோபதி மருத்துவ முறையில் 3
முதல் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் நிவாரணம்
கிடைக்கும்.

நோய்கள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது சிகிச்சை பெற்று நிரந்தர நிவாரணம்
பெற பக்க விளைவுகள் இல்லாத ஹோமியோபதி மருத்துவ முறை மிகச் சிறந்தது.

ஹோமியோபதி மாத்திரை பட்டியல்

காய்ச்சல், மூட்டு வலி - RHUS TOX

அதிகக்காய்ச்சல், கடும் தலைவலி - BELLADONNA

அஜீரணம், வயிற்றைக் கலக்கும் உணர்வு - NUX VOM

சீதபேதி - MERC SOL (மெர்க் சால்)

வயிற்றுப்போக்கு - VERATRUM ALBUM (வெரட்ரம் ஆல்பம்)

மாத விடாய் உள்பட எல்லாவிதமான வயிற்று வலிக்கும் - MAGNESIA PHOS
(மெக்னீசியா ஃபாஸ்)

கடும் வயிற்று வலி (முன்பக்கமாகக் குனிந்தால் சிறிது நிவாரணம் கிடைக்கும்)
- COLOCYNTH (கோலோசிந்த்)

வாயுப் பிரச்சினை - CARBO VEG (கார்போ வெஜ்)

மூச்சு இரைப்பு, மார்புச் சளி - IPECAC (இபிகாக்)

காயங்கள் - ARNICA (ஆர்னிகா)

காயங்கள் ஆறுவதற்கு, நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க - CALENDULA CREAM
(காலண்டுல்லா கிரீம்)

எல்லா ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்கும்.

ஹோமியோபதி மாத்திரைகளுக்கு கம்பெனிப் பெயர்கள் கிடையாது. இங்கு
கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை மருத்துவப் பெயரில்தான் உலகம் முழுவதும்
மாத்திரைகள் விற்கப்படுகின்றன.

கடுகு அளவு இருக்கும் மாத்திரைகளை ஒரு டிராம் பாட்டில் வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள்.

வலி கடுமையாக இருந்தால், அரை மணிக்கு ஒரு முறை மூன்று மாத்திரைகள் சாப்பிட
வேண்டும்.

பொறுத்துக்கொள்ளக் கூடிய அளவில் வலி இருந்தால் காலை, நண்பகல், மாலை, இரவு
என தலா மூன்று மாத்திரைகள் சாப்பிடவேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம்
முன்பு மாத்திரைகளைச் சாப்பிடவேண்டும்
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: இதயம் செயல்படும் முறை   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:21 pm

இதயம் செயல்படும் முறை




நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது.
இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.
இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச்
செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.

இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு
பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது.
அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும்
(கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது
மேல் அறைக்கு வந்து சேரும்.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள்,
வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச்
செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன்
வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின்
மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயத்தின் சுருங்கி விரியும்
தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும்
செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல்
முழுவதும் ரத்தம் பரவுகிறது.

இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?

நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு
கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை
இல்லை. தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற
உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.

ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக
முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே
இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது.
உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள்
போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள்
பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள
முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துகோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக்
கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து
இயங்குகிறது.

இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஏன்?

இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற
உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப
இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு
மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு
மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு
நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன.
ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு,
இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

ஹார்மோன் செயல்பாடுகள் :


அட்ரீனலின் - இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம்
மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு
அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் - இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சி மிகவும்
முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களை இது கட்டுப்
படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

பிற காரணங்கள் :

சிரைக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும்,
ரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க வோ, குறைக்கவோ
செய்யும்.

இதயத் துடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது ?

இதயத்தின் இயக்கத்தைப் போலவே, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் நரம்பு
மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்தில்
இருந்து வரும்
நரம்புகள் இதயத்தில் வியாபித்திருக்கும். இவை, இதயத்தின் வலது பக்க மேல்
அறையில் ந.அ. மின் குமிழில் (ந.அ. சர்க்ங்-நண்ய்ர்-அற்ழ்ண்ஹப் சர்க்ங்)
குவிந் திருக்கும். இதில் இருந்து தொடர்ந்து மின் னோட்டம் ஏற்படும். இந்த
மின்னோட்டம், அருகில் இருக்கும் (மின் குமிழ்) மேல் அறைக்கும், கீழ்
அறைக்கும் மையமாக அமைந்துள்ள மின் குமிழிக்குப் பரவும். அங்கிருந்து
பிரியும் நரம்பிழைகள் மூலமாக வலது மற்றும் இடது கீழ் அறைக்கு மின்னோட்டம்
பரவும். இதனால் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

அதாவது, இதயத் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதில் உள்ள வால்வுகள் மூடித்
திறக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை ஏற்ப டுத்தக்கூடிய மின் குமிழ் மற்றும்
மின்னோட்ட இழைகளில் கோளாறுகள் ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறையும் அல்லது
அதிகரிக்கும் அல்லது சீரில்லாமல் துடிக்கும்.

சாதாரணமாக, ந.அ மின் குமிழ் எத்தனை முறை இதயத்தில் மின்னோட்டத்தைப்
பாய்ச்சுகிறதோ அத்தனை முறை இதயத்துடிப்பு இருக்கும். இது சராசரியாக
நிமிடத்துக்கு 72 முறையாக இருக்கும். அதாவது, இதயம் ஒரு நிமிடத்துக்கு 72
முறை துடிக்கும்.

இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு ?
இதயத் துடிப்பு என்பது இதய இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம்
துடிக்கும் போது பெருந்தமனியின் ரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள்
விரிவடையும். இதனால், ஏற்ப டுவதே நாடித் துடிப்பு.. ஆக, இதயத் துடிப்பு
எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.

இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும் ?

இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல்
காரணங்
களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை
அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த
நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம்,
அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை
அதிகரிக்கும்போதும்இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைக்கக்
விடும்.

இதயத் துடிப்பு எப்போது குறையும் ?

தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு
பொதுவாகக் குறைந்து காணப்படும்.

ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில
சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும்.
அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு என்றும் 60க்குக்
குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு என்றும் சொல்வார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு
மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து
முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரண மாகவே இதயம்
நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.

மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு
நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கு
இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

இதயத்தின் அமைப்பு

இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை,
இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப்
புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில்
நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன்,
இதயத்தைத்
திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது.
இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன.
மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச்
சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற
இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்
அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள்
‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

இதய வால்வுகள் :

இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.
அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில்
திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல்
தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலது
ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு
மூவிதழ் வால்வு என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள்
அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்றும் பெயர்.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும்
ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’
தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள்
அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல்
‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.

வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல்
தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல்
பிறைச்சந்திர வால்வு என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள்
சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும்
வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ என்று பெயர்.

இதயத்துக்கும் ரத்தம் தேவை :

உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான
சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத்
தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின்
பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம்
தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில்
அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது.
ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம்
கிடைக்கிறது.இதய ஒலிகள் :
இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன்
மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம்
செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய
ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்
மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.

இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி,
இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன.
ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த
நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது
மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்

முதலாவது ஒலி :

இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை
களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது,
மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.

இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.
மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக்
கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல்
ஒலி.

முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது,
மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத்
துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ,
குறைவாகவோ இருக்கும்.

இரண்டாவது ஒலி :

கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல்
பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த
ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல்
பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது
ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக
இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம்
படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு
குறைவாக இருக்கும்

மூன்றாவது ஒலி :

இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்
போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது
ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15
விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர்,
கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம்
செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.

முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது,
குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.

நான்காவது ஒலி :

மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்
அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு
ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி
ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.

இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு,
இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற
பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.

பிற இதய ஒலிகள் :

மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால்
அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.

இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச்
சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப்
பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப்
உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:22 pm

விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு



ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று
டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம்.
ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள்
மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு
இருப்பவர்களும் உண்டு.

முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில்
நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம்
என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள்
இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக
பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு
என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும்
ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த
குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது
கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று
பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:23 pm

மாரடைப்பு நோயை குணமாக்கும் ஸ்டெம்செல்கள்



இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Stemcell_400
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு நபர் மாரடைப்பினால்
பாதிக்கப்படுகிறார். தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் மாரடைப்பு நோயினால்
பலர் முடங்கிப் போய்விடுகின்றனர். மூளை செல்கள் சேதமடைந்து போவதால் இந்த
முடக்கம் ஏற்படுகிறது.

மாரடைப்பு நோயினால் சேதமைடைந்த மூளையின் திசுக்கள் ஸ்டெம் செல்களால்
சீரமைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எலிகளில் செய்யப்பட்டுள்ள
இந்த ஆய்வு இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
லண்டன் கிங் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மைக் மோடோ என்பவரும் அவருடைய
குழுவினரும் இதுபற்றி ஆராய்ந்து வருகின்றனர். மாரடைப்பினால்
சேதப்படுத்தப்பட்ட மூளை செல்கள் ஸ்டெம் செல்கள் உதவியால் ஏழு நாட்களுக்குள்
புனரமைக்கப்படுவதை இந்தக்குழு மெய்ப்பித்துள்ளது.

மாரடைப்பின்போது மூளை செல்கள் இறப்பதால் வெற்றிடம் ஏற்படுகிறது. இறந்துபோன
மூளை திசுக்களை மீண்டும் உருவாக்குவதில்தான் இந்த ஆய்வின் முக்கியத்துவம்
இருக்கிறது. ஸ்டெம் செல்களை தாங்கிப் பிடிப்பதற்கான ஒரு தற்காலிக
தாங்குதளமாக தானாகவே சிதைவடையக்கூடிய PLGA என்ற பாலிமரை விஞ்ஞானிகள்
பயன்படுத்தி இந்த சாதனையை எலிகளில் நிகழ்த்தியுள்ளனர்.

ஸ்டெம் செல்களால் நிரப்பப்பட்ட PLGA துகள்களை மிக நுண்ணிய ஊசிகள் மூலம்
மூளைசெல்கள் இறப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு செலுத்துகிறார்கள்.
தொடக்கத்தில் இந்த ஸ்டெம் செல்கள் வெற்றிடத்தை நிரப்புகின்றன. பின்னர்
அருகில் உள்ள செல்களில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு திசுக்களாக
உருவெடுக்கின்றன. சில நாட்களில் இந்த திசுக்கள் மூளை செல்களுடன்
தொடர்புகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. தாங்குதளமாக பயன்பட்ட PLGA துகள்கள்
சிதைவடையத் தொடங்கியதும் அந்த இடத்தை இரத்தக்குழாய்களும், நார்ப்பொருளும்
நிரப்பிவிடுகின்றன.

ஸ்டெம் செல் மருத்துவத்துறையில் இன்னும் ஒருபடி முன்னேற்றம்
ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்போது மாரடைப்பினால்
ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்கும் முயற்சி வெற்றி பெற்றிருந்தாலும் இந்த
ஆய்வு இன்னும் பல படிகளைக்கடந்த பிறகுதான் மனிதர்களுக்கு பயன்படுமாறு
செய்யமுடியும்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: சுவாசமும் நுரையீரலும்   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:25 pm

சுவாசமும் நுரையீரலும்







இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Lungs_299
“தூங்கையிலே வாங்குகிற மூச்சு; அது சுழிமாறிப்போனாலும் போச்சு” என்று
சுவாசத்தின் பெருமையைக் கூறுவார்கள். உணவும் தண்ணீரும் இல்லாமல்
நாட்கணக்கில் இருக்கலாம். ஆனால் சுவாசம் இல்லாமல் சில நிமிடங்களுக்குமேல்
இருக்கமுடியாது.

ஒரு நிமிடத்திற்கு 16 அல்லது 18 முறைகள் நாம் சுவாசிக்கிறோம். ஒரு முறை
சுவாசிப்பதற்குள் நம்முடைய இதயம் நான்குமுறை துடிக்கிறது. சுவாசிக்கும்
செயல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. சுவாசமும், இதயத்துடிப்பும் அனிச்சை
செயல்கள் எனப்படும். மூச்சின் இயக்கமும், இதயத்துடிப்பும் ஒரு உயிரில்
முதன்முதலாக எவ்வாறு ஆரம்பித்தன என்பது புரியாத புதிர். சுவாசிப்பதில் உள்ள
ஒழுங்கையும், இதயத்தின் இயக்கத்தோடு அதற்குள்ள இசைவையும் ஆராயப்புகுந்தால்
மனித மனம் தெளிவடையும்.

காற்றை உள்ளே இழுக்கும்போது நுரையீரல்கள் நன்றாக விரிவடையவேண்டும்.
நிமிர்ந்து உட்கார்ந்து அல்லது நிமிர்ந்து நின்று சுவாசிப்பதால்
உடலுக்குத்தேவையான ஆக்சிஜன் முழுஅளவில் நுரையீரலுக்குள் செல்லும்.
சுவாசத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்தால் நீர்க்கோவை, காசநோய் போன்ற
வியாதிகள் உடலைத்தாக்கும். நுரையீரலுக்குள் செல்லும் ஆக்சிஜன்
இரத்தஓட்டத்தில் கலந்துவிடுகிறது. இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு
நுரையீரல் வழியாக வெளித்தள்ளப்படுகிறது. இந்த கார்பன் டை ஆக்சைடு வாசனை
அற்றது. ஆனால் மனிதர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றில் பெரும்பாலும் ஒரு
கெட்ட வாசனை இருக்கும். இதற்குக்காரணம், மனித உடலில் உள்ள அசுத்தம்,
சிதைந்த பற்கள், நோயுற்ற தொண்டைச்சதைகள் மற்றும் நோயுற்ற காற்றறைகள்
ஆகியவை.

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Lungs_400
புகையிலைப்புகை மூச்சு உறுப்புகளைப் பாதிக்கிறது. நுரையீரலின் உள்
உறையைக்கெடுக்கிறது. மது அருந்தியவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம்
மூச்சுக்காற்றில் மதுவின் வாடை அடிக்கும். இரத்தத்தோடு கலந்த மது
நுரையீரல்களுக்கு வந்ததும் நுரையீரல் மதுவில் இருக்கும் நஞ்சை வேகமாக
அப்புறப்படுத்தும் முயற்சிதான் அந்த கெட்ட வாடை.

சுவாசத்தை நாம் சுவாசிப்போம். சுவாசம் நம்மை சுவாசிக்க நாம் வழிசெய்து
கொடுப்போம்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு    இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:27 pm

அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு



மறுவாசிப்பு, மறுவாசிப்பு அப்படீன்னு சொல்றாங்களே, முயல் ஆமையை ஓட்டப்
பந்தயத்திற்கு அழைத்த நம்ம பாட்டி காலத்துக் கதையைக் கொஞ்சம் வேறு மாதிரி
வாசிக்கலாம், வருகிறீர்களா?

வாட்ட சாட்டமான, வஸ்தாது உஸ்தாது ‘வேகத் திரு' முயலார் அவர்கள் `சோகத்
திரு' ஆமையை "என்னவே, ரன்னிங் ரேஸ் வச்சிக்குருவோம், வர்றீயளா" என்று
தெனாவெட்டாகக் கேட்கிறார். அசராத ஆமையார் இப்படி பதில் கொடுக்கிறார்: "என்ன
இப்படி கேட்டுப்புட்டியள், இப்பமே `ஸ்டார்ட்' சொல்லிரும், வந்துருதேன்"
முயல் வகையறாக்களின் வேக பிரதாபங்களை, இணையதளத்தில் `கூகிள் சர்ச்'சில்
பார்த்துப் பார்த்து அந்தப் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு
தீர்மானமான முடிவோடு `ஸ்போர்ட்ஸ் சர்ட்' மாட்டிக் கொண்டு வந்து நிற்கும்
ஆமையார், பந்தயம் தொடங்கிய மாத்திரத்தில் எகிறிக் குதித்துப் பறந்து ஓட மகா
முயற்சி எடுக்கலானார். பிறகென்ன, உடலுக்குத் தாங்காத அளவுக்கதிகமான அந்த
செய்கையைத் (Exertion) தாள மாட்டாது ரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதற,
சோகத்திரு ‘தெய்வத் திரு' ஆகிவிடுகிறார்.

பதட்டம், கலக்கம், ஓயாத மன அழுத்தம் இன்றைய வாழ்க்கையின் இலவச இணைப்பாக
வந்து குடியேறி விடுகிறது. ‘ஹைபர் டென்ஷன்' நடுத்தர வர்கத்தின் விவாதப்
பொருளாகி இருப்பது, ‘தி ஹிண்டு' நாளேடு அண்மையில் (20.08.2007) தலையங்கம்
எழுதி எச்சரிக்கும் அளவிற்குப் போயிருக்கிறது.

சிறுநீரக உதவி அறக்கட்டளை (KHT) என்ற அமைப்பு மூலம் ஸ்ரீபெரும்புதூரில்
தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளும், மருத்துவப் பணிகளும் உயர் ரத்த அழுத்த
கேஸ்களை 10ரூ குறைத்திருப்பதாக டாக்டர் மணி கூறுகிறார். அவரது தலைமையிலான
அந்தக் குழு உணவு வகைகள், வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்யாமல்
‘டென்ஷனை'த் தவிர்க்க முடியாதென தெரிவிக்கின்றனர்.

இதைச் சொன்னதற்கே, ‘அதெப்படி சார் முடியும்', என்று டென்ஷனாகி விட்டார்
நண்பர் ஒருவர். அவரைச் சொல்லிப் பயனில்லை. நமக்கு வழிகாட்டியாக நாம்
புரிந்து வைத்திருக்கிற விவகாரங்கள் அப்படி. தொலைக்காட்சி விளம்பரங்கள்
குழந்தைகளின் டிபன்பாக்சையும், வீட்டு ஃப்ரிஜ்களையும் ‘ரொப்புகின்றன'. உயர்
வெப்பத் தீயில் வாட்டி எடுத்துத் தயாராகும் உணவின் கொலஸ்ட்ரால் ஒரு
பக்கம். சுவையூட்டி அஜினமாட்டோ வகையறாக்களின் கைவரிசை ஒரு பக்கம். எல்லா
பிஸ்கட்டுகள், சிப்ஸ் தயாரிப்பிலும் 200ரூக்கு மேல் உப்பு அள்ளிக்
கொட்டுகிறார்கள். ஓட்டல் ‘சாம்பார்'களைக் கேட்க வேண்டியதில்லை. மாங்காய்த்
துண்டு முதல் வேகவைத்த ‘வேர்க்கடலை மிக்ஸ்' வரை நமக்கு உப்பு ருசி தேவையாய்
இருக்கிறது. போதாததற்கு ‘ரொம்ப நாள் வச்சுக்கலாம்' என்று டப்பா டப்பாவாக
பதப்படுத்தப்பட்ட (Processed Items) உணவு சமாச்சாரங்கள்-வாங்கினீயா,
இல்லையா என்று மிரட்டும் விளம்பரங்கள்.

இந்த விளம்பரங்களை எங்கே நாம் கவனிக்காது விட்டுவிவோமோ என்று, வேண்டுமென்றே
அவற்றின் ஒலியின் அளவு கூட்டப்பட்டிருக்கிறது. மெகா சீரியல் நாயகி
மிரட்டலை விட, தொடர்ந்து வரும் விளம்பரங்களின் அதட்டல் அதனால்தான் தலையில்
இடியாய் வந்து இறங்குகிறது. இந்தப் பேரோசைகள் (Noise Pollution) மன
அழுத்தத்தை மேலும் கூட்டுகின்றன.

பதட்டமான வாழ்க்கையை நாம் ‘க்யூ'வில் நின்று ‘ஏடிஎம்' கார்டு போட்டு அல்லவா
வாங்கத் துடிக்கிறோம்.

கடந்த மாதம் சென்னை புறநகர் ரயில் பயணத்தில் கோடம்பாக்கத்திலிருந்து,
கடற்கரை வரை மாறி மாறி யார் யாரிடமோ ‘செல்'லில் பேசிக்கொண்டே வந்தார்
ஒருவர். அவர் திருவண்ணாமலையை அடுத்த சிறு நகரத்திலிருந்து அவசர வேலையாக
குடும்பத்தோடு சென்னை வந்திருக்கிறார். அவரது மகன் படிக்கும் பள்ளியில் ஆடி
பதினெட்டுக்காக திடீரென்று ஒரு வாரம் லீவு விட்ட செய்தி இங்கே வந்த
பிறகுதான் தெரிகிறது. பையன் என்ன ஆவான் என்பதுதான் பதட்டம். முழுமையும்
சொன்னால்தானே உங்களுக்குப் புரியும்?

பையன் படிப்பது திருச்செங்கோட்டில் - போர்டிங் ஸ்கூல்! விடுதிக்கும்
விடுப்பு. மூடிவிடுவார்கள். இரண்டு பஸ் மாறி பையன் சொந்த ஊர் வரவேண்டும் -
வீட்டிலோ ஆள் யாரும் இல்லை. எல்லாம் சென்னையில்!

"பையன் பிளஸ் டூ வா, சார்," என்று மெதுவாகப் புகுந்தேன் நான்.

"இல்ல சார், ஏழாவது" என்றாரே பார்க்கணும்.

"இந்த வயசுல எதுக்கு சார் ஹாஸ்டல்"- நான் விடுவதாயில்லை.

"பையன் முரடா இருக்கறான் சார், அதான் ‘டிஸிப்ளின்' வேணும்னுட்டு அங்கே
சேத்திருக்கோம்..."-அவர்.

"இன்னும் முரடா இல்ல சார் ஆவான். நீங்களும் இல்ல பதட்டப்பட்டுக்கிட்டே
பொழுதை ஓட்டணும்", என்று நான் சொல்ல அவர் பதிலேதும் சொல்லவில்லை.

டிஸிப்ளின், போட்டி, முதல் ரேங்க், பெரிய படிப்பு... என லட்சிய மைல்கற்களை
நோக்கிய பாதையில் குழந்தைகளைப் பதட்டப்படுத்தி நாமும் அழுத்தத்திற்கு
ஆளாகிறோம்.

‘ரிலாக்ஸ் பண்ண டி.வி. பார்க்கிறேன் என்று ‘கிரிக்கெட்' பார்க்கிற கூட்டம்
எத்தனை பதட்டம் அடைகிறது? ‘உலகக் கோப்பை' பார்த்த ஆசாமி நாற்காலியிலேயே கதை
முடித்துக் கொண்டார் அல்லவா? அவ்வளவு ஏன், சேனலை மாற்றப் போனால், ‘ஏய்,
மாத்தாதே' என்று WWF நமது ஹாலுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்து விடுகிறதே...

வேலை நேரம் அதிகரிப்பதும், பளு கூடுவதும் யோசிக்கக் கூட நேரமின்றிச்
செய்கிறது பிறகு உறக்கத்திலிருந்து திருடப்படும் கொஞ்சம் ‘ரிலாக்சேஷன்'
எப்படி உண்மையான ‘ஓய்வு' அளிக்கும் நேரமாக இருக்க முடியும்? வங்கி
நிர்வாகம் ஒன்று அண்மையில், ஊழியர்கள் டென்ஷன் படக்கூடாது. ‘வாக்கிங்' போக
வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கடக்க
வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்களாம். நல்ல விஷயம்! ஆனால்,
கெடுபிடி நிறைந்த பணிச்சூழல், எப்படி பதட்டமின்றி வாழ அனுமதிக்கும்?

8 மணி நேர வேலை என்பது மட்டுமல்ல 18ம் நூற்றாண்டின் போர்க்குரல்! 8 மணி நேர
ஓய்வு, மீதி உறக்கம் என்பதும் சேர்த்தது அது! சிந்தனைக்கு, கேளிக்கைக்கு,
உற்சாகத்திற்கு நேரம் வேண்டும் என்ற ஆன்மீக (Spiritual) தளத்தில்
வைக்கப்பட்ட கோரிக்கை அது, இன்று ஐ.டி. துறையில், உழைப்போரிடையே எத்தனை மன
இறுக்கம் வெடிக்கிறது பாருங்கள்! அதுதான் அங்குள்ள புத்திசாலி
நிர்வாகங்கள், யோகா- வாழும் கலை-பிறந்தநாள் வாழ்த்து... அது, இது என்று
எப்படியாவது ‘கிடா மடக்கப்' பார்க்கிறார்கள்.

சமூகச் சூழலின் பாதிப்பை அவரவர் சொந்த பிரச்சினையாக நோக்கும் கணத்திலேயே மன
அழுத்தம் கூடி விடுகிறது. தன் வரைக்கும் பார்த்துக் கொண்டால், தான்
மட்டும் எப்படியாவது ஜெயித்து விட்டால் போதும் என்ற சிந்தனை பதட்டங்களை
ஈவிரக்கமின்றிக் கூட்டுகிறது. மன அழுத்தம் ஏற்கனவே இருக்கிற நோய்களின்
சுருதியை இன்னும் கூட்டவும், இல்லாத நோய்களுக்கு அழைப்பு மணியை இசைக்கவும்
செய்கிறது. இதயம், சிறுநீரகம், செரிமான உறுப்புகள் என்று எந்த
அறைக்குள்ளேயும் ‘பதட்டம்' நுழைந்தால் சிக்கல் அதிகரிக்கிறது.

திறந்த மனது, பரந்த எண்ணம், விரிந்த உறவுகள், பகிரும் இன்பங்கள்,
துயரத்தில் தோழமை என்ற வாழ்க்கைமுறை அழுத்த தூசுகளைத் துடைத்து பளுவை
இறக்கி வைக்கிறது. அப்போது ஒலிக்கிற பாடல்கள், ‘சும்மா அதிருதில்ல' என்று
மிரட்டாமல் மெல்லோசையாய் வருடி விடுகிறது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:28 pm

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!



இரத்த அழுத்தம் என்றால் என்ன...?

உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே
இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த
இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட
உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக
அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...?

பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த
உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு
அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும்
உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.

இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) அதுபற்றி
விளக்கம்?


அதாவது சிஸ்டாலிக் பிரசர் இதயம் அழுத்திச் சுருங்கும் போது ஏற்படுவது
டய்ஸ்டாலிக் பிரசர் என்பது இதயம் தளர்ந்து விரியும் போது ஏற்படுவது இதன்
சராசரியான அளவுகள் 120/80 என்பதாகும்.

உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை?

இதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வருவது. அதனால் தான் இதற்கு அமைதியான
ஆட்கொல்லி என்று பெயர். இதன் தாக்கம் என்பது தலைசுற்றல், தலை வலி,
நடக்கும்போது மூச்சு வாங்குதல் போல் தெரிதல், மயக்கம் போன்ற தொல்லைகள்
ஏற்படலாம்.

இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை...?

உயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம்,
சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல்,
சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில்
ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்

இதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை...?

நல்ல உணவுப் பழக்கம் முக்கியம். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம்,
நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க
வேண்டும். தினமும் 45 நிமிடம் கை வீசி நடக்க வேண்டும். மன உளைச்சலுக்கு
இடந்தருதல் ஆகாது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் கலங்காமல் எதையும்
எளிதாகக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தால் என்ன செய்யப் போகிறது உயர்
ரத்த அழுத்தம்?

இதற்கான முதல் உதவிகள் யாவை...?

முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி கேட்டல், மருந்துகளை
ஒழுங்காக உட்கொள்ளல், பால், பலசரக்கு, பண்டிகைக்குப் பணம் ஒதுக்கல் போல்
மருந்துக்கும் மாதம் 300 ரூபாய் ஒதுக்கி வைத்தல், புகை பிடிப்பதைக்
கண்டிப்பாகத் தவிர்த்தல், எப்போதும் முக மலர்ச்சியுடன் இருத்தல் போன்றவை.

பி.பி யே வராதவர்கள் அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும்
உபாயங்கள் யாவை...?


பி.பி. வராதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும்
வரலாம். காரணம் வயது ஏற...ஏற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது.
அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் வருகிறது. எப்படி வயது காரணமாக கண்புரை
நோய் சதைச் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறதோ அது போல் தான் இதுவும். ஆனால்
சில பேருக்கு குறிப்பாக காட்டுவாசிகள் சிலரை பி.பி. அண்டுவதில்லை
என்கிறார்கள். அப்படி ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனாலும் சாத்தியம்
இல்லை. காரணம் இது வயது சம்பந்தப்பட்டது. அப்படி உங்களில் யாருகேனும்
வரவில்லை என்றால் நீங்கள் யோகக்காரர்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு யோகம்
அடித்தால் நல்லதுதானே. சோம்பலை துரத்தி, முகமலர்ச்சி கூட்டி, மன உளைச்சல்
நீக்கி வாழ்ந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

இதுவரை உயர் ரத்த அழுத்தம் பற்றியே கூறினீர்கள். அழுத்தக் குறைவு
(லோ பிரசர்) பற்றிக் கூறுங்களேன்...?


அழுத்தம் குறைந்த (அ) குறைந்த இரத்த அழுத்தம் பற்றிக் கவலையே வேண்டாம்.
அதனால் தொல்லைகள் இல்லை. அவர்கள் அளவாக உப்புச் சேர்க்கலாம். உணவு
விஷயங்களில் கூட உயர் ரத்த அழுத்தக் காரர்களுக்குத்தான் கெடுபிடிகள்.
இவர்களுக்கில்லை. அதற்காக எப்படியும் சாப்பிடலாம் என்று இல்லை. அளவான நல்ல
உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை எல்லோருக்கும் அவசியம் தானே?
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:29 pm

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...


ஜோத்பூரில் பாலைவன மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சார்பில் சமீபத்தில்
உப்பளத் தொழிலாளர்களிடையே ரத்த அழுத்தம் குறித்த ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
உப்பளங்களில் உப்புத் துகள்களை மிகவும் நெருக்கமாக சுவாசிக்கும்
தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்த நோய் மிகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்
இருக்கின்றன என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

உப்பளங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர்.
ஒரு பிரிவினர் உப்புத்துகள்களை நெருக்கமாக நுகரும் பணிகளில்
அமர்த்தப்பட்டனர். மற்றொரு பிரிவினர் உப்புத் துகள்களை சற்றே தூரத்தில்
கையாளும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். முதல் பிரிவினருக்கு சில
நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அழுத்தம் மிகுந்து இருப்பது
கண்டறியப்பட்டது.

இதுவரை மிகுந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உப்பை உணவில் குறைக்க
வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றது. ஆனால் சுவாச மண்டலத்தில்
செல்லும் உப்புக்காற்று ரத்தத்துடன் கலந்து மிக ரத்த அழுத்தத்தை
உருவாக்கும் என்பது நவீன விஷயமாகும். இது தவிர பாதிக்கப்பட்ட உப்பைத்
தொழிலாளர்களுக்கு இருதயம் மற்றம் இரத்தக் குழாய் நோய்கள் (கார்டியோ
வாஸ்குலார் நோய்கள்- cardio vascular) மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள்
உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய
வந்துள்ளது.

எனவே உப்பளத் தொழிலாளர்கள் முகமூடிகள் அணிந்தோ, பிளாஸ்டிக்கினால் ஆன
கண்ணாடிகளை பயன்படுத்தியோ உப்புத்துகள்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதை
குறைத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. உப்பளத்
தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ரத்தக் கொதிப்பு நிலை தோன்றிய உடனேயே
விரைவிலேயே இரண்டாம் கட்ட நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்றிவிடுகின்றன.
எனவே உப்பளத் தொழிலாளர்கள் முறையான ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ள
வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: இரத்த சோகை எவ்வாறு அறியப்படுகிறது?   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:30 pm

இரத்த சோகை எவ்வாறு அறியப்படுகிறது?



இரத்த சோகை நோயாளிக்கு ஏற்படும் தொந்தரவுகளிலிருந்தும் அல்லது மருத்துவர்
பொதுவாக பரிசோதிக்கும்போது அல்லது பொது இரத்தப் பரிசோதனைகள் போதும் தெரிய
வருகிறது.

இரத்த சோகையால் நோயாளிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள்:

1. படிப்படியாக அதிகரித்து வரும் களைப்பு, எடைக்குறைவு பசியின்மை.
2. கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்
3. வாய்ப்புண், பிறப்பு உறுப்புகளில் புண்கள்.
4. மாதவிடாய் காரணமின்றி தள்ளிப்போதல்.
5. சோர்வு, அடிக்கடி கோபப்படுதல்
6. குறைப்பிரசவம், எடை குறைந்த குழந்தைப் பிரசவம்
7. மேல் மூச்சு வாங்குதல்.
8. கால், முகம் வீக்கம்.
9. மயக்கம், தலைசுற்றல்.
10. மஞ்சள் காமாலை.
11. வயிற்றுவலி.
12. வியர்த்துக் கொட்டுதல்.
13. மயக்கமுடன் வாந்தி.
14. புண்கள் ஆறாமல் இருத்தல்.
15. அடிக்கடி உடல் நலம் குறைதல்.
16. விழுங்குதில் சிரமம்.
17. காரணமற்ற தலைவலி.
18. படபடப்பு
19. கை, கால் குடைச்சல்.
20. குழப்பமான மனநிலை.

மருத்துவரால் அறியப்படுபவை:

1. அதிக நாடித்துடிப்பு.
2. இமைகள், நகங்கள், உதடுகள், நாக்கு வெளுத்துப் போதல்.
3. இருதய செயல்திறன் குறைவிற்கு உண்டான அறிகுறிகள்.
4. சிறிது தூரம் நடந்தால் மேல் மூச்சு - பிறகு உட்கார்ந்திருக்கும் போதோ,
படுத்தாலோ மேல்மூச்சு.
5. இருதயத் துடிப்பு அதிகம்.
6. இரத்த அழுத்தம் குறைதல்.
7. வயிறு வீக்கம், கால் வீக்கம்.
8. மண்ணீரல் வீக்கம்.

இரத்த பரிசோதனைகள் மூலம் அறியப்படுபவை:

1. இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )
2. இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.
3. இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு
4. Hb Electro Phoresis: இயல்புமாறிய Hb கண்டுபிடிப்பது.
5. Bone Marrow-Biopsy: எலும்புக் குருத்து பரிசோதனை இவைகள் மூலம் இரத்த
சிகப்பணுக்கள் சரியான முறையில் உற்பத்தியாகின்றனவா, முழு வளர்ச்சி உள்ளதா
என்பதையும் கண்காணிக்கலாம். இரத்தப்புற்று நோய்களையும் அறியலாம்.
6. ஸ்கேன் மூலம் மண்ணீரல் வீக்கம் அறிதல்.

எப்படி எல்லாம் இரத்த சோகை ஏற்படலாம்?

இரத்த சோகையை உண்டாக்கும் கார்ணங்களை இரண்டு பிரிவுகளின் கீழ் அறியலாம்.

1. குழந்தைகளில் உண்டாகும் இரத்த சோகை.
2. இளம் வயதில் உண்டாகும் இரத்த சோகை.
3. முதிய வயதில் உண்டாகும் இரத்த சோகை.
4. பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகை.

எனப் பிரித்துக் கொள்ளலாம். அல்லது.

1. இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக
2. இரத்தின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.
3. உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக்
குறைவினால் உண்டாகும் இரத்த சோகை.
4. இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை என பிரித்து அறியலாம்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: இரத்த சோகை என்றால் என்ன?   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:31 pm

இரத்த சோகை என்றால் என்ன?



இரத்தத்தில் சிகப்பணுக்குள் ஹீமோகுளோபின் உள்ளது. இதன் அளவு குறையும் போது
இரத்த சோகை உண்டாகிறது. உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் போதிய பிராணவாயு
எடுத்துச் செல்ல உதவுவது இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள், அதிலும்
சிகப்பணுக்களில் அடங்கியுள்ள ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்தும்
புரதச்சத்தும் கலந்த ஒரு பொருள் ஆகும். அது குறையும் போது திசுக்களுக்குக்
கிடைக்கும் பிராண வாயு குறைந்தது. அதனால் இரத்த சோகை உண்டாகி பல தொல்லைகள்
ஏற்படுகின்றன. பெரும்பாலான இரத்த சோகை வகைகள் நிவர்த்தி செய்யக்கூடியவையே!
பல உயிரிழப்புகளும் பின் விளைவுகளும் தடுக்கக் கூடியவைகளே!

மனிதன் சுவாசிக்கையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது காற்றில் உள்ள
பிராணவாயு நுரையீரலுக்குச் சென்று, சென்று அங்கிருந்து இரத்தத்தில் உள்ள
ஹீமோகுளோபினால் ஈர்க்கப்படுகிறது. இவை திசுக்களுக்கு செல்லும்போது தன்னிடம்
உள்ள பிராண வாயுவைக் கொடுத்துவிட்டு கழிவுப்பொருளாக உள்ள கரியமில வாயு (
co2) எடுத்துக்கொண்டு மீண்டும் நுரையீரலை வந்தடைகிறது. வெளிமூச்சு
விடும்பொது இந்த கரியமில வாயு வெளிமூச்சில் வெளியேற்றப்படுகிறது. மீண்டும்
உள் மூச்சின் போது பிராண வாயு உள்ளே இழுக்கப்பட்டு திசுக்களுக்கு கொண்டு
செல்லப்படுகிறது.

இரத்தத்தில் Hb ( ஹீமோகுளோபின் ) அளவு என்ன? எப்போது இரத்த சோகை உள்ளதா என
எண்ணப்படுகிறது?

சாதாரணமாக ஆண்களுக்கு 14.5 gms%-15.5 gms% பெண்களுக்கு 13.5gms%-14.5gms%
இருக்க வேண்டும். “இரத்த சோகையின் அறிகுறிகள்” எப்போதும் தெரியவரும் என்ற
வரைமுறை இல்லை. வயதானவர்களுக்கு சமயங்களில் 10gms% குறைவாக இருந்தால் கூட
எந்த தொந்தரவும் தெரியாது. சாதாரணமாக 50% கீழே Hb இருந்து அதன் விளைவாக
தொந்தரவுகளும் இருந்தால் இரத்த சோகை இருப்பதாக கொள்ளலாம்.

WHO(உலக சுகாதார அமைப்பு) வின் அறிவுரையின்படி கீழ்க்கண்ட அட்டவணையில்
குறிப்பிட்ட அளவிற்கு கீழே ஹீமோகுளோபின் இருந்தால் இரத்த சோகை இருப்பதாக
கருதப்பட வேண்டும்.

ஆண்கள் 13 gms %

பெண்கள் 12 gms %

கர்ப்பிணிகள் 11 gms %

குழந்தைகள் 6 முதல்
6 வருடம் வரை 11 gms %

குழந்தைகள் 6 முதல்
11 வருடம் வரை 12 gms %

சிலவகை இரத்த சோகைகள் தனிப்பட்ட வியாதியாக உருவாவதில்லை. பல சமயங்களில்
வேறு “வியாதிகளின்” பின் விளைவாக ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை
உண்டாகிறது. ஹீமோகுளோபின் மற்றும் B12 Folic acid போன்ற வைட்டமின்கள் தேவை.
உணவில் இந்த சத்துகள் குறைவதாலே (அ) இந்த சத்துகளை குடல் மற்றும்
இரைப்பையிலிருந்து கிரகித்துக்கொள்ள தேவைப்படுகின்ற சக்திகள் உடலில்
சுரக்காததாலோ, இந்த அடிப்படை சத்துகளின் பற்றாக்குறை உருவாக்கி விடுகிறது.
அதன் விளைவாக ஹீமோகுளோபின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இரத்த சோகை உண்டாகிறது.
(உ.ம்) குடல் ,பெருங்குடல் சம்பந்தப்பட்ட வியாதிகள் சிறுநீரகம் பழுதடைதல்
குடல் பூச்சிகள் குடற்புண் முதலியன.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: இரத்த அழுத்தக் குறைவு    இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:33 pm

இரத்த அழுத்தக் குறைவு







நம் உடலில் உள்ள இரத்த ஓட்டம்தான் நம்மை உயிரோடு உலவ விடவும், இயங்கவும்
மிக முக்கிய காரணமாக உள்ளது. நம் உண்ட உணவு, சத்தாக உறிஞ்சப்பட்டு, உடலின்
அனைத்துத் திசுக்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவை எரிக்கப்பட்டு
நம் உடலின் இயக்கம், வளர்ச்சி ஆகியவற்றிற்கு காரணமாகின்றன. இச்சத்துப்
பொருள்கள் உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை நம்
இரத்த ஓட்டமே செய்கிறது. நம் உடலின் பாகங்களின் தேவைக்கேற்ப, இரத்த ஓட்டம்,
உணவுப் பொருள்களிலிருந்து உறிஞ்சப்படும் சத்துக்களை, கூட்டியோ, குறைத்தோ
வழங்கி அந்த பாகங்களின் இயக்கம் சீராக நடைபெற காரணமாகிறது.

எடுத்துக்காட்டாக, நாம் உணவு உட்கொண்டபின், சற்று களைப்பை உணர்வோம். “உண்ட
களைப்பு தொண்டனுக்கும் உண்டு” என்ற பழமொழிகூட அறிவோம். இக்களைப்பு ஏன்
ஏற்படுகிறது? உணவு வயிற்றை அடைந்ததும் செரிமானப் பணி துவங்குகிறது.
செரிமானப் பணியே, அந்த நேரத்தின் பிரதான பணியாவதால், அதிக அளவு இரத்தம்
வயிற்றிற்கு செலுத்தப்படுகிறது. அதனால் உடலின் மற்ற பகுதிகளுக்குச்
செல்லும் இரத்தத்தின் அளவு குறைக்கப்படுகிறது. மூளைக்கு செல்லும்
இரத்தத்தின் அளவும் குறைகிறது. இதனால் தான் உணவு உண்டவுடன் களைப்பு
ஏற்படுகிறது. உணவு உண்டபின் அதிக அளவு இரத்தம் வயிற்றிற்கும், குறைந்த அளவு
இரத்தம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் செலுத்தப்படும் இந்த நிலை, இரத்தக்
குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையால் நிகழ்கிறது.

உணவு உண்ட உடன் வயிற்றுக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் அதிக அளவு
விரிந்து, அதிக அளவு இரத்தத்தை அங்கு செலுத்துகிறது. உடலின் மற்ற
பகுதிகளுக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் சுருங்கி, குறைந்த அளவு
இரத்தத்தையே அப்பகுதிகளுக்கு செலுத்துகின்றன. இவ்வாறு மாறி மாறி சுருங்கி
விரியும் தன்மையுடைய இரத்தக் குழாய்களில் செல்லும் இரத்தத்தின் அளவு
மாறுபாட்டால் தான் நம் உடல் சீராக இயங்க முடிகிறது. இரத்தக் குழாய்கள்
சுருங்கி விரியும் தன்மை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இரத்த அழுத்தமும்
மிகவும் முக்கியம். இரத்த அழுத்தம் சரியான அளவு (120/80 மிமீ) இருந்தால்
தான் உடலின் எல்லா பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம், சமச்சீராக இருக்கும்.
இரத்த அழுத்தம் குறைவு ஏற்படின், உடலின் முக்கிய பாகங்களுக்கு தேவையான அளவு
இரத்தம் செல்லாத நிலை ஏற்படும். எடுத்துக்காட்டாக மூளைக்கு இரத்த ஓட்டம்
சீராக இல்லாவிட்டால் மூளை செயலிழந்து விடும். மூளை செயலிழந்தால், உடலின்
எல்லா பாகங்களும் தன் செயல்பாட்டை நிறுத்திவிடும். அதனால் மரணம் நிகழும்.
இதுபோன்ற ஓர் ஆபத்தான நிலை ஏன் ஏற்படுகிறது? அதை எவ்வாறு தவிர்க்கலாம் என
காண்போம்.

இரத்த அழுத்தக் குறைவு - காரணங்கள்:

1. ஏற்கெனவே குறிப்பிட்டபடி சிலருக்கு இயல்பாகவே இரத்த அழுத்தக் குறைவு
இருக்கும். ஆனால் அவர்களின் இயக்கம் இயல்பானதாகவே இருக்கும். எனவே இதைப்
பற்றி அஞ்சத் தேவையில்லை.

2. உடற்சத்துக் குறைவு: நம் உடலின் இயக்கத்திற்கு தேவையான அளவு உணவு
உட்கொள்ளாமல் இருக்கும் நிலை ஏற்பட்டால், நாளடைவில் இரத்த அழுத்தக் குறைவு
ஏற்படும். இந்நிலையிலும் அதை சீராக்காவிட்டால் ஆபத்தாக முடியும்.

3. ஒவ்வாமை: நாம் உண்ணும் உணவோ (அ) சில மருந்துகளோ நம் உடலுக்கு ஒத்துக்
கொள்ளாத நிலை ஏற்பட்டால் அதையே ‘ஒவ்வாமை’ என்கிறோம். இது மிகவும்
ஆபத்தானது. உடனடியாக சரியான மருத்துவம் செய்யாவிடில் உயிரிழக்கும் ஆபத்து
ஏற்படும்.

4. சில நோய்களின் பின் விளைவாக ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தம்: இரத்த
சோகை, நோய்த் தொற்று, சிறுநீரகக் கோளாறு போன்றவைகளால் இரண்டாம் நிலை
பாதிப்பாக இரத்த அழுத்தக் குறைவு ஏற்படும்.

நோய் கூற்றியல்: ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இரத்தக் குழாய்கள் சரியாக
செயல்படாவிட்டாலும், இரத்த ஓட்டம் உறுப்புகளுக்கு சரியாக இல்லாவிட்டாலும்,
உறுப்புகள் சரியாக செயல்படாத நிலை ஏற்படும். பாதிப்பு ஏற்படும் உறுப்புகளை
பொறுத்து உயிருக்குக் கூட ஆபத்தான நிலை ஏற்படும். மூளைக்குச் செல்லும்
இரத்த ஓட்டம் குறைவால் மூளை செயலிழக்கும் அபாயம் ஏற்படும். இதயத்திற்கு
செல்லும் இரத்த ஓட்டம் குறைந்தால், இதயம் செயலிழந்து மரணம் ஏற்படும். சிறு
நீரகத்திற்கு செல்லும் இரத்த அளவு குறைந்தால், இரத்தம் சுத்தகரிப்பு
பாதிக்கப்படும் நிலை ஏற்படும். அதனால் உடலின் கழிவுப் பொருட்கள்
வெளியேறாமல், உடலில் தேங்கி, உடலின் செயல்பாட்டை பாதிக்கும். சாலை
விபத்துகள்; கத்திக்குத்து, வெட்டு போன்ற காயங்களால் திடீரென்று உண்டாகும்
இரத்த இழப்பு, அறுவை மருத்துவத்தால் சில நேரம் ஏற்படும் இரத்த இழப்பு போன்ற
காரணங்களால் திடீரென ஏற்படும் இரத்த இழப்பால் உடலின் தேவையான இரத்த ஓட்டம்
குறைந்து, இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டு மரணம் நிகழும்.

இரத்த சோகை போன்ற நோய்களால் ஏற்படும் இரத்த அழுத்தக் குறைவு உடனே
ஏற்படாமல், மெதுவாக அதிகமாகும். அதிக அளவு இரத்த சோகை ஏற்பட்டால் இரத்த
அழுத்தக் குறைவு ஏற்பட்டு, முக்கிய பாகங்களுக்கு தேவையான அளவு இரத்தம்
செல்லாத நிலை ஏற்படும். சில வகை தொற்று நோய்களிலும், ஈரல் நோய்களிலும்,
இரண்டாம் நிலை பாதிப்பாக இரத்த அழுத்தக் குறைவு ஏற்படும். இவ்வகை
பாதிப்புகளிலும், இரத்த அழுத்தம் மெதுவாக குறையும். ஒவ்வாமை ஏற்படும்
பொழுது, திடீரென இரத்த அழுத்தக் குறைவு ஏற்படும். உடலுக்கு ‘ஒவ்வாத’
புரதங்கள் உடலில் ஊடுருவும் பொழுது, நோய் எதிர்ப்புச் சக்தி தூண்டப்படும்.
அதனால் இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் இரத்தக் குழாயை விட்டு,
இரத்தப் புரதம் வெளியேறும். இதனால் இரத்த அளவு இரத்தக் குழாய்களில்
குறையும். இதனால் இரத்த அழுத்தக் குறைவு ஏற்படும். நோய்களால் ஏற்படும்
இரத்த அழுத்தக் குறைவு மெதுவாக அதிகரிப்பதால் அதை நோயை சரி செய்யும்
நிலையிலேயே சரியாகிவிடும். ஆனால் அடிபடிதல், ஒவ்வாமை போன்ற நிலைகள் மிகவும்
ஆபத்தானவை. உடனடியாக இரத்த அழுத்தத்தை சீராக்காவிட்டால் உயிருக்கே
ஆபத்தாகி விடும்.

அறிகுறிகள்: லேசான இரத்த அழுத்தக் குறைவு இருப்பின், நோயாளிக்கு அடிக்கடி
தலைச்சுற்று, மயக்கம் ஏற்படும். கை, கால்கள் சில்லிட்டு விடும். வியர்வை,
வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும். நோய்களின் இரண்டாம் நிலை இரத்த
அழுத்தக் குறைவுடன், குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளும் தெரியும்.
ஒவ்வாமையில் உடனடியாக இரத்த அழுத்தத்தை சீராக்கா விட்டால் நிமிடங்களில்
நோயாளி மரணமடைவார். அடிபட்டு இரத்தப் போக்கு ஏற்படும் நிலையிலும் நொடிகளில்
நோயாளி மரணமடைவார்.

மருத்துவம்: இரத்த அழுத்தக் குறைவு எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து
மருத்துவம் செய்தல் அவசியம். நோய்த் தொற்று, இரத்த சோகை போன்றவை மூலம்
ஏற்படும் இரத்த அழுத்தக் குறைவு, மேற்கண்ட நோய்களை சரிசெய்வதிலேயே ஓரளவு
சரியாகிவிடும். சில நேரங்களில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு, இரத்தத்தின்
அளவு குறைவு அடையும் நிலை ஏற்படும். அந்த நிலைகளில் இரத்தக் குழாய்களில்
நேரடியாக குளுகோஸ், இரத்தப் புரத விரிவாக்கி மருந்துகள், இரத்தம் ஆகியவற்றை
செலுத்த வேண்டிய தேவையும் உண்டாகும். ஒவ்வாமை ஏற்படின் மாற்று
மருந்துகளோடு, இரத்த அளவை உயர்த்தும் வகையில் சிரைவழி குளுகோஸ் போன்றவை
உடனே கொடுக்க வேண்டும். அடிபட்டு இரத்தப் போக்கு ஏற்படின் உடனடியாக அடிபட்ட
இடத்தை சரி செய்வதன் மூலம் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்படும். இரத்த இழப்பைப்
பொறுத்து இரத்தம் கொடுக்க வேண்டிய நிலையை மருத்துவர்கள் முடிவு செய்வர்.

சில சமயம் மேற்சொன்ன எந்தக் காரணமும் இன்றி சிலருக்கு இரத்த அழுத்தம்
குறைவு ஏற்படும். அவர்கள் நல்ல சத்துள்ள உணவு வகைகள் (பழங்கள், இளநீர்,
கீரைகள், முட்டை, பால், காய்கறிகள், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், மீன்
போன்றவை) உண்ண வேண்டும். நாளடைவில் இரத்த அழுத்தம் சீர்படும். சிலருக்கு
ஏற்கெனவே இரத்த அழுத்தக் குறைவு இருக்கும். வேலைப்பளு அதிகமாகி,
திடீரென்று, தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படலாம். அவர்களுக்கு உடனடி
ஓய்வு, குளுகோஸ், இளநீர், ஊட்டச் சத்துள்ள உணவுகள், சத்து மாத்திரைகள்
ஆகியவை கொடுக்க வேண்டும்.

பொதுவாக இரத்த அழுத்தக் குறைவு மற்ற நோய்களின் ஓர் அறிகுறியாகவே
வெளிப்படும். நோய் காரணமறிந்து மருத்துவம் செய்வதன் மூலம், இரத்த அழுத்தக்
குறைவை சீராக்க முடியும். சரியான மருத்துவம், காலம் கருதிச் செய்யும்
மருத்துவம் - இந்நிலையை (இரத்த அழுத்தக் குறைவை) சரியாக்கி விடும் என்றால்
மிகையாகாது.







Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: இதயமும், மிகு இரத்த அழுத்தமும்    இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:34 pm

இதயமும், மிகு இரத்த அழுத்தமும்




மிகு இரத்த அழுத்தம் இதயத்தை இரண்டு வகைகளில் பாதிக்கும். இதயத்தமனி மிகு
இரத்த அழுத்தத்தால் சுருக்கமடைவதால் இதயத்திற்கு தேவையான அளவு இரத்தம்
செலுத்தப்படாத நிலை ஏற்படும். இரத்தக்-குழாய்கள் சுருக்கம் சில
நொதியங்களாலும், இதயத்தமனி உட்சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் படிந்து,
அவை கெட்டிப்படுவதாலும் இதயத்தமனி உள்சுற்று சிறுத்துவிடும். இதனால்
மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படும். மாரடைப்பு நோய்க்கு பெரும்பாலும்
மிகு இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயுமே பெரும்பாலான காரணிகளாக உள்ளன.

நாள்பட்ட மிகு இரத்த அழுத்தம் இடது வெண்டிரிக்-கள் உடலுக்கு தேவையான அளவு
இரத்தம் செலுத்த அதிக அளவில் சுருங்கி விரியும். இதனால் இதயத்தின் சதைகள்
பருத்துவிடும். இதில் இடது வெண்டிரிக்கள் அதிக அளவு பெருத்து விடும் நிலை
சில வருடங்களில் உண்டாகி விடும். இதனால் இதயச் செயல்பாடுகள் குறைந்து இதயம்
செயலிழக்கத் துவங்கும். இதனால், நுரையீரல்களில் நீர்கோக்க துவங்கும்.
அதனால் மூச்சிரைப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் இதயம்
முழுமையாக செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால் மரணம் ஏற்படும். இதயம் மிகு
இரத்த அழுத்தத்தால் மேற்சொன்ன இரண்டு வகையில் பாதிக்கப்பட்டாலும்,
மாரடைப்பால் ஏற்படும் மரணம் எதிர்பாராமல் திடீரென்று ஏற்படும். இதயம்
செயலிழப்பதால் ஏற்படும் மரணம் மெதுவாக நிகழும். ஆகையால் மிகு இரத்த
அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.

மூளையும் மிகு இரத்த அழுத்தமும்: இரத்த அழுத்தம் லேசாக கூடுதலாக
இருக்கும்பொழுது தலைவலி, தலைச்சுற்றல், லேசான மயக்கம் போன்றவை ஏற்படும்.
ஆனால் அதுவே இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது, இரத்தக் குழாயிலிருந்து
கொழுப்புப் படிவங்கள் பிய்ந்து, இரத்த ஓட்டத்தோடு சென்று பெருமூளைக்குச்
செல்லும் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்ளும். இதை ‘பெருமூளை தமனி
அடைப்பு’ என்று சொல்வர். சில சமயங்களில் இதே தமனிகள் வெடித்து இரத்தப்
போக்கு மண்டை ஓட்டுக்குள் ஏற்படக்கூடிய நிகழ்ச்சியும் நடக்கலாம். இதை
‘பெருமூளை இரத்தப் போக்கு’ என்று கூறுவர். நம் மூளை மிகவும் செயல்படக்கூடிய
பகுதி. அது செயல்படத் தேவையான சத்துக்கள் இரத்தம் மூலம்தான் செல்கிறது.
திடீரென்று மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்போ
அல்லது இரத்தக் குழாய் வெடிப்போ, மூளையை செயலிழக்கச் செய்யும். மூளை
செயலிழப்பதால், அதிலிருந்து செல்லும் நரம்புகளும் செயலிழந்து விடும்.

இதனால் அந்த நரம்புகள் பரவியுள்ள இடம் முழுமை-யாக செயலிழந்து விடும். இதையே
பக்க வாதம் என்று சொல்கிறோம். இது மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக
மருத்துவம் செய்யவேண்டும். அதிலும் பெருமூளை உதிரப்போக்கு ஏற்பட்ட ஒரு சில
நிமிடங்களில் நோயாளி தன் நினைவு இழந்த நிலைக்குச் சென்று விடுவார். இந்த
நிலையில் உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தையும்
கட்டுப்படுத்தாவிட்டால் நோயாளியின் மரணம் தவிர்க்க முடியாததாகி விடும்.
இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிக அளவாக இருக்கும்பொழுது முதலில் லேசான
அளவு மூளைக்கு செல்லும் இரத்த அளவால், சில நரம்புகள் பாதிக்கப்படும்.
அதனால் முதலில் லேசாக கை, கால்களில் மரப்பு உணர்ச்சி, கை, கால் விரல்களின்
நுனியில் துடிப்புப் போன்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படும். இது நமது மூளை நமக்கு
விடும் எச்சரிக்கையாகும். இதுபோன்ற உணர்வுகள் உண்டானால், உடனே மருத்துவ
ஆலோசனை பெறவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மேற்சொன்ன பேரபாயம்
நேர்ந்துவிடும். எனவே மிகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
இன்றியமையாத தேவையாகும்.

மூளையும், சிறுநீரகங்களும்: நம்முடைய சிறுநீரகங்கள் ஒரு பெரிய தொழிற்சாலை.
நம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருள்களை வெளியேற்றி ஒரு பெரும்
சுத்திகரிப்புப் பணியினை சிறுநீரகங்கள் செய்கின்றன. மிகு இரத்த அழுத்த
நோயில் ஆரம்ப நிலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் நாளடைவில்
சிறுநீரகங்களுக்குச் செல்லும் மிக மெல்லிய, கண்களுக்கு புலப்படாத
தந்துகளில் அடைப்பு ஏற்படும். இதனால் சிறுநீரக செயல்பாடுகள் குறையத்
தொடங்கும். இதனால் சிறுநீரில் நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்துப்
பொருள்கள் வெளியேறத் துவங்கும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு
அதிகமாக, அதிகமாக சிறுநீரகங்கள் நச்சுப் பொருள்களை உடலிலிருந்து பிரித்து,
வெளியேற்றும் செயல்பாடு பாதிப்படையும்.

இதனால் யூரியா, யூரிக் ஆசிட், நைட்ரஜன் போன்ற வெளியேற வேண்டிய நஞ்சுகள்
மீண்டும் உடலில் சேரும். இது உயிருக்கு ஆபத்தானதாகும். இந்த நஞ்சுகள்
ஓரளவிற்கு மேல் சென்றால் நோயாளி ‘தன் நினைவிழப்பார்’. இந்த நிலையில் சரியான
மருத்துவம் செய்யாவிடில் சிறு நீரகங்கள் முழுமையாக செயல்பாட்டை இழந்து
விடும். நோயாளியின் உடலில் தேங்கும் நஞ்சுகளால் நோயாளி மரணமடைவார். இதை
‘யூரிமியா’ என்றழைப்பர்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: பைபாஸ் சர்ஜரி    இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:35 pm

பைபாஸ் சர்ஜரி



இதயத்திலுள்ள சிறு சிறு ரத்த நாளங்களில் பழுது
ஏற்பட்டால் ஆஞ்சியோ ப்ளாஸ்டி சர்ஜரியும், முக்கியமான ரத்தக் குழாயில் பழுது
என்றால் பை பாஸ் சர்ஜரியும் செய்யப்படுகிறது. பை பாஸ் என்பது ரத்தக்
குழாயின் அந்த பகுதிக்குப் பதிலாக மற்றொரு புது ரத்தப் பாதையை
உருவாக்குவதாகும். நோயாளியின் உடலிலிருந்து (கால் பகுதி) ரத்தக் குழாயை
அங்கு வைத்து மாற்றுப் பாதையை அடைப்பதுதான் பை_பாஸ் சர்ஜரி. பை பாஸ்
சிகிச்சை அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் அப்பிரச்னை வருவது அரிது. ஆனால்,
ஆஞ்ஜியோ ப்ளாஸ்டியில் சுமார் இருபது சதவிகிதம் பேருக்குச் சரிசெய்யப்பட்ட
இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்குக் காரணம் கொழுப்பு
சத்தோடு ஸ்கார் திசுக்களும் சேர்ந்துதான் அந்த அடைப்புக்குக் காரணமாக
இருந்திருக்கும்.



கொழுப்புச் சத்தை நீக்கினாலும் ஸ்கார் திசுக்கள் அங்கேயே இருக்க
வாய்ப்புண்டு. மறுபடியும் அங்கு கொழுப்புச்சத்து சேரும் போது மீண்டும்
அடைப்பு ஏற்படலாம். இதற்காக ஒரு ஸ்பெஷல் இரும்பினால் ஆன வலை ஒன்றை இந்த
அடைப்பு இடத்தில் பொருத்தி விட்டால், ரத்தக்குழாய் சுருங்க வாய்ப்பு இல்லை.
நாளடைவில் இந்த வலை உடலோடு ஒன்றிவிடும்.








Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: குட்டி இதயமே நலம் தானா?   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitimeFri Jun 25, 2010 4:36 pm

குட்டி இதயமே நலம் தானா?



குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் பலதரப்பட்டவை. பொதுவாக அவற்றை
நீலநிறமாக்கும் பிறவி இருதய கோளாறுகள் மற்றும் நீலநிறமில்லாத பிறவி இருதய
கோளாறுகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அதன் அடிப்படையில் அவை
குழந்தைகளின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை சரிசெய்வதற்கான
தீர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

நீலநிற பிறவி இதயக் கோளாறுகள் - Cyanotic CHD PDA - PATIENT DUCTUS
ARTERIOUS

இருதயத்தில் இருந்து நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை
எடுத்துச் செல்லும் இரண்டு முக்கிய குழாய்களான Pulmonary Arteru மற்றும்
arota இவற்றுக்கும் இடையே உள்ள தேவையேற்ற குழாய் போன்ற அமைப்பையே PDA என்று
சொல்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி சளி தொந்தரவு,
மூச்சுத் திண்றல், வளர்ச்சியின்மை என்று சொல்லக் கூடிய தொற்றுநோய்
ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கே கூட ஆபத்தான நிலை ஏற்படலாம். இந்த
நோயை 2D Echo & Color Doppler என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். வயது 3
முதல் 6 மாதத்தை தாண்டிய நிலையில் இதை பல வகைகளில் சரி செய்து கொள்ளலாம்.
நெஞ்சில் பக்கவாட்டில் ஆபரேஷன் செய்து சரிசெய்து கொள்ளலாம். தொடை வழியாக
சென்று ஆபரேஷன் இல்லாமல் மற்றும் Device போட்டு அந்த PDA என்ற தேவையற்ற
சந்திப்பை சரிசெய்து கொள்ளலாம்.

இருதயத்தில் மேலறை ஓட்டை

இதய வலது மேலரை மற்றும் இதய இடது மேலறை இடைப்பட்ட துவாரத்தையே ASD (
ATRICAL SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால் அவதியுறும் குழந்தைகள்
அடிக்கடி சளி மற்றும் மூச்சுத் திணறல், போதிய வளர்ச்சியின்மை மற்றும்
நுரையீரலுக்கு செல்லும் இரத்த குழாயில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுதல்
ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த நோயையும் எக்கோ மற்றும் கலர் டாப்ளர்
மூலம் கண்டறிந்து ஆபரேஷன் மூலம் அல்லது தொடை வழியாக சென்று ASD Device
என்று சொல்லக்கூடிய குடை போன்ற விரிப்பை துவாரம் உள்ள பகுதியில் விரியச்
செய்து ஆபரேஷன் இல்லாத முறையிலும் சரிசெய்து கொள்ளலாம்.இந்த வயதிற்குள் சரி
செய்து கொள்வது நல்லது.

இருதய கீழறை ஓட்டை

இருதயத்தில் இடது வெண்டிரிக்கிள் மற்றும் வலது வெண்டிரிக்கிள் இடைப்பட்ட
துவாரத்தையே VSD (VENTRICULAR SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால்
குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மீண்டும் மீண்டும் சளித்தொந்தரவு மற்றும்
தொற்று நோய்



இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_study
Back to top Go down
Sponsored content





இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Empty
PostSubject: Re: இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு   இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு Icon_minitime

Back to top Go down
 
இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உணவு... மனம்... கவனம்!
» நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு
» தமிழ்ச் சங்கம்
» ஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு
» மீன் ஊறுகாய்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: