lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: பாலையான வாழ்க்கை Sat Jun 26, 2010 4:39 pm | |
| பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்கவே பாலைவன நாட்டுக்கே பறந்து வந்த பறவைகள் நாங்கள்…
இச்சையை மறந்தோம்; இன்பத் தாய்நாட்டை துறந்தோம்; பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்; பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்…
இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்; இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்; “பொருளிலார்க்கு இவ்வுலகில்லை” பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;
“இல்லானை இல்லாலும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; அவன் சொல் செல்லாமல் போய்விடும்” என்றாள் ஔவ்வையார் அன்றே……
மூதாட்டியின் மூதுரைக்கும் முழுமையான விரிவுரை நாங்களே… பாதாளம் வரை பாயும் பணமே பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே | |
|