lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: உறவுகள் Sat Jun 26, 2010 4:41 pm | |
| ஆதாம் ஏவாள் ஆரம்பித்த உறவுகள் சாத்தான் புகுந்து சாய்த்தான்; அதனால் – பிரிவுகள்
அண்டை வீட்டோடும் அண்டை நாட்டோடும் சண்டை போட்டே மண்டை ஓட்டை மலிவாக்கினோம்….
உறவு ஓர் அதிசய மரம்: உள்ளன்பே அதன் உரம்; உதவும் கரம் தான் உண்டு அதனைத் தாங்கும் தண்டு;
அன்பு ஊற்று தான் இன்பக் காற்று தரும் இலைகள்; உறவுக்கு மறுபெயர் “கிளைகள்” உட்காரட்டும் பாசப்பறவைகள்….
உணர்வு தான் ஆணி வேர்; உணவு அதற்கு உளமார மன்னிக்கும் நற்குணமே சட்டை பையில் பணமிருந்தால் சட்டென ஒட்டும் உறவுகள்;
சற்றே நிலை மாறினால் சட்டை செய்யாது திசை மாறும் பறவைகள் விலா எலும்பின் விலாசம் காண
விவாக உறவுகள் உயிர் காக்கும் உண்மைத் தோழமை உயிருள்ள வரை மறவா உறவு
தொப்புள் கொடியாய்த் தொடரும் இரத்த உறவு ஆயிரம் உறவுகளிருந்தாலும் தாயும்-தந்தையும் தன்னேரில்லா உறவு
கற்ற கல்வி உற்ற நண்பனாய் உதவும் உறவு நற்செயல்கள் என்னும் உறவே நம்மோடு நடந்து வரும் இடுகாடு
இவ்வுறவைப் பேண இறுதிவரைப் போராடு எல்லா உறவுகளும் நில்லா உலகோடு நின்றுவிடும்;
எல்லாம் வல்ல இறைவனிடம் எல்லா நேரமும் அடியான் கொண்ட “உறவு” எல்லா துன்பங்களையும் வென்றுவிடும்!!!! எல்லா உறவுகளயும் பேணுவோம்
எல்லார்க்கும் இறையோனுக்கும் பகைவனான சாத்தானைப் பகைத்திடுவோம்; அதனால் கலகமே இல்லாத உலகமேக் காணுவோம்……………………!!!!!!!!!!!!! நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.
| |
|