கனவு கண்டு கை பிடித்த உறவு.
உள்ளத்தில் எத்தனை இன்பம்.
இனிய பட்டாம் பூச்சிகள் பறந்தன எனைச் சுற்றி.
சுற்றத்தார் வரவு கண்டு.
சுய நினைவு இழந்தது ஏன் தான் இன்று.
தோழியர் வெடிகள் வெக்கமாய் மாறியதே.
மணவாளனை நினைத்து துயில் கொள்ளா காலம் தான் எத்தனை.
அவன் சிரித்து சென்றது முதல் தூங்கா விழித்ததேன்.
கட்டி விட்டான் தாலி கொட்டி விட்டது மேளம்.
புது வாழ்வு பிறந்தது அமுதமாய் புனிதமாய்.
இனிய வாழ்வு இன்பமாய் வாழ இன்றோ புதிய நாள்