அவர்களது பயணமும்
அவர்களது எண்ணங்களும்
என் பயணமும்
என் எண்ணங்களும்
வேறு வேறென்பதை
புரிவதற்குள்
புரியவைப்பதற்குள்
எதிரியாகிவிடுகிறோம்
ஏதொ ஒரு முனை நொடியில்..
அதுவரை கடக்கிறது
எதிர்பார்ப்புகளோடு..
முற்றுப் பெறுகிறது
மரணத்தில்!
எல்லாவற்றையும்
மறந்துவிடுகிறது
ஞாபக சக்தி!
அவள் கிசு கிசுவென பேசி
சிரித்து பகல் முழுவதும் விளையாடிய
பொம்மை
அவள் அருகில் உறங்கியது
என் இன்னொரு
குழந்தையாக..!!!