வா.... வா.... அன்பே
வா.... வா....!
தா.... தா.... முத்தம்
தா.... தா....!
வார்த்தைகள்...
தேவையில்லை.
காதலே...
வாழ்வின் எல்லை...!
தூது சொன்னால்...
துரத்தும் தொல்லை.
தூங்கப் போனால்...
தூவு முல்லை...!
வா... வா...
அன்பே.....!
தா... தா...
முத்தம்.....!
கனவில் கண்ட...
முகவரியே.
கானல் நீராய்...
மாறாதே...!
மனதில் போட்ட...
பொன்வரிகள்.
மனுவாய் ஏற்க...
மறுக்காதே...!
படுக்கை அறையில்...
உன் விம்பம்.
பார்த்து ரசிப்பேன்...
தினம் தினம்...!
தூக்கம் இல்லாப்...
போதனை.... - நீ
துணையாய் வந்தால்...
சாதனை...!
தாகம் தீர்க்கும்...
தாமரையே.
தனிமை உனக்கு...
ஆகாது...!
மோகம் கொண்ட...
என் மனதை.
மோதிப் பார்க்க...
நினைக்காதே...!
பார்வை எல்லாம்...
உன் பக்கம்.
பார்த்து ரசிப்பேன்...
விதம் விதமாய்...!
காதல் உன்னை...
அனுகும் வரை.... - நான்
காத்திருப்பேன்...
சாகும் வரை...!
கன்னக் குழிச்...
சிரிப்பழகே.
கவிதை சொன்னால்...
கேட்பாயோ...!
கண்ணிமைக்கும்...
நேரத்தில்.
என்காதல் உன்னில்...
தாவாதோ...!
மனதைக் கொடுத்தேன்...
உன் வாசம்.
மகுடம் சூடு...
என்னாளும்...!
உலகைக் கண்டேன்...
உன் காலம்.
அடிமையானேன்...
உன் பாதம்...