காதோரம் பேசும் வார்த்தை
எனக்கும் புரியவில்லை
கண்ணோடு காதல் செய்யும்
நேரம் தெரியவில்லை
எனக்குள் ஏனோ ஏதேதோ செய்கிறதே அன்பே
நெஞ்சுக்குள் ஏனோ மழை சாரல் வீசியதே அன்பே
ஓர் நடையின் சத்தம்
எந்தன் கால்தடம் தேடியதே
ஓர் காதல் யுத்தம்
எந்தன் இதயம் தாண்டியதே
நாட்க்களோடு பூக்கள் பூக்க
ஒரு கனம் திரும்பி
உந்தன் அழகை ரசித்திருப்பேன்.
அழகை பாரத்தால்
உந்தன் முகமே தெரிகிறதே
தரையை நினைத்தால்
உந்தன் பாதமே தெரிகிறதே
காதல் பூக்க கவிகள் வடிக்க
ஒரு மனம் விரும்பி - உந்தன்
வருகை பார்த்து காத்திருப்பேன்.