அழகாய் கடந்த நாட்களே
அருகில் அணைக்க ஏங்குதே ...
உனக்காய் ஏங்கும் இதயம் ஒன்று
உன் பெயர் சொல்லித் துடிக்குதடா ...
இருவரும் காதலில் வாழ்ந்த நொடி
தூரத்தில் எங்கோ வாழுதடா ...
உன் முகம் மீண்டும் காண்பதற்காய்
உள்ளம் காத்துகிடக்குதடா ...
உலகம் ஒன்று கண்டோமே
அதில் கைகள் கோர்த்து நடந்தோமே...
நீயும் நானும் சென்ற இடங்கள்
இன்றுவரைக்கும் மறக்கவேயில்லை ...
ஜன்னல் ஓரம் நான் நின்றேன்
உன்னை காதல் செய்துகொண்டேனே ...
மாலையே என்னில் விழும் போதே
முத்தமுத்தமாய் தந்தாயே ...
இதை எல்லாம் நினைத்து பார்க்கையில்
என் கண்ணில் கண்ணீர் வழியுதட
தூரத்தில் உன்னை கண்டவுடன்
புன்னகையாய் அள்ளி வீசியதே ...
என்னை தூண்டிய உன் பார்வை
என் மனதை இன்று கொல்லுதே ...
இதயத்துடிப்பில் உயிர் தந்தாய்
இன்றுவரை என்னில் வாழ்கின்றாய் ...
உலகம் அழிய முன்னே
உன்னை நானே அடைந்திடுவேனே ...
உன் காதலில் விழுந்ததுமே
வலியும் சுகமாய் ஆனதடா ..