அன்பே காதல் எங்கே ?
உன் கண்கள் எங்கே ?
என் கனவுகளை அங்கே
பார்ப்பதற்கு ........!
உன் இதழ்கள் எங்கே ?
என் ஆசைகளை அங்கே
தீர்ப்பதற்கு ..........!
உன் மௌனம் எங்கே ?
என் வார்த்தைகளால்
மொழிபெயர்ப்பதற்கு ........!
உன் இதயம் எங்கே ?
என் உயிரை அங்கே
சேர்ப்பதற்கு......!
உன் காதல் எங்கே ?
என் கல்லறையிலாவது பூப்பதற்கு..