மிக்ஸியில் மாவு அரைக்கும்போது......
மிக்சியில் மாவு அரைப்பவர்கள் நிறைய விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் பெண்கள் அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை என்றும், அதிக நேரமாகிறது என்றும், இட்லி செய்தால் கடினமாக இருக்கிறது என்றும் புலம்புவார்கள்.
முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு மிக்சியில் மாவு அரைத்தால் இந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம்.
புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால் விரைவாகவும், சுலபமாகவும் அரைபடும்.
மேலும், மாவு அரைக்கும் முன்பு நன்கு ஊறிய அரிசியை சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜ்)ல் வைத்தால் அரைபடும்போது மாவு சூடாவது தவிர்க்கப்படும்.
மேலும், மாவு அரைக்கும்போது தெளிக்கும் நீரும், குளிர்ந்த நீராக இருந்தால் நன்றாக இருக்கும்.
2] முட்டையைப் பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் நிச்சயமாக மஞ்சள் தூளும், சிறிது மிளகு தூளும் சேர்த்து செய்வது நல்லது.
பொறியல் அல்லது நூடுல்ஸ் வகைகளில் முட்டையை சேர்ப்பதாக இருந்தால் தனியாக அதனை பொறித்து பின்னர் சேர்ப்பது சுவையாக இருக்கும்.
பொறியல் மற்றும் நூடுல்ஸ் வகைகளில் நேரடியாக பச்சை முட்டையை சேர்த்து கிளறுவதால் நாம் செய்யும் உணவு பொருள் குழகுழப்பாக மாறுவதுடன் ஆறியதும் முட்டை நாற்றம் அதிகமாக இருக்கும்.
பொங்கல் செய்யும் போது, தாளிக்க பயன்படுத்தும் மிளகை அப்படியே முழுசாக போடுவதால் அதன் நன்மை உடலுக்கு முழுதாகப் போய்ச் சேருவதில்லை. பலரும் அதனை தனியாக எடுத்து வெளியே போட்டு விடுவார்கள்.
அப்படி இல்லாமல் மிளகை ஒன்றும் பாதியுமாக உடைத்து போட்டால் குறைவான மிளகு போட்டாலும் காரம் அதிகமாக இருக்கும், மிளகை தூக்கி எறிய முடியாது.