தேவையானபொருட்கள்
பன்னீர் துண்டுகள் - 8 - 10 துண்டுகள்
அரிசிமாவு - 25 கிராம்
சோள மாவு -25 கிராம்
கடலைமாவு - 10 கிராம்
மிளகாய்தூள் - 2 கிராம்
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா -1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -250 கிராம்
செய்முறை
பன்னீரைச் சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், உப்பு, சிறிதளவுதண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பிறகு இந்த கலவையில் பன்னீரைத் தோய்த்து, அதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.