தேவையான பொருட்கள்
அயிரை மீன் - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ(நீளமாக நறுக்கவும்)
தக்காளி - 2 ( நறுக்கவும்)
பூண்டு- 4 பல் ( பொடியாக நறுக்கவும்)
மிளகாய் -2
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை- கொஞ்சம்
எண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்.
சீரகதூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு.
புளி- சிறிய எலுமிச்சை அளவு.(கரைத்துக்கொள்ளவும்)
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் ( அரைத்துக்கொள்ளவும்)
செய்முறை
முதலில் பாத்திரத்தில் அயிரை மீனை கல் உப்பு போட்டு மூடி போட்டு மூடி விடவும்.அது துடிப்பு அடங்கியதும் நன்றாக உலசி உலசி மூன்று நான்கு தண்ணீர் விட்டுகழுவ வேண்டும்.வடிகட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விடவும், கடுகு, உ.பருப்பு. வெந்தயம், கருவெப்பிலை,பூண்டு,வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி..உப்பு சேர்க்கவும்.
தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மஞ்சள், சீரகம், மல்லித்தூள்களை சேர்க்கவும்.புளித்தண்ணீர் விடவும்.நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனை போடவும் ,5 நிமிடம் கழித்து தேங்காய் விடவும்.
குழம்பில் அகப்பை போடக்கூடாது.மீன் உடைந்துவிடும்.இந்த மீன் சீக்கிரம் வெந்து விடும்.மல்லிதழை தூவி இறக்கவும்.
மனதை அள்ளும் அயிரை மீன் குழம்பு ரெடி.