உன் நினைவுகள்...!!!
தொழுநோயாளியின்
நமச்சலைப் போல்
மறுபடியும்,
மறுபடியும்...
உன் நினைவுகள்...
* ஊர் உறங்கிய பிறகும்,
நீ உறங்கியிருப்பாயா
என்ற நினைப்பில் நான்!
* நிலா, நிலா ஓடி வா
என்று என்
தாய் எனக்கு
அறிமுகப்படுத்திய
நிலவிற்கும்,
நீ எனக்கு அறிமுகமான பிறகு,
வரும் நிலவிற்கும்
நிறைய வேற்றுமைகளை
உணர்கிறேன்!
* காரிருளை
காணும் போதெல்லாம்
விளக்கேற்ற வேண்டும்
என்ற எண்ணம் மடிந்து...
உன் செந்நிற முதுகில்
கார் கூந்தல் புரளும்
இடைவெளியில்
கடுகளவில் கிடக்கும்
அந்த
அழகிய மச்சம்...
மறக்க முயன்றாலும்
தவிர்க்க முடியவில்லை!
* மவுனமாய்
பேசும் உன் விழிகள்
என் மனதை
புணர்ந்து போன
அந்த கண நேரம்...
* காத்துக் கிடக்கிறேன்
போதை வஸ்து
அடிமையைப்போல்...
* மற்றொரு
பார்வைக்காக!
Wtih regards
arun. @ NAAN AVAN ILLA