BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!! Button10

 

 மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!! Empty
PostSubject: மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!!   மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!! Icon_minitimeSun Oct 10, 2010 7:25 am

மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!!




இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு அதிசயம்! அந்த மனிதனுக்குள் இருந்து அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதோ மூளை! இந்த மூளையைப் பற்றி உயிரியல் விஞ்ஞானிகள் தங்கள் மூளையை கசக்கி... ஏராளமான ஆராய்ச்சிகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் அதில் ஒளிந்து கிடக்கும் அதிசயங்கள் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன.



அந்த வகையில் விஞ்ஞானிகளின் சமீபத்தைய மூளை ஆராய்ச்சியில் சிக்கி இருப்பது காதல் வங்கி!மேலும் இந்த வங்கியின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டுபிடித்து நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் விஞ்ஞானிகள் என்கிறார் சென்னையின் பிரபல செக்சாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறும்போது, “இது நாள் வரை மனிதர்களிடம் காதல் உணர்வு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.



ஆனால் அது மூளையின் எந்த பகுதியில் இருந்து செயல்படுகிறது? அது எப்படி செயல்படுகிறது! காதல் உணர்வு மனிதனுக்குள் பாயும்போது மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றியெல்லாம் பெரும் புதிராகத்தான் இருந்து வந்தன. இந்த புதிரை லண்டன் பல்லைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி செமிர் ஜெகி தனது நீண்ட கால ஆராய்ச்சி மூலம் முறியடித்துள்ளார்.





மனித மூளையில் “காதல் வங்கி” (லவ் பேங்க்) என்ற ஒன்று அதிவேகமாகச் செயல்படுகிறது. மனிதனுக்குள் காதல் உணர்வை ஏற்படுத்துவது சில ரசாயன கலவைகள்தான். ஒரு ஆண் இன்னொரு பெண்ணை மோகத்துடன் பார்க்கத் தூண்டுவது இந்த ரசாயனம்தான். சில ஆண்கள் ஒரு பெண்ணை பார்த்ததும் முதல் பார்வையிலேயே மனதை பறி கொடுத்துவிட்டேன் என்று சொல்லி புலம்புவார்கள். காரணம் முதல் பார்வையிலேயே அவர்களது மூளையில் உள்ள காதல் வங்கியில் அந்த அழகு தேவதையின் முகம் ”டெபாசிட்” ஆகிவிடுவதுதான். இப்படி ஒரு ஆணின் காதல் வங்கியில் ஒரு பெண் முகம் “டெபாசிட்” செய்யப்பட்டு விட்டால் எளிதில் அந்த வங்கியில் ஏற்பட்ட ரசாயன மாற்றம் மாறாது.





அந்த ரசாயனம் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அப்படி பார்க்கும்போது அந்த காதல் வங்கியின் செயல்பாடு முன்பைவிட பல மடங்கு வேகத்தில் செயல்படும். அப்போது காதல் எண்ணங்களை தவிர வேறு எதையும் அது நாடாது. இதே போல்தான் பெண்களின் மூளையில் உள்ள காதல் வங்கியும் செயல்படுகிறது. இருவரின் மனதிலும் ஒரே மாதிரியான எண்ணங்கள், ஆசைகள், லட்சியம் இருக்கும்போது காதல் உணர்வுகள் “காற்று” வேகத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து அவரவர் காதல் வங்கிகளில் “டெபாசிட்” ஆகிவிடுகிறது. அதன் பிறகு அந்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போதும், பார்க்கும்போதும், காதல் வங்கிகள் அசுர வேகத்தில் செயல்பட்டு இன்ப கிளர்ச்சிகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்த மாதிரியான காதலர்கள் கடைசி வரை பிரியமாட்டார்கள் என்பது விசேஷமான ஒன்று. அது சரி மூளையில் காதல் வங்கி எங்கே இருக்கிறது என்கிறீர்களா? மூளையில் உள்ள புட்டமன், இன்சுலா ஆகிய பகுதிகள்தான் காதல் வங்கி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் ஆண்பெண் ஜோடிகளை காதல் வானில் சிறகடித்து பறக்க வைக்கிறது.





காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது, பாராட்டும் போது, பரிசு கொடுத்து வாழ்த்தும் சமயங்களில்... காதல் வங்கியில் சேமிப்பு பல மடங்கு அதிகமாகிறது. இந்த சேமிப்பு அதிகரித்தால் வாழ்க்கை சொர்க்கம் போல் மாறும். அதே சமயத்தில் காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் போதும், திட்டிக்கொண்டிருக்கும்போதும், சந்தேகப்படும் சமயங்களிலும் காதல் வங்கியில் சேமிப்பு மெல்ல மெல்ல குறைந்து விடும்.



இந்த சேமிப்பு முற்றிலும் குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டும்போது... காதல் வங்கியானது வெறுப்பு வங்கியாக மாறி விடுகிறது. இந்த “வெறுப்பு வங்கி” ஒரு மனிதனிடம் இருக்கும்போதுதான் அவன் எந்நேரமுத் ஆவ்... ஊவ்... வென சத்தம் போடுவது... யாரை கண்டாலும் வெறுப்பை உமிழ்வது, எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவது, சண்டை போடுவது,... என்று ஒரு வித கீழ்த்தரமான நிலைக்கு சென்று விடுகிறான்.



வெறுப்பு வங்கி மனித மூளையில் செயல்படும்போதுதான் அவனுக்கு ஒருவித பயம், நடுக்கம், கவலை, படபடப்பு போன்றவை ஏற்படுகிறது. வெறுப்பு வங்கி ஒரு மனிதனிடம் தொடர்ந்து செயல்பட்டால் மனநிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும். பேராபத்து உள்ளது என்று எச்சரிக்கிறார் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறும்போது, “காதல் வங்கி ஒரு அற்புதமான விஷயம். காதலர்களோ, தம்பதியரோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சகிப்புத்தன்மையுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் காதல் வங்கி கலக்கலாக செயல்படும். காதல் வங்கி செயல்பாட்டில் டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்களின் செயல்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்வுகளை காதல் வங்கியில் டெபாசிட் செய்ய இவை பெருமளவில் உதவி செய்கிறது. காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கை வெற்றி நடைபோடுகிறது. காதல் வங்கியில் “பூஜ்ஜியம்” இருப்பு உள்ளவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. கடைசியில் விவகாரத்தில் போய் முடிகிறது.





இந்த காதல் வங்கி பற்றி அறியாத தம்பதியர்தான் பொறாமை, வெறுப்பு, போட்டி மனப்பான்மையை வளர்த்து சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். இதனால்தான் மனித மூளையில் உள்ள இந்த அதிசய காதல் வங்கியின் மகத்துவம் பற்றி இளம் பெண்கள், இளைஞர்கள் இளம் தம்பதியருக்கு கற்றுத் தருவது தற்போது அவசிய மான ஒன்றாக மாறி இருக்கிறது.





திருமண ஆலோசனை வழங்கும்போது வெறுமனே நல்ல விஷயங்களை செல்லித் தருவதோடு விட்டு விடாமல் காதல் வங்கி பற்றிய உண் மைகளை அழகாக எடுத்துச் சொன்னால் நம் நாட்டில் விவகாரத்துகள் குறையும். காதல் தோல்வி என்ற பேச்சுக்கும் இடம் இருக்காது. காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருந்தால் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். படபடப்பு, டென்ஷன், கவலைகள் மாயமாகும். வாழ்க்கையில் எத்தகைய தோல்விகள் வந்தாலும் அதை தைரியமுடன் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து தடைகளை அடித்து நொறுக்கும் அனாயச துணிச்சல் கிடைக்கும்.







நட்புடன் .....


அருண் @ நான் அவன் இல்லை

Back to top Go down
 
மனித மூளையில் காதல் வங்கி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்
» *~*10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு*~*
» விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம்!
» மனித உரிமைகள்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY :: Education Special-
Jump to: