Posts : 55 Points : 174 Join date : 2010-12-26 Age : 63
Subject: சந்தோசம் வந்தால் சத்தம் போடு Sun Jan 23, 2011 3:13 am
ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் அரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை
மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த பலவித ஒலிகளை பயன் படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும் குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த அரஹரா கோஷம் செய்யப்படுகிறது.
கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.
ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.
மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும் soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_23.html