sriramanandaguruji
Posts : 55 Points : 174 Join date : 2010-12-26 Age : 63
| Subject: கடவுளை நாளைக்கு நீங்களே பார்க்கலாம் ! Wed Feb 09, 2011 3:37 am | |
| கடவுள் இருக்கிறாரா? என்று கேட்கப்படும் கேள்வியில் எப்போதுமே இரண்டுவித அர்த்தம் உண்டு
ஒன்று அவர் இல்லை என நான் நம்புகிறேன் ஆனால் இருப்பதாக நீ எதை வைத்து நம்புகிறாய் என்ற பொருள்
இரண்டாவது உண்மையாகவே இருக்கிறாரா நான் தெரிந்து கொள்ள முடியுமா என்ற பொருள்
இல்லை என்று சொல்லுபவர்களுக்கு பதில் சொல்லவோ அவர்களோடு வீணாக வாதம் செய்து நேரத்த விறையம் செய்ய எனக்கு எப்போதுமே விருப்பம் கிடையாது
ஆனால் அறிந்துக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது நமது கடமை
கடவுள் உண்டு என நம்பும் மனதில் இருந்தால் அவரை நேருக்கு நேராக பார்க்க முடியுமா என்ற ஆவல் பிறக்கும்
உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் குப்பை மேட்டில் ஒய்யாரமாக தலைவைத்து கொண்டு உறங்கும் பிச்சைகாரன் கூட கடவுளை பார்த்து இருக்கலாம்.
அதனால் இன்னார் தான் பார்த்தார் இன்னரால் தான் பார்க்க முடியும் இத்தனை பேர் தான் பார்த்தவர்கள் என்று உறுதியான கணக்கை யாரும் சொல்லி விட முடியாது.
இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் நீங்களும், எழுதும் நானும் நாளைக்கே கூட கடவுளை பார்க்கலாம்.
இருந்தாலும் மாதிரிக்கு சில பேரை சொல்லலாம்.
நால்வர் என புகழ் பெற்ற ஜனகர், சனந்தனர், ஷானதனர், சனத்குமாரர் போன்றோரும்,
ரிஷிகளில் மிருகு, மரிஷி, குலஸ்தியர், கிரது, அங்கரர்சர், விஸ்வாமித்திரர்
நஸிகேதன், நாரதர் , பராசரர், குண்டககர், வியாசர், வசிஸ்டர்,
சாவித்ரி, நளாயினி, திலகவதி, மீரா, ஆண்டாள்,
அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர்,கபிர்தாசர், தாயுமானவர்,
கம்பன், வால்மீகி, இராம கிருஷ்ண பரபுஹம்சர், பைரவிபிராமணி, விவேகானந்தர்,
வள்ளலார், காஞ்சி மகா பெரியவர், கிருபானந்தவாரியார், முத்துகுட்டி சாமி, ரமணர் என்று மிக நீண்ட பட்டியலை தரலாம். மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும் soruce http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_09.html
| |
|