தேவையான பொருட்கள்
* 1. சிக்கன் - 1 கிலோ
* 2. வெங்காயம் - 2
* 3. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
* 4. பிரியாணி இலை - 1
* 5. பட்டை, லவங்கம்
* 6. ஏலக்காய் - 3
* 7. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
* 8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
* 9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
* 10. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
* 11. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
* 12. உப்பு
செய்முறை
* கோழி எலும்போடு பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
* எண்ணெய் காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
* இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* பின் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும்.
* இதில் சிக்கன் சேர்த்து மூடி வேக விடவும். [சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானது. சில நேரம் சிக்கனில் நீர் விடா விட்டால், 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.]
குறிப்பு:
மிகவும் ஸாஃப்டான, சுவையான சிக்கன் தயார். விரும்பினால் கரம் மசாலா முதலில் சேர்க்காமல் கோழி வெந்ததும் சேர்த்து மேலும் 5 நிமிடம் அடுப்பில் வைத்து கிளரி எடுக்கலாம்.