தேவையான பொருட்கள்
* ஆத்தூர் மிளகு கறி
* மட்டன் - அரை கிலோ
* வெங்காயம் - ஒன்று
* தக்காளி - இரண்டு
* மஞ்சல் தூள் - அரைதேக்கரண்டி
* உப்பு - தேவைக்கு
* அரைக்க
* **********
* மிளகு - ஒன்னறை தேக்கரண்டி
* சீரகம் - ஒரு தேக்கரண்டி
* சோம்பு - அரை தேக்கரண்டி
* காஞ்ச மிளகாய் - இரண்டு
* முழு தனியா - ஒரு மேசை கரண்டி
* பட்டை - ஒரு அங்குல
* கிராம்பு - முன்று
* ஏலம் - ஒன்று
* தேங்காய் - ஒரு பத்தை
* முந்திரி - ஐந்து
* இஞ்சி - ஒரு சிறிய துண்டு
* பூண்டு - ஐந்து பற்கள்
* தாளிக்க
* ********
* எண்ணை
* எண்ணை - மூன்று மேசை கரண்டி
* சின்ன வெங்காயம் - ஐந்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
* கருவேப்பிலை - பத்து இதழ்
* கொத்து மல்லி தழை - சிறிது (கடைசியில் மேலே தூவ)
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து அதில் அதை மஞ்சள் தூள், உப்பு தூள்,வெங்காயம், தக்காளி பொடியா அரிந்து போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.
* அரைக்க கொடுத்துள்ளவைகளை முதலில் தண்ணீர் ஊற்றாமல் திரித்து பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து மட்டனில் சேர்க்கவும்.
* கலந்து வைத்த மட்டன் கலவையை பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஊறிய மட்டன் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி தியை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
* பிறகு குக்கரிலோ அல்லது வெளியிலோ நன்கு வேகவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
குறிப்பு:
இதற்கு பிளெயின் சாதம், கட்டி பருப்பு, தோசை, ரொட்டி,ஆப்பம் போன்றவற்றிற்கு அருமையான சைட் டிஷ் ஆகும்.