கூடி வாழ்ந்தோம் குதூகலமாய்
கூடாதகாலம் கொடுமைகள் செய்ததனால்
அந்நிய மண்ணில் அகதிகளானோம்..
சுகங்கள் பல இங்குண்டென்றாலும்
சொந்த மண்ணுக்கு ஈடாகுமா................?
பிறந்த மண்ணின் வாசனையும்
பெருமை சேர்க்கும் ஆலயங்களும்
மனக்கண் முன் தோன்றி;
கதைகள் சொல்லும் காட்சிகளை
மறக்கத்தான் முடியுமா...........................?
முற்றத்து மல்லிகையை
தொட்டு வரும் தென்றலில்
நிலா வெளிச்சத்தில் அமர்ந்து
நினைவுகளை நிசமாக்கய நாட்களை
மறக்கத்தான் முடியுமா.............................?
பள்ளிப் பருவத்தில்
பசுமையாய் பதிந்துவிட்ட நினைவுகளும்
அழியாத கோலமாய்........
நெஞ்சகத்துள் கலையாது காத்திருக்கும்
அத்தனையும்....
எத்தனை சுகங்கள்
இங்கு நாம் பெற்றிடினும்
நித்தம் நெஞ்சத்திரையில்
நிழலாடும் நினைவுகளே ..........!