arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்~~ Sun Nov 20, 2011 7:43 am | |
| நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் நிற்காமல். நீ எனைத் துரத்துகிறாய். விழிகளுக்கு அப்பால் ஓடுகிறேன். ஓடிக் களைத்தபின், நான் அடைந்த தூரம் எனக்கு திருப்தி தரவில்லை. கடமைகள் அழைத்தபோதும் நிராகரித்தேன், ஆசைகள் மனதைத் தொட நிராசைகள் வெளியைத் தொட என்னில் வெறுமை சூழ்கிறது. மீண்டும் ஓடுகிறேன் எனக்குள் நானே எல்லாம் முடிந்து நானே மீதமிருக்கையில் என்னை நான் வெளி உலகுக்கு கொடுத்தாயிற்று. கொஞ்சம் மனசு மிச்சமிருந்தது. அதையும் விடாது பிடுங்கியது சமூகம்.
நுழைவாயிலுக்கு சென்று திரும்பிவிட்டேன். வந்த பின்னர் இன்னும் மரணத்தைப் பற்றின ஆசைதான். ஆனால் என் குழந்தைகளின் கண்ணீரில் மனது ஊஞ்சலாடுகிறது. எனக்கும் சூரியனுக்கும் மரணம் பற்றின அச்சம் நீங்கிவிடுகிறது. எல்லோரும் ரிஷிகளாகிறார்கள். மௌனம் எப்போதும் என்னைச் சிறையில் அடைக்கிறது. மரணம் ஒரு பெரிய விசயமல்ல. உயிரின் ஆசையில் மனத்திற்குள் சலசலப்பு பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும் கடிகாரத்தைப் போலவே மனமும் மரணமும் ... பரிசுகளும் பாராட்டுகளும் ஆறுதல்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால் நானும் என் உடலும் மௌனமாய்த் தொங்குகிறோம், - தூங்குகிறோம்/ மரணத்தை நீக்கிச் செல்லும் உதயசூரியன் வேதனையைத் தூண்டிவிடுகிறது. மூளை இறந்தபடி வாழ்கிறேன்... | |
|