ரம்யா :
அனைவருக்கும் பிடித்தது தென்றல்
ஆனால் இவளுக்கு பிடித்ததோ புயல்
இவளுக்கு என்ன ஆயிற்று
ஈடு இணையற்ற தென்றலை விட
உயிரையும் , உடமைகளையும்
ஊரையும் மொத்தமாக அழிக்கும் புயலை
எப்படி இவளுக்கு பிடிக்கிறது
ஏனென்று தெரியுமா ? உங்களுக்கு
ஐம்பூதங்களில் நம்மால் காணமுடியாத
ஒன்று தானே காற்று .....
ஓய்வில்லாமல் வீசும் காற்று கொஞ்சம்
பொறுமை இழந்து புயலாக வீசும் போது
நாம் தென்றலாய் மாறி அதை
வரவேற்றாள் தான் என்ன ?