பிட்சாவையும் பர்கரையும்
சுவைக்கயிலும்
அம்மா வைக்கும்
கருவாட்டுக் குழம்பை
நினைத்து
நா ஊறுகையில்;
அழுக்கு ஜீன்ஸை
ஆயிரம் ரூபாய்க்கு
வாங்கிவிட்டு
ஆட்டோக்காரனிடம்
ஐம்பது பைசாவுக்கு
சண்டையிடுகையில்;
சாலையோர
சல்வாரையும் மிடியையும்
ரசித்துவிட்டு
சகோதரிக்கு மட்டும்
சேலையை தேர்ந்தெடுக்கையில்;
அவ்வப்போது
எட்டிப்பார்த்து விடுகிறான்
மென்பொறியாளன்
போர்வைக்குள்ளிருக்கும்
கிராமத்தான்!