Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: புலிகளின் நினைவு சின்னங்களை அழிக்கும் இலங்கை அரசு! Fri Mar 26, 2010 10:28 pm | |
| வவுனியா: தமிழீழம் என்று அழைக்கப்படும் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் [^] [^] ஆட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து நினைவுச் சின்னங்களையும் அகற்றுவதில் குறியாக உள்ளது இலங்கை [^] அரசு.
மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட துயிலிடங்கள், மாவீரர் நினைவுத் தூண்கள், தமிழர் அடையாளமான கலாச்சார சின்னங்கள் என ஒன்றுவிடாமல் அழித்தொழிக்கும்படி சிங்களப்படைகளுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வன்னிப் போருக்குப் பின், வட இலங்கையை சுற்றிப்பார்க்கப் போய் வந்த சில தமிழர்கள், இப்போது அந்தப் பகுதி கிட்டத்தட்ட சிங்களர் பிரதேசங்களாக, சிங்கள பெயர்ப் பலகைகளுடன் காணப்படுவதாகவும், பல இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் ஒன்றும் பாதியுமாக சிதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
விடுதலைப் புலிகளின் ஆட்சியின்போது 400 பெரும் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலிடங்களும் நிறுவப்பட்டிருந்ததாம்.
புலிகளின் முதல் கமாண்டரான சார்லஸ் அன்டனி, திலீபன் மற்றும் கிட்டு போன்றவர்களின் உருவச் சிலைகள் வடக்கிற்கு இனி அவசியமில்லை என இலங்கை அரசு அறிவித்துவிட்டே இந்த அழிப்பு வேலையில் இறங்கியுள்ளதாம். | |
|