தேவையானப் பொருட்கள்
* கீமா (கொத்து கறி) - 100 கிராம்
* வெந்தயக்கீரை - ஒரு கட்டு
* எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
* டால்டா - ஒரு தேக்கரண்டி
* பட்டை - ஒரு சிறிய துண்டு
* வெங்காயம் - ஒன்று (பெரியது)
* தக்காளி - ஒன்று (பெரியது)
* இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
* பச்சை மிளகாய் - ஒன்று
* மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
* கொத்தமல்லி - இரண்டு மேசைக்கரண்டி
* மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
* உப்பு - முக்கால் தேக்கரண்டி
* கடலை பருப்பு - கால் ஆழாக்கு
வெந்தய கீரையை ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். கடலை பருப்பை ஊற வைக்கவும்க்கவும். கடலை பருப்பை ஊற வைக்கவும்.
step 1
ஊற வைத்திருக்கும் கடலை பருப்பை எடுத்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
step 2
வாணலியில் எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை துண்டுகளை போட்டு பொரிய விடவும்.
step 3
நறுக்கின வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
step 4
அதன் பிறகு வெந்தயக் கீரை, கீமா, தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
step 5
நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
step 6
எல்லாம் வெந்து மசாலா வாடை போகும் வரை 7 நிமிடங்கள் தீயை மிதமாக வைத்து வேக விடவும்.
step 7
வேக வைத்துள்ள கடலை பருப்பை எடுத்து கரண்டியால் நன்கு மசித்து விடவும்.
step 8
மசித்த கடலைபருப்பை கீரை கலவையுடன் சேர்த்து கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும்.
step 9
கம கம மணமும் சுவையும் நிறைந்த கீமா வெந்தய கீரை ரெடி. இது ப்ளையின் சாதம், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். வெந்தய கீரை சற்று கசப்பு தன்மையுடையது அதனால் இதேப் போல் செய்து சாப்பிடலாம் கசப்பு இருக்காது.