கவனமாய் வைத்துக்கொள் உன் கூந்தல்
முடிகளை, தென்றல் காற்று என்னிடம் கேட்க்காமல்
உன் முடிகளோடு தந்தி அடித்து இசை மீட்டி போகிறது
வா
வீட்டுக்கு போய் விடுவோம்
நிலவு உன்னை கண்டு வெட்கத்தில்
வராமல் போய் விட போகிறது
----------------------
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
----------------------
எத்தனையோ கூந்தல்கள் உரசிய போதும்
உனது சடை பட்ட இடத்தில மட்டும் ரத்தத்திட்டுக்கள்
அது சடையா இல்லை சாட்டையா?
----------------------
மறு பிறவி என்று ஒன்று இருந்தால்
உன் கூந்தலில் மொட்டாக பிறந்து
மலராக வளர்ந்து
உன் கூந்தலிலேயே சாகின்ற வரம் கேட்பேன்.
----------------------
கலைந்தாடும் உன் கூந்தலினால்
காற்றில் வரைகின்றேன்
உன்னழகை!
வா,
காதல் பூஜையில்
நம்மை பூவாய்
சமர்ப்பிப்போம்!
````````````````````````````
நட்புடன்,
புன்னகை
எந்தப்பூவின் வாசனையும் பிடிக்கவில்லை
உன் கூந்தல் மணம் நுகர்ந்த எனக்கு.