'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்பார்கள். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால்..? நிச்சயம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
அதிக உப்பு கொண்ட உணவுப் பொருட்களை உண்பதால், உயர் ரத்த அழுத்தம், வலிப்பு நோய் போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பாக டாக்டர்கள் ஹென் ப்ளேகல், பீட்டர் மேக்னர் மற்றும் குழுவினர் நடத்திய ஆய்வில், அதிக உப்புடன் கூடிய உணவுப் பண்டங்களால் உடல் நலம் பாதிக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது.
உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் ஒரு பில்லியன் மக்கள் வாழ்வதாக எடுத்துக் கொண்டால், அவர்களின் 30 சதவீதம் பேர் அதிக உப்புடன் கூடிய உணவுகளை சாப்பிட்டதாலேயே இத்தகைய பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
தென் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பொருத்தவரை குறைவான உப்பு கொண்ட உணவுகளையே சாப்பிடுகிறார்களாம். அதனால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் இல்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஜப்பானைப் பொருத்தவரை நபர் ஒருவருக்கு 15 கிராம் உப்பு உட்கொள்வதால், உயர் ரத்த அழுத்த விகிதம் அதிகம் உள்ளதாகவும், அதிக எண்ணிக்கையிலானோர் வலிப்பு நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தெரிய வந்துள்ளது.
சுறுசுறுப்பான இளம் வயதினர் நாளொன்றுக்கு 2.8 கிராம் உப்பும், வயதானவர்கள் நாளொன்றுக்கு 2.2 கிராம் உப்பும் சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.