தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/4 கிலோ
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேஜைக் கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கோப்பை
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. சுறா மீனை வேக வைத்து எடுத்து, மீன்களை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
2. அதில் சிறிது உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
5. பிறகு தக்காளி, மிளகாய்த் தூளை சேர்த்து வதக்கவும்.
6. இப்போது உதிர்த்து வைத்துள்ள மீனையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேகவிட வேண்டும்.
7. கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
குறிப்பு
1. சுறா மீன் வாங்கியதும் அதில் அரை கிலோ எடுத்து அதில் உப்பு, இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் எல்லாம் சிறிது சேர்த்து இரண்டு குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேக வைத்து முள்ளுடன் உள்ள மீனை குழம்பிற்கும் (சால்னா) முள்ளில்லாதவைகளை பிரித்தெடுத்து கட்லெட் (அ) புட்டு செய்ய எடுத்து கொள்ள வேண்டும்.
2. குழம்பு செய்யும் போது மிளகு சேர்த்து செய்ய வேண்டும், புளி சேர்க்க கூடாது. இது பிள்ளை பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது.
தக்காளி சாதம்
*************
தேவையான பொருட்கள்
அரிசி - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 4
மராட்டி மொக்கு - 1
ஏலக்காய் - 1
அன்னாசி மொக்கு - 1
பிரியாணி இலை - 1/2
சோம்பு (பொடித்தது) - 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மசாலாதூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கோப்பை
பால் - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.
3. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மசாலா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
4. பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி நன்கு வதங்கியதும், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
6. பின்னர் அதனுடன், 2 1/2 டம்ளர் தண்ணீர் (அரிசிக்கு இரண்டரை மடங்கு), பால், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
7. கொதி வந்ததும், கழுவிய அரிசியை போட்டு குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை (குக்கரைப் பொறுத்து சாதம் குழைய விடாமல்) வேக வைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு
1. வெங்காயம் தயிர் பச்சடி தக்காளி சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
[b]