பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். அப்படி உறையாமல் இருக்க வேண்டுமானால் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.
குளியலறையின் வாசலில் போடப்படும் கால் மிதியடியின் கீழ் ஒரு பிளாஸ்டிக் மிதியையும் போட்டு வைத்தால் தரை ஈரமாவதைத் தடுக்கலாம்.
கட்டிலின் கீழ் எப்போதும் ஒரு கால் மிதியடி இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் மெத்தை அழுக்காவதில் இருந்து தப்பிக்கும்.
பூ ஜாடிகளில் உள்ள தண்ணீரில் சிறிது சர்க்கரை மற்றும் டிடர்ஜென்ட் தூள் கலந்து வைக்கலாம். இதில் சர்க்கரை பூக்களை வாடாமல் காக்கும், டிடர்ஜென்ட் தூள் தண்ணீர் அழுக்காக மாறுவதை தடுக்கும்.
காகிதத்தில் ஒட்டப்பட்ட ஸ்டாம்புகளை எடுக்க வேண்டுமென்றால், அதன் மீது ஒரு ஈரத்துணியை போட்டு லேசாக அயர்ன் செய்தால் போதும், ஒட்டிய ஸ்டாம்பு வந்துவிடும்.