கடன்
நெருக்கடியிலிருந்து துபாய் வேர்ல்டை காப்பாற்ற புதிய திட்டம்!
இதன்படி இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன்தொகையான 23.5 பில்லியனில்
14.4 பில்லியன் டாலரை இரண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்ள கடன்கொடுத்த
நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
5 ஆண்டுகள் மற்றும் 8 ஆண்டு
தவணைகளில் இந்த கடன் தொகை செலுத்தப்படும்.
மீதியுள்ள 8.9 பில்லியன்
டாலர் கடனை, துபாய் அரசே செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம்,
உடனடியாக இந்த பெரும் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து
தப்பித்துள்ளது துபாய் வேர்ல்டு.
துபாய் வேர்ல்டு நிறுவனத்தின் கடன்
நெருக்கடியால் உலக சந்தையே பெரும் சரிவுக்குள்ளானது நினைவிருக்கலாம்.