பல வேதனைகளுக்கு மத்தியில்
நான் வெதும்பிய போதெல்லாம்,
ஒரு கணமேனும் கலங்கியதில்லை..!
காரணம், எனக்குள் இருக்கும் நீ
என் கண்ணீராகக்கூட
கரைந்துவிட கூடாது என்பதற்காக..!!
சுவாசிக்க பிடிக்கிறது
என் சுவாசமே நீ என்பதால்..!
கவிதை எழுத பிடிக்கிறது
என் உணர்வுகளே நீ என்பதால்..!
இறந்தே விடுகின்றேன் ஒரு நிமிடம்
புன்னகையற்ற உன் முகத்தை
பார்க்கையில்..!!
அடிக்கடி இரத்ததானம் செய்கின்றேன்
என் இதயத்திற்கு.! காரணம்,
உன்னை பார்க்கும் வரை
உயிர் சுமந்து கொள்வதற்காக..!!
அன்றும் இன்றும் என்றும்
உன்னை நேசிப்பேன் எனும்போதுதான்,
இத்தனை பிரவாகம் எனக்குள்..!!!
இறைவன் இணைத்த உன்னத உறவு இது..!!
இறுதிவரை உறவாடும் உள்ளம் இது..!!
* என்றென்றும் உன்னோடு நான்
--
UR,
Tom Cruise