Subject: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!! Wed Aug 11, 2010 3:51 am
ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று
முதன்முதலாக உன் கைபிடித்த நிமிடம் தொடங்கி இன்று வரை நான் வாழ்ந்தேன் - உன் கருவிழியின் இமையாக !!!!!! 25 வருடங்கள் ;
உனக்கு முன் எழுந்து உனக்கு பின் தூங்கி ; காபி கலந்து கொடுப்பதிலிருந்து கால் பிடித்து விடுவது வரை ; உன் கண் சொல்லும் குறிப்பறிந்து என் மனம் அதை பின்பற்றி ; துன்பத்தில் தோள்கொடுத்து ; இன்பத்தில் பங்கெடுத்து ; வாழ்க்கை முழுவதும் துணை நின்றேன் - என் வாழ்கையைக் கூட உனக்காய் வாழ்ந்தேன் ;
நான் ஒரு விதவையாம் இன்று ; உயிர் நீங்கிச் சென்ற இக்கணம் முதல் நீ வாழ்வாய் என் விழி மூடிய இமைகளுக்குள் உயிராக !!!!!
பிறகெப்படி விதவையாவேன் ????? இன்றும் கூட நான் சுமங்கலி தான் !!!!!!!!