குரல் வளத்தை காப்பது எப்படி
ஒருவருக்கு குரல் வளம் மிக இனிமையாக அமைந்து விட்டால்,
அவர் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைவது எளிது.
பொதுவாக இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களும்,
கம்பீரமாக குரல் கொண்ட ஆண்களும் பலரது மத்தியில் தனித்து தெரிவது இயல்பு.
சினிமா பின்னணிப் பாடகர்கள், மேடைப் பாடகர்கள்,
அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், அறிஞர்கள்,
புரட்சிக்கரமான கருத்துக்களை கொண்ட தலைவர்கள் ஆகியோருக்கு
அவர்களது குரல்வளமே முக்கிய மூலதனம்.
அப்படிப்பட்ட குரல் வளத்தை போற்றி காப்பது அவர்களது கடமை.
அதனாலேயே இன்றைய தினம்
உலக குரல்வள விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
நமது குரல்வளத்தை காக்க இதோ சில டிப்ஸ்:
* தினமும் சீரான இடைவெளியில் முடிந்த அளவு அதிக தண்ணீர் குடிக்கவும்.
* தொடர்ந்து பிரணாயாமப் பயிற்சி செய்வது அவசியம்.
* தொடர்ந்து 15 நிமிடம் பேசினால்,
இடை இடையே ஆறேழு நிமிடங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
* மிகவும் சூடான அல்லது மிகவும் குளிச்சியான உணவுப் பொருட்கள்
சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் மிகவும் சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
இதனால் குரல் நாண் பாதிப்படைய வாய்ப்புண்டு.
பள்ளி ஆசிரியர்கள், பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள்,
பேச்சாளர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்
மேற்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
எப்போதுமே தங்களது குரல் வளத்தை பாதுகாக்க முடியும்.