Subject: ~~ இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ ~~ Song nd Lyrics Wed Mar 16, 2011 6:50 am
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்
(இலக்கணம்)
கல்லான முல்லை இன்றென்ன வாசம் காற்றான தாகம் ஏனிந்த கானம் வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ
(இலக்கணம்)
மணியோசையென்ன இடியோயென்ன எது வந்தபோதும் நீ கேட்டதில்லை நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து எனைக் காக்கக்கண்டேன் நீயெது நானெது ஏனிந்த சொந்தம் பூர்வஜென்ம பந்தம்
(இலக்கணம்)
தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை தெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும் மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் என் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன் புரியாததாலே திரைபோட்டு வைத்தேன் திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ விளக்கிவைப்பாயோ