மனிதநேயம் கிறுக்கல்கள்:
ஆதியில் ஆபிரகாம் லிங்கன்!
அடுத்தோ அண்ணல் காந்தி!
பிறகு தான் இந்திராகாந்தி!
மீண்டும் வீழ்ந்தார் இன்னொரு
காந்தி மூன்றாவது முறையாக! ...
இங்கனம் மனிதம் வீழ்கிறது நேயம் தழைக்க!
தழைக்கிறதா ?இந்த மனித நேயம் .....
மனிதம் வீழ்ந்தது போதாதென்று,
வீழ்ந்தது ஒரு புதர் சிலை ....
அவர் உயிருடன் இல்லை என்பதால்! .....
சதாம் ... இவருக்கு மனிதநேயம் இல்லையாம்? சொன்னவன் செய்ததோ ஒரு உன்னதமான நாடே வீழ்ந்தது!ஒரு மனிதநேயகாரன் தலைமையில், ஒரு இரட்டை கோபுரமும் வீழ்ந்தது! ..
சிலருக்கு இரக்கமே இல்லை என்பதால்,
அதற்கு பதிலாக வீழ்ந்ததோ அறியாமையில் இருக்கும்
மற்றொரு அப்பாவி கூட்டம் !!
இறைவா !! மனிதநேயம் தழைக்குமா?
தழைக்கதேனில் எங்களுக்கு தர வேண்டும் ஓர் வரம் .....
எனக்குள் இருக்கும் நேயம் வீழ்வதற்குள் ...
ஒரு நல் வாய்ப்பு தரவேண்டும் நல்ல மனிதனாக வீழ்வதற்கு !!
rulespoochandi