தேவையானவை
மட்டன் ஒரு கிலோ ,சீரகசம்பா அரிசி ஒருகிலோ ,பெரியவெங்காயம் இரு நூறு கிராம் ,இஞ்சி இரு நூறு கிராம் பூண்டு இரு நூறு கிராம் நெய் முன்னூறு மில்லி ரீபைண்டு ஆயில் நூறு மில்லி ,தக்காளி இருநூறு கிராம் ,பச்சமிளகாய் நூறு கிராம் ,தயிர் கால் லிட் ,மல்லி கட்டு ஒன்று ,புதினா அரைக்கட்டு ,ஏலக்காய் ,பட்டை ,கிராம்பு முப்பது கிராம் ,மல்லி தூள் ஐம்பது கிராம் ,மிளகாய் தூள் ஐம்பது கிராம்,எலும்மிச்சை பழம் நான்கு
செய்முறை
அரிசியை தண்ணீர் ஊற்றி வைக்கவும் ,மட்டனை துண்டுகளாக்கவும் ,இஞ்சி பூண்டு விழுதுகளாக்கவும்,வெங்காயம் ,தக்காளி நீளவாக்கில் அரியவும்,பச்சைமிளகாய் நீளவாக்கில் அரியவும், மல்லி புதினா ஆய்ந்து வைக்கவும், அரிசி ஒரு பங்கு என்றால் தண்ணீர் ஒன்னரை பங்கு தனியாக அளந்து வைக்கவும்
அடுப்பில் இளம் தீயில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணையை ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய் ,பட்டை கிராம்பு போடவும் பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிளறவும் பின் ,தக்காளி பச்சைமிளகாய் மட்டன் மல்லி தூள் மிளகாய் தூள் தயிர் ,எலுமிச்சை சாறு ,சிறிது உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல் வேகவிடவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும் நன்றாக கறி வெந்ததும் மல்லி புதினா கீரை போடவும் ,
மீதம் உள்ள தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும் ,கொதிவந்ததும் சுத்தம் செய்த அரிசியை போட்டு நன்றாக கிளறவும் தண்ணீர் சுண்டுவதற்குள் உப்பு பார்த்து சேர்க்கவும் தண்ணீர் சுண்டியதும் நெய் ஊற்றி கிளறும் ,ஈரமான காட்டன் துணியை பாத்திரதின்மீது போட்டு அதன் மீது மூடி போடவும் காஸ் அடுப்பு என்றால் கொதிக்கும் நீரை வேரொரு பாத்திரத்தில் ஊற்றி மூடி மீது பத்து நிமிடம் வைக்கவும் அடுப்பு சிலிம் ஆகா ஏறிய விடவும்
விறகு அடுப்பு என்றால் மூடி மீது நெருப்பு பரவலாக போடவும் அடுப்பிலும் குறைவான நெருப்பு இருக்கவும் தம் பத்து நிமிடம் போதுமானது
பத்து நிமிடம் கழித்து நெருப்பை அகற்றிவிட்டு சுவையான பிரியாணி சுவைக்கலாம்
ஒரேமுறையில் பக்குவம் கிடைக்காது பலமுறை செய்து பார்த்து சுவையான பிரியாணி கிடைக்கும் இதே முறையில் சிக்கன் பிரியாணி செய்யலாம்