நெத்திலி தொக்கு செய்வது மிகவும் எளிதும், சுவையானதும்.
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய்ப் பால் - அரை கோப்பை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் நெத்திலி மீனின் தலையை எடுத்துவிட்டு உப்பு போட்டு ஒரு முறை உராய்ந்து பின் நன்றாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டை தட்டி போடவும்.
பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
இதனுடன் எல்லா மசாலா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.
கட்டியாக கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து புளியின் வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாகத்தான் நெத்திலியைப் போடவும். நெத்திலி சீக்கிரம் வெந்துவிடும். பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து மீண்டும் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் விடவும்.
நெத்திலி கொதித்து கெட்டியானதும், கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.