அன்பே..அமுதே...
கண்ணே ...மணியே...
டார்லிங் ...ஹனி .....
இப்படி அழைப்பேனா?
கழுதையே...குரங்கே..
என்று அழைத்தால்
அன்பும் அதிகம் -
பாசமும் அதிகம்
என்றார் அண்ணா!
வார்த்தைகள் என்பவை
நம் சிந்தையின் ஆடைகள்
அவைகளை பட்டாக உடுத்தவேண்டும்
என்றார் ஞானி!!
காரணம் தேடினேன்.....
உன்னை நினைத்தால்
நெஞ்சில் நீரூற்று
இன்பப் போதை ஏன் தலையில்
நீ என் பிரியம்.
என்னவளே-
இனி உன்னை அழைப்பேன் ..
என் பிரியமே என்று.