Posts : 55 Points : 174 Join date : 2010-12-26 Age : 63
Subject: உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி Sat Jan 29, 2011 12:22 am
திருமண் அணிவதன் சிறப்பு என்ன?
பாத தூளி பாகவத ராமானுஜ தேசிக தாசன், திருகோவிலூர்
தி ருமண் என்னும் திருநாமம் நாரயணனின் பாதங்களை குறிக்கும்.
நாரயணன் ஒருவனே பரமபுருஷன்.
ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதை ஸ்ரீ வைஸ்ணவத்தின் ஆதார கருத்து ஆகும்.
நான் கடவுளின் மனைவி என்றால் அவன் என்னை ஆளுபவன்.
அவனுக்கே நான் முழு சொந்தம். முழு உடமை.
அவன் ஆண்டான் நான் அடிமை.
என்னை ஆட்கொண்டவனின் பாதங்களை சிரசின் மேல் வைத்தது தான் சிறப்பு.
அதனால் தான் ராம பாதமான நாமத்தை நெற்றியில் இடுகிறேன்.
ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது.
இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும்.
துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண்.
இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின் முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருனாமத்தின் இரகசிய தத்துவம்.