காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, நண்பகல் 2.30 மணி வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. அதற்கு பிறகு அதிகரித்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 107.83 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 17,558.85 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 35.10 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5260.40 ஆக அதிகரித்தது.
மிட்கேப் 07.78, பி.எஸ்.இ 500-29.13 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் சுமால் கேப் 17.95 புள்ளிகள் குறைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 1316 பங்குகளின் விலை அதிகரித்தது. 1530 பங்குகளின் விலை குறைந்தது. 75 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.
இன்றைய வர்த்தகத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள், பொதுத்துறை பிரிவு குறியீட்டு எண் குறைந்தது. மற்றவை அதிகரித்தது. குறிப்பாக நுகர்வோர் சாதனங்களின் பிரிவு 1 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தது.