கதை சிம்பிள் தான் ..நம்ம ராமயண கதையை கொஞ்ச உல்டா பண்ணி இருக்கிறார்..(தளபதியில் கர்ணன் ,துரியோதனன் கதா பாத்திரத்தை உல்டா செய்ததுபோல்..) ராவணனாக(வீரவாக ) நம்ம விக்ரம் மிக சிறப்பாகவே செய்து இருக்கிறார்..போலிஸ் அதிகாரி(பிருதிவிராஜ்..) மனைவி ராகினியை வீரா கடத்துகிறார்..காரணம் வீராவின் தங்கையை (பிரியாமணி..)போலீசால் நாசம் செய்யப்பட்டு ,அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்..
கடத்தப்பட்ட ராகினி மீது வீராவுக்கு ஏற்படும் ரசாயன மாற்றத்தை இயக்குனர் மிக அழகாகவே சித்தரித்த்ருகிறார்..
ராகினி எப்படி மீட்கப்டுகிறாள் ,வீராவின் கதி என்ன என்பதே மீதி கதை..
முதல்பாதி படம் பாரதிராஜாவின் தாஜ்மகாலைப் பார்த்தது போன்று இருந்தது. ஏதோ கலர் கலராக கேமரா அழகு காட்டியதே ஒழிய அது மனதைக் கவரும் வகையில் இல்லை. ஏதோ ஸ்டில்களின் குவியலாக இருந்தது போல இருந்தது. கேமரா மேனின் கோளாறா இல்லை உயிரோட்டமில்லாத ஸ்கிரிப்டுக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொண்டது தவறா என்று தெரியவில்லை.
ஐஸ்வர்யாவும் அப்படித்தான். அழகாய் இருந்தார். அவ்வளவுதான். இதில் இந்தி, தமிழ் என்று ஒரே நேரத்தில் எடுப்பதால் உள்ள பிரச்சனைகள் வேறு. உபநடிகர்களும் அவர்களின் காஸ்ட்யூம்கள் மற்றும் காட்சிகள் நடக்கும் இடங்களும் ஏதோ வேற்று மொழிப்படத்தை தமிழில் டப் செஞ்சு பார்ப்பது போல் இருந்தது.
சுறண்டல், ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொல்வது இப்பொழுது ஃபேசன் என்று நினைக்கிறேன். மணிரத்னமும் அந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.
கேமரா அழகாய் இருந்தது ஆனால் உயிரோட்டமில்லை. ஐஸ்வர்யா அழகாய் இருந்தார் ஆனால் ஒட்டவில்லை. கடத்திக்கொண்டு காடு மலை என்று ஓடினார்கள் ஆனால் பதைபதைப்பு இல்லை. வீரா கேரக்டரும் அதை செய்த விக்ரமும் ஓகே. மற்றபடி படம் படு மந்தம்.
ஆனாலும் மணி விவரமான ஆள்தான். ராவணன் என்கிற தலைப்பைவைத்து
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும்.
ஹாசினி பேசும் படம்-ல என்ன சொல்றாங்கனு சொல்லுங்கப்பா-
படம் எடுத்து முடிஞ்ச உடனே நடிச்ச எல்லோருக்கும் ஜன்னி வந்திருக்குமாம். ஏண்டான்னா படம் பூரா எல்லாக் காட்சியிலுயும் தண்ணியிலேயே நனைஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம்.