BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inரமணி சந்திரன் நாவல்கள் Button10

 

 ரமணி சந்திரன் நாவல்கள்

Go down 
3 posters
Go to page : 1, 2  Next
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 9:12 am

காக்கும் இமை நானுனக்கு


]எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.


புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.


எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.

ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?

எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.

"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.

இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.

இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.

அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.

"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.

மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.

பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.

அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.

இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?

மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?

அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.

ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?


ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?

கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?

அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!

மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.

"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.

"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."

மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.

அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.

"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.

மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.

திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.

"ஹிஹி! பாருங்கள் சார், முதலாளியான உங்களைப் போய்த் திருடன் என்று எண்ணி விட்டாள், இந்த முட்டாள் பெண். உங்களை என்னமாய் அவமானப்படுத்தி விட்டாள்! இவளை வேலையில் அமர்த்தியதே தப்பு."

"ஆமாம் சார். எப்போதும் ஒரே அதிகப் பிரசங்கித்தனம். இதைப் பண்ணு... அதைச் செய் என்று. நம் பாரம்பரியமே புரியாத படு முட்டாள்!" என்றவர் ஞானப்பிரகாசம், அடுத்த நிர்வாகி.

"முதலில், இவளை வெளியே துரத்த வேண்டும்" என்று முடித்தார் மூன்றாமவர்.

அதுதான் நடக்கப் போகிறது என்று எண்ணினாள் நளினி.

நியாயப்படி பார்த்தால், முதலாளி யார் என்று அறிந்திராதது மட்டும் தான் அவளது குற்றம். ஆனால், எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக, இரண்டு கூட்டாளிகளோடு இருந்த அவனைத் தன்னந்தனியாளாக, எப்படிப் பிடித்தாள்.

அதைப் பற்றி, எண்ணிப் பார்க்கக் கூட, யாருக்கும் மனமே இல்லையே.

ஆனால், இதைப் பற்றி வருத்தப்படுவதை விட, இனி என்ன என்று யோசிப்பது நல்லது.

அவள் யோசனையைத் தொடங்கு முன், 'சின்னப் பயல்' என்று, அந்தப் பழம் பெருச்சாளிகளால் அடிக்கடி குறிப்பிடப்படும் அந்த வளாகத்துடைய புதிய உரிமைக்காரன் செயல்படத் தொடங்கினான்.

பெயர் கூடப் பெத்த பெயர்தான். புவனேந்திரன்.

"கீழே தானே ஆலோசனை அறை? அங்கே போகலாம்" என்று எல்லோரையும் அங்கே அழைத்துச் சென்றான்.

அறையை அடைந்ததும், "அந்தப் பெண்ணை வெளியே இருக்கச் சொல்லுங்கள்," என்று நளினியை மட்டும் நிறுத்தி விட்டு, நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரி, அவனோடு வந்தவர்கள் என்று மற்ற அனைவரையும் கூட்டிக் கொண்டு உள்ளே போய்விட்டான்.

பூட்டிய அறைக்கு வெளியே, சற்று தொலைவில் ஒதுக்கமாக அமர்ந்திருந்த நளினிக்கு, நேரம் ஆக ஆக, வேலையில் நீடிப்பது பற்றிக் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும், காற்றில் இட்ட கற்பூரமாய்க் கரைந்து மறைந்து போனது.

முதலாளியின் மனநிலையைப் பிரதிபலிப்பவர்கள் பணியாளர்கள். அதிலும், கடைநிலை வேலையாட்களிடம் அது நன்றாகவே தெரியும்.

அதிகப்படி இருக்கைகள், தண்ணீர் போன்றவற்றுடன் ஆலோசனை அறைக்குள் சென்று வந்தவர்கள், அவளது பக்கமாகத் திரும்பியே பாராமல் சென்ற விதம், 'உன்னத'த்தோடு அவளுக்கு உள்ள உறவு முடியப் போவதைத் தெளிவாகவே தெரிவித்தது.

அவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும், அவளது முகத்தைப் பாராமலே, அவள் இருந்த இடத்தைக் கடந்து செல்லவும், நளினிக்குத் தன் தலைவிதி நிச்சயமாயிற்று.

சும்மாவே, மூன்று தளத்து நிர்வாகிகளுக்கும் அவளைப் பிடிக்காது!

புது முதலாளியின் ஒரு கருத்துக்காக வேலைக்கு அமர்த்தப் பட்டவள் என்பதற்காகவே, அவளை வெளியேற்றாமல் பொறுத்திருந்தார்கள்.

இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கும் போது விடுவார்களா?

இன்னும் என்னென்ன கோள் சொல்லி, அவளை விரட்டப் போகிறார்களோ?

அவர்களது கோள் மூட்டலுக்குப் பதில் சொல்ல ஒரு வாய்ப்புக் கூடத் தராமல், அவளை வெளியே நிறுத்தி விட்டுப் போய்விட்டானே புதிய முதலாளி!

இதிலிருந்தே அவனது நியாய புத்தியின் தரம் தெரியவில்லையா?

நிச்சயமாக வேலை போகப் போகிறது.

இதை, இவன் கூப்பிட்டுச் சொல்லும் வரை, காத்திருப்பானேன்?

பேசாமல், எழுந்து வீட்டுக்குப் போய்விட்டால், மறுநாள் வந்து சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டால் போகிறது.


இரவில் சரியாகத் தூங்காததால், மறுநாள் காலையில் வேலைக்குச் சென்ற நளினியின் கண்களில் சோர்வு தெரிந்தது.

மனதில் உற்சாகம் இருந்திருந்தால், அதை மறைக்க முடிந்திருக்கும்! ஆனால், அதை மறைக்க முயற்சி எடுக்கக் கூட, அவளுக்குத் தோன்றவில்லை.

முகம் முழுக்க உற்சாகத்தைப் பூசிக் கொண்டு நின்றாலும் தான் என்ன? 'உன்னத'த்தில் எல்லோருக்குமே, அவளது வேலை விவரம் தெரியும். எனவே அவள் சிரித்தாலும், அது வேஷம் என்று எல்லோருக்கும் தெரியும் தானே? அப்புறம் எதற்கு வீண் முயற்சி?

வீட்டில் தாய், தந்தை இருவருமே, இதில் வருத்தமாகக் காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு வேளை, அவளே வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், அதை அதிகப்படுத்த வேண்டாம் என்று எண்ணினார்களோ, என்னவோ.

"கௌரவமான இடம். வேறே மாதிரித் தொல்லை இராது என்று நினைத்தேன். ஆனால் இதே போல இன்னும் எத்தனையோ இடங்கள் இருக்கும் தானே? சும்மா வேலை போனதை நினைத்து வருத்தப்படாதே, செல்லம்!" என்றாள் தாயார்.

"அங்கே எல்லாம் வயதானவர்கள் கூட்டம். கலந்து பேசிச் சிரிக்கக் கூட முடியாது. இனியாவது, உன் வயதுப் பிள்ளைகள் இருக்கும் இடமாகப் பார்த்து வேலையில் சேர். நானும், என் நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்," என்றார் தந்தை.

முதலாளி இளைஞன் தான் என்று சொல்லலாமா என்று யோசித்துவிட்டுச் சும்மா இருந்தாள் நளினி.

ஏனோ, அவனைப் பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளை வேலையை விட்டு நீக்கியவனைப் பற்றி, அவளுக்கு என்ன பேச்சு?

வேலைக்குப் போய், ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்த்தால், அங்கே பூவலிங்கம் வந்து காத்திருந்தார்.

"கணக்குத் தீர்த்துப் பணத்தை வாங்கிக் கொண்டு போக வந்தேன்," என்றார் அவர் வருத்தத்துடன். "கணக்கு எல்லாம் போட்டாயிற்று. ஆனால், நீயும் வந்து அவரோடு பேசிய பிறகு பணத்தைக் கொடுக்கலாம் என்று முதலாளி சொல்லியிருக்கிறாராம்."

அவள் வந்து என்ன ஆகப் போகிறது. பேசியும் தான் என்ன? ஏற்கெனவே சொல்லாததாகப் புதிதாகச் சொல்லவும் தான் என்ன இருக்கிறது?

ஆனால், ஏதேனும் இருக்கக் கூடும் என்று பூவலிங்கத்துக்கு ஒரு நப்பாசை இருந்தது.

"என்ன நடந்தது என்று, உன்னிடம் தெளிவாகக் கேட்டறிய எண்ணுகிறாரோ என்னவோ? நீ கவனித்தாயா நளினிம்மா, கொஞ்சம் முன்னதாகத்தான், நான் மேல் தளத்திலிருந்து இறங்கிப் போனேன். முதல் தளத்துப் படியிறங்கும் போது, கீழே முதலாளி 'லிஃப்டில்' ஏறுவதைப் பார்த்தேன். கூடவே, அவருடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள். அதனால் தான், யாரையாவது அனுப்பத் தேவை இல்லை என்று இருந்து விட்டேன்."

"அதை அவரிடம் சொல்லவில்லையா?"

"சொன்னேம்மா. ஆனால், முதலாளி அதை ஒத்துக் கொள்வதாக இல்லை. அவருடைய பாதுகாவலர்கள், அவரது காவலுக்காக மட்டும்தானாம். இங்குள்ள காவல் என் பொறுப்புதானாம்! அதற்காகத்தானே சம்பளம் வாங்கினாய் என்று கேட்கிறார்! இருபத்திரண்டு ஆண்டுகள் ஒரு பிழை இல்லாத பணி," என்று பெருமூச்சு விட்டார் பூவலிங்கம்.

"அதைத்தான் நானும் சொன்னேன்..." எனும்போதே, அவளுக்கு ஒரு குழப்பம். "அவருடைய பாதுகாவலர்கள் என்றீர்களே சார், உண்மையிலேயே அவர்கள் பழைய காலத்து ராஜாக்களுக்குப் போல இவருக்கு வெறும் பாதுகாவலர்கள் மட்டும் தானா? ஆனால் எதற்காக?" என்று வியப்புடன் கேட்டாள்.

"என்னவோ, பாதுகாப்பு விஷயத்தில், சின்னவர் கொஞ்சம் அதிகக் கவனம்தான். இங்குள்ள வீட்டை ஒரு கோட்டை போல ஆக்கிய பிறகுதான், வந்ததேயாம்..."

"பாட்டி வீடு. முன்னே பின்னே வந்ததே கிடையாது போலப் பேசுகிறீர்களே," என்றாள் அவள், நம்பாத குரலில்.

புவனேந்திரன் பேச்சில் காரண காரியம் சரியான விகிதத்தில் இருந்தது.

எனவே, அது பற்றிப் பாராட்டத்தான் வேண்டும்.

அத்தோடு, பூவலிங்கத்தின் துன்பம் தீர்ந்தது என்று, அது வேறு ஒரு பெரிய நன்மை விளைந்திருப்பது, இன்னமும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஆனால், ஏதோ எதிர்பார்த்தது நடவாத ஏமாற்றம், அவளுள் ஏன் வந்தது?

ஒரு வேளை, அவள் சொன்னதற்காகவென்று புவனேந்திரன் பூவலிங்கத்துக்கு வேலை கொடுக்கவில்லை என்பதாலா?

என்ன பைத்தியக்காரத்தனம்!

இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவன், வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பாக, அங்கே வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண்ணின் பேச்சுக்காக மட்டுமாய்ச் செயல்படுவான் என்று அவள் எதிர்பார்த்தால், அது முட்டாள்தனம் அல்லவா?

இந்த மாதிரி அசட்டுத் தனங்களுக்கு இனி இடம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்த பிறகே, அன்று அவளால் உறங்க முடிந்தது.

ஆனால் மறுநாளே, தன்னுடைய இன்னோர் அசட்டுத் தனம் நினைவு வர, அலுவலுக்குச் சற்று முன்னதாகவே கிளம்பிச் சென்றாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, புவனேந்திரனும் முன்னதாகவே வந்து கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே சென்றவள், அவனிடம் தன் வேலையைப் பற்றிக் கேட்டாள்.

பூவலிங்கத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய வேகத்தில் விட்ட வேலை. இப்போது, அவருக்கே வேலை மீண்டும் கிடைத்து விட்ட போது, அவளை எப்படி வெளியேற்றுவான்?

அவனும் அதையேதான் சொன்னான்.

"பூவலிங்கத்தின் வேலைக்காகப் பேசிய வேகத்தில்தானே, உன் வேலையையே விட்டாய். அவருக்கே வேலை கிடைத்து விட்ட பிறகு, உன் வேலை எப்படிப் போகும்? இடையில் நடந்ததை - எல்லாவற்றையுமே ரப்பரால் அழித்த மாதிரி - அடியோடு மறந்து விடு," என்றான் அவன்.

அவனது 'எல்லாவற்றையுமே' ஒன்றை உணர்த்த, "அவருக்கு வேலையைக் கொடுப்பதாக முடிவு பண்ணி விட்டு, என்...என்னிடம் ஏன் அப்படிக் கேட்டீர்கள்?" என்று உள்ளூர எரிச்சலுடன் வினவினாள் அவள்.

"உன்னைப் பற்றி மதிப்பிட முயன்றேன் என்று வைத்துக் கொள்ளேன்," என்று சிறு இறுக்கத்துடன் கூறி முறுவலித்தவன், அடுத்து, "ஆனால், இனியேனும் எதற்கும் அவசரப்பட்டுப் பேசாமல், இந்த இடத்துடைய அடுத்த உரிமையாளரிடம் நல்ல பெயர் வாங்கு," என்று ஆலோசனை என்ற பெயரில், அவளை அதிர வைத்தான்.

நிஜமாகவே நளினிக்குப் பேரதிர்ச்சிதான்.

தூக்கிவாரிப் போட, திகைப்புடன் அவனை நோக்கி, "எ...எ... என்ன சொன்னீர்கள், சார்? அடு...த்த உரிமையாளரா? ஏன்? நீங்கள்தானே உரிமைக்காரர்...? வேறு யார்?" என்று உளறிக் குழறி வினவினாள்.

"இப்போதைக்கு என்னுடையதுதான். ஆனால், நான் இதை விற்று விடும்போது?"

"விற்பதா? ஏன்? இப்போதுதானே உங்கள் கைக்கு வந்தது? அதற்குள் எதற்காக விற்பது?" என்று வியப்பும் கோபமுமாக மீண்டும் வினவினாள் அவள்.

அவனிடம் பணிபுரிகிறவள் என்கையில், இந்தக் கேள்வி அதிகப்பிரசங்கித்தனம்தான். ரொம்பவே. ஆனாலும், அவளால் கேளாதிருக்க முடியவில்லை.

லேசாகப் புருவங்களை உயர்த்திய போதும், நல்ல வேளையாக, அவனும் அவளைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னான்.

"நான் தொழில் நடத்துகிறவன், நளினி. லாப நஷ்டக் கணக்குப் பாராமல் எந்தத் தொழிலிலும் வெற்றி பெற முடியாது. 'உன்னத'த்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் போதாது. கிட்டத்தட்ட லாபமே
இல்லை என்றே சொல்லலாம்."


Last edited by Fathima on Mon May 24, 2010 3:25 am; edited 10 times in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 9:26 am

இவனுடைய பாட்டியம்மாவைப் போல, இவன் கௌரவத்துக்கு இந்த வளாகத்தை நடத்தவில்லை. சரிதான். ஆனால் விட்டுவிட எண்ணுவதன் காரணமும் சரியில்லையே. லாபம் ஏன் இல்லை என்று யோசிப்பதை விட்டு...

எரிச்சலோடு, "லாபம் எப்படியிருக்கும்?" என்று வெடித்தாள் நளினி. "லாபம் வருவதற்குக் கடையில் விற்பனையும் நடக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி மகாராஜாக்களுக்கு மட்டும் கடை நடத்தினால், அதுவும் மகாராஜாக்களே இல்லாத இந்தக் காலத்தில் நடத்தினால், விற்பனை எங்கே நடக்கும்? லாபம் தான் எப்படி வரும்?" என்றாள்.

நிச்சயமாக அதிகப்படியான பேச்சுதான். ஆனால், அவன் எப்படி இதை விட்டுப் போகலாம் என்ற ஆத்திரத்தை அவளால் அடக்க முடியவில்லை. அதுவும், சீர் செய்யக்கூடிய ஒன்றைச் செய்து பாராமலே வெளியேறுவதா?

கண்ணில் சிரிப்புடன், "தலையில் கிரீடம் தரித்தால்தான் மகாராஜாவா? ரிலையன்ஸ், விப்ரோ, டாடா உரிமையாளர்களை எல்லாம் என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுவாயாம்?" என்று கேட்டான் அவன்.

"மன்னர்களுக்கு நிகரான பணக்காரர்கள்தான். ஆனால் அவர்கள் எத்தனை பேர்? விரல்விட்டு எண்ணுகிற அளவு தானே! அப்படியிருக்கும் ஒரு சிலருக்காக மட்டும்தான் கடை நடத்த வேண்டுமா?"

"பின்னே? நடைபாதையில் குவித்துப் போட்டு விற்பார்களே, அதுபோலச் செய்ய வேண்டும் என்கிறாயா?"

"இது அல்லது, அதுதானா? இரண்டுக்கும் நடுவே, மத்திய தரம் என்று ஒன்றும் கிடையாதா? அத்தோடு, இப்போதெல்லாம் நீங்கள் சொல்லுகிற ராஜாக்கள் குடும்பத்தாரே, எப்போதுமே, தகதகவென்று அணிந்து கொண்டிருப்பதில்லை, தெரியுமா? என்னோடு படித்தவள் ஒருத்தி, அவளது பிறந்த நாளைக்கு அவளைச் சுற்றுகிற பன்னிரண்டு பேருக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தாள். அவள் அடிக்கடி அணிகிற உடை என்ன தெரியுமா? ஜீன்ஸ் பேன்ட்டும், டாப்ஸும்தான். விலை உயர்ந்ததும் இருக்கும். ஆனால், நீங்கள் இளக்காரமாகச் சொன்னீர்களே, அது போல நடைபாதைக் கடைகளில் அவள் பீராய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்! அவளுக்குப் பொருந்துவதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளுக்கு முக்கியம். அப்படித்தான் இப்போது எல்லோருமே பார்ப்பது."

"அப்படிப் பார்த்து வாங்க, இங்கே எதுவும் இல்லை என்கிறாயா?"

"பார்ப்பதற்கு இருந்து என்ன செய்வது? வாங்கக் கூடிய விலையில் இருக்க வேண்டுமே! இங்கே ஜவுளிப் பிரிவில், நான் வந்த நாளிலிருந்து ஒரு செட் துப்பட்டா துணிகளை நான் பார்த்து வருகிறேன். அவற்றில், ஒரு பீஸ் கூட விற்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால், விலை என்ன தெரியுமா? மீட்டர் ஆயிரத்து இருநூறு ரூபாய். இரண்டரை மீட்டர் என்றால், ஒரு துப்பட்டாவுக்கே, மூவாயிரம் ரூபாய் ஆகிவிடும். துப்பட்டாவுக்கே அவ்வளவு என்றால் அதற்குப் பொருத்தமான ஒரு சுரிதார் செட்டுக்கு, ஆரேழு ஆயிரங்களாவது ஆகும். இதே துப்பட்டாத் துணியை என்னிடம் கொடுத்தால் அந்த இரண்டரை மீட்டரில், லைனிங் கொடுத்து, அருமையான ஒரு சல்வாரையே தைத்துவிடுவேன். எந்தக் கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்திற்கும் அணிந்து செல்லக் கூடிய மாதிரியாய்ப் பிரமாதமாக இருக்கும். அதுபோல சல்வார் செட்டே கிடைக்கிறது. அப்படியிருக்க, ஒரு துப்பட்டாவுக்கு இந்த விலை கொடுத்து யார் வாங்குவார்கள்?" என்று, இந்த மூன்று மாத காலமாக அவள் எண்ணியதையெல்லாம், வேகமாகப் புவனேந்திரனிடம் கொட்டி முடித்தாள் நளினி.

அவன் குறுக்கிட, அவள் இடமே கொடுக்கவில்லை!

அவன் குறுக்கிட விரும்பியதாகவும் தெரியவில்லை.

புவனேந்திரன் யோசிப்பது போலத் தோன்றவும், தன் கருத்துக்களை மேலும் வலியுறுத்த விரும்பி, "பெரிய பெரிய பணக்காரர்கள் கூட, இப்போதெல்லாம் வீட்டில், உடல் சுகத்தைப் பார்த்துப் பருத்தி நூல் துணிகளைத்தான் அணிகிறார்கள் சார். எப்போதும் பட்டுத்தான் என்று பந்தாக் காட்டுகிற காலம், எப்போதோ முடிந்து விட்டது. என்ன, இவர்கள் ஒரு நாலு தரம் கட்டி விட்டுத் தூர வீசுவார்கள். மற்றவர்கள், கூடப் பத்துத் தடவை உடுத்துப் பழசான பிறகு, பாத்திரக்காரனுக்குப் போடுவார்கள். அவ்வளவுதான் சார், வித்தியாசம்," என்று மேலும் அடுக்கினாள்.

லேசாக முறுவலித்து, "நீ வேலை செய்ய வேண்டியது, விற்பனைப் பிரிவில் என்று தோன்றுகிறது. வாங்கப் பிடிக்கிறதோ, இல்லையோ, சுற்றி வளைத்துப் பேசி, நிச்சயமாகத் தலையில் கட்டி விடுவாய்," என்றான் அவன்.
"நான் சும்மா சொல்லவில்லை சார். ஒரு தரம் என்னோடு வந்து பாருங்கள், உங்களுக்கே புரியும்," என்றாள் அவள்.

அவன் பேசாதிருக்கவும், "அவசரப்பட்டு 'உன்னத'த்தை விற்று விட மாட்டீர்களே, சார்?" என்று கவலையுடன் கேட்டாள் நளினி.

அவன் பேசாதிருக்கவும் கலங்கி, "சார், இது உங்கள் தாத்தாவுடைய தந்தை தொடங்கியதாமே! அவருக்குப் பிறகு, உங்கள் தாத்தா பாட்டி தொடர்ந்து நடத்தியது. எழுபது ஆண்டுகளுக்கும் அதிகமாக, வெகு கம்பீரமாக நடந்து வருவது. விரைவில் வைர விழாவைக் கொண்டாடலாம். இப்படி ஒரு நிறுவனம், தொடர்ந்து நாலாவது தலைமுறையாக உங்களிடம் இருப்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அதைப் போய் விற்பதா?" அவனது மனதைத் தொட முயன்றாள் நளினி.

"இப்போதுதான், பாட்டி நடத்திய விதத்தைத் தொடர்வது சரியில்லை என்று வாதாடினாய். உடனேயே, பாரம்பரியத்தை விடலாமா என்று கேட்கிறாயே?"

ஒரு கணம் திகைத்துவிட்டு, "பாருங்கள் சார், உங்கள் கொள்ளுத் தாத்தாவின் உடை போலவா, நீங்கள் அணிகிறீர்கள்? அவருடைய பேரனான நீங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாறவில்லையா? அதைப் போலக் கடையில் உள்ள பொருட்களை, இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றபடி, மாற்றலாமே என்றேன். நீங்களானால், வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தையே விற்கப் போகிறேன் என்கிறீர்களே, சார்," என்றாள் அவள்.

"வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தா? அப்படி என் கைக்கு வந்த இந்தக் குடும்பத்துச் சொத்தை நான் விரும்புவேன் என்று உனக்கு என்னம்மா, நிச்சயம்?"

புவனேந்திரனின் குரலில் லேசாக வெளிப்பட்ட கைப்பு, பூவலிங்கத்தின் பேச்சை நினைவுறுத்த, நளினிக்குச் சுரீலென்றது.

வழி வழியாக என்றால், அவனுடைய தந்தைக்கு இந்த 'உன்னதம்' கிடைக்கவில்லையே!

அவனுடைய பெற்றோரை ஒதுக்கிய பாட்டி வேறு வாரிசு இல்லாததால் மட்டுமே, அவனிடம் கொடுத்த சொத்தின் மீது, அவனுக்கு எப்படி ஈடுபாடு வரும்?

அந்த வெறுப்பும் சேர்ந்ததால் தான், இலகுவாக விற்றுவிட முடிவு செய்தானோ?

அப்படியானால், விற்றுவிட்டுப் போயே விடுவானா?

அவசரமாக யோசித்து, "ஆனாலும், ஒரு தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்த வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பாராமலே விட்டு விடுவீர்களா? பெரிதாகத் தொழில் நடத்துகிறவன் என்று சொல்லிக் கொண்டீர்களே. ஒரு தடவை, ஒரே ஒரு தடவை என்னோடு வந்து பாருங்கள், சார். நான் சொல்லுகிற மாதிரித் துணிகளில் விற்கிற இடங்களில் கூட்டம் எப்படி அலை மோதுகிறது என்று நீங்கள் நேரில் பாருங்கள், அப்போதுதான், நான் சொல்வது உங்களுக்குப் புரியும்," என்றாள் அவள் - குரலில் சிறு மன்றாடலுடன்.

"ம்ம்ம்..." என்று புவனேந்திரன் யோசிக்கும் போதே, "கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குப் போக வேண்டாம் சார்," என்றான் அவனுடைய காவலர்களுள் ஒருவன்.

"ஆமாம் சார். அவர்கள் சொல்கிற மாதிரி, கூட்டம் அலை மோதுகிற இடங்களில், கண்டபடி மேலே வந்து விழுவார்கள், சார். அவர்களை யார் என்ன என்று கண்டு ஒதுங்கவோ, விலக்கவோ முடியாது," என்றான் மற்றவன்.

தன் காதுகளையே நம்ப முடியாத அளவுக்கு, நளினிகு ஆச்சரியமாகிப் போயிற்று.

உத்தமப் பெண்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் கூட, கூட்ட நெரிசல்களில் மேலே இடிப்பவர்களைச் சிறு எரிச்சலோடு அலட்சியப்படுத்துகிற காலம் இது! ஆண் பிள்ளையான இவன் மீது அடுத்தவர்கள் பட்டு விடுவார்களே என்று, அங்கே போகாதே, இங்கே செல்லாதே என்று ஆலோசனை கூறப்படுகிறதே!

அதுவும் அவனிடம் பணிபுரிகிறவர்களே ஆலோசனை கூறுகிறார்கள்.

புவனேந்திரனும், அதை ஏற்று, அது பற்றிச் சிந்திப்பதாகவும் தோன்றவே, அவளுக்கு இன்னமும் ஆச்சரியமாகிப் போயிற்று!

இந்தப் பாதுகாவலர்கள், இந்த ஆலோசனை, சிந்தனை ஏன்?

ஆனால், அதைப் பற்றி விசாரிப்பதை விட முக்கியமாக விஷயம் வேறு இருக்கிறது. நூலையும், துணியையும் மொத்த உற்பத்தி செய்கிறவனுக்குப் பொருட்களின் சில்லறை விற்பனை பற்றிக் கற்றுக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.

எனவே அவனுக்குச் சரியாக, "சரி சார். கூட்ட நேரத்தில் போக வேண்டாம். காலை பத்து மணிக்குப் போனால், எந்தக் கடையிலும் கூட்டமே இராது. நாளை காலை வாருங்கள், போய்ப் பார்க்கலாம்," என்று அழைத்தாள்.

"மறதி, மறதி. நாளை ஞாயிற்றுக்கிழமைம்மா. கடைகள் மூடியிருக்குமே."

"ஒன்றும் மறக்கவில்லை. உங்கள் 'உன்னதம்' மட்டும் தான், பழைய காலத்து வழக்கப்படி, ஞாயிற்றுக்கிழமை மூடியிருப்பது. இப்போதெல்லாம், பெரும்பாலும் ஆண் பெண் இருவருமே வேலை செய்து சம்பாதிப்பதால், 'சண்டே ஷாப்பிங்' என்று, ஞாயிறன்றுதான் கடைகளில் அதிக விற்பனை. ஆனால், வாரம் முழுவதும் வேலை செய்த இறுக்கம் தளரக் காலையில் சற்று ஓய்வாக வீட்டில் இருந்துவிட்டுத் தாமதமாகக் கிளம்புவார்கள். அதனால் தான், காலையில் கூட்டமிராது."

சற்று வியப்புடன் அவளைப் பார்த்தான் அவன். "நிறையத் தெரிந்து வைத்திருக்கிறாயே," என்றான் பாராட்டுதலாக. "அங்கே எல்லாம் உற்பத்தித் துறையில் இருப்பதால், இது போன்ற விவரங்கள் புதிதாக இருக்கிறது!"

வாயால் ஒன்றும் சொல்லாவிட்டாலும், அவனது உடை, பெல்ட் போன்றவற்றை, ஒரு தரம் பாராதிருக்க நளினியால் முடியவில்லை.

அதைக் கவனித்து, "உடை, என் வீட்டுக்கு வந்து, அளவெடுத்துத் தைத்து வருவது. அவர்களே பொருத்தமாக மற்றவற்றையும் கொண்டு வந்து விடுவார்கள். கொஞ்சம் அதிகச் செலவாகும். ஆனால், இவற்றுக்காக நான் வெளியே அலைந்து திரிய நேராது," என்று அவனது வழக்கமான சிறு முறுவலுடன் கூறினான் அவன்.

வெளியே அலைந்து திரிய நேராதிருப்பதற்காக, அதிகம் செலவு செய்கிறானா? நாலு பொருட்களைப் பார்த்து, நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுப்பதே ஒரு சுகம் என்று இவனுக்குத் தெரியாதா? நேரம் இல்லையா? பிடிக்கவில்லையா? அல்லது...

மீண்டும் நளினிக்கு ஏதோ உறுத்தியது. என்னவென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று.

பலமுறை யோசித்தும், அது என்னவென்று, நளினிக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், மறுநாள் குறிப்பிட்ட இடத்தில், புவனேந்திரன் அவளுக்காகக் காத்து நிற்பதைப் பார்த்தபோதோ, உறுத்தல் பற்றிய நினைவே மறந்து போயிற்று.





கிட்டத்தட்ட புவனேந்திரனின் 'உன்னத'த்தின் அளவிலேயே அமைந்திருந்த, சில பெருங்கடைகளை அவனுக்குக் காட்டிவிட்டு, ஒன்றின் உள்ளே நளினி அவனை அழைத்துச் சென்றாள்.

வாங்குவோரின் பணப்பைக்குத் தக்கபடி, என்னென்ன மாதிரித் துணி வகைகள் இருக்கின்றன என்று எடுத்துக் காட்டினாள். தைக்காத துணிகள், தைத்துத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள்... எல்லா வகையிலும், விலை குறைந்தது, கூடியது எல்லாமே இருப்பதையும், சின்னச் சின்ன அலங்கார வேலைகளுக்கு ஏற்றபடி விலை கூடுவதையும் எடுத்துக் காட்டி விளக்கினாள்.

சலிக்காமல் காட்டிய விற்பனைப் பெண்ணுக்காகத் தனக்கு ஒரு சல்வார் செட்டையும் வாங்கிக் கொண்டாள்.

ஆனால், பில் போடப் போனபோது, புவனேந்திரன் பணம் கொடுக்கவும், அதைத் தடுக்க முயன்றாள்.

ஆனால், "இது உன் ஞாயிறு ஓய்வைத் தியாகம் செய்து 'உன்னத'த்துக்காகப் புரிந்திருக்கும் அதிகப்படிப் பணி. அதனால், இந்தச் செலவு கணக்கு 'நிறுவனத்'தைத்தான் சார வேண்டும்," என்று முடித்துவிட்டான் அவன்.

ஆடைகளுக்கேற்ற விதமாய், விலை குறைந்த 'காஸ்ட்யூம்' நகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, "கூட்டம் அதிகமாகிறது, பாஸ்," என்று பாதுகாவலர்களில் ஒருவன் வந்தான்.

உடனேயே, "கிளம்புவோம்," என்று புவனேந்திரன் சொன்னது, நளினிக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.

ஆனால், காரை நிறுத்திவிட்டு வந்த இடத்தைப் பார்த்ததும், "பார்த்தீர்களா, சார்? இந்தக் கார் நிறுத்துமிடம் நிரம்பிப் போயிற்று. உங்களது போல, டயோட்டா, பென்ஸ், ஸ்கோடா போன்ற வண்டிகள் கூட எத்தனை நிற்கின்றன, பாருங்கள். நிறுத்த இடம் இல்லாமல், இடம் தேடிச் சுற்றுகிறவை எத்தனை! இந்த மாதிரிக் கார்களில் வருகிற... உங்கள் பாஷையில், தலையில் மகுடம் வைக்காத மகாராஜாக்கள்! அவர்களும் கூடத் தங்களுக்குத் தேவைப்பட்டவைகளை வாங்க, இங்கே தானே குழுமுகிறார்கள்," என்று தன் கூற்றுக்கு, அவள் மேலும் ஆதாரம் காட்டவும், புவனேந்திரன் வாய்விட்டுச் சிரித்தான்.

"உன் கருத்தை மற்றவர்கள் மீது எப்படித் திணிக்கிறாய் என்பது, மற்றெல்லாவற்றையும் விட, மிக நன்றாகத் தெரிகிறது. பா...வம், அப்புறமாய் மாட்டிக் கொள்ளப் போகிற அந்த அப்பாவி!" என்று மீண்டும் நகைத்தான் அவன்.

எதற்காக, இதில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்று, அவளுக்கே புரியவில்லைதான். அவனது தொழில். அவன் நடத்துகிறான். அல்லது, மூடுகிறான். இதில், அவளுக்கென்ன வந்தது?

என்னதான் வந்ததோ? ஆனால், புவனேந்திரன் இந்த 'உன்னத'த்தை வெற்றிகரமாக நடத்தியே ஆக வேண்டும் என்ற வேகத்தை அவளால் விட முடியவில்லை என்பது நிச்சயம்.

அவனது கேலிப் பேச்சில் முகம் சிவந்த போதும், சமாளித்துக் கொண்டு, "அப்படியானால், நான் சொன்னதை ஒத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தமா, சார்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

முறுவலோடு, காரில் ஏறிக் கொள்ளுமாறு சைகை செய்தான் அவன். "உன்னைக் கொண்டு விட்டுவிட்டுப் போகிறேன்."

"இல்லை சார். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது."

"வேலை? என்ன வேலை?" என்று கேட்டவன், "சொல்லக் கூடாதது என்றால், வேண்டாம்," என்று சேர்த்துச் சொன்னான்.

அவள், தன் பெரிய கைப்பையைத் திறந்து, உள்ளிருந்தவற்றை எடுத்துக் காட்டினாள்.

அலங்கார வேலைகள் செய்திருந்த பல துண்டுத் துணிகள். "சில கடைகளில் ஆர்டர் எடுத்துச் செய்து கொடுக்கிறேன், சார். 'உன்னத'த்திலும் இதைக் காட்ட வந்த போதுதான், 'விண்டோ டிஸ்ப்ளே' செய்கிறாயா என்று, இப்போதைய பணியைத் தந்தார்கள்," என்று, விவரமும் தெரிவித்தாள்.

"ஓ! அதனால் தான், குந்தன், சிக்கான் என்று அப்படி அடுக்க முடிந்ததா? குட்," என்றான் பாராட்டுதலாக. "போய், உன் வேலையைப் பார். நான் கிளம்புகிறேன்."

"ஆனால்... சார்... இன்னமும், நீங்கள் ஒரு முடிவும் சொல்லவில்லையே?"

"நிஜமாகவே, அந்த அப்பாவி ரொம்பவே பாவம்தான்!" என்று மீண்டும் முறுவலித்தான் அவன். உடனேயே "யோசிக்கிறேன், நளினி. நீ சொன்னது, என்னைக் கூட்டி வந்து இங்கே கடைகளில் காட்டியது அனைத்தையும் யோசித்துப் பார்க்கிறேன். இப்போதைக்கு என் பதில் இதுதான். ஓகே! பிறகு சந்திப்போம்," என்று விட்டுக் கிளம்பினான் புவனேந்திரன்.

ஆனால், அந்தப் 'பிறகு சந்திப்போ'மின் பொருள், மறுநாள் அலுவல் அறையில் சந்திப்பது அல்ல, அவன் ஊரை விட்டுச் சென்று, திரும்பி வந்த பின் சந்திப்பது என்று வேலைக்குச் சென்றதும் அறிய வந்தபோது, அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

ஊருக்குப் போவதாகத் தன்னிடம் அவன் ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று வருத்தமாகவும் இருந்தது.

ஆனால், அவளது ஏமாற்றம், வருத்தம் பற்றி யாரிடம் சொல்வது?

மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனாலும், சகஜமாகப் பேசிப் பழகும் பெற்றோரிடம் கூட, இதைப் பற்றிச் சொல்ல, நளினிக்குப் பிடிக்கவில்லை.

நிலைமை புரியாமல், அவளைத் தேற்றுவதாக எண்ணி, யாரேனும் ஏதேனும் சொன்னால் எரிச்சல் வரும்.

ஆனால், இரண்டு நாட்கள் கவனித்து விட்டு, "என்னடா செல்லம்?" என்று விவரம் கேட்ட தாயிடம், உண்மையைச் சொல்லாதிருக்கவும் அவளால் முடியவில்லை.

"அருமையான இடம், அம்மா! வீணாக விட்டு விடுவார்களோ என்று கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது," என்றாள் மகள்.

"அப்படி விட்டு விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நளினிம்மா! தொழில் நடத்துகிறவன் என்று தன்னைத் தானே சொல்லியிருக்கிறார், என்கிறாய். வளாகத்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் வேண்டும் என்பதுதானே, அவரது விருப்பமும். யோசி. ஞாயிறன்று கடை காட்டக் கூட்டிப் போனாய் என்று ஆயிரம் ரூபாய் சல்வார்க்குப் பணம் கொடுத்தாரே, தொடர்ந்து நடத்துகிற எண்ணம் இல்லாவிட்டால், அந்தப் பணம் அவருக்கு விரயம் தானே! அப்படி வீணாக்குவாரா? நீதானே பிடிவாதமாய் வரச் சொன்னாய், உன் பாடு என்று சும்மா இருந்திருக்க மாட்டாரா? அவரது இருப்பிடம் கோவை என்று தானே சொன்னாய்? அங்கே அவருக்கு வேலை இருந்திருக்கலாம், போயிருப்பார். எனக்கென்னவோ, நீ சொன்ன வழியில் ஒரு பிரமாதமான திட்டத்தோடு மிஸ்டர் புவனேந்திரன் திரும்பி வருவார் என்று தான் தோன்றுகிறது!" என்று சகுந்தலா நிச்சயமாகக் கூறவும், நளினிக்கும் போன உற்சாகம் திரும்பியது.

அவளுடைய அன்னை சொன்னது சரிதானே!

'உன்னத'த்தைத் தொடர்ந்து நடத்தும் எண்ணம் இல்லாவிட்டால், அந்த ஆயிரம் ரூபாய் அவனுக்கு வீண் தானே? விட்டுப் போகிறவன், அது வேறு செலவு ஏன் செய்ய வேண்டும்? தொடர்ந்து நடத்துவதானால், இது ஒரு நல்ல முதலீடு! இவ்வளவு நியாயமாக நடந்தானே என்று, அவளும் விசுவாசமாக இருப்பாள்.

"நீங்கள் சொன்னது கரெக்ட், அம்மா," என்றாள் அவள், குதூகலம் பெருக.

நளினியின் எதிர்பார்ப்பு நனவாக, விரைவிலேயே, புவனேந்திரன் திரும்பி வந்து விட்டான், ஒரே வாரத்தில்!

வந்து, தன் உடனடி வேலைகளை முடித்ததும், நளினியைக் கூப்பிட்டுப் பேசினான்.

"நீ சொன்னதை யோசித்துப் பார்த்தேன், நளினி. அதன்படி, நம் வளாகத்தின் விற்பனைப் பொருட்களை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்," என்றான் அவன்.

முகம் மலர, "அப்படியானால், தொடர்ந்து நடத்தப் போகிறீர்கள்!" என்று மகிழ்ச்சியோடு கூறினாள் அவள்.

"வேறு வழி? இதை நடத்தாமல் விட்டு விட்டால், என் காதைப் பிடித்து முறுக்கி விரட்ட நீ கோவைக்கே வந்து விட மாட்டாயா? அந்தப் பயம்தான்."
முதலாளியின் காதைப் பிடித்து முறுக்குவதா?

"சா...ர்...!" என்றாள் அவள் திகைப்புடன்.

அவன் நகைத்துவிட்டு, "அந்த அளவுக்குப் போக மாட்டாய்தான். ஆனால், நீ என்னிடம் வலியுறுத்தவில்லை என்று சொல்ல முடியாதுதானே?" என்று இலகுக் குரலில் கூறியவன் தொடர்ந்து, "நீ வாதாடியதில் ஒன்று சரிதான், நளினி. தொழிலில் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பார்க்காமல் விடுவது, தப்புதான். அத்தோடு, என் இயல்புக்கு, அது பொருத்தம் இல்லாதது கூட! அது எப்படியோ நேர்ந்தது. போகட்டும். இப்போது..." என்றவாறு அவள் முகத்தைப் பார்த்தவனின் பேச்சு ஒரு கணம் நின்றது.

"ஏன் அப்படி நேர்ந்தது என்று தெரியும் போலத் தோன்றுகிறது!" என்றான் ஒரு மாதிரிக் கண்டனக் குரலில்.

புவனேந்திரனின் எரிச்சலையும் நளினியால் புரிந்து கொள்ள முடிந்தது. யாருக்குத்தான் அவர்களது வாழ்க்கை பொது விஷயமாக அலசப்படுவது பிடிக்கும்?

"'உன்னதம்' வம்பு மடம் அல்ல, சார். ஆனால், ரகசியம் என்றும் எதுவும் இராது. அதிலும், முதலாளியின் விஷயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் இருப்பது இயல்புதானே!" என்றாள் அவள், சமாதானமாக.

"ஆனால், என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும், பேசுவதற்கு?" என்றான் அவன் கடுமையான குரலில்!

ஆனால், உடனேயே முகம் மாறி, "சரி சரி, போகட்டும். உன்னை வரச் சொன்ன காரணத்தைப் பார்ப்போம்," என்றவன், மேஜை மீது இருந்த சில ஃபைல்களைக் காட்டிப் "பிரித்துப் பார்! அங்கே கோவையில் உள்ளவை, அகில இந்திய அளவில் உள்ளவை என்று சில நிறுவனங்களில் இருந்து, அவரவர்களின் மாதிரிகளை வரவழைத்தேன். துணிகள், ரெடிமேடுகள் எல்லாமே! முதலில் ஜவுளியில் தொடங்குவோம். பிறகு, எல்லாவற்றிலும் கொண்டு வருவோம். இவற்றுள், நம் வளாகத்துக்கு ஏற்றவை எதெது என்று தேர்ந்தெடுத்துக் கொடு. உடனேயே ஆர்டர் கொடுத்து விடலாம்," என்று அவளை அவசரப்படுத்தினான்.

உற்சாகத்துடன் ஃபைல்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கை நின்றுவிட, "நா...னா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் நளினி.

"நீயேதான்! குறைந்த பட்சமாகத் துணி விஷயம் நீதான் தெரிவு செய்ய வேண்டும். உனக்கு அதில் விஷய ஞானம் இருக்கிறது. கூடவே, ஆர்வமும் இருக்கிறது!" என்றான், புவனேந்திரன்.

அவளால் முடியும் தான். கூடவே ஆசையும் இருந்தது. ஆனால்...

சற்று யோசித்துவிட்டு, "அது முடியாதே சார்," என்றாள் நளினி.

"ஏன்? ஏன் முடியாது?"

"கடைக்குப் பொருள் வாங்குவது என் வேலை அல்ல, சார்!"

"உன்.. ஓ, அதிகப்படி வேலை என்று பார்க்கிறாயா? அதற்குத் தனியாக..."

"ஐயோ, அப்படியில்லை சார்," என்று அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சொன்னாள் அவள். தொடர்ந்து, "இங்கே கிட்டத்தட்ட கடைசியாக வேலைக்குச் சேர்ந்தவள் நான். பொருட்களைத் தேர்வு செய்து வாங்குவதை நிர்வாகிகளும், தலைமை விற்பனைப் பொறுப்பாளர்களும் செய்து வருகிறார்கள். இதில் என் தலையீட்டை அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!" என்று விளக்கினாள்.

"சொல்வது நான். செய்வது நீ. இதில் என்னிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் அவர்கள் என்ன ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும்?" என்றான் அவன் சற்று அழுத்தமான குரலில்.

"அது சரி, சார். நீங்கள் முதலாளியாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவீர்கள். அப்புறம், நாள் பூராவும் இங்கே அவர்களோடு கூட இருந்து பணிபுரியப் போவது நான் அல்லவா? சும்மாவே, இது விஷயமாக என் மீது ஏற்கனவே கோபம் இருக்கிறது. இதைச் செய்தேன் என்றால், அப்புறம் பெரும் பிரச்சனையாகி விடும். வேண்டாம் சார்," என்றாள் அவள் கவலையுடன்.


"அப்படியே பார்த்தாலும், இந்த அறையில் வைத்து நீ தேர்ந்தெடுப்பது யாருக்குத் தெரியப் போகிறது?"

"இரண்டும் இரண்டும் நாலு சார். இங்கே நான் வந்து போனதும், நீங்கள் ஆர்டர் கொடுத்தால், தெரியாதா? இப்போதுதானே சார், பேசினோம். உங்கள் கதையை நீங்களோ, உங்கள் பாட்டியோ சொல்லியா எல்லோருக்கும் தெரிந்தது?"

"என் கதை. என்னைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? என் கதை என்று எல்லோரும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?" என்று கசந்த குரலில், ஒரு கரகரப்புடன் கேட்டான் புவனேந்திரன்.

"நடந்ததைத்தான்! உங்கள் அம்மாவை மணந்ததற்காக, உங்கள் அப்பாவும் சேர்ந்து வீட்டை விட்டுப் போனது. உங்கள் பெற்றோர் இருவரும் விபத்தில்... விபத்தில் மறைந்தது. உங்கள் பாட்டி அழைத்த போது, நீங்கள் வர மறுத்தது. கடைசியாக மரணப் படுக்கையில், உங்களிடம் சொத்துக்களை ஒப்படைத்துவிட்டுப் பாட்டி போனது. இப்படி எல்லாமே, எல்லோருக்குமே தெரியும் சார்!"

"ஓ..." என்று சற்று நேரம் பேசாதிருந்தான் அவன்.

பிரச்சனையின் தீவிரத்தில், அவன் தன்னை மறந்து விட்டானோ என்று கூட நளினிக்குத் தோன்றியது. "சார்..." என்று மெல்ல அழைத்து, "உங்கள் விருப்பத்தைச் சொன்னால், வழக்கமாகச் செய்கிறவர்களே, உங்கள் சொல்படியே தேர்ந்தெடுக்கக் கூடும், சார்," என்றாள் அவள் மெதுவாக.

மேஜையிலிருந்து பார்வையை உயர்த்தி அவளைப் பார்த்தான் புவனேந்திரன்.

தலையை உலுக்கிக் கொண்டு, "இல்லை, அது சரிவராது. சொல்படி என்பது வேறு. விருப்பம் போல என்பது வேறு. அத்தோடு, நீ குறிப்பிட்டவர்கள் எல்லோருமே, குறைந்த பட்சமாக ஒரு தலைமுறை மூத்தவர்கள். இரண்டு தலைமுறை மூத்த பாட்டிக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட கருத்தில், ஆண்டுக் கணக்கில் ஊறிப் போனவர்கள். அதைத் தாண்டி வந்து, அவர்கள் நம் வழியில் யோசிப்பது கடினம். மேலும் இந்த விஷயத்தில், எனக்கு உன் மீதுதான் நம்பிக்கை. இந்த அலுவலகம் இல்லை என்றால், வேறு எங்கேயேனும்... என் இடத்துக்கு உன்னை அழைத்துப் போவதும் பயன் இராது. அங்கே உள்ள பணியாட்களுக்கு, இங்கே தொடர்பு இருக்கிறது. காபி ஷாப் மாதிரி இடங்களில் உட்கார்ந்து, அரை மணி நேரத்தில் முடிக்கிற வேலையும், இது அல்ல. என்ன செய்வது என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?" என்று கேட்டான் அவன்.

இந்தத் திட்டத்தை ஏற்றால், பல லட்சங்கள் முதலீடு போட வேண்டிய புவனேந்திரனுக்குத் தன் மீது இவ்வளவு நம்பிக்கை இருப்பது, நளினிக்குப் பெருமையாக இருந்தது. அத்தோடு, இங்கே வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து, அவள் வெகுவாக முயன்று, பயனில்லை என்று ஆற்றாமையோடு விட்ட ஒன்று நடக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியும் நிறையவே இருந்தது.

இவ்வளவுக்கு வந்து, உப்புப் பெறாத சின்னக் காரணங்களால் கெட்டு விடக் கூடாதே.

எனவே அவசரமாக யோசித்து, "சார், உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்பவும் முன்னாலேயே கட்டப்பட்ட ஃப்ளாட் என்பதால், வீட்டுக்கு முன்புறம் வராந்த விசாலமாக இருக்கும். அங்கேயே, பிரம்பு சோஃபா செட்டெல்லாம் போட்டிருப்போம். அங்கே, உட்கார்ந்து வேலை செய்யலாம். நானே, அங்கே அமர்ந்துதான், என் துணி வேலைகளைச் செய்வது. எங்கள் வீடு, கடைசி ஃப்ளாட் என்பதால், வேறு யாரும் போய் வந்து இடையூறாகவும் இருக்காது. என் அம்மா, அப்பா, தங்கைதான். தங்கை பிளஸ் டூ. அவள் பாடத்திலேயே மூழ்கிக் கிடப்பாள். அம்மா உதவியாகவே இருப்பார்கள்," என்று வேகமாகச் சொன்னாள் அவள்.

"அதாவது, வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்துகிறாய்," என்று சிரித்த போதும், "இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. எதற்கும் உன் தந்தை வீட்டில் இருக்கும் நேரம் சொல்லு. நான் வந்து, அவரிடம் நேரில் அனுமதி கேட்டு, அதன் பிறகு வேலையைத் தொடங்குவோம்," என்றான் புவனேந்திரன்.

அவ்வளவு பெரிய மனிதன், முதலாளி என்ற பந்தா காட்டாமல் பெற்றவரின் உரிமையை மதிக்கிறான் என்பதே, சுதர்சனத்துக்கு அவனிடம் ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்த, அவரும் சம்மதித்தார்.

இப்படித்தான் புவனேந்திரன் நளினியின் வீட்டுக்கு வந்தது.

அவன் வருமுன், அவனுடைய பாதுகாவலர்கள் வந்து, வீட்டைச் சுற்றிப் பார்த்தது, நளினி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அது பற்றித் தாயிடம் விளக்கம் சொல்லுகையில், அவளுக்குக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

ஆனால், அவன் இனிமையாகப் பேசித் தந்தையிடம் அனுமதி பெற்ற விதமும், தொடர்ந்து அவனோடு சேர்ந்து செய்த வேலையும், இடையிடையே கலகலப்பாக நடந்த பேச்சும் அவள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கவே, இந்த எரிச்சல் மறந்து போயிற்று.

புவனேந்திரன் வாரா வாரம் சென்னைக்கு வர, வேலையும் வெகு முனைப்பாக நடக்க, நளினியும் அவனது வரவை மிகவும் ஆவலோடும் ஆனந்தத்தோடும் எதிர்பார்க்கலானாள்.

மூன்று வாரங்கள் இப்படிக் கழிய, நாலாவது வாரம், புவனேந்திரன் சென்னைக்கு வந்தபோது, மாலையில் அவனது வரவுக்காக அவள் வீட்டில் காத்திருக்கையில், வாயிலில் வந்து நின்ற சிறு காரிலிருந்து புதியவன் ஒருவன் இறங்கி வந்து, அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

கடிதம் கொண்டு வரும் கோகுல், துணிகள் விஷயத்தில் வல்லுனன் என்றும், கடைக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுப்பதில், தனக்கு அளித்த ஒத்துழைப்பை, நளினி கோகுலுக்கும் அளிப்பாள் என்று நம்புவதாகவும், அதில் புவனேந்திரன் எழுதியிருந்தான்.

புவனேந்திரன் தன் முகத்தில் ஓங்கி அறைந்தாற் போல உணர்ந்தாள் நளினி.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 9:48 am

ஏதோ ஒரு வகையில், புவனேந்திரன் தன்னை அவமதித்து விலக்கி விட்டாற்போல உணர்ந்து, நளினி தவிக்கக் காரணம் இருந்தது.

அவன் வந்த அந்த மூன்று வாரங்களில், முதல் வாரம் மட்டும்தான், அவன் வார நாட்களில் மட்டுமாக வந்தது. மற்ற இரு முறையும், வியாழன் அல்லது வெள்ளியன்று வந்து, ஞாயிறு முடியச் சென்னையிலேயே இருந்துவிட்டுப் போனான்.

வார நாட்களில், மதிய உணவு இடைவேளைகளில், வேலை செய்தனர். ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை தொடங்கி, மாலை வரை வேலை நடந்தது.

சின்ன வயதாகத் தோன்றுகிறானே, மெய்யாகவே, வேலை தான் இவனது நோக்கமா என்று சற்றுக் கவலைப்பட்ட சகுந்தலா கூட, வேலை நடந்த வேகத்தைப் பார்த்து அதிசயித்துப் போனாள்.

இடையிடையே, காபி, குளிர் பானம் ஏதாவது கொணர்ந்து வைப்பாள். முறுக்கு, தட்டை என்று ஒரு சிற்றுண்டி அடுத்து வந்தது.

வெறும் நன்றி கூறி உண்டுவிட்டுப் போகாமல், புவனேந்திரன் சகுந்தலாவிடமும் அபிப்பிராயம் கேட்பான்.

கூடவே ஒரு பாராட்டும் இருக்கும்.

"'உப்பிட்டவரை உள்ளளவும் நினை!' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்த மாதிரி ஒரு சிறு உப்புக்கல் கூட அதிகமோ, குறைவோ இல்லாமல், இப்படி ருசியாகச் செய்து தந்தால், இந்த உயிர் இன்னொரு பிறவி எடுக்கும் போது கூட, இந்தச் சுவையை மறக்காது, ஆன்ட்டி!" என்று அவன் கூறுகையில், சகுந்தலாவுக்கு உச்சி குளிர்ந்து போகும்.

"இப்போதெல்லாம் உப்புத் தூள் தான். உப்புக் கல்லே கிடையாது," என்று மடக்கிய போதும், அந்த 'உப்புக் கல்' என்ற வார்த்தையில் நளினியின் மனம் இதமாகக் குறுகுறுக்கும்.

உப்புக்கல் என்ற வார்த்தையை வேண்டும் என்றுதான், புவனன் சொன்னானா? சொல்லும்போது, லேசாக அவளைப் பார்த்தானா?

ஞாயிற்றுக் கிழமைகளில், சேர்ந்து சாப்பிட அழைத்த போது, மறுக்காமல் அவர்களோடு அமர்ந்து ரசித்து உண்டான். அடுத்த வேளைக்கு பீட்சா, சான்ட்விச் என்று எல்லோருக்குமாக வரவழைத்தான்.

"ஐயோ, நான் பிளஸ் டூ படிக்கிறேனாக்கும்! எனக்கெல்லாம் யாரிடமும் பேச நேரமே கிடையாது!" என்று புருவத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலையும் மஞ்சரியைக் கூட, உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேச வைத்தான்.

மொத்தத்தில் முதுகை ஒடிக்கிற அளவுக்கு வேலையும் நடந்தது. கூடவே தன் வீட்டாரோடு அவன் இணைந்து பழகிய விதத்தில், நளினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கடைசித் தடவை புவனேந்திரன் வந்த போது அந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் அதிகமாகக் காட்டி விட்டாளோ?

காட்டி விட்டாளோ என்ன? காட்டத்தான் செய்தாள். ஒருவரின் வரவு சந்தோஷமாக இருக்கும் போது, அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அதிலும், அந்த நபர் அவள் வீட்டு விருந்தாளியாக வரும்போது?

அவள் சிரித்துக் கொண்டே, "லட்சம் நல்வரவு!" என்ற போது, புவனேந்திரன் பதிலுக்குச் சிரித்தபடிதான் உள்ளே வந்ததாக, அவள் அப்போது நினைத்தாள்.

ஆனால், சற்றுத் திகைத்து நின்று விட்டு, அதன் பின்னர் சமாளித்துச் சிரித்தானோ என்று இப்போது யோசித்துப் பார்க்கையில் அவளுக்குத் தோன்றியது.

ஏன்? ஒருவர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்பதில் கூடத் திகைப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் ஒன்றும் அவனுடைய விரோதி இல்லையே.

மனம் எரிமலையின் மடியாய்க் குழம்பிக் குமுறிய போதும், பெற்ற தாயிடம் கூட, அவளால் அதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"புவனேந்திரன் சாருக்கு வேறு நிறைய வேலை இருக்கிறதாம்மா! அதனால், இந்த வேலையை இவரிடம் ஒப்படைத்து இருக்கிறாராம்," என்று அறிமுகம் வேறு செய்து வைக்க வேண்டியிருந்தது.

அவளை விட ஓரிரு ஆண்டுகளே மூத்தவனான கோகுல், உடைத் தயாரிப்புக் கலையில் பெரும் பட்டங்கள் வாங்கியிருந்தான். புவனேந்திரன் எழுதியிருந்த மாதிரி, வல்லுனனாகவும் இருந்தான்.

அத்தோடு, முன்னேறும் ஆர்வமும் இருந்ததால், அவனோடு வேலை செய்வது, நளினிக்குமே, அறிவுப் பூர்வமாக ஆக்கம் அளிப்பதாகத்தான் இருந்தது. சொல்லப் போனால், எந்தெந்தத் துணி வகைகளை எந்தெந்த மாதிரித் தைத்து அணிந்தால், தோற்றம் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம், புவனேந்திரனை விடவும், கோகுல் அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தான்!

அவளை விடவுமே!

கோகுலோடு வேலை செய்யத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே நளினி இதைப் புரிந்து கொண்டாள். எனவே, மெய்யாகவே, செய்யும் பணி சிறப்பாக இருக்க வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காகவே, புவனேந்திரன் இந்தக் கோகுலை அனுப்பியிருக்கிறான் என்று, நளினி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால், இது பற்றி 'உன்னதம்' வளாகத்தில், புவனேந்திரன் தன்னை அழைத்துச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து மாலையில் வேலைக்குச் சென்றவள், ரொம்பவே ஏமாந்து போனாள்.

அவனாக அவளை அழையாதது மட்டுமின்றி, அவளாக முயன்ற போதும், புவனேந்திரனை அவளால் சந்திக்க முடியவில்லை.

மறுநாளும், அதற்கு மறுநாளும் என்று அந்த முறை அவன் அங்கிருந்த அத்தனை நாட்களும் இதுவே தொடரவும், புவனேந்திரன் தன்னை வேண்டும் என்றே ஒதுக்குகிறான் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போயிற்று.

ஏன் ஏன் என்று பல்லாயிரம் முறை யோசித்து மனதை புண்ணாக்கிக் கொண்டாளே தவிர, அந்த ஒதுக்கத்தின் காரணத்தை அவளால் ஊகிக்கவே முடியவில்லை.

போகிறான் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல் மிகவும் வேதனையாக இருந்தது.

அவ்வளவு தூரம் சகஜமாக, குடும்பத்துடனேயே சேர்ந்து அமர்ந்து உண்டு, பேசிச் சிரித்துப் பழகிவிட்டு, இப்போது பெரிய முதலாளியாக, ஒரு கடைநிலைப் பணியாளைப் போலப் புவனேந்திரன் தன்னை நடத்துவதை அவளால் தாங்க முடியவில்லை.

ஆனால், அவளது வீட்டுக்குப் புவனேந்திரன் வந்து, 'ஆன்ட்டி, அங்கிள்!' என்று அவளுடைய பெற்றோருடன் ஓர் உறவினனைப் போலப் பழகியது எல்லாம், அவனது வேலை நன்கு நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவா?

அவனது இடத்துக்குத் தகுதியுள்ள இன்னோர் ஆள் கிடைத்ததும், அப்படியே ஒதுங்கிக் கொண்டு விடுவானா?

எப்படி முடியும்?

அவனும் சந்தோஷமாகத்தானே பேசிச் சிரித்தான்?

அந்த சந்தோஷத்துக்காக, அவளைப் போல, அவனது மனமும் ஏங்காதா?

ஆனால், அவனுக்கெல்லாம் மனம் ஒன்று இருந்தால் தானே, ஏங்குவதற்கு?

முதலாளி அல்லவா? கொஞ்சம் சிரித்துப் பேசுவதாகக் காட்டிக் கொண்டாலே, முழு மூச்சுடன் வேலை செய்வாள் என்று கணக்கிட்டிருக்கிறான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, இரவு தூக்கத்தில் கூட, வண்ணங்கள், வடிவமைப்புகள், துணி வகைகளைப் பற்றியே யோசித்து யோசித்து வடிவமைத்தது அவளது முட்டாள்தனமே தவிர, அதில் அவனைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

இந்தக் குமுறலின் ஊடே, நளினிக்குக் கோபமும் வந்தது.

அவளது வீடு என்ன, 'உன்னத'த்தின் கிளையா? அல்லது, புவனேந்திரன் அதற்குத் தனியாக வாடகை கொடுக்கிறானா? என்ன உரிமையில், அவளது வீட்டில் இந்த வேலையைச் செய்வது?

வேறு இடம் சரியாக இல்லையே என்று, ஏதோ, அவளாகத்தான் ஓர் இளக்கத்தில் இந்த ஐடியா சொன்னாள். ஆனால், அதுதான் சாக்கு என்று, அதையே நிரந்தரமாக்கி விடுவதா?

அடுத்த முறை அவன் வரும்போது, இந்த விஷயம் பற்றிப் புவனேந்திரனிடம் காரசாரமாக இல்லாவிட்டாலும், கறாராகப் பேசிவிட வேண்டும் என்று நளினி முடிவெடுத்த போது, ஒரு நாள் காலையில், நளினி வேலைக்குக் கிளம்பு முன்பாக கூரியரில் அவளுக்கு ஒரு கடிதமும், அவளுடைய தந்தைக்கு ஒரு பெரிய பார்சலும் வந்தன.

இரண்டையுமே அனுப்பியது புவனேந்திரன் தான்.

பெரிய பார்சலை அவசரமாகப் பிரித்துப் பார்த்த சகுந்தலாவும், சுதர்சனமும் வியந்து நின்றனர்.

சென்னை 'பூம்புகா'ரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில், ஒரு பெரிய சூரியச் சக்கரத்தைப் பார்த்து ஆசைப்பட்டு விலையைக் கேட்டுவிட்டு, மிரண்டு போய் ஓடியே வந்து விட்டதாக, ஒரு தரம் நகைச்சுவை ததும்ப, அவர்கள் இருவரும் புவனேந்திரனிடம் விவரித்திருந்தனர்.

அதே சூரியச் சக்கரம் தான் பார்சலுக்குள் இருந்தது. கூடவே ஒரு சிறு கடிதமும்.

'உன்னத'த்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மாறுதலைச் செய்யப் பல்வேறு உதவிகளை அன்போடு செய்ததற்காகத் தனது நன்றியை இந்தச் சிறு அடையாளத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்வதாகப் புவனேந்திரன் கடிதத்தில் எழுதியிருந்தான்.

அவர்கள் செய்த உதவிக்கு, நேரில் வந்து நன்றி தெரிவிப்பதுதான் முறையாகும். ஆனால், கடை வளாகத்தில் சில மாற்றங்கள் செய்வதால், வேலை மிகுதி. அதனால் நேரில் வர முடியவில்லை என்று, ஒரு காரணத்தையும், அந்தப் பெரிய தலைமுறை ஏற்கும் விதமாக அவன் பதவிசாகவே எழுதியிருந்தான்.

சகுந்தலாவுக்கு மனம் உருகிப் போயிற்று.

"அருமையான மனிதர். இப்படி ஒரு பாஸ் கிடைத்தது, உன் அதிருஷ்டம்," என்றார் தந்தையும்.

"உனக்கு என்ன எழுதியிருக்கிறார்? இதே போலவா?" என்று இருவரும் கேட்க, நளினி தனக்கு வந்த கடிதத்தை நீட்டினாள்.

அவளுக்கும் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. சில விவரங்களும்.

மாற்றம் குறித்து 'உன்னத'த்துடைய நிர்வாகிகளுக்கு அறிவித்து விட்டதாலும், அலுவலகத்திலேயே இந்தத் தேர்ந்தெடுக்கும் வேலைகளைச் செய்யத் தனியிடம் ஒன்று ஒதுக்கியிருப்பதாலும், கோகுலும், நளினியும் அங்கேயே சேர்ந்தமர்ந்து, இதே பணியை வெளிப்படையாகச் செய்யலாம் என்று தகவல் இருந்தது.

இந்த வேலை மாற்றம், நளினிக்கு ஒரு பதவி உயர்வாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

கூடவே, அதுவரையிலும் அவள் செய்த அதிகப்படி வேலைக்காக, ஒரு கணிசமான தொகைக்கான ஒரு காசோலையும்.

பதவி உயர்வு, பரிசு என்று பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரிக்க, எதையும் ஒத்துக் கொள்ளப் பிடிக்காமல், அதே சமயம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவும் முடியாமல், நளினி உள்ளூரக் குமுறினாள்.

காட்டிக் கொள்வது இருக்கட்டும், அவளுக்கே, தான் என்ன விரும்புகிறோம் என்று தெளிவாகப் புரியாத நிலை.

பணம் கொடுத்து, ஒரு வல்லுனனின் உழைப்பை வாங்கக் கூடிய நிலையில் உள்ளவன், அவனது மற்ற வேலைகளுக்கு இடையில், இதையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டே இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், புவனேந்திரன் இப்படித் திடுமென வெட்டிக் கொண்டது, அவளுக்குப் பிடிக்கவில்லை.

அத்தோடு, அவள் செய்த உதவிக்கு அவன் விலை போட்டுப் பணம் அனுப்பியது, என்னவோ, அவளை அவமானப்படுத்தி விட்டது போல, அவளுக்கு ஆத்திர மூட்டியது.

அவள் என்ன, பணத்துக்காகவா இந்த அதிகப்படி வேலையைச் செய்தாள்?

எண்ணப் போக்கில் தொடர்ந்து, 'பின்னே எதற்காகச் செய்தாள்' என்ற கேள்வி தோன்றவும், அவளுக்கே ஒன்றும் புரியாது போயிற்று.

அவனிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறவள், அவள் செய்த அதிகப்படி வேலை, பணம், பதவி உயர்வு, இதற்காகவெல்லாம் இல்லை என்றால் வேறு எதற்கு?

என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவில்லை.

இந்தக் குழப்ப நிலையிலேயே, மேலும் இரு மாதங்கள் கடந்து போயின.

இந்த அறுபது நாட்களுமே, புவனேந்திரனை அவள் பார்க்கவே இல்லை.

வளாகத்துக்கு அவன் நேரில் வந்ததாகவும் தெரியவில்லை.

ஆனால், அவன் நேரில் வராவிட்டாலும், 'உன்னத'த்தில் பல மாற்றங்கள் நிகழலாயின.

ஜவுளிப் பகுதியைப் போலவே, வளாகத்தின் எல்லாத் துறைகளிலுமே, இந்த மாற்றம் அமலாக்கம் செய்யப்பட்டது.

மதியம் கடையை மூடுவது நிறுத்தப்பட்டது.

இந்த மாற்றங்களைத் தாங்கிய விளம்பரங்கள், பெரிய பத்திரிகைகளில் வெளியாயின.

இந்த மாற்றங்கள் பிடிக்காதவர்களும், அதுபற்றி, உரக்கப் பேசப் பயப்பட்டார்கள். சின்னப் பயல் என்று எண்ணப்பட்டவன், எங்கேயோ இருந்து கொண்டு, இங்கே இப்படி ஆட்டி வைக்கிறானே, இவனது காதுகள் எங்கெங்கே இருக்கின்றனவோ என்று அஞ்சினார்கள்.

அதற்கேற்ப, புதிதாகப் பலர் வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்.

அவர்கள் அனைவருமே, புவனேந்திரனால், நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டார்கள். கோகுலைப் போல!

பூவலிங்கத்தின் தலைமையில் மேலும் பலர் சேர்க்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததால், அது மிகவும் அவசியமாகவும் ஆயிற்று.

ஒரு காலத்தில் நளினி விரும்பிய விதமாகத்தான், வளாகக் கடைகள் 'ஜே ஜே' என்று நடந்தன. ஆனால், அதைப் பார்த்து மகிழ முடியாமல், அவளது மனதுதான் ஏனோ வெறுமையாக இருந்தது.

நாளுக்கு நாள் அந்த வெறுமை கூடிற்றே தவிர, ஒரு சிறிதும் குறைவதாக இல்லை.

எரிச்சலுற்றவளாய், அன்று இரண்டு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, நளினி 'உன்னத'த்தை விட்டுச் சீக்கிரமே கிளம்பி விட்டாள்.

ஆனால், வீட்டை நெருங்குகையில் அதுவும் பிடிக்கவில்லை.

ஏன் சீக்கிரம் வந்தாய்? உடம்புக்கு என்ன? குளிரா? காய்ச்சலா? என்ன என்று அன்னை ஆயிரம் கேள்விகளால், அவளைத் திணறடித்து விடுவாள்.

வீடு போகிற வழியில், சற்று நேரம் கடைகளில் சுற்றி விட்டு, மெல்ல வீட்டுக்கு நடந்து சென்றாள்.

வீடு இருக்கும் தெருவுக்குள் புகும்போது, அவளது வீட்டுப் பகுதியில் இருந்து, ஒரு பெரிய நீளக் கார், தெருவின் மறுமுனையில் வளைந்து திரும்பியது.

இது புவனேந்திரனின் கார் போலத் தெரிகிறதே, வீட்டுக்கு வந்திருப்பானோ? அவன் வருகிற நேரம் அவள் வீட்டில் இல்லாமல் போய் விட்டாளே!

பரபரப்போடு, ஓட்டமும் நடையுமாக, அவள் வீட்டுக்கு விரைந்தாள். அங்கே அவளுக்கு மேலாகப் படபடப்புடன், அவளுடைய தாயார் இருந்தாள்.

தந்தையும் கூட!

மகளைப் பார்த்ததும், சற்றே அதிர்ந்தாற் போல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பெற்றோர் இருவருமே அவளைத் திகைத்து நோக்கியது, நளினிக்கு வியப்பாக இருந்தது.

பொதுவாகக் குடும்ப அங்கத்தினருள் ஒளிவு மறைவு பழக்கமில்லை. அவசியம் இல்லாதது. அவசியமற்ற வீண் வேதனை என்று தோன்றிச் சொல்லாமல் விடுவது தவிர, எல்லாவற்றையும் கலந்து பேசி விடுவதுதான் வழக்கம். ஏதாவது குழப்பம் என்றாலும், நேரடியாகக் கேட்டு விடுவது தான்.

பெரியவர்களாகப் பேசட்டும் என்று சற்றுப் பொறுத்திருக்க முயன்றால், நளினிக்கு வினாடி யுகமாகத் தோன்றியது.

அது புவனேந்திரனின் கார் தானா, இல்லையா?

அவனது கார் தான் என்றால், அதில் அவனே தான் வந்தானா?

அவள் இல்லாத நேரத்தில் வந்து, அவளுக்குத் தெரியாமல், அவளுடைய பெற்றோரிடம் என்ன சொல்லியிருப்பான்?

ஓர் அரை நிமிஷ நேரம் கூடப் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல், "என்னம்மா விஷயம்?" என்று கேட்டு விட்டாள் அவள்.

மீண்டும் பெற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவும், பொறுமையிழந்து, "அப்பா, ப்ளீஸ்! எதையும் மறைக்காமல், என்னிடம் சொல்லுங்க. நம் வீட்டுக்குப் புவனேந்திரன் வந்தாரா? அவரது காரைப் பார்த்தேனே, என்னவாம்? என்னை... என்னைப் பற்றி, ஏதேனும் சொன்னாரா? இப்படி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தது போதும். தயவு பண்ணி விஷயத்தைச் சீக்கிரமாகச் சொல்லுங்கள்... இ...இல்லாவிட்டால், இந்த இறுக்கம் தாளாமல், என் தலையே வெடித்துவிடும்." கெஞ்சுதலாக வற்புறுத்திக் கேட்டாள்.

அப்போதும் கணவனும் மனைவியும் அடுத்தவர் முகத்தைப் பார்க்கவும், கோபமும், கூடவே பயமும் தோன்ற, "போதும்பா! அதுதான் இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, இன்னமும் என்ன? முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு, அப்புறமாக உங்கள் பார்வையைத் தொடருங்கள். நீங்கள் இப்படிப் பதில் சொல்லாமல் தயங்கத் தயங்க, எனக்கு என்னவோ ஒரு மாதிரிப் பயமாக இருக்கிறதே!" என்று சற்றுத் தீனமான குரலில் முடித்தாள்.

மகள் கலங்குகிறாள் என்று அறிந்ததும், "பயப்பட ஒன்றும் இல்லை, பாப்பா," என்று பெற்றவர்கள் இருவரும் கோரசாக இயம்பினர்.

"பின்னே?"

நளினி கேள்வியாக நோக்கவும், "மெய்யாகவே பயப்பட ஒன்றுமே கிடையாதுதான். ஆனால், நாம் எதிர்பார்த்திராத சில விஷயங்களைப் பற்றித் திடுமெனக் கேட்கும் போது, சற்று அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது?" என்றார் சுதர்சனம்.

"அப்படி என்ன எதிர்பாராத விஷயம், இப்போது தெரிய வந்தது?"

"முதலில் உட்கார். பேசுவோம். ஏனென்றால், இது உனக்குத் தெரிந்திருக்க வேண்டிய விவரம்," என்று தொடங்கி, "நம் புவனேந்திரன் திருமணம் ஆனவர். உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"கல்யாணம் ஆகி..." என்று பெற்றவர் மேலே சொன்னது எதுவும் காதில் விழாமல், நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

திருமணம் ஆனவன். ஏன் ஆகியிருக்கக் கூடாது? கிட்டத்தட்ட முப்பதைக் கூட எட்டாத வயது. தோற்றம் இருக்கிறது. தொழில் இருக்கிறது. வளம் இருக்கிறது. பெண் வீட்டார் மொய்ப்பதில் ஆச்சரியம் என்ன?

அவனுக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் கூட இருக்கக் கூடும். இயல்புதானே?

இதில், நளினி இவ்வளவு அதிர்ச்சி அடையவோ, வருத்தப் படவோ என்ன இருக்கிறது?

ஆனால், வயிறு காலியான உணர்வுடன் நெஞ்சை அடைத்து, கண்ணை இருட்டி, அவள் மயக்கமடைந்து கீழே விழாமல் இருந்ததே அதிசயம்தான்.

அந்த அளவுக்கல்லவா அதிர்ந்து போனாள்!

ஆனால், ஏன்?

யாரோ ஒருவன், அவன் முதலாளியாகவே இருந்தாலும், அவனது திருமணம் அவளை இந்த அளவுக்குப் பாதிப்பானேன்?

கேட்பானேன்? உண்மைதான். துலாம்பரமாக விளங்கிற்றே.

"கடவுளே! நான் புவனனை நேசிக்கிறேன். அதனால்தான்..."

"என்ன?" என்று பெற்றோரின் அதிர்ந்த குரல்களைக் கேட்ட பிறகுதான், தன் மனது எண்ணியதை வாய் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது என்பது, நளினிக்கே புரிந்தது.

என்ன மடத்தனம். நியாய அநியாயங்களைப் பற்றி, அவளுக்குத் தெளிவாகப் போதித்திருக்கும் நல்லவர்களான இந்தப் பெற்றோர், அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

கவலையும், வேதனையுமாக அவர்களைப் பார்த்து, "ஆனால், புவனேந்திரனோடு, நான் அப்படி ஏதும் பழகியது கிடையாதும்மா. என் மனதில் மட்டும் தான்... ஆனால், அவருக்கு மனைவி இருப்பது, எனக்குத் தெரியாதும்மா. யா...யாருமே சொன்னதே இல்லை. சொ...சொல்லியிருந்தால்..." என்று உள்ளிருந்த வலியில் மேலே பேச முடியாமல் நிறுத்தினாள், அவள்.

"மனைவி இருந்தால்தானே..." என்று தொடங்கிய கணவனை விழித்து நோக்கிவிட்டு, "பார் கண்ணு, புவனேந்திரனின் திருமணமே ஒரு பரிதாபமான கதை. இருபத்தோரு வயதிலேயே மணந்து கொண்டு இருக்கிறார். ஆனால், மணமாகிப் பத்தே நாட்களில், அந்தப் புது மனைவியைப் பறிகொடுத்தும் இருக்கிறார். பாட்டியிடம் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லாததால், திருமணம் பற்றி, முதலில் இங்கே தெரிவிக்கவே தோன்றவில்லையாம். பிறகு, அவளே போய்விட்ட பிறகு, தெரிவிக்கும் அவசியமே இல்லாது போயிற்றாம். இப்போது..." என்று சகுந்தலா தயங்கினாள்.

மணமாகிப் பத்தே நாட்களில், புது மனைவியைப் பறிகொடுத்திருக்கிறானே, பாவம் என்று உருகிக் கொண்டிருந்தவளுக்குத் தாயின் தயக்கம் மனதில் பட்டது.

பெற்றோரை மாறி மாறிக் கூர்ந்து பார்த்து, "இப்போது மட்டும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதிலும், இங்கே வந்து, உங்களிடம்?" என்று கேட்டாள் நளினி.

சகுந்தலா மேலும் தயங்க, "மிஸ்டர் புவனேந்திரனுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம். அதனால், தன்னைப் பற்றிய விவரம் முழுவதையும் எங்களிடம் தெரிவித்து விடுவதுதான் நியாயம் என்று, இங்கே வந்து சொல்லியிருக்கிறார். உன்னிடமும் சொல்லச் சொன்னார். சொல்லி, நன்கு யோசித்து ஒரு முடிவெடுக்குமாறு கூறினார்," என்று ஒரு கணம் நிறுத்திவிட்டுச் சுதர்சனமே தொடர்ந்தார்.

"அம்மா, நீ உலகம் தெரியாத முட்டாளில்லை. உன்னை நாங்கள் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கவும் இல்லை. புவனேந்திரனின் வளம், வசதி பற்றி, உனக்கே தெரியும். நாம் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சம்பந்தம், இது. ஆனால், அவரிடம் இருக்கும் பணத்துக்காக, அவரை மணந்து கொள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நீயும் அவரை... அவரை நினைத்திருப்பதாகத் தோன்றுவதால்..."

அவரது பேச்சில் இடைமறித்து, "நீங்கள் ஓர் அபிப்பிராயம் தொனிக்கப் பேசாதீர்கள். எதையும், நளினியே யோசித்து முடிவெடுக்கட்டும்," என்றாள் சகுந்தலா.

ஆனால், உடனேயே, "அவரிடம் பணம் இருக்கலாம். ஆனால், என்ன இருந்தாலும், இரண்டாம் தாரம் அல்லவா? நம் பெண் புதுப் பூ! அதை நினைக்கும் போது எனக்கு உறுத்துகிறதே," என்றாள் தொடர்ந்து.

"என்னைச் சொல்லிவிட்டு, இப்போது நீ அபிப்பிராயம் கூறவில்லையா?" என்று மனைவியிடம் பாய்ந்தார் சுதர்சனம்.

"நீங்கள் சொன்னதால் தான் நானும் சொல்ல வேண்டியதாயிற்று," என்றாள் மனைவி பதிலுக்கு.

"என்னத்தைச் சொன்னாய்? பெரிதாக இரண்டாம் தாரம் என்றாயே, இன்றைக்கு எத்தனை பையன்கள் அங்கே இங்கே போகாமல், நல்லபடியாக இருக்கிறார்கள்? அதை என்னவென்று கொள்வது? தப்பான இடங்களுக்குப் போகாத நல்ல பையனாகத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று நானே கலங்கிக் கொண்டிருந்தேன். எப்படியும், புவனேந்திரன் நல்ல விதம் என்பது உனக்கும் நிச்சயம்தானே?" என்று சுதர்சனம் கேட்ட போது, சகுந்தலா மறுத்துப் பேசவில்லை.


புவனேந்திரன் அவர்கள் வீட்டிற்கு வந்து, நளினியோடு சேர்ந்து வேலை செய்த போது, அவனது கண்ணியமான நடத்தை குறித்துக் கணவன் மனைவி இருவருமே தனிமையில் பலமுறை பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.

பார்வையில் கூடக் கனவான் என்று சகுந்தலாவே சொல்லியிருக்கிறாள்.

ஆனாலும் விடாமல், "அடியாட்கள் மாதிரி, இருவரைக் கூடவே அழைத்துக் கொண்டு அலைவதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது," என்றாள் பெற்றவள்.

"பத்திரிகையில் எத்தனை படிக்கிறாய், தொழிலதிபர் கடத்தல், அது இதென்று. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கையோடு இருப்பதைப் பாராட்டாமல், அசட்டுத் தனமாகக் குறைப்படுகிறாயே."

இருவர் பேச்சையும் அரை குறையாகக் கவனித்தபடி நளினி தனக்குள் யோசித்தாள்.

அவன் சிம்லாவுக்கு அழைத்ததை, அவசியமற்ற பிரச்சனை என்று பெற்றோரிடம் சொல்லாமல் விட்டது நல்லதாயிற்று என்று எண்ணினாள் அவள்.

அது மட்டும் தெரிந்தால், அவன் முகத்திலேயே விழித்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அவளை அப்படி அழைத்தவன், மற்றவர்களோடு அப்படிச் சென்றதே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்புறம் என்ன நல்லவன்?

ஆனால், மெய்யும் பொய்யுமாய் உலா வரும் அலுவலக வதந்தியின்படி பார்த்தால், பெண்களிடம் அவன் நெருப்புதான். திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றுதான் பேச்சு! கோகுல் மாதிரிக் கோவையிலிருந்து இங்கு வந்து பணிபுரிகிறவர்கள் கூட, அந்த மாதிரித் தவறாக, அவனைப் பற்றிப் பேசியதாகக் கேள்வி இல்லை. சிறு பொறி என்றால் கூடப் பெரு நெருப்பென்று பரவியிருக்குமே! ஒதுங்கிப் போனால் கூட, இது போன்ற விஷயம் என்றால், கூப்பிட்டு வைத்துக் கதையாய்ச் சொல்வார்கள். காவல் பொறுப்பாளர் என்று, கம்பீரமாக ஒதுங்கிப் போகும் பூவலிங்கமே, புவனேந்திரனுடைய பெற்றோர் பற்றி, அவளிடமே சொன்னாரே!

அப்படியானால், அவளிடம் மட்டும் தான், அவன் அப்படியா?

ஆமாம் என்றால்... நளினி சட்டென்று பரபரப்புற்றாள்.

ஒருவேளை, அப்போதே அவனிடம் பாதிப்பு ஏற்பட்டிருந்ததோ? உண்மை நேசம் என்று தெரியாமல், வெற்று ஆசை என்று எண்ணிக் கேட்டிருப்பானோ?

அப்படி மட்டும் இருந்தால்...

ஆனால், ஒரு தரம் மணந்தவனுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாதா?

அந்தக் கணத்தில், அவனை மணந்து, அவனோடு வாழ்ந்த அந்தப் பெண்ணின் நினைவில், அவளுக்கு வயிறு காந்தி விட்டது.

சே! பாவம் செத்துப் போனவளைப் பற்றி, என்ன இது என்று, நளினி தன்னைத் தானே கண்டித்து, நேர்ப்படுத்த வேண்டியிருந்தது.

மகளது முகத்தையே பார்த்திருந்தவர்கள் போல, "என்னம்மா?" என்று பெற்றோர் கேட்கவும், சட்டெனச் சுதாரித்தாள் அவள்.

"நா...ன்... எனக்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டும், அம்மா!" என்றாள். "என் மனமே எனக்கு இப்போதுதான்... இன்னமுமே, ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை. ஏதோ குழப்பமாக... அதனால்... அதனால்..." என்று முடிக்க முடியாமல் தடுமாறினாள்.

"அது சரிதானம்மா! வாழ்க்கை முழுவதற்குமான தீர்மானம். இதை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. அதனால, நிதானமா, நல்லது கெட்டது பற்றி நன்கு யோசித்து முடிவு பண்ணு. புவனேந்திரன் கூட, அப்படித்தான் சொன்னார். 'நீங்களும் நளினியுமாகத் தீர யோசித்து முடிவு பண்ணிச் சொல்லுங்கள்,' என்றார். ஆனால் பாவம்! கண்ணில் மட்டும் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்தது!" என்றார் சுதர்சனம்.

தந்தையின் விருப்பம், நளினிக்கு நன்றாகவே புரிந்தது.
Back to top Go down
dubaisurya

dubaisurya


Posts : 117
Points : 279
Join date : 2010-03-09
Age : 44

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 10:15 am

arumaiyana padaippukkal.. fathima..very nice ma.. thx
Back to top Go down
http://www.besttamilchat.com
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 11:34 am

AKKA



ரமணி சந்திரன் நாவல்கள் Kissரமணி சந்திரன் நாவல்கள் Kiss

ரமணி சந்திரன் நாவல்கள் Thanx010
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:07 pm

தாய்க்கும் புவனனைப் பிடிக்கத்தான் செய்யும். தந்தை எடுத்துச் சொன்ன பிறகு, அவள் மறுத்துப் பேசவும் இல்லை.

ஆயினும்...

மறுநாள் அலுவலுக்கு நளினி சற்றுச் சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், பெற்றவர்கள் மகளிடம் ஏன் என்று ஒன்றும் கேட்கவில்லை.

சந்தேகம் இருந்தால் தானே கேட்பதற்கு?

நளினி நேராகச் சென்ற இடம், புவனேந்திரனின் வீடுதான். ஆனால், வீடு வரை சென்றவளுக்கு, உடனே மனம் மாறிவிட்டது.

வீட்டிலுள்ள பணியாளர்களுக்கும், கடை வளாகத்து ஆட்களுக்கும் தொடர்பு இருப்பதாக, முன்பே ஒரு தரம் புவனேந்திரன் கூறியிருந்தது நினைவு வர, அங்கே சென்றால், தனியாக வீட்டுக்கே சென்றாளாம் என்று கண்ட பேச்சு கிளம்பக் கூடும் என்று தயக்கம் உண்டாயிற்று.

இது சரியில்லை.

சற்று யோசித்துவிட்டு, ஏதோ நினைவு வர, ஆட்டோவைத் திருப்பி ஓட்டச் சொன்னாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, சற்றுத் தொலைவில் ஒரு பூங்காவும் அருகில் ஒரு பொதுத் தொலைபேசி பூத்தும் கண்ணில் பட்டன. வரும்போது, அசுவாரசியமாகப் பார்த்தபடி வந்தது. நல்லவேளையாக நினைவு வந்ததே என்று எண்ணியபடி, அங்கே இறங்கிக் கொண்டாள்.

தொலைபேசியில் புவனேந்திரனை அழைத்தபோது, அவளுக்குக் கொஞ்சம் படபடப்புதான்.

ஆனாலும், "நா...ன்... நளினி பேசுகிறேன். உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சின்னப் பூங்கா இருக்கிறது. அங்கே என்னைச் சந்திக்க முடியுமா?" என்று வேகமாகக் கேட்டு விட்டுப் பூங்காவின் பெயரைச் சொன்னாள்.

"அந்தப் பூங்காவை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். பத்து நிமிஷங்களில் அங்கே இருப்பேன்!" என்று அவன் உடனடியாக ஒப்பவும், நளினிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

உள்ளே சென்று தனியே உட்கார்ந்திருக்க மனம் வராமல், பூங்காவின் வாயில் அருகேயே நின்று கொண்டிருந்தாள்.

அதிக நேரம் காத்திருக்கத் தேவை இல்லாமல், அவன் சொன்ன பத்து நிமிஷங்களுக்கும் சற்று முன்னதாகவே, புவனேந்திரனின் நீளக் கார் அங்கே வந்து நின்றது.

சொன்ன நேரத்துக்கு முன்பாகக் கார் வந்துவிட்டது. அவளுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், அவனுக்குப் பதிலாக, அவனுடைய பாதுகாவலர்களில் ஒருவன் இறங்கி வந்து, "சார் காரில் இருக்கிறார். வந்து காரில் ஏறிக் கொள்ளுமாறு, உங்களிடம் சொல்லச் சொன்னார்!" என்றதுதான், அவளுக்கு லேசாக உறுத்தியது.

காரில் ஏறினால், இந்தப் பாதுகாவலனும் கூட ஏறுவானே? அப்புறம், அவனிடம் தனியாக என்ன பேச முடியும்?

அவள் நினைத்தது போலவே, அந்தப் பாதுகாவலனும் காரில் ஏறிக் கொள்ளக் கார் கிளம்பியது.

மூன்று வரிசை உட்காரும் இடம் கொண்ட அந்தக் காரின் பின் சீட்டில், அவன் அமர, புவனேந்திரனுடைய அடுத்த காவலன் காரை ஓட்டினன்.

அவள் காரில் ஏறிக் கார் கிளம்பியதுமே, "நளினி வீட்டில் அம்மா, அப்பா சொன்னார்களா? உன் முடிவைச் சொல்லத்தான் அழைத்தாயா? என்ன முடிவு செய்தாய்?" என்று ஆவலாகப் புவனேந்திரன் கேட்கவும், நளினியின் மனம் துணுக்குற்றது.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் என்றாலுமே, மணமக்கள் இருவரும் மனம் விட்டுப் பேசும்போது, யாரும் கூட இருப்பதில்லை. காருக்குள் இன்னும் இருவர் இருக்கும் நினைவே இல்லாமல், இவன் என்ன, இப்படிக் கேட்கிறான்?


தாய்க்கும் புவனனைப் பிடிக்கத்தான் செய்யும். தந்தை எடுத்துச் சொன்ன பிறகு, அவள் மறுத்துப் பேசவும் இல்லை.

ஆயினும்...

மறுநாள் அலுவலுக்கு நளினி சற்றுச் சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், பெற்றவர்கள் மகளிடம் ஏன் என்று ஒன்றும் கேட்கவில்லை.

சந்தேகம் இருந்தால் தானே கேட்பதற்கு?

நளினி நேராகச் சென்ற இடம், புவனேந்திரனின் வீடுதான். ஆனால், வீடு வரை சென்றவளுக்கு, உடனே மனம் மாறிவிட்டது.

வீட்டிலுள்ள பணியாளர்களுக்கும், கடை வளாகத்து ஆட்களுக்கும் தொடர்பு இருப்பதாக, முன்பே ஒரு தரம் புவனேந்திரன் கூறியிருந்தது நினைவு வர, அங்கே சென்றால், தனியாக வீட்டுக்கே சென்றாளாம் என்று கண்ட பேச்சு கிளம்பக் கூடும் என்று தயக்கம் உண்டாயிற்று.

இது சரியில்லை.

சற்று யோசித்துவிட்டு, ஏதோ நினைவு வர, ஆட்டோவைத் திருப்பி ஓட்டச் சொன்னாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, சற்றுத் தொலைவில் ஒரு பூங்காவும் அருகில் ஒரு பொதுத் தொலைபேசி பூத்தும் கண்ணில் பட்டன. வரும்போது, அசுவாரசியமாகப் பார்த்தபடி வந்தது. நல்லவேளையாக நினைவு வந்ததே என்று எண்ணியபடி, அங்கே இறங்கிக் கொண்டாள்.

தொலைபேசியில் புவனேந்திரனை அழைத்தபோது, அவளுக்குக் கொஞ்சம் படபடப்புதான்.

ஆனாலும், "நா...ன்... நளினி பேசுகிறேன். உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சின்னப் பூங்கா இருக்கிறது. அங்கே என்னைச் சந்திக்க முடியுமா?" என்று வேகமாகக் கேட்டு விட்டுப் பூங்காவின் பெயரைச் சொன்னாள்.

"அந்தப் பூங்காவை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். பத்து நிமிஷங்களில் அங்கே இருப்பேன்!" என்று அவன் உடனடியாக ஒப்பவும், நளினிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

உள்ளே சென்று தனியே உட்கார்ந்திருக்க மனம் வராமல், பூங்காவின் வாயில் அருகேயே நின்று கொண்டிருந்தாள்.

அதிக நேரம் காத்திருக்கத் தேவை இல்லாமல், அவன் சொன்ன பத்து நிமிஷங்களுக்கும் சற்று முன்னதாகவே, புவனேந்திரனின் நீளக் கார் அங்கே வந்து நின்றது.

சொன்ன நேரத்துக்கு முன்பாகக் கார் வந்துவிட்டது. அவளுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால், அவனுக்குப் பதிலாக, அவனுடைய பாதுகாவலர்களில் ஒருவன் இறங்கி வந்து, "சார் காரில் இருக்கிறார். வந்து காரில் ஏறிக் கொள்ளுமாறு, உங்களிடம் சொல்லச் சொன்னார்!" என்றதுதான், அவளுக்கு லேசாக உறுத்தியது.

காரில் ஏறினால், இந்தப் பாதுகாவலனும் கூட ஏறுவானே? அப்புறம், அவனிடம் தனியாக என்ன பேச முடியும்?

அவள் நினைத்தது போலவே, அந்தப் பாதுகாவலனும் காரில் ஏறிக் கொள்ளக் கார் கிளம்பியது.

மூன்று வரிசை உட்காரும் இடம் கொண்ட அந்தக் காரின் பின் சீட்டில், அவன் அமர, புவனேந்திரனுடைய அடுத்த காவலன் காரை ஓட்டினன்.

அவள் காரில் ஏறிக் கார் கிளம்பியதுமே, "நளினி வீட்டில் அம்மா, அப்பா சொன்னார்களா? உன் முடிவைச் சொல்லத்தான் அழைத்தாயா? என்ன முடிவு செய்தாய்?" என்று ஆவலாகப் புவனேந்திரன் கேட்கவும், நளினியின் மனம் துணுக்குற்றது.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் என்றாலுமே, மணமக்கள் இருவரும் மனம் விட்டுப் பேசும்போது, யாரும் கூட இருப்பதில்லை. காருக்குள் இன்னும் இருவர் இருக்கும் நினைவே இல்லாமல், இவன் என்ன, இப்படிக் கேட்கிறான்?


இரண்டு அன்னியர்களை வைத்துக் கொண்டு, என்ன கேள்வி கேட்கிறாய் என்று அதட்டிப் பேசவும் நளினிக்கு மனம் வரவில்லை.

புவனேந்திரனைப் போய் எப்படி அதட்டுவது?

அத்தோடு, அவனது கேள்விக்குரிய பதிலையும், இப்போதே அவளால் கூற முடியாதே! சில விஷயங்களைப் பற்றிப் பேசித் தெளிவு பெற்ற பிறகுதானே, ...குறைந்த பட்சமாய் அவனிடம் ஓர் உறுதியேனும் பெற்ற பிறகல்லவா, அவளால் நிச்சயமாய்ப் பதிலைச் சொல்ல முடியும்?

ஆனால், அதையும் இந்த இரு காவலர்கள்... சகுந்தலாவின் பாஷையில் 'அடியாட்கள்' காது கேட்க, அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது.

எனவே, சிறு தயக்கத்துடன், "நான் உங்களிடம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்!" என்று தாழ்ந்த குரலில், அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல விளம்பினாள்.

"தனியாகத்தானே..." என்று வியப்புடன் தொடங்கியவன் சட்டெனப் புரிந்து, முன்னே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் தோளைத் தொட்டு, "முத்து, நேற்றுக் கூட்டம் நடந்த நட்சத்திர ஹோட்டல் நினைவிருக்கிறது, அல்லவா? அங்கே, காபி ஷாப்புக்குப் போக வேண்டும். உள்ளே போய் விட்டால், பாதுகாப்பான இடம்," என்றான்.

என்ன பாதுகாப்பு என்று எண்ணியபோதும், நளினி ஒன்றும் சொல்லவில்லை. காபி ஷாப் கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். ஏனெனில், அவள் பேச விரும்பியவற்றை, அடுத்தவர் அறிய கேட்க முடியாது!

நட்சத்திர ஹோட்டலில் காபி ஷாப்பில் அந்த நேரத்தில் பெரிதாகக் கூட்டம் இல்லைதான். மொத்தம் இருபது பேர் இருந்திருப்பார்கள். ஆனால், அந்த முத்து தன் சகாவோடு, அவர்களோடு கூடவே உள்ளே வந்து, அவர்களையும், நுழை வாயில்களையும் கவனிப்பதற்கு ஏதுவாக, முன்னும் பின்னுமாக, அவர்களுக்கு அடுத்த மேஜைகளில் உட்கார்ந்தது, அவளுக்கு எரிச்சலூட்டியது.

இப்படி இரண்டு பார்வையாளர்களள வைத்துக் கொண்டு, அவர்களால் எப்படித் தங்கு தடையின்றி, தன்னியல்பாகப் பேச முடியும்?

தன் மெய்க்காப்பாளர்களை நளினி பார்ப்பதைக் கவனித்து விட்டு, "முத்துவும், திருமயனும் எப்போதும் கூடவே இருப்பதால், அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாக நினைக்க எனக்குத் தோன்றுவது இல்லை," என்றான் புவனேந்திரன்.

"ஆனால், எனக்கு அப்படி எண்ணத் தோன்றவில்லையே," என்றாள் அவள்.

"தோன்ற வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று, முன்பே நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். அதனால், இந்த இருவரையும், வாழ்வில் ஓர் நிரந்தர அங்கமாக நினைப்பதற்கு நீ பழகிக் கொள்ள வேண்டும்," என்றவன், தலையசைத்து, "நம்பிக்கைதான். என்றாலும், நீ இன்னமும் முடிவே சொல்லவில்லை. அதற்குள் எங்கே போய்விட்டேன் பார்," என்று லேசாக முறுவலித்தான். "சொல்லு நளினி. ஏதோ பேச வேண்டும் என்றாயே."

நம்பிக்கையா? எப்படி வரும்? அதுவும், கேவலமாக ஒன்று கேட்டு, அதை அவள் மறுத்து... எல்லாம் மறந்து விட்டானா?

அதைப் பற்றி இந்த இருவர் முன் எப்படிக் கேட்பது? ஆனால், கேளாமல் விடவும் முடியாது.

"அது... வந்து சார்..." என்று அவள் ஒருவாறு தொடங்க முயற்சிக்கையில், அவன் குறுக்கிட்டு, "இன்னமும் 'சாரா'?" என்று, மென் குரலில் கேட்டான்.

என்ன குரல்!

தலையை உலுக்கித் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "அ... அன்றைக்குப் பூவலிங்கம் சார் வேலைக்காக, சிம்லாவுக்குக் கூட, வந்து, ஏதேதோ கேட்டீங்களே அது... அது காதல்... வந்து, நேசத்தின் அறிகுறி ஆகுமா?" என்று, ஒரு வழியாகக் கேட்டே விட்டாள்.

கண்ணில் பாராட்டோடு, "கெட்டிக்காரத்தனமான கேள்வி. அதாவது, எப்போதிருந்து உன்னை நினைக்கத் தொடங்கினேன் என்று கேட்கிறாய். அப்படித்தானே?" என்று புன்னகை செய்தான்.

அவள் பேசாதிருக்கவும், "எப்போது என்று சொன்னால், உன்னால் நம்பக் கூட முடியாது, நளினி. அது... முதல் பார்வையில் என்று சொல்ல முடியாது. ஆனால், அசட்டுத் தனமாய் வேலையை விட்டு விட்டாயே என்றேனே, நினைவிருக்கிறதா? அப்போது உன் முகபாவம்! அன்றைக்கு என்னால் தூங்கவே முடியவில்லை. தூக்கம் வருவதற்காக, இரண்டு மணி நேரம் நீந்தினேன். ஆறு ஆண்டுகளாக, எந்தப் பெண்ணும் என்னை அப்படிப் பாதித்தது இல்லை. அதுதான், ஒரு வேளை நெருங்கிப் பழகினால், அந்தப் பாதிப்பு மறைந்து விடக்கூடும் என்று எண்ணினேன். ஆனால், நீ மறுத்த போதும் ஏமாற்றம் தோன்றாமல், ஒழுக்கத்தை மதிக்கிறாய் என்று, எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது..." என்றவன், அவளது விரிந்து நோக்கிய விழிகளைக் கண்டு சிரித்தான்.

"உண்மை கண்மணி. ஆனால், அப்போது, இவ்வளவு உறுதியாக நினைக்கவில்லை. உன்னோடு, உன் குடும்பத்தோடு பேசிப் பழகுவது சந்தோஷமாக இருந்தது. என் வரண்ட வாழ்க்கைக்கு அதுவே பெரிய சுகமாக, அதற்கு மேல், அப்போது நான் எதையும் நாடவில்லை. ஆனால், உன் கண்ணில் நேசம் தெரியவும், கலங்கிப் போனேன். நான் பட்ட மரம்! என்மேல், எப்படி...?"

அவன் கலங்கினானோ என்னவோ, நளினி ரொம்பவே திகைத்துப் போனாள்.

இவன் எப்போதோ அவளை அறிந்திருக்கிறான்.

இன்னதென்று அவளே அறியும் முன்பாகவே, அவன் தெரிந்து வைத்திருக்கிறானே.

ஒரு தொழிலதிபனாகப் பல தரத்தாருடன் பேசிப் பழகியதால் வந்த திறமையா? அல்லது... ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருந்ததால் வந்த அனுபவ அறிவா?

தன்னை மீறி, "அவர்களை... உங்கள் மனைவியை மிகவும் நேசித்தீர்களா?" என்று கேட்டாள் நளினி.

சில வினாடிகள், இந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லப் போவதில்லையோ என்று நளினிக்குத் தோன்றியது.

ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று கூட!

அவளுக்கு யுகமாகத் தோன்றிய அரை நிமிஷத்துக்குப் பிறகு, மேஜை மேல் வைத்திருந்த கையிலிருந்து, புவனேந்திரன் பார்வையை அவள் முகத்துக்கு உயர்த்தினான்.

அவளது கண்களை நேராகச் சந்தித்து, "உன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, நளினி. அந்தத் திருமணம் நடந்தபோது, எனக்கு இருபத்தோரு வயது. ரதி இருபதை எட்டவில்லை. அந்தப் பத்து நாட்களுக்குள், சிரிப்பு, அழுகை, சச்சரவு, சமாதானம், அன்பு, ஆசை... எல்லாமே எங்களுக்குள் இருந்தது. சந்தோஷமாகவே இருந்தோம். அவள்...அவள் போன பிறகு, உலகமே இருட்டாகிப் போய் விட்ட மாதிரி இருந்தது. என் தொழில்கள், கூடவே, உள்ளூரச் சில பிடிவாதங்களும் இருந்ததால்தான், மீண்டு வந்தேன் எனலாம். உன்னைச் சந்திக்கும் வரையும், பெண்களிடம் வேறு எந்த நினைவும் எனக்கு வந்தது கிடையாது. உன்னைக் கூட, வந்து போகும் மேகத்தைப் போலச் சற்று வலுவான ஒரு சலனம் என்றுதான், முதலில் நினைத்தேன். பிறகு, உன் கண்ணில் ஆர்வத்தைக் கண்ட போதும், 'இந்தப் பட்ட மரத்தோடா?' என்று, ஓடி விடத்தான் முயன்றேன். ஆனால் உன்னைப் பிரிந்து வாழ முடியாது என்று இந்த இரண்டு மாதங்களில், ஐயம் திரிபற அறிந்து கொண்டேன்," என்றவன், கை நீட்டி, அவளது கரத்தைப் பற்றினான்.

"இனி, நீதான் சொல்ல வேண்டும்."

இணைந்திருந்த கரங்களின் மீது, நளினியின் பார்வை பதிந்தது.

அவனது வலிய, பெரிய கரம், அதனுள், மெல்லிய நீண்ட விரல்களுடன் அவளது கை. இரண்டும் மிகப் பொருத்தமாக இணைந்திருந்தன.

பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் பளிச்சிட்டன.

இமை தாழ்த்தி, அதை மறைத்து, "எப்படிச் சொல்ல வேண்டும்?" என்று வினவினாள் அவள்.

சிறு யோசனையில் சுருங்கிய புருவம் உடனே உயர, "எல்லோரையும் போல, உனக்கும் பிடித்திருக்கிறது என்று வார்த்தைகளால்தான்!" என்று கூறும்போதே, அவன் முகத்தில் ஆவலுடன் கூடிய முறுவல் மலரத் தொடங்கி விட்டது.


ஓரக் கண்ணால் நோக்கி, "இரு மாதங்களுக்கு முன்பாகக் கண்ணில் சேதி படித்தவருக்கு இப்போது படிக்கத் தெரியாதா, என்ன?" என்றபோது, அவளது குரல் கொஞ்சிக் குழைந்தது.

அவனது விழிகள் சட்டெனப் பளபளத்தன.

பார்வையோடு நில்லாமல், "இப்படிப் பொது இடத்துக்கு வந்தது சரியில்லை என்று இப்போது தெரிகிறது!" என்று அவன் கூறவும், அவளது கன்னங்கள் செம்மை பூசின.

ஆனாலும் விடாமல், "என்னைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு எல்லா இடங்களும் ஒன்றுதான்," என்றாள் நளினி.

"நிஜம்?"

"நிச்சயமான நிஜம்," என்று பிடிவாதமாக இயம்பினாலும், கூச்சமும் மிகவே, பார்வையைத் திருப்பியவளின் கண்களில், புன்னகையோடு வாயிலைப் பார்த்த திருமயன் தென்பட்டான்.

இவ்வளவு நேரம், புவனேந்திரனும் அவளும் பேசியது அனைத்தும், இவர்கள் இருவருக்கும் தெளிவாகக் கேட்டிருக்கும்! கேட்டிருக்கிறார்கள்! முகத்தைப் பார்த்தாலே தெரியவில்லையா?

அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமான ஓர் இனிய சல்லாபம், இன்னும் இருவரைப் பார்வையாளர்களாகக் கொண்டு அரங்கேறியிருக்கிறது.

தொண்டையில் ஏதோ கசப்பாக உணர்ந்தாள் அவள். அசங்கியமாகவும்.

பேச்சுப் போக்கில், அவளே இவர்களை மறந்து போனாளே! ஒரு வேளை, புவனனைப் போலவே, அவளும் ஆகிவிட்டாளா?

அதெப்படி முடியும்?

இப்போதே, புவனேந்திரன் அவளது கையைப் பிடித்ததையும், இந்த இருவரும் பார்த்திருப்பார்கள். இன்னும்...கன்னத்தை வருடுவது, ஒரு சின்ன அணைப்பு, உதட்டிணைப்பு... என்று இதெல்லாம் கூட நடக்கக் கூடும்தானே? அதெல்லாம் தனிமையில் நடப்பதுதானே, இனிமை? அவைகளுக்கும், இவர்களைச் சாட்சியாக வைத்துக் கொள்வது என்றால், நினைக்கவே நெஞ்சு கூசும் அருவருப்பாக இருந்தது அவளுக்கு.

இந்த ஒருதரமே, ஏதோ குழப்பமும் ஆர்வமுமாக, அவள் தன்னை மறந்து இருந்து விட்டாள். ஆனால் இதை நீடிக்க விட முடியாது. நிச்சயமாய்!

பாதுகாப்பு விஷயத்தில் நீக்குப் போக்குக் கூடாது என்று பிடிவாதமாக இருப்பவன் புவனேந்திரன். அவனிடம் அவசரப்பட்டுப் பேசிப் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடக் கூடாது, மெல்லத்தான் சொல்ல வேண்டும் என்று இப்போதைக்கு நளினி சும்மா இருந்த போதும், சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில் அவளும் உள்ளூரப் பிடிவாதமாகவே இருந்தாள்.

அத்தோடு, இவர்கள் முன்னிலையிலேயே, அவளது எண்ணத்தைச் சொல்வதும் முடியாதுதானே?

ஆனால், புவனேந்திரன் அருகில் இவர்கள் இல்லாத நேரம் எது என்று யோசித்தவாறு பார்த்தால், குடித்த காஃபிக்கும், கொறித்த முந்திரிப் பருப்புக்கும் பில் வந்திருந்தது.

எப்போது கொண்டு வரச் சொன்னானோ?

"உன் வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவிடம் விஷயத்தைச் சொல்லி விடலாம், வா. பாவம், என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்!" என்று பில்லுக்குச் சில நோட்டுகளை வைத்து விட்டுப் புவனேந்திரன் எழுந்தான்.

என்ன கரிசனம்! அத்தையும், மாமாவும் கவலைப் படுவார்களாமே!

அதற்குள் உறவு கொண்டாடத் தொடங்கி விட்டானே!

"என் அப்பா, அம்மா பற்றி, என்னை விடக் கவலைப் படுகிறீர்கள்!" என்றாள் கிண்டலாக.

"பின்னே? உனக்கு அவர்கள் வெறும் பெற்றவர்கள்! ஆனால், எனக்காக அல்லவா, அவர்கள் உன்னைப் பெற்று வளர்த்து வைத்திருக்கிறார்கள்! இந்த நன்றி கூடக் காட்டவில்லை என்றால் எப்படி?" என்றான் அவன் பதிலுக்கு.

"அது சரிதான்! ஆனால், உங்கள் நன்றியை இன்னும் பல..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திருமயன் அருகில் வந்தான்.

"முத்து காரை எடுக்கப் போயிருக்கிறான் சார். எடுத்ததும், செல்லில் கூப்பிடுவான். அப்போது போனால் போதும்! அதுவரை..." என்று, அவர்கள் அருகே நெருங்கி நின்று, கவனத்துடன் சுற்று முற்றும் பார்க்கலானான்.

புவனேந்திரனைப் பாதுகாக்கிறானாம்.

ஒரு சின்ன விதையைப் போட்டு வைக்கலாம் என்று பார்த்தால், கெடுத்துவிட்டானே என்று தோன்றிய எரிச்சலை அடக்கிக் கொண்டு, பேசாமல் நின்றாள் நளினி.

வீட்டில் சுதர்சனம், சகுந்தலா இருவருமே இந்தச் செய்தியை எதிர்பார்த்திருந்ததாகவே தோன்றியது.

இனிப்பு எடுத்து வரும் சாக்கில் மகளை உள்ளே அழைத்துப் போய், "அந்த முதல் மனைவியைப் பற்றி... உனக்கு ஒன்றும் இல்லையேம்மா?" என்று சிறு கலக்கத்துடன் பெற்றவள் வினவினாள்.

தாயை நேராக நோக்கி, "அது அவரது கடந்த காலம் அம்மா. நிகழ்காலமும், எதிர்காலமும் நம்முடையதாக இருக்கும் போது, முடிந்து போன ஒன்றைப் பற்றி, நமக்கு என்ன, அம்மா?" என்று நளினி கேட்கவும், தாயின் முகமும் தெளிந்தது.

எப்போதேனும் சில நினைவலைகள் தோன்றி மறையக் கூடுமே தவிர, மற்றப்படி புவனேந்திரனின் முதல் திருமணத்தை முடிந்து போன விஷயமாகத்தான் நளினி நிச்சயமாக நம்பினாள்.

ஆனால், அது அப்படியல்ல, ஒரு விசித்திரமான வகையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று, அவள் அனுபவித்துத்தான் அறிய
நேர்ந்தது.

Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:09 pm

திருமண நிச்சயத்தைப் பகிரங்கப் படுத்தாமல், அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று புவனேந்திரன் சொன்ன போது, யாருமே அதை ரொம்பப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஏனெனில், அவனைப் பற்றி அவநம்பிக்கையுற வழியின்றி, ஒரு நீதிபதி, ஒரு போலீஸ் அதிகாரி, இவர்களின் முன்னிலையில், திருமணம் பற்றி எழுதிக் கையெழுத்திட்டு, அந்தப் பெரிய மனிதர்களின் சாட்சிக் கையொப்பத்தோடு, சுதர்சனத்திடம் அவன் ஏற்கனவே கொடுத்து விட்டிருந்தான்.

அதுவும் சுதர்சனமாக எந்த ஒரு உறுதியையும் கேட்கு முன்னதாகவே.

அத்தோடு, கோவைக்கே சென்று, அவனைப் பற்றிச் சுதர்சனம் தெளிவாக விசாரித்து அறியவும், வழி வகை செய்து கொடுத்திருந்தான்.

சுதர்சனத்துக்குப் பயணத்தில் மிகுந்த திருப்தி. அதன் பிறகு, வருங்கால மருமகன் என்ன சொன்னாலும், அவரைப் பொறுத்த வரையில், அப்பீலே கிடையாது.

சகுந்தலாவுக்கே, தன் செல்ல மகளுக்கு யார் யார் கண்பட்டு விடுமோ என்று பயம் தான்.

ஆனால், புவனேந்திரனுக்கு இது இரண்டாம் மணம் என்பதால், ஆரவாரம் வேண்டாம் என்று எண்ணுகிறானோ என்று அவளுக்குக் கவலையாகவும் இருந்தது.

என்ன இருந்தாலும், அவளுடைய மகளுக்கு இது முதல் திருமணம் தானே! அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டாமா?

ஆனால், "மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்றதால், விட்டுவிட்டேன் சக்கு!" என்று சுதர்சனமும் சொல்லி விட்டார்.

மகளுக்கோ, சடங்குகள், சம்பிரதாயங்கள், உறவினர், கூட்டம் பற்றிய நினைவே இருக்கவில்லை. அவளைப் பொறுத்த வரையில், புவனேந்திரனை அடிக்கடி கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதே போதுமானதாக இருந்தது.

பானகத் துரும்பாக ஒரே ஓர் எரிச்சல். அவனைத் தனியே சந்திக்க, பேச முடியாமல், பாதுகாப்பு, பாதுகாப்பு என்று அவனது மெய்க்காப்பாளர்கள் கூட இருந்ததுதான்.

ஒருவருக்கு ஒருவர் என்று ஆன பின், அவனைப் பார்க்க வேண்டும், கேலியும் கிண்டலுமாகப் பேசிச் சிரிக்க வேண்டும், தோளில் சாய வேண்டும், அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டும் போது, பதிலுக்குத் தானும் அவன் மூக்கைப் பிடித்து ஆட்ட வேண்டும் என்று வயதுக்கும், நிலைமைக்கும் உரிய எத்தனையோ ஆசைகள் அவளுக்கு.

சொல்லப் போனால், எல்லாமே வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டவைதான்.

ஆனால், எப்போதும் புவனனுடன் கூடவே இருந்த பாதுகாவலர்கள் முன்னிலையில், ஒன்றுமே முடியாமல், தன்னை அடக்கிக் கொண்டு, அவள் சும்மா இருக்கும்படி ஆயிற்று.

நாளுக்கு நாள் பொறுமையிழந்து கொண்டிருந்த நளினிக்கு, அந்த நிலையை எப்படி மாற்றுவது என்பது தவிர, வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவே இல்லை.

எனவே, சகுந்தலாவும், தன் ஆசைகளை அடக்கிக் கொள்ளும்படி ஆயிற்று.

ஆனால், பூ விரியும் போது வாசனை பரவுவதைத் தடுக்க முடியுமா?

நல்ல வரன் இருப்பதாகக் கூறிக் கொண்டு, ஒரு திருமணத் தரகர் வந்தார். அவரிடம் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி விட்டதைச் சொல்லுவது தானே முறை?

அத்தோடு நளினியுடைய குடும்பம் வசித்தது ஃப்ளாட்டில். எல்லோரிடமும் தோழமையோடு பழகுகிற குடும்பம் என்பதால், பேச்சுவாக்கில், நளினி புவனேந்திரன் திருமணம் பற்றிய செய்தியும் அரசல் புரசலாக வெளியே பரவலாயிற்று!

இந்நிலையில், ஒரு நாள் தெரு முனையில் இருந்த பலசரக்குக் கடையில், வெல்லம் வாங்கி வரச் சென்ற நளினி, தன் பின்னோடு, ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு, ஒருவன் தொடர்ந்து வரவும் சற்று மிரண்டாள்.

யாரிவன்? எதற்காகப் பின் தொடர்கிறான்?

பொதுவாக, அந்தப் பகுதியில் பயம் கிடையாது. பல ஆண்டுகளாக அங்கேயே வசிப்பதால், பார்த்தால் குறைந்த பட்சமாக ஒரு புன்முறுவலைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குத் தெரிந்தவர்களே! உதவி என்று அழைத்தால் கட்டாயம் வருவார்கள். எனவே, சின்னப் பிள்ளை கூடத் தனியாகக் கடைக்குப் போய்ச் சாமான் வாங்கி வரும்.

அந்த அளவுக்குப் பாதுகாப்பானது.

பாதுகாப்பு.

சட்டெனப் பொறி தட்ட, நளினி நின்று, தன்னைத் தொடர்ந்தவனைக் கூர்ந்து நோக்கினாள்.

சுற்று முற்றும் கவனத்துடன் ஆராயும் அதே பார்வை! பான்ட் பாக்கெட்டில் மறைந்திருந்த ஒரு கை! துப்பாக்கியோ, கத்தியோ, ஏதோ ஓர் ஆயுதத்தின் பிடியில் அந்தக் கை இருக்கும் என்பது, புவனேந்திரன் மூலம் அவள் அறிந்த விஷயம்.

ஏன் இப்படிப் பாக்கெட்டுக்குள் கையை வைத்தபடியே இருக்கிறார்கள் என்று, முத்து, திருமயன் பற்றிக் கேட்டபோது, புவனேந்திரன் அவளிடம் சொல்லியிருக்கிறான். ஏதேனும் அவசரம் என்றால், அப்போது பயன்படுத்த, ஆயுதம் தயார் நிலையில் இருக்க வேண்டுமாம்!

'தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்!' என்று பழமொழி உண்டுதான்.

ஆனால், இன்னொரு மனிதரை ரத்தம் சிந்த வைப்பதற்குத் தயார் நிலையில் ஒருவன் அலைவது என்றால், அவளுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது.

அது ஒரு புறம் இருக்க, தனக்குத்தான் பாதுகாப்பு, பாதுகாப்பு என்று இரண்டு பேரை எப்போதும் கூட்டிக் கொண்டு, அடியாட்களோடு திரியும் தாதா போலப் புவனேந்திரன் அலைகிறான் என்றால், அவளுக்குமா?

அவனையே, இந்தப் பழக்கத்தை விட்டொழிக்கச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, ஆத்திரம் வந்தது.

அல்லது, ஒரு வேளை அவள் தான் தவறாக எண்ணுகிறாளோ?

இந்த இடத்தில், யாரும் அவளை எதுவும் செய்துவிட முடியாது என்ற தைரியத்துடன், நளினி, அந்தப் புதியவனை ஒற்றை விரலால் அருகில் அழைத்தாள்.

அவன் வந்ததும், "என்ன வேலை இது? ஏன் என் பின்னோடு வருகிறீர்கள்?" என்று விசாரித்தாள்.

ஆனால், அவள் கூப்பிட்டதும் தயங்காமல் அவன் வந்த விதமே, அவளுக்கு உண்மையை உணர்த்தி விட்ட போதும், ஒரு வேளை அப்படியிராதோ என்று ஒரு சிறு நப்பாசையில், அவனிடம் கேட்டாள் நளினி.

ஆனால், நப்பாசை அற்பாசை ஆகிவிட, "என் பெயர் சக்திவேல். உங்கள் பாதுகாப்புக்காகப் புவனேந்திரன் சார், என்னையும், கண்ணன் என்று இன்னும் ஒருவரையும் நியமித்திருக்கிறார்," என்றான் அவன்.

"இன்னும் ஒருவர் வேறா?"

"ஆமாம்! ஒருவரை மட்டும் பாதுகாப்புக்கு வைப்பது, இக்கட்டான சமயங்களில், பயனற்றுப் போய்விடும். எப்போதுமே, குறைந்தது இரண்டு பேரேனும் சேர்ந்து, இந்த வேலை செய்வது நல்லது," என்று விளக்கினான் அவன்.

நளினிக்கு, வெடிக்கப் போகும் எரிமலை போன்று, மனம் குமுறியது.

ஆனால், அவளது கோபத்தை இவனிடம் காட்டி என்ன செய்வது? எய்தவன் இருக்க, அம்பை நோவது மடத்தனம்.

எனவே, பிடிவாதமாகப் புன்னகைத்து, "ஆமாமாம்! புவனேந்திரன் ஒன்று செய்து, அது பலனற்றுப் போகலாமா? இவ்வளவு நேரம் சும்மா நின்று போரடித்திருக்குமே. அந்தக் கடைக்குப் போய், உபயோகமாய் ஒரு கிலோ வெல்லம் வாங்கி வாருங்களேன்," என்றாள் அவள், இனிய குரலில்.

குரலில் மறைந்திருந்த ஏளனம் எளிதில் கண்டு பிடிக்கக் கூடியதில்லை. பௌதிகப் பாடத்தில், 'உள்ளுறை வெப்பம்' என்பார்களே, அதைப் போல வெளிப்படையாகத் தெரியாமல் கலந்திருந்தது.

அதை, அந்தச் சக்திவேல் கண்டு பிடித்தானோ என்னவோ? ஆனால், வெல்லத்தை வாங்கி வர மறுத்து விட்டான்.

"என் வேலை உங்கள் பாதுகாப்பு, மேடம். கடைக்குப் போய்ச் சாமான் வாங்குவதில் என் கவனத்தைச் சிதற விட முடியாது," என்று ஒரு காரணத்தைச் சொன்னானே தவிர, இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

அதுவே அவளுக்கு எரிச்சல்.

போதும் போதாதற்கு, அந்தக் குடியிருப்புகளின் சங்கத் தலைவர் வேறு, அவர்களைப் பார்த்துவிட்டு, அருகில் வந்து, "யாரம்மா? எதுவும் பிரச்சனையா?" என்று விசாரிக்கத் தொடங்கினார்.

இந்த மாதிரி விஷயம் என்று உண்மையைச் சொன்னால், பந்தாக் காட்டுவது போல இருக்கும். எனவே, "பி...பிரச்சனை ஒன்றும் இல்லை, அங்கிள். தெரிந்தவர் தான். சும்மாதான் பே... பேசிக் கொண்டிருக்கிறேன்..." என்று ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்லிச் சமாளிக்கும்படி ஆயிற்று.

தலையாட்டிவிட்டு அவர் போய் விட்டாலும், நளினியின் சீற்றம் தணிய வெகு நேரம் ஆயிற்று.

ஆத்திரத்தில் புவனேந்திரனிடம் ஏதாவது கண்டபடி பேசிவிடக் கூடாது என்று தோன்றவே, மனம் சற்றுச் சமனப்படும் வரை நளினி பொறுத்திருந்தாள்.

என்ன தான் பழைய ராஜாக்கள் காலம் மாதிரி மெய்க்காவலர்களை அவன் அவனுக்கு வைத்திருப்பதே அவளுக்குப் பிடிக்காவிட்டாலும், அவனோடு வாக்குவாதம் செய்யப் பிடிக்காமல் வாளா இருந்தாள். ஆனால், இப்போது அவன் நியமித்திருப்பது அவளுக்கு அல்லவா?

முன்னதைக் காட்டிலும், இது அதிக எரிச்சல்தான். ஆனால், அவன் செய்தது, அவளது நலம் கருதி. அதனால், அவனிடம் சினம் காட்டுவது, சரியல்ல. நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒருவாறு மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, புவனேந்திரனுக்குப் போன் செய்தால், அவளிடம் விடை பெறாமலே, அவன் சென்னையை விட்டுக் கிளம்பிச் சென்றிருந்தான்.

அப்படி அவன் சொல்லாமல் சென்றதே இல்லையே.

மறுநாளில் இருந்து, திரும்பி வரும்வரை, அவளைப் பார்க்க முடியாதே என்று வருத்தப் படாமல், அவன் பிரிந்து போனதும் கிடையாதுதான்.

சட்டென நளினியின் மனம் கலங்கிப் போயிற்று.

'போய் வருகிறேன்' என்று ஒரு வாக்கியம்.

அவளிடம் ஏன் சொல்லவில்லை? ஏதேனும் கோபமா?

ஏன் கோபம்? அவள் ஏதேனும் தப்பு செய்தாளா?

அவளை அறியாமலே ஏதேனும் தப்பு செய்து, அவளிடம் மனம் வெறுத்துப் போய் விட்டானா?

முன்பும், இதே போல நன்றாகப் பழகிக் கொண்டு இருந்த போதுதான், திடீரென்று ஒதுங்கிக் கொண்டான்.

இப்போதும் அப்படிச் செய்ய மாட்டான் என்று, என்ன நிச்சயம்?

முன்பு திரும்பி வந்தான். ஆனால், இப்போதும் வருவான் என்று என்ன நிச்சயம்?

தொழில் இருக்கிறது. கட்டாயம் வரத்தான் போகிறான்.

ஆனால், அவனிடம் உள்ள அன்பு? அது மாறாமல் இருக்குமென்று என்ன நிச்சயம்?

நிச்சயம் தான். நிச்சயமேதான்! இதே தொழில் முன்னரும் இருந்தது! ஆயினும், அது போதாதென்று, அவளுக்காக வரவில்லையா?

இப்போதும் வருவான்.

இப்படிப் பலவாறு யோசித்து, மிகவும் சிரமப்பட்டு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அவள் கவலையோடு காத்திருந்தால், ஒன்றுமே நடவாதது போல, அவன் வெகு சாதாரணமாகத் திரும்பி வந்தான்.

வந்தவன், அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது பற்றி, எந்த விளக்கமும் இல்லாமல், "இந்தத் தளிர்ப் பச்சை வண்ண சல்வாரில், நீ தேவதை மாதிரி இருக்கிறாய்!" என்ற போது, நளினியால் அதை இயல்பாக ஏற்க முடியவில்லை.

பத்து நாட்களாகப் பட்ட துன்பம் உசுப்ப, "நான் உங்களைத் தேடினேன். ஆனால், நீங்கள் ஊருக்குப் போய்விட்டதாக, உங்கள் வீட்டுக் காரியஸ்தர் சொன்னார்," என்றாள் ஒரு மரத்த குரலில்.

ஒரு விநாடி தயங்கினானோ?

அவள் நிச்சயப்படுத்திக் கொள்ளுமுன், "அடடா!" என்று தலையில் தட்டிக் கொண்டான் புவனேந்திரன். "இதைத்தான் துரதிர்ஷ்டம் என்பது. வழக்கமாக, நானாகத்தானே ஓடி ஓடி வருவது? அப்படியின்றி அதிசயமாக, மகாராணி நீயே என்னைத் தேடி வந்தால், அந்தச் சமயம் பார்த்து, வேலை என்னை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது, பார்! என்னம்மா, ஏதும் தன்னந் தனிமையில் கவனித்தாக வேண்டிய சமாசாரமா? அதற்கெல்லாம், கால நேரம் எதற்கு? இப்போது வேண்டுமானாலும்... என்ன சொல்லுகிறாய்?" என்று தணிந்த குரலில் கொஞ்சலாகக் கேட்டுக் கண் சிமிட்டினான்.

அவனது பேச்சின் பொருளும், கண் சிமிட்டலுமாக, நளினியின் முகம் செக்கச் சிவந்து போயிற்று.

"ச்சு! போங்கள். என்ன பேச்சு இது? நான் ஒன்றும், அந்த மாதிரி உங்களைத் தேடவில்லை. ஆனால்..." என்றவளை இடைமறித்து, "நினைத்தேன்," என்றான் அவன் சோகமாக.

"நமக்கேதுடா அப்படிப்பட்ட அதிர்ஷ்டமெல்லாம் என்று, முதலிலேயே சந்தேகம் தான்! ஆனாலும், ஒரு நிமிஷம் மனம் என்னென்னமோ ஆகாயக் கோட்டை கட்டி விட்டது. ஆனாலும், அவ்வளவு உயரத்திலிருந்து, மனிதனை இப்படித் தடாலென்று படு பாதாளத்தில் தள்ளக் கூடாதும்மா. பார், ஏமாற்றத்தில் எனக்குச் சரியாகப் பேசக்கூட முடியவில்லையே," என்று, அவன் மேல் மூச்சு வாங்கிக் காட்ட, அடக்க மாட்டாமல், அவளுக்குச் சிரிப்பு வந்துவிட, அந்தப் பேச்சு அத்தோடு போயிற்று.

அவளை வீட்டிற்குக் கூட்டி வந்து, பெற்றோருடன் கலகலப்பாகப் பேசியிருந்து விட்டுப் புவனேந்திரன் கிளம்பிச் செல்லும் வரை, நளினிக்கு வேறுபாடாக ஒன்றும் தோன்றவில்லை.

அதிலும், பேசியது திருமணத் திட்டங்கள்!

எப்படி எளிமையாகக் கோவிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு, நேரே திருமணப் பதிவு அலுவலகத்துக்குப் போய்த் திருமணத்தைப் பதிவு செய்து விடுவது என்று மண நாளின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி, அவன் விளக்கிக் கூறிய போது, நளினியின் முழு மனதும் அதில்தான் இருந்ததே தவிர, வேறு எதையும் எண்ணிப் பார்க்கக் கூட அவளுக்குத் தோன்றவில்லை.

பிறகும், வீட்டினர் நால்வரும் அது பற்றித்தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

தான் விரும்பியது போல, விலை உயர்ந்த டிஷ்யூ, புரோகேட் சேலைகளில் மகளை அலங்கரித்துப் பார்க்க முடியாது போல இருக்கிறதே என்று, சகுந்தலா குறைப்பட்டாள். சூரிய சந்திரப் பிரபைகளோடு நெற்றிச் சுட்டி, நத்து, இடுப்பில் ஒட்டியாணம் என்று, தன் அழகிய மகளின் அலங்காரம் பற்றி, அவளுக்கு எண்ணிறந்த கனவுகள்.

வருங்கால மருமகனின் எளிமையான திருமணத் திட்டத்துக்கு, அந்த மாதிரி அலங்காரங்கள் சற்றும் பொருந்தாது.

இந்தச் சுருக்கமான எளிய திருமணத்திற்கு, அவர் விரும்பிய வண்ணம், அக்கம் பக்கத்தார், உறவினர், நட்பாளர்கள் அனைவரையும் எப்படி அழைப்பது என்ற குழப்பம் சுதர்சனத்துக்கு.

இதற்கிடையே, "எனக்கு வகுப்பில் எந்தப் பரீட்சையும் இல்லாத நாள் பார்த்துத் திருமணத்தை வையுங்கள். லீவு போடவும் சொல்லாதீர்கள். நான் பிளஸ் டூவாக்கும்!" என்று பெரிய முக்கியஸ்தி போல, ஊடுபா ஓடினாள், தங்கை மஞ்சரி.

வீட்டுக் கடைக்குட்டி என்பதால், அவளது பேச்சில் எல்லோருக்கும் சிரிப்புதான் வந்தது.

பேச்சும் சிரிப்புமாக இருந்து விட்டு, நால்வரும் படுக்கப் போகவே, மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஆனால், புவனேந்திரனின் புன்னகை முகத்தை நினைத்த வாறே சுகமாகப் படுத்தவளுக்குச் சட்டென்று உறுத்தியது.

சொல்லாமல் கொள்ளாமல், தான் திடுமென வெளியூர் சென்றது பற்றிய விவரத்தைப் புவனேந்திரன், அவளிடம் சொல்லவே இல்லை.

எப்போதுமே, தனது வேலைகளை எல்லாம் அவளிடம் அவன் ஒப்பித்துக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. அப்படி அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

'உன்னதம்' தவிர, அவனது மற்றத் தொழில்கள் பற்றி, அவனே சொன்னாலும், அவளுக்குப் புரிவதற்கில்லை.

ஆயினும், மில்லுக்குப் பஞ்சு வாங்கப் போனேன், பிரிண்ட் போட்ட பனியன் துணி ஏற்றுமதிக்கு முடித்துக் கொடுப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது. இப்படிப் பொதுவாக என்ன விஷயம், எங்கே போனான் என்பதைப் பற்றிச் சொல்லுவான்.

செல்லும் போதும் சொல்லுவான். அல்லது, வந்த பிறகேனும் பேச்சில் வரும். 'உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை!' என்பது போன்ற இயல்பான பேச்சு.

எப்படியும், இன்னும், 'இத்தனை நாட்கள் உன்னைப் பார்க்க முடியாதே!' என்று வருத்தப்படாமல் அவன் பிரிந்து சென்றதே கிடையாது.

ஆனால் இந்த முறை அதெல்லாம் ஒன்றுமின்றி அவன் சென்றது மட்டுமின்றி, சென்று என்ன செய்தான் என்பதையும் சொல்லாமலே மழுப்பி விட்டான்.

அது மழுப்பலேதான்.

மேற்கொண்டு பிடிவாதமாகக் கேட்டு விடுவாளோ என்ற கலக்கத்தில், அதைத் தவிர்ப்பதற்குத்தான், புவனேந்திரன் அவ்வளவு கொஞ்சலும் குலாவலுமாகப் பேசினானோ?

திருமணத் திட்டங்கள் பற்றி விவரித்தது கூட அதற்காகத் தானோ என்று தோன்றவும், நளினி குழம்பிப் போனாள். குன்றியும்!

எப்போதுமே, அவன் சென்னையில் இல்லாத போது, நளினிக்குக் கொஞ்சம் மனதுக்குச் சோர்வாகத்தான் இருக்கும். அப்புறம், அவன் திரும்பி வந்ததும், உலகம் வண்ண மயமாக ஆகிவிடும்.

இப்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் போன போது தோன்றிய, புவனேந்திரன் தன்னை வெறுத்து விட்டானோ, விலகிப் போய் விடுவானோ என்று தோன்றிய கலக்கங்கள் எல்லாமே, அவனை நேரில் பார்த்த பிறகு அடியோடு மறைந்து போயின.

ஆனால், அவன் அறியக் கூடாத ஏதோ ஒரு மர்மம் அவனது வாழ்வில் இருக்கிறதோ என்ற ஐயம் இப்போது அவளுக்கு உண்டாயிற்று.

அது என்னவாக இருக்கக் கூடும்?

அவளிடம் சொல்லக் கூடாதது என்றால், ஒரு வேளை, அது அவனுடைய முதல் மனைவி சம்பந்தப்பட்டதாக இ
ருக்குமோ?




Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:14 pm

நளினியின் மனம் ரொம்பவே குழம்பலாயிற்று.

புவனேந்திரனின் மர்மப் பயணத்தின் காரணம், அவனுடைய முதல் மனைவி தொடர்புடையதாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் மட்டும்தான், அவளுக்கு முதலில் தோன்றியது.

அந்த ரதியின் பிறந்த நாளோ? அன்றி இறந்த நாளோ? அது தொடர்பான சடங்குகளுக்காகப் புவனேந்திரன் சென்றிருக்கக் கூடும் என்றாலும், அதை முழுமையாக அவளால் ஒப்ப முடியவில்லை.

அந்த மாதிரி விஷயம் என்றால், அதை மூடி மறைப்பானேன்?

அதுவும், ஏற்கெனவே மணமானதை வெளிப்படையாகச் சொன்னவன், இதையும் சொல்லிவிட்டே சென்றிருக்கலாம். ஒருவர் இறந்து விட்டால், சில குறிப்பிட்ட நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து, சில சடங்குகளைச் செய்வது, நம்மில் பழக்கம் தானே?

அதுவும் அவனது முதல் மணம் அவனது கடந்த காலம். அதை அவள் பொருட்படுத்தப் போவதில்லை என்று விட்ட பிறகு, இது போன்ற விஷயங்களை அவளிடம் மறைக்கத் தேவையே இல்லையே.

எனவே இது வேறு விஷயம்.

எப்போதும், கிங்கரர்கள் மாதிரிக் கூடவே நிற்கும் காவலர்களின் காதுகளுக்குக் கூட எட்டக் கூடாத தொழில் ரகசியமாக இருக்கக் கூடும் என்று தன்னைத் தானே, நளினி சமாதானம் செய்து கொண்ட போதும், அவள் கொஞ்சமும் அறியாத ஏதோ ஒன்று புவனேந்திரனின் வழியில் இப்போது இருப்பது, அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது.

அப்படி எதையும் அவனிடமிருந்து மறைக்க வேண்டும் என்று, அவளுக்குத் தோன்றியதே இல்லையே.

இந்நிலையில், அவளது ஆத்திரத்தைத் தூண்டும் விதமாக, மறுநாள் வேறொன்று நடந்தது.

தனக்குப் போலவே, புவனேந்திரன் அவளுக்கும் காவலுக்கு ஆள் வைத்தது, நளினிக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. அது பற்றித் தன்னுடைய வருங்காலக் கணவனுடன் பேசி, அந்தக் காவலை நிறுத்தியாக வேண்டும் என்று, அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள்.

ஆனால், ஏற்பாடு செய்து, சம்பளமும் கொடுக்கும் புவனேந்திரனின் சொல்தான், அந்தப் பாதுகாவலர்களிடம் எடுபடும் என்று புரிந்ததால், அவன் திரும்பி வரும்வரை, இந்தப் பாதுகாவல் விஷயம் அவளது குடியிருப்புப் பகுதியில் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காத விதத்தில், மிகவும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

சாதாரணமாக வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டு, தந்தை வேலைக்குச் செல்லும் போது, அவருடனேயே 'உன்னத'த்துக்குச் சென்று இறங்கிக் கொண்டு, வேலை முடிந்து, அவர் திரும்பி வரும்போது, அவருடனேயே அவளும் திரும்பி வந்தாள்.

குடியிருப்புப் பகுதிக் கடைக்குக் கூடச் செல்வது இல்லை.

துணிகளுக்கு அலங்கார வேலைக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வேலை முடித்த துணிகளை உரிய இடங்களில் சேர்ப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டாள்.

எனவே, அந்தக் காவலர்கள் அவளைப் பின் தொடர்வது, வெளிப்படையாக யார் கண்ணிலும் பெரிதாகப் படாமலே இருந்து வந்தது.

ஆனால், அன்று இரவெல்லம் மனக் குழப்பத்தில் புரண்டவள், காலையில் அதிக நேரம் தூங்கிவிட, சுதர்சனமும் அன்று வெளியே ஒருவரைச் சந்தித்துப் பேசி விட்டு வேலைக்குப் போக வேண்டியதாக இருந்ததால், தேவைப் பட்டால், நளினியை ஆட்டோவில் போகச் சொல்லும்படி மனைவியிடம் கூறிவிட்டு, அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார்.

நளினிக்கும் அது உசிதமாகவே தோன்றியது.

குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே வந்தால் 'உன்னத'த்துக்கு வெகு அருகிலேயே இறங்குவதற்குப் பஸ் வசதி இருந்தது.


ஆனால், அவள் பஸ்ஸில் ஏறி, முன்னும் பின்னுமாக இந்தப் பாதுகாவலர்களும் ஏறி, இங்குமங்கும் விழித்துப் பார்த்தால், ஏதேனும் ஏடாகூடம் ஆகி, இவர்களுக்குத் தர்ம அடி விழுந்து விடுமோ என்று, நளினிக்குப் பயமாக இருந்தது.

எனவே, அலுவலகத்துக்குக் கிளம்பி, தெருமுனை வரை நடந்து சென்று, அங்கே வந்த ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்தி, ஏறினாள்.

முன்னும் பின்னுமாகச் சக்திவேலும், அவனுடைய கூட்டாளியும் கூடவே வந்த போதும், யாரோ தெருவில் போகிறவர்கள் போலவே வந்ததால், அதுவரை பிரச்சனை இல்லை.

ஆனால், அவள் வண்டியில் ஏறுகையில், சக்திவேல் அருகில் வந்து, ஆட்டோ ஓட்டியை முதுகில் தட்டி, "பாரப்பா, நான் இந்த அம்மாவுக்குக் காவல், பின்னோடு பைக்கில் வருவேன், கவனித்துச் சற்று மெதுவாகப் போ," என்றான்.

குழப்பமும் குறுகுறுப்புமாக நோக்கிய போதும், ஆட்டோ ஓட்டியும் தலையாட்டிவிட்டு, ஏவப்பட்ட விதமாக, நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.

பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தில், குறுகுறுப்பையும் ஆர்வத்தையும் கண்ட நளினிக்கு மனதோடு, உடம்பும் கூசிக் குறுகிப் போயிற்று.

இந்த ஆட்டோ ஓட்டி இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பான்?

'காதலனோ, கணவனோ இவளுக்குக் காவல் வைத்திருக்கிறான். இவளது நடத்தை எப்படிப்பட்டதோ?' என்று தானே எண்ணுவான்?

அவன் நினைப்பது மட்டுமா? அவன் முகத்தைப் பார்த்தாலே, இந்தக் கதையை யார் யாரிடமோ சொல்லத் துடித்துக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

கண், காது, மூக்கு வைத்து, எத்தனை பேரிடமோ நன்றாக அளக்கப் போகிறான்.

சே! என்ன கேவலம், என்ன கேவலம் என்று நளினியின் மனம் பதறித் தவித்தது.

இன்றைக்கு இந்த அசட்டுத் தனத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்த பிறகுதான், நளினிக்குச் சரியாக மூச்சுக்கூட விட முடிந்தது.

அவ்வளவு ஆத்திரம்.

வழக்கம் போலவே, மற்றவர்களை விடச் சீக்கிரமாகவே புவனேந்திரன் வந்திருந்தான்.

வெளிப்படையாக யாரும் உறுதிப் படுத்தாவிட்டாலும், ஊகமும் வதந்தியுமாகப் புவனேந்திரன் - நளினி உறவு அங்கே எல்லோருக்கும் தெரிந்து போயிருந்தது.

அதனால், அவளுக்குத் தனி மரியாதையும் கிடைத்துக் கொண்டிருந்தது.

எனவே, அவனைத் தேடி அவள் சென்ற போது, அவளை யாரும் தடுக்கவில்லை.

சும்மா உள்ளே போகச் சொல்லிவிட்டு, அப்புறமே, அவனுக்கே அறிவித்தார்கள்.

புவனேந்திரனின் அலுவல் அறைக்குள் நளினி சென்ற போது, அங்கே 'உன்னத'த்துடைய தலைமை கணக்கரும், மூன்று தள நிர்வாகிகளும் இருந்தனர்.

எல்லோரின் முகங்களிலும் புன்னகை இருந்தது.

புவனனின் கண்களில் அவளுக்காக ஒரு தனியான பளிச்சிடல். அதைக் கண்டதும், அவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்.

"வா, நளினி," என்று அவளை முக மலர்ச்சியுடன் வரவேற்ற புவனேந்திரன், "உன் யோசனைப்படி விற்பனைப் பொருட்களை மாற்றினோம், அல்லவா? இந்த மாத விற்பனை வெகுவாகக் கூடியிருக்கிறது!" என்று அவளிடம் தெரிவித்துவிட்டு, மீண்டும் மற்றவர்களிடம் திரும்பினான்.


"ஓகே, சார்! நீங்கள் மூவரும் எந்தெந்தப் பொருட்களில் விற்பனை அதிகமாகி இருக்கிறது என்று ஒரு கணக்கு எடுத்து எனக்கு அனுப்புங்கள். வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்கு இன்னும் அதிக ஆட்கள் வேண்டும் என்றால், அதைப் பற்றியும் விவரம் கொடுங்கள். கணக்கர் சார், சென்ற மாத வரவு செலவு பற்றித் தெளிவான ரிப்போர்ட் ஒன்று வேண்டும். இதே போலத் தொடர்ந்தால், தீபாவளிப் போனஸை அதிகமாகக் கொடுக்கலாம், பாருங்கள். இனி அவரவர் இடத்துக்குப் போய், இந்த வேலைகளைப் பார்க்கிறீர்களா?"

அவள் வந்ததும் அனுப்புவது போலத் தோன்றாமல், நால்வரும் சிரித்த முகமாகவே, அவரவருக்கு அளிக்கப்பட்ட வேலைகளைக் கவனிக்கக் கிளம்பும்படி செய்து விட்டானே!

அவன் சொன்ன 'போன'சால் வந்த மலர்ச்சியா?

மற்றபடி, அந்த மூன்று பெரியவர்களும் நளினியின் யோசனை என்பதை எப்படி ஏற்பார்கள்? அவர்களிடம் அவள் முட்டிக் கொண்டதும், அவர்கள் மிரட்டியதும் எப்படி மறக்கும்?

அல்லது, விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுக்கே உற்சாகம் வந்து விட்டதா?

கணக்கரும் சென்று, அவர் பின்னே கதவு மூடிக் கொண்ட பிறகு, "எல்லோரும் போயாயிற்று. இப்போது சொல். என்னம்மா, என்ன பிரச்சனை?" என்று கேட்டான் அவன்.

பிரச்சனை என்ன? யார் சொன்னது? என்ற கேள்வி தொண்டை வரை வந்து அடங்கியது.

பதிலாக, ஓடி ஓடி வருகிறவன் நான் தானே என்று அவன் சல்லாபிப்பதைக் கேட்டு மயங்கும் மனநிலை அப்போது அவளுக்கு இல்லை.

அத்தோடு, எல்லோரும் போயாயிற்று என்று அவன் சொன்னதே, இருவரின் எண்ணப் போக்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளியின் அளவை எடுத்துக் காட்டுவதைப் போல இருந்தது அவளுக்கு.

ஏனெனில், அந்த அறையில் நடப்பன எதிலும் சம்பந்தப்படாமல் ஒதுங்கி, அந்தப் பெரிய அறையின் இரு மூலைகளில் முத்துவும், திருமயனும் இப்போதும் நின்று கொண்டுதான் இருந்தனர்.

அவர்கள் இருவரும் அங்கே இருக்கையில், எல்லோரும் போயாயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்?

அவனால் முடிந்தது.

ஆனால், அவளால் ஒரு போதும் முடியாதே.

இப்படி அடிப்படையே தவறாக இருக்கிறதே.

அத்தோடு, அவள் பேச வந்த விஷயத்தை, இவர்களை வைத்துக் கொண்டு சொல்லவும் முடியாது.

"தயவு பண்ணிக் கிண்டலாக எதுவும் பேசாதீர்கள், புவனன். நான் உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். நிஜமாகவே தனியாக," என்றாள் மெல்லிய குரலில்.

என்ன தான் மென்குரலில் பேசினாலும், காவலர்கள் காதிலும் விழுந்து தான் இருக்கும்.

எனவே, புவனேந்திரன் நிமிர்ந்து பார்த்ததும், அவர்கள் இருவரும் அறை வாயிலை நோக்கி நகர்ந்தனர்.

"நாங்கள் கதவின் அருகிலேயே நிற்கிறோம் சார்," என்று முத்து கூற, இருவரும் வெளியே சென்றனர்.

சாத்தியிருந்த கதவை ஒரு தரம் பார்த்துவிட்டுப் புவனேந்திரன் நளினியிடம் திரும்பினான்.

இது போலப் பிறர் தவறாக ஊகிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில், இருவருமே கவனமாகத்தான் இருப்பது. ஆனால், அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இன்றைக்கு நளினி இல்லை என்பது அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

எனவே, தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, அன்போடு அவளது கைகளைப் பற்றி உட்கார வைத்து, பிரச்சனை என்னவென்று புவனேந்திரன் மறுபடியும் வினவினான்.

நளினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். "எனக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?"

"நிச்சயமாய்! சக்திவேலும், கண்ணனும் கிட்டத்தட்ட முத்து, திருமயனுக்குச் சமமானவர்கள் என்று பாதுகாப்புக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தில் சொன்னார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஏன்? வேலையில் ஏதேனும் ஓட்டை விட்டார்களா? என்ன செய்தார்கள்? சொல்லு உடனே. ஆளை மாற்றி விடலாம்," என்றான் அவன் சட்டென மூண்ட கோபத்துடன்.

உச்சுக் கொட்டினாள் நளினி. "நான் ஆளே வேண்டாம் என்கிறேன், நீங்கள் ஆளை மாற்றுவது பற்றிப் பேசுகிறீர்களே," என்றாள் எரிச்சலோடு.

"ஆள் வேண்டாமா? என்ன உளறல் இது?"

"உளறல் ஒன்றும் இல்லை. இவ்வளவு காலம், இருபத்திரண்டு வருஷமாக, இந்த மாதிரிப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் தான் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு எதுவுமே ஆனதில்லை. இப்போது மட்டும் எதற்கு?" என்றாள் நளினி, பிடிவாதமான குரலில்.

"உனக்கு விஷயம் புரியவில்லை, நளினி," என்றான் புவனேந்திரன். "இப்போது, நான் தற்பெருமை பேசுவதாக நினைத்துக் கொள்ள மாட்டாய் என்று நம்புகிறேன். இதுவரை நீ வாழ்ந்த விதம் வேறு! எத்தனையோ லட்சக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக இருந்தாய். அழகிலும், சாதுரியத்திலும் மேம்பட்டிருந்தாலும், பலருள் ஒருத்தியே! ஆனால், இப்போது அப்படியல்ல..."

"ஏன் திடீரென்று எனக்குக் கொம்பு கிம்பு முளைத்து விட்டதா?" என்று கிண்டலாகக் கேட்டுத் தொட்டுப் பார்த்து விட்டு, "இல்லையே!" என்று உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

புன்னகைத்துவிட்டு, "இது கண்ணுக்குத் தெரியாத கொம்பு. புவனேந்திரனுடைய மனைவி, அதாவது மனைவி ஆகப் போகிறவள் என்கிற கொம்பு!" என்றான் அவன் சிறு வருத்தமும் கேலியும் கலந்த குரலில்.

அவனது வார்த்தைகள் சித்தரித்த நிலைமை மனதிற்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியில், முன்னிருக்கும் பிரச்னையை மறந்து விடக்கூடாதே. அதுவும், அப்படி மறக்கடிப்பதில் அவன் வல்லுனனும் கூட!

யோசிக்கும் பாவனையில் புருவம் சுருக்கி, "புவனேந்திரனுடைய மனைவிக்குக் கொம்பு இருந்தே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?" என்று கேட்டாள் நளினி.

"புவனேந்திரன் ஒரு பணக்காரன்."

"இருக்கட்டுமே. அப்போதும், உங்கள் வார்த்தைகளையே சொல்வதானால், நீங்களும் பணக்காரப் 'பலருள் ஒருவர்' தானே?"

சற்று தயங்கி, "ஆனால், ஆபத்து நேரக் கூடிய வாய்ப்பு அதிகம் உண்டம்மா!" என்றான் அவன் புரியாத குழந்தைக்குச் சொல்வது போல.

"என்ன பெரிய ஆபத்து? எதுவானாலும் நாமாகச் சமாளிக்க வேண்டியதுதானே? நான் ஒன்றும் தண்ணீர் பட்டால் கரையும் உப்பல்ல. ஓர் ஆபத்தில் சிக்கினால் மீள முடியாமல் அழிந்து போவதற்கு."

கண்கள் பளிச்சிட, "நீ வெறும் உப்புக்கல் அல்ல, கண்மணி. உலகிலேயே விலை உயர்ந்த வைரக் கல் அல்லவா?" என்றான் புவனேந்திரன், பெருமிதக் குரலில்.

முகம் சுளித்த போதும், "அது உங்களுக்குத்தானே? மற்றவர்களுக்கோ, வெறும் உப்புக்கல்லாகக் கூட நான் பயன்பட மாட்டேன். அந்தப் பெறுமானம் கூட இல்லாதவள் தானே? அப்புறம் எதற்கு இந்தப் பாதுகாப்பு, பந்தா எல்லாம்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

தொடர்ந்து அந்த அறையில் ஓர் அமைதியற்ற அமைதி நிலவியது.

பிறகு, "இது பந்தா அல்ல. பாதுகாப்பு மட்டுமே. எனக்காக, என் நிம்மதிக்காக, இந்தப் பாதுகாப்பை நீ சகித்துக் கொள்ளக் கூடாதா?" என்று இதமாகவே கேட்டான் அவன்.

ஒரு கணம் தயங்கினாலும், "இதே போல, என் நிம்மதிக்காக விட்டு விடக் கூடாதா என்று, நானும் கேட்கலாம் அல்லவா? எங்கள் வீட்டுச் சுற்றுப்புறம் பார்த்தீர்கள், அல்லவா? இயல்பான, சாதாரணமான வாழ்க்கை. அந்த இடத்தில், இப்படிப் பழைய கால ராஜ பரம்பரை போல, முன்னும் பின்னும் பாதுகாவலுக்கு ஆட்களோடு நடமாடுவது என்றால், அது கொஞ்சம்... கொஞ்சமென்ன, ரொம்பவே 'அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற' விதமாகத் தோன்றாதா? தோழமையோடு பழகுகிற யார் முகத்தை நான் நிமிர்ந்து பார்க்க முடியும்? நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் போயிருந்த இத்தனை நாட்களும், நான் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே சிறையிருந்த மாதிரிதான் இருந்தேன், தெரியுமா?" என்று வாழைப்பழத்தில் ஊசியாய், அவன் சொல்லாமல் சென்றதையும் குறிப்பிட்டாள் நளினி.

ஊசி குத்திற்றோ இல்லையோ, அதை அவன் கவனித்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "நீ பத்திரமாய் இருக்கிறாய் என்பது, மற்ற எதையும் விட, எனக்கு முக்கியம், நளினி. அதற்காகச் சில சங்கடங்களை நாம் சகித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், முதலில் தான் அவை சங்கடங்களாகத் தோன்றும். விரைவிலேயே, என்னைப் போல, உனக்கும் பழகிப் போய் விடும்," என்று அதிலேயே நின்றான் புவனேந்திரன்.

விட்டுக் கொடுக்க அவளுக்கும் மனமில்லை. அவனையுமே இந்தப் பைத்தியக்காரத்தனத்தை விட வைக்க விரும்புகிறவள் ஆயிற்றே.

அதனாலே, "சும்மாவே, நான் பத்திரமாகத்தான் இருப்பேன் என்கிற போது, அனாவசியமாக இந்தச் சங்கடங்களை ஏன் சகிக்க வேண்டும்? தேவையே இல்லை," என்றாள் அழுத்தமாகவே.

மீண்டும் ஒரு மௌனம் அவர்களிடையே நிலவியது.

சற்றுப் பொறுத்து, ஒரு நீண்ட பெருமூச்சின் பின் புவனேந்திரன் பேசினான்.

"ரதி எப்படி இறந்தாள் என்று, உனக்குத் தெரியாதில்லையா?" என்று மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டு நிறுத்தினான்.

ரதி! அவனுடைய முதல் மனைவி.

திடுக்கிட்டு, நளினி அவனைப் ப
ார்த்தாள்.



Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:17 pm

ரதியின் பெயர், முன்னொரு தரம் அவர்களிடையே வந்திருக்கிறது. திருமணமாகி அந்தப் பத்து நாட்களுக்குள் அந்த வயதுக்கேற்ப மகிழ்ச்சியோடு இருந்ததாகச் சொன்னான்.

புதுமண மகிழ்ச்சி.

ஆனால், தேவதாசாக, அதே நினைவில் தான் உருகிக் கொண்டிருப்பதாக அவன் கூறவில்லை. அப்படிக் காட்டிக் கொள்ளவும் இல்லை.

இப்போது என்ன சொல்லப் போகிறான்?

அத்தோடு, அவளது இறப்புக்கும், இந்தப் பாதுகாவலர்கள் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்?

மீண்டும் புவனேந்திரன் பேசத் தொடங்குமுன், என்னென்னவோ கேள்விகள் மனதில் குவிந்த போதும், நளினிக்கு எதையும் வாய்விட்டுக் கேட்கத் தோன்றவில்லை.

ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவளைப் போல, அவனையே பாராத வண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

இன்னும் ஒரு சிறு இடைவெளியின் பின், தொண்டையைச் செருமிக் கொண்டு, புவனேந்திரனே தொடங்கினான்.

"ரதியை நான் மணந்தது, அவள் இறந்தது எதுவுமே, கோவையில் கூட யாருக்குமே தெரியாது," என்று தொடங்கியவன், தொடர்ந்து அதன் காரணத்தை விளக்கினான்.

"என் அப்பாவும் அம்மாவும் இறந்தது, என் இருபத்தொன்றாம் பிறந்த நாளைக்கு இரு மாதங்கள் முன்பு. தொழில் துறை நிர்வாகம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும் போதே அப்பாவுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டுமிருந்தேன். நம்முடைய நூற்பு ஆலை, நூல் விற்பனை தொடர்பாக, நான் அகமதாபாத்துக்குப் போய் வருவது உண்டு. அம்மா, அப்பாவுக்குப் பிறகு, பாட்டி வந்து என்னை அழைத்தது, நான் வர மறுத்தது எல்லாம், தண்டோரா போட்டுப் பறையறிவிக்காத குறையாக இங்கே எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

"அம்மா இருக்கும் வரை என்னையும் வெறுத்து இருந்தவர்களுக்கு, இப்போது என்ன திடீர் உருக்கம்? அம்மா இறந்ததால், எனக்கென்ன தீட்டா கழிந்து விட்டது? அம்மா இருந்தாலும், இல்லாவிட்டாலும், என் அம்மாவின் வயிற்றில் நான் பிறந்தது மாறி விடுமா என்ன?

"இப்படியெல்லாம் நினைத்து, அந்த ஆத்திரத்தில் நான் இங்கே வர மறுத்ததோடு, அப்போதைக்கு, அந்த விஷயம் முடிந்து போனது.

"ஆனால், பெற்றோரின் இறப்பு பற்றி வேதனை - அப்போதுதான் கொஞ்சம் அடங்கத் தொடங்கியிருந்தது - இரு மடங்காக மீண்டும் என்னை வாட்டத் தொடங்கிவிட்டது. கோவை வீட்டில் தனியே இருக்கப் பிடிக்காமல், வெளியூர் வேலைகளை அதிகமாக இழுத்துப் போட்டுக் கொண்டு, அங்குமிங்கும் அலைந்து திரிந்து செய்தேன். அப்படி ஒரு தரம் அகமதாபாத் சென்ற போதுதான், ரதியைச் சந்தித்தேன்.

"அவளுக்கும் சின்ன வயதுதான். அப்போது பதினெட்டு தான் ஆகியிருந்தது. என்னைப் போலவே, அவளுக்கும் உறவென்று யாரும் இல்லை. எனக்குப் பாட்டி இருந்தாலும், அவர்களைத்தான் அப்போது நான் உறவாக ஏற்கவே இல்லையே. ரதி இல்லத்தில் வளர்ந்தவள். அலுவலுக்கான படிப்பு கற்றுக் கொடுத்திருந்தார்கள். தற்காலிகமான அலுவலக வேலைகளுக்கு அனுப்புவார்கள். அப்படி எனக்காக வந்தபோது, முதல் பார்வையிலேயே எங்கள் இருவருக்கும் பிடித்துப் போயிற்று. அவளைப் பார்க்கையில், நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த பெற்றோரின் பிரிவுத் துயரத்தை என்னால் மறக்க முடிந்தது. ஒரே வாரத்தில் திருமணம் நடந்தது. எப்படி இருந்தோம் என்று தான் சொல்லியிருக்கிறேனே.

"மணமாகிப் பத்தாவது நாள், அவள் காணாமல் போனாள்!... கடத்தப்பட்டாள்...!"

"என்னது?!" என்று நளினி அதிர்ந்தாள்.

சூனியத்தை வெறித்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தவன், சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான்.

"ஆமாம்! ரதி கடத்தப்பட்டாள். என் மனைவி என்கிற ஒரே காரணத்துக்காக, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பணக்காரனுடைய மனைவியைக் கடத்தினால், அவனிடம் நிறையப் பணம் பறிக்கலாம் என்று திட்டமிட்ட மனிதத்தன்மையே இல்லாத ஒரு கும்பலால் அவள் கடத்தப்பட்டாள். கடத்திக் கொலையும் செய்யப்பட்டாள்."


"ஐயோ!" என்று பதறி எழுந்தாள் நளினி. "கொ...கொலையா?"

அமைதியிழந்து நடந்து கொண்டிருந்தவன், அவள் எதிரில் வந்து நின்றான். "ஆமாம்! கொலை தான். அந்த அரக்கர்களிடம், நான் பணத்தையும் இழந்து மனைவியையும் பறிகொடுத்தேன்.

"அவர்களிடமிருந்து, ரதி தப்ப முயன்றாளா, அன்றி அடையாளம் காட்டி விடுவாள் என்று பயந்தோ, இரண்டு, மூன்று என்று, திரும்பத் திரும்பக் கேட்டு, என்னிடம் பத்து லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அவளையும் கொன்று விட்டார்கள், அந்த வெறியர்கள். பாவம்! ஏழைப் பெண். பணத்துக்குக் கஷ்டப்பட்டாலும், எங்கோ நிம்மதியாக உயிரோடு இருந்திருப்பாள். அவளைச் சிறப்பாக வாழ வைப்பதாக நினைத்துச் சாகடித்து விட்டேன். அந்தக் கொலைகாரர்கள் கையால் கொல்லப்படுமுன், ரதி என்னமாகத் தவித்திருப்பாள். அவளை இழந்து, அந்த இருபத்தோரு வயதில் நான் என்ன பாடுபட்டிருப்பேன்? சொல்லு. என் அன்புக்கு உரியவள் என்கிற காரணத்தால், உனக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று, உன்னை நான் பாதுகாக்க முயல்வது, எப்படித் தப்பாம்?" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அவளது தோளைப் பற்றி உலுக்காத குறை.

ஆனாலும், இப்போதும், இந்தப் பாதுகாவலர்கள் விஷயத்தை அவளால் முழுதாக ஒத்துக் கொள்ள முடியவில்லை.

"ரதி சின்னப் பெண், புவனன். அத்தோடு, இல்லத்தில் வளர்ந்ததால், சில விஷயங்கள் தெரியாமலே வளர்ந்திருக்கக் கூடும்."

"என்னென்ன விஷயங்கள்?"

"எச்சரிக்கை உணர்வு... பாதுகாப்புக் கலைகள். நான் அப்படியில்லை."

அடுத்த வினாடி நடந்ததை, நளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை!

மின்னல் விரைவுடன் அவளது இரு கரங்களையும் பின்புறமாகச் சேர்த்துப் பிடித்து, ஒரு காலால் அவளது இரு கால்களையும் சுற்றிப் பிணைத்து, மறு கையால் அவளது தாடையைப் பற்றினான் புவனேந்திரன்.

அனிச்சையான திமிறல் பலனற்றுப் போகவும், திகைப்புடன் அவனைப் பார்த்தாள் அவள்.

"என்னவோ பாதுகாப்புக் கலைகள் என்றாயே. அவற்றைப் பயன்படுத்தி, உன்னை விடுவித்துக் கொள்ளேன், பார்ப்போம்," என்றான் புவனன் ஏளனமாக.

தன்னால் முடியாது என்று நன்றாகவே புரியவும், பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

பார்வை இளகக் குனிந்து, அவளது இதழ்களில் லேசாக முத்தமிட்டு, அவளை விடுவித்தான் அவன்.

"பார், அவர்கள் வன்முறையைத் தொழிலாகக் கொண்டவர்கள். இந்தப் போர்க்கலைகள் எல்லாம் அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு! அதனால் தான், அதே கலைகளைத் திறம்படக் கற்றவர்களைப் பயன்படுத்தி, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன், நான்! ஒரு முறை சூடு பட்டவன் நான். இன்னொரு பேரிழப்பை என்னால் தாங்க முடியாது. நம் ஈடுபாடு வெளியே பரவிவிட்டது. அதனால், உனக்கு ஆபத்து வந்துதான் தீரும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே, இந்த மனிதர்களின் காவல் உனக்கு இருக்கும்வரை, என்னால் பெருமளவு நிம்மதியுடன் மற்ற வேலைகளைப் பார்க்க முடியும். அதில்லாமல், ஒவ்வொரு கணமும், நீ பத்திரமாக இருக்கிறாயோ, இல்லையோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. அதுவும் உனக்கோர் ஆபத்து நேர்ந்தால், அதைத் தாங்கவும் என்னால் முடியாது. அதனால்... அதனால், ஒன்று, இந்தக் காவலை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது, உனக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய காரணத்தை நீக்க வேண்டும். புரிகிறதில்லையா? நாம் பிரிய வேண்டும். இவை தவிர, மாற்று வழியேதும் கிடையாது!" என்று முடித்தான் அவன்.

ஆனால், அவள் பதில் சொல்லு முன்னரே, அவளது கையைப் பற்றி முத்தமிட்டு, "பிரிவே பரவாயில்லை என்று சொல்லிவிடாதே, கண்மணி!" என்றான் கொஞ்சுதலாக.

கெஞ்சுதலாகவும்.

அவளும் தான் அப்படி எப்படிச் சொல்லுவாள்?

தன் சம்மதத்தைச் சொல்லாமல் சொல்லும் விதமாக அவன் தோளில் சற்று நேரம் சாய்ந்திருந்தாள் அவள்.

ஆனால், அப்போதும் அவளது குடியிருப்புப் பகுதியில் இந்தக் காவலர் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அவளைக் குழப்பியடித்துக் கொண்டிருந்தது.

குடும்ப விவகாரங்களில் தலையிடா விட்டாலும், அங்கே எல்லோருமே ஒருவருக்கொருவர் இலகுவாகப் பேசிப் பழகுகிறார்கள். கேலியும் கிண்டலும் எளிதாக வரும்.

'புதிதாகக் கார் வாங்கியவர், இரண்டே தரம் 'என் கார், என் கார்' என்று விட்டாலே, அவர் 'கார் பந்தா' ஆகி விடுவார். அதற்கு மேல் போனால் 'போர் பந்தா.'

அந்த மாதிரி இடத்தில், முன்னும் பின்னுமாய் மெய்க் காப்பாளர்கள் என்றால், அவளுடைய குடும்பத்துக்கு என்ன பெயர் வைப்பார்கள்? இது ஒரு பக்கம் என்றால், புவனேந்திரன் அஞ்சுகிற மாதிரியான ஆபத்து எதுவும் தனக்கு வரக்கூடும் என்று, அவளால் ஒப்பவும் முடியவில்லை. இதில் எதைச் சொல்லி இந்த அன்பனுக்குப் புரிய வைப்பது?

"என்ன யோசனை, நளினி?" என்று கேட்டான் புவனேந்திரன்.

"வேறென்ன? அங்கே இந்த இருவரையும் எப்படி இயல்பாகப் பொருந்தச் செய்வது என்றுதான்," என்று உண்மையைச் சொன்னாள் அவள்.

"பொருந்துகிறார்களோ, இல்லையோ, அவர்கள் இருக்கப் போவது கட்டாயம்," என்றான் அவன் இறுகிய குரலில்.

கடைசி முயற்சியாக, "அது மிகவும் பாதுகாப்பான பகுதிதான், புவனன். இதுவரை அங்கே சின்னத் திருட்டு கூட நடந்தது இல்லை. அதனால், கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமா?" என்று கேட்டாள் நளினி.

"பொறுத்து? பொறுத்திருந்து எதைப் பார்ப்பது? உன்னை யாராவது கடத்திக் கொண்டு போகிறார்களா, இல்லையா என்றா? ஒரு வேளை, கடத்திப் போய் விட்டால்? உன் விஷயத்தில், ஆபத்து வருகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, நான் தயாரில்லை. அதனால், இந்த மாதிரி அசட்டுப் பேச்சு இனி வேண்டாம்," என்று கண்டிப்பான குரலில் கூறி முடித்தான் புவனேந்திரன்.

நளினியின் கற்பனைதானோ, என்னவோ, குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும் தன்னை இளக்காரமாகப் பார்ப்பது போல, ஓர் எண்ணம்.

சங்கத் தலைவர், செயலாளர் முதலியோரிடம், சுதர்சனம் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சக்திவேல், அவனுடைய கூட்டாளி பற்றிச் சொல்லிவிட்டு வந்தார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டுக்கு வேண்டியவர்கள் என்று மட்டுமே.

ஆனால், அவர்கள் இருவரும் சும்மாவே அங்கே இருப்பதும், அவள் வெளியே சென்றால் மட்டும் கூட வருவதும், பிறர் கவனத்தைக் கவராது இருக்குமா, என்ன?

அவரவருக்கு அவரவர் பிரச்சனை... இதில் நம்மைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஏது நேரம் என்று மகளுக்குச் சமாதானம் சொன்ன போதும், சுதர்சனத்துக்குமே, இந்தப் பாதுகாவல் இந்த இடத்தில் சற்று அதிகப்படியாகத்தான் தோன்றியது.

புவனேந்திரனின் நிலைமைக்கு அது தேவையாக இருக்கலாம். அப்படித்தான் என்று, ஒரு சமயத்தில் மனைவியிடம் அவனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசியவரும் கூட! ஆனால், அவனுடைய மனைவியாக ஆகாத நிலையில் எதற்கு என்ற எண்ணம் தான்.

ஆனாலும் மகளது நன்மைக்காக என்று எண்ணித்தானே செய்கிறான் புவனேந்திரன் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டார்.

பெருமளவு மகளையும்.

ஆனால், இருவருமே, புவனேந்திரனின் பிடிவாதத்துக்காகப் பொறுத்துப் போனார்களே தவிர, இந்தக் காவல் அவசியம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் வரவில்லை.

புவனேந்திரனையே அடியாட்களோடு அலைவது போல இருக்கிறது என்று கூறும் சகுந்தலாவும், கணவனைப் போலவே பொறுத்துப் போனாள்.

பொறுத்துப் போனாலும், சற்று வசதியான மத்திய தரத்து வாழ்க்கையில் பழகியிருந்த அந்தக் குடும்பத்துக்குப் புவனேந்திரனின் அச்சம் புரிபடவே இல்லை.

ஆனால், அவன் அதில் பிடிவாதமாக இருக்கவே, அவனை இழக்க விரும்பாமல், அவனது நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள் எனலாம்.

செல்வம், செல்வாக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், மகள் அவனை விரும்புகிறாள் என்பதும் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆயினும், இந்தக் கூண்டுக் கிளி வாழ்வை மகள் எவ்வளவு நாள் தாங்குவாள் என்று, சகுந்தலாவுக்குச் சந்தேகம் தான்.

நளினியைப் பொறுத்த வரையில், தந்தையுடைய காரில் மட்டுமே வேலைக்குப் போவாள். அப்போதும் காவலர்கள் கூட வருவதுதான். ஆனால், முன் போல ஆட்டோ ஓட்டியிடம் ஏதாவது சொல்வது போன்றவற்றுக்கு இடம் இராதல்லவா?

கார் கிடைக்காத போதும், மற்ற சமயத்திலும் வீடே கதியென்று இருக்கத் தொடங்கினாள்.

ஆனால், அப்போதும் நேரத்தை வீணாக்காமல், தனக்கும் தங்கைக்கும் துணிமணிகளில், மணி, கண்ணாடி, கல், சம்கி போன்றவற்றைக் கொண்டு வேலைப்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள்.

பிடித்தமான வேலைதான். ஆனால், இதுவே சில சமயங்களில் நளினிக்கு எரிச்சலூட்டவும் செய்தது.

முனைந்து வேலைச் செய்கிறபோது, சில சமயம், உரிய கற்கள், கோந்து போன்றவை தீர்ந்து போகும். ஒரு தரம் அந்தக் கோந்து கொட்டிக் காய்ந்து போயிற்று. முன்பானால், உடனே ஆட்டோவிலோ, பஸ்சிலோ சென்று தேவையானதை வாங்கி வந்து, மறுபடியும் வேலையைத் தொடங்கி விடுவாள்.

இப்போதானால், சகுந்தலாவிடம் சொல்லியனுப்பி வாங்க வேண்டியிருந்தது.

அன்றாட வேலைகள், திருமண வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, அவள் சென்று வாங்கி வந்தாலும், சில சமயங்களில் அவை தவறாகிப் போய், நளினியின் பொறுமையைச் சோதித்து, மூச்சு முட்டுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

மற்றப்படி, பட்டுச் சேலைகள், நகைகள் போன்ற அனைத்தையும், தாயையே வாங்கி வரச் சொல்லி விட்டாள், நளினி.

ஏற்கெனவே, மகளின் திருமணத்தின் போது தேவைப்படக் கூடியவை என்று சுதர்சனமும், சகுந்தலாவும் அவ்வப்போது வாங்கிச் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்ததால், அப்போது பெரிய அளவில் எதையும் வாங்கும்படி நேரவும் இல்லை.

ஆனால், நளினியே நேரடியாகச் சென்று வாங்க வேண்டிய சில பொருட்களும் இருந்தன.

அவளது உள்ளாடைகளை எப்போதுமே அவளே தான் வாங்குவது வழக்கம். வாசனைப் பொருட்கள், மேக்கப் சாமான்கள் போன்றவற்றையும் தானே தேர்ந்தெடுப்பாள். இப்போதும், அந்த வழக்கத்தை மாற்ற, நளினி விரும்பவில்லை.

அதிலும் முக்கியமாக உள்ளாடைகளை!

அதே சமயம், இரு அன்னிய ஆண்கள் புடைசூழச் சென்று, உள்ளாடையைத் தேர்ந்தெடுப்பதும் அவளுக்கு மிகவும் அசூசையாகப் பட்டது.

ஆனால், இதைப் புவனேந்திரனிடம் சொன்னால், அவளது உணர்வை அவன் நிச்சயமாகப் புரிந்து கொள்ள மாட்டான் என்று தோன்றவும், அவனிடம் சொல்லாமலே கடைக்குப் போய்த் தனக்கு வேண்டியதை வாங்கி வந்துவிட நளினி முடிவு செய்தாள்.

ஆனால் அந்த முடிவு, அவளது திருமணத்தையே நிறுத்தி விடும் என்று, பாவம் அவள் எதிர் பார்க்
கவே இல்லை.



Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:20 pm

தனியே கடைக்குச் செல்ல, நளினி பிடிவாதமாக முடிவெடுத்ததின் இன்னொரு காரணம், புவனேந்திரன் ஊரில் இல்லாதது.

இருவருக்கும் அறிமுகமாகி இந்தச் சில மாதங்களில், அவன் சொல்லாமலும், எங்கே என்ன காரியம் என்று விவரம் சொல்லாமலும், குறைந்தது ஐந்து முறையேனும் புவனேந்திரன் வெளியூர் சென்றிருப்பான். திரும்பி வந்த பிறகும், அது பற்றி அவன் பேசுவதில்லை.

திருமணம் நிச்சயம் ஆன பிறகும், அவன் அப்படிச் சென்றது, அவளுக்கு வருத்தத்தோடு சற்றுக் கோபமாகவும் இருந்தது.

புவனேந்திரனின் கடந்த காலம் அவளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலம்? அதிலிருந்து அவன் அவளை எப்படி ஒதுக்கலாம்?

அவளுக்கு மட்டும் அத்தனை கட்டுப்பாடுகள், காவலர்களின் கண்காணிப்பா?

எவ்வளவோ ஆத்திரம் வந்த போதும், அவன் சிரிப்பும் விளையாட்டுமாகப் பேசத் தொடங்கியதும், பதிலுக்கு, அவனைப் போலவே பேசத் தோன்றியதே தவிர, கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள அவளுக்கு வரவே இல்லை.

அன்று அவனிடம் பேச வேண்டும் போல, நளினிக்கு ரொம்பவும் ஆவலாக இருந்தது.

ஒரு கருநீல வண்ணச் சுரிதார் செட்டுக்கு, வண்ணக் கல்லாலேயே வட்ட வட்டமாய் அங்கங்கே பூவேலை செய்து முடித்திருந்தாள். அணிந்து பார்க்கும் போது மிக அழகாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை புவனனோடு கலந்து கொள்ள, அவள் மிகவும் விரும்பினாள்.

அதற்காக, அவனை செல்லில் பிடிக்கலாம் என்று பார்த்தால், செல்லை அணைத்து வைத்திருந்தான். ஃபோன் செய்து பார்த்தபோதுதான், அவளிடம் சொல்லாமலே, புவனேந்திரன் வெளியூர் சென்றிருந்தது, அவளுக்குத் தெரிய வந்தது.

மீண்டுமா என்று எண்ணியவளுக்கு, முகம் கறுத்துச் சிறுத்துப் போயிற்று.

அவள் மட்டும், அவளது ஒவ்வொரு கணத்துக்கும், பாதுகாவல் என்ற பெயரில், அவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அவன் விருப்பம் போலச் சுற்றுவானா?

குறைந்த பட்சமாய், வெளியூர் போகிறேன் என்று கூடவா சொல்லக் கூடாது?

அதையெல்லாம் அறியும் உரிமை உனக்குக் கிடையாது என்று வாய் வார்த்தையாகச் சொல்லாமல், செயலில் செய்து காட்டி, அதற்கு அவளைப் பழக்குகிறானா? இன்னொருவர் மூலம் அறிய நேரும் போது, இன்றைய நிலையில், அவளுக்கு அது எவ்வளவு பெரிய அவமானம் என்று கூடவா யோசிக்கக் கூடாது?

இதையெல்லாம் ஏற்று வாழ்வதற்கு அவள் ஒன்றும் முதுகெலும்பே இல்லாத புழு அல்லவே!

அல்லது, அவனது பணத்துக்காக அவள் எதையும் பொறுத்துப் போவாள் என்று எண்ணினானா?

அப்படி மட்டும் எண்ணியிருந்தான் என்றால், அவனுக்கு விரைவிலேயே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

இது பற்றிக் கட்டாயமாகப் புவனனிடம் பேசியாக வேண்டும் என்று எண்ணியவளுக்குத் தனக்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களை உதறி விட்டுத் தனியே கடைக்குச் சென்றாக வேண்டும் என்பதும் உள்ளூர உறுதியாயிற்று.

புவனனிடம் ஊதியம் பெறுகிறவர்களிடம் தன் அதிகாரம் செல்லாது என்பதால், அவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாள். தவிர, மற்ற யாரிடமும், புவனனிடம் கூடத் தான் தனியே செல்வதை மறைக்க அவள் எண்ணவில்லை.

அவளிடம் தெரிவியாமல் அவன் வெளியூருக்கே சென்று வரும் போது, அவள் உள்ளூரில் ஒரு கடைக்குச் செல்வதில் என்னவென்று தப்புக் காண முடியும்?

இப்படித்தான் நளினி நினைத்தாள்.

ஆனால்...

சக்திவேலுக்கும், அவனுடைய கூட்டாளிக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது, நளினிக்கு அப்படி ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.

காவலர்கள் இருவரும் இருப்பது, பெரும்பாலும் முன் வராண்டாவில் தான். நளினியும், புவனேந்திரனும் உட்கார்ந்து வேலை செய்த இடம்.

வாயில் வழியே, உள்ளே, வெளியே யார் சென்றாலும், இவர்களது பார்வைக்குத் தப்ப முடியாது.

ஆனால், 'லிஃப்ட்' வேலை செய்யாத போது செல்வதற்காக, வீட்டின் பின்புறமாக ஒரு படிக்கட்டி இருந்தது. அதற்குச் செல்ல ஒரு கதவும் எல்லா வீடுகளுக்கும் உண்டு.

பாதுகாப்புக் கருதி, அந்தப் பின்புறக் கதவைப் பூட்டி விடும்படி பாதுகாப்பு நிறுவனத்தால் ஆலோசனை கூறப்பட்டு, அப்படி அந்தக் கதவு பூட்டப்பட்டும் இருந்தது.

எப்போதாவது மின்சாரம் தடைப்பட்டு, லிஃப்டைப் பயன்படுத்த முடியாத போதும் கூட, சக்திவேலிடம் தெரிவித்து விட்டே அந்தக் கதவைப் பயன்படுத்தும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தச் சமயங்களில் இருவரில் ஒருவர் அந்தப் பக்கம் காவலிருப்பார்கள்.

பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளைப் புவனேந்திரன் அப்படியே கடைப்பிடிப்பான். அதில் அரை குறைத்தனமே கிடையாது. அவன் ஏற்பாட்டில் ஏற்ற பணி என்பதால், அவனுடைய வருங்கால மனைவியின் வீட்டிலும் அதே நிலைமையைப் பாதுகாப்பு நிறுவனமும், அதனுடைய பணியாளர்களும் எதிர்பார்த்தனர்.

அன்றுவரை, அவர்கள் குறைப் படும்படியாக எதுவும் நடக்கவும் இல்லை. அதனால், அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவும் இல்லை.

எனவே, அந்தக் கதவின் வழியே, வீட்டை விட்டு வெளியேறி, நளினி கடைக்குச் செல்வது இலகுவாகவே முடிந்து விட்டது.

என்ன வாங்க வேண்டியிருந்தது என்பதைச் சொல்லியதால், மகளை அறிந்த தாயும் அவளைத் தடுக்கவில்லை. பிளஸ் டூ தங்கைக்கும் அதுவே சரியாகப் பட்டது.

பல நாட்களுக்குப் பிறகு, காவலர் புடைசூழச் செல்வது, அதை யார் யார் பார்த்து என்னென்ன கிண்டலடிக்கிறார்களோ என்பன போன்ற எந்த விதக் கட்டுப்பாடோ, குன்றலோ இல்லாமல் வெளியே செல்கையில், வெகு சுதந்திரமாக, மிகச் சுதந்திரமாக நளினி உணர்ந்தாள்.

அந்தச் சுகத்தில், திட்டமிட்டதை விடவும் அதிக நேரம் வெளியே சுற்றியலைந்து, இன்னும் பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு, அவள் வீடு திரும்பினால், சிவந்த கண்களுடன், இறுகிய முகத்துடன் புவனேந்திரன் அவள் வீட்டில் உட்கார்ந்திருந்தான். உண்ணவும், அருந்தவுமாக, அவன் முன்னே வைக்கப்பட்டிருந்தவை தொடக்கூடப் படாமல், அப்படியே இருந்தன.

ஒரு கணம், நளினிக்குத் திக்கென்றுதான் இருந்தது.

ஆனாலும், அவள் அப்படியென்ன தப்பு செய்து விட்டாள்? அவனது அசட்டுப் பாதுகாவலை ஒரு தரம் மீறியிருக்கிறாள். மற்றபடி ஒன்றுமில்லையே என்று தோன்றிவிடவும், தானாக அவளது தலை நிமிர்ந்து விட்டது.

வீட்டில் அவளுடைய தந்தை, தாய் இருவருமே பெரும் சிக்கல் தீர்ந்த பெருமூச்சுடன், "வாம்மா!" என்று அவசரமாக அவளை எதிர் கொண்டனர்.

"இதோ வந்து விடுவாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்! அதே போல, வந்து விட்டாய். எல்லாம் கிடைத்ததாடா?" என்றாள் சகுந்தலா. "போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. புவனேந்திரன் அப்போது பிடித்துக் காத்திருக்கிறார்!" என்றாள் குறிப்பாக.

புவனேந்திரன் வெறுமனே காத்திருக்கவில்லை, பார்த்து நடந்து கொள் என்று தாயார் சொல்வது நளினிக்குப் புரிந்தது.

ஆனால், இந்த மூன்று மணி நேரம் சுதந்திரமாகச் சுற்றியலைந்தது, நளினியை வேறு விதமாக எண்ண வைத்தது.


பாதுகாப்பு, பாதுகாப்பு என்று புவனேந்திரன் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. பொன் வண்ணம் பூசியதாலேயே, சிறைக் கம்பிகள் வேறாகி விடுமா? சொந்த வீட்டிலேயே, காசு கொடுத்துக் கைதிகளாக வாழ்வதா?

அவசியமற்றுத் தன்னைத்தானே கைதியாக்கிக் கொண்டதோடு, அவளையும் அந்த நிலைக்கு அவன் தள்ள முயற்சிக்கிறான்.

அந்த நிலையிலிருந்து, தன்னோடு, பாவம்! அவனையும் காப்பாற்ற வேண்டும்.

ஒரு ரதி கடத்தப்பட்டதாலேயே, எல்லாப் பணக்காரர்களுடைய மனைவிமாரும் கடத்தப்பட்டு விடுவார்களா, என்ன? மாட்டார்கள் என்று, அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.

அவனிடம் என்ன மாதிரிப் பேசிப் புரிய வைப்பது என்று, அவள் அவசரமாக மனதுள் ஒத்திகை பார்க்கையில், "உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். சற்று வெளியே போய் வரலாமா?" என்று உணர்ச்சி அடைத்த குரலில் கேட்டான் அவன்.

ஒரு கணம் நளினி யோசித்தாள்.

புவனனோடு எங்கே சென்றாலும், அவனுடைய மெய்க்காவலர்கள் கண் பார்க்கும்... ஏன், காது கேட்கும் தொலைவிலேயே இருப்பார்கள். அப்படி இரு பார்வையாளர்களை அருகில் வைத்துக் கொண்டு, அவளால் இலகுவாகப் பேச முடியாது.

எனவே, "நிஜமாகவே தனியாகப் பேசுவது என்றால், வெளியே போவதை விட, அப்பாவின் அலுவல் அறையில் இருந்து பேசுவது மேல்..." என்றாள், அவனுக்குப் பதிலாக.

அவளது பேச்சின் பொருள் புரிந்தாற் போலப் புவனனின் முகம் சற்றுக் கடுத்தது.

ஆனாலும், அவளது யோசனையை மறுக்காமல், சுதர்சனத்தின் அலுவலக அறைப் பக்கமாக நடந்தான்.

அறைக் கதவுக்கு முடிந்தவரை உட்புறமாகத் தூரச் சென்றவன், அவளும் அருகே வந்ததும், "நான் சொன்னது எதுவுமே, உன் மூளையை எட்டவில்லையா? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று தணிந்த குரலில் சீறினான்.

முட்டாளே என்கிறானா?

"அன்னிய ஆண்களைப் பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு உள்ளாடைகளை வாங்கும் பழக்கம் எனக்குக் கிடையாது!" என்றாள் இவள் வெடுக்கென.

"ஓகோ! நீ உள்ளாடைகளை வாங்கும் போது, உன்னைக் கடத்தக் கூடாது என்று, ஏதேனும் சட்டம் இருக்கிறதா?" என்றான் அவன் எகத்தாளமாக. "அப்படியே ஒரு சட்டம் இருந்தாலும், அவர்கள் வன்முறையாளர்கள். அந்தச் சட்டத்தை எப்படியும் மீறிகிறவர்கள். இது கூடவா உனக்குப் புரியவில்லை?"

பொறுமையிழந்து, "நிறுத்துங்கள், புவனன்! என்ன இது, எப்போது பார்த்தாலும், கடத்தல், கடத்தல் என்று கொண்டு!" என்று ஆத்திரப்பட்டாள் நளினி.

"என்ன செய்வது? எத்தனை முறை சொன்னாலும், அது உன் மண்டையோட்டைத் தாண்டி, உள்ளே போவதாகத் தெரியவில்லையே! அதனால் தான், திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது," என்றான் புவனேந்திரன் பதிலுக்கு ஆத்திரமாகவே. ஆனால், உடனே தணிந்து, "சொன்னால் புரிந்து கொள், நளினி. ஏற்கெனவே பட்ட கடனே எனக்கு முழுதாகத் தீரவில்லை. இன்னும் உனக்காக வேறு கடன்பட வைத்துவிடாதே!" என்றான் கனத்த குரலில்.

"கடனா? என்ன கடன்?"

"எனக்கு மனைவியான பாவத்துக்கு, ஒருத்தி பலியானது போதாதா? உனக்கும் ஏதேனும் நேர்ந்தால், நான் என்ன செய்வேன்? என்னால் தாங்கவே முடியாதும்மா."

எதுவும் நேரத் தேவையே இல்லை என்றால், இவன் ஏன் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறான்? கீறல் விழுந்த பழைய கிராமபோன் இசைத்தட்டு மாதிரி, அதே 'கடத்தலை' உருப் போட்டால், அவளுக்கு எரிச்சல் வராதா? முதலில், இந்தப் பேச்சை நிறுத்தியாக வேண்டும்.


"நீங்கள் பாதிக்கப்பட்டவர், புவனன்! சூடு பட்ட பூனை மாதிரிப் பட்டறிவில் பேசுகிறீர்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், பூனையை விட, ஓர் அறிவு உங்களுக்கு அதிகம் இருக்கிறதல்லவா? அதைக் கொண்டு, யோசித்துப் பாருங்கள். எந்தப் பணக்காரனுடைய மனைவி எப்போது கிடைப்பாள், கடத்திப் போய்ப் பணம் பறிக்கலாம். கூடவே கொல்லலாம் என்று ஊரெல்லாம் வன்முறையாளர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றா நினைப்பது? அப்படி எல்லோரும் எண்ணத் தொடங்கினால் அப்புறம் தொழில் நடத்துவதிலும், பொருள் ஈட்டுவதிலும், யாருக்கு ஆர்வம் இருக்கும்? மனைவியை நேசிப்பவர்கள் எல்லோரும், கையில் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கத்தானே போவார்கள்? அப்புறம் நாட்டின் பொருளாதாரமே நாசமாகி விடாதா?" என்று மனதில் இருந்ததை மூச்சு விடாமல், படபடவென்று பொரிந்து கொட்டினாள்.

அவள் பேசி முடித்த போது, புவனேந்திரனின் கண்களுக்குச் சமமாக, முகமும் கன்றிச் சிவந்து போயிருந்தது.

இறுக மூடியிருந்த உதடுகளும், கை முஷ்டிகளுமாக, அவன் உணர்ச்சிகளை அடக்கப் பாடுபடுவதைக் கண்ட நளினிக்குச் சற்றுப் பரிதாபமாகக் கூட இருந்தது.

ஆனால், இது சொல்லியாக வேண்டிய விஷயம் அல்லவா?

அவன் கற்சிலையாய் நிற்க, அவனை நெருங்கி அவனது கரத்தைத் தொட்டு, "மெய்யாகத்தான் சொல்லுகிறேன், புவனன். ரதிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம் எல்லோருக்கும் நேர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் அப்படி அஞ்சத் தேவையும் இல்லை," என்றாள்.

அவளது விரல்களுக்கு அடியில், புவனேந்திரனின் தோல் மேலும் இறுகுவதை அவளால் உணர முடிந்தது.

அந்த இறுகலின் அடிப்படையான வேதனை புரியவும், அது தாங்காமல், "ஐயோ, வேண்டாம், புவன்!" என்று இரு கைகளாலும் அவனை இறுக அணைத்தாள்.

அவனது கரங்களும் அவளைச் சுற்றிக் கொள்ள, இருவரும் சற்று நேரம் அப்படியே நின்றனர்.

அவனது இறுக்கம் மெல்லத் தளர்வதை உணர்ந்து, அவனது தோளை மெல்ல வருடி, "அனாவசியமாக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள், புவனன்!" என்று வேதனையோடு வேண்டினாள் நளினி.

ஓரிரு கணங்கள் அசையாமல் நின்று விட்டு, ஆறுதலாக வருடிக் கொடுத்த அவளது கைகளைப் பற்றி நிறுத்தினான் புவனேந்திரன்.

"அனாவசியமாகவா?" என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டவன், அவளை நேராக நோக்கி, "ரதிக்கு நேர்ந்த ஆபத்து எல்லோருக்கும் நேர வேண்டிய கட்டாயம் இல்லை என்றாயே. அப்படி நேரவே நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேட்டான்.

பழைய கதைக்கே வருகிறான்.

இதற்கெல்லாம் என்ன உறுதி கொடுக்க முடியும்? வெகு சில வாய்ப்புகள் மட்டும்தானே உண்டு என்றாலும், அதற்காகவேனும் அவள் காவல் கைதியாக வாழ்ந்தே ஆக வேண்டும் எனப் போகிறான்.

உள்ளம் சலிப்புறக் கைகளை விடுவிடுத்துக் கொண்டாள் அவள். "அப்படி வெகு அபூர்வமாக ஏதேனும் நேர்ந்தாலும், என்னைக் காப்பாற்றிக் கொள்ள, என்னால் முடியும்," என்றாள் எங்கோ பார்த்தபடி.

"எப்படியாம்? அன்றைக்கு என்னிடம் மாட்டினாயே, அது போலவா?" என்று ஏளனமாகக் கேட்டான் அவன். "உன்னால் முடியாது என்று, அன்று போலவே இன்னொரு தரம் நிரூபித்துக் காட்டினால் அப்போதேனும் மனதில் நிற்குமா?"

அவனது ஏளனம் தைக்க, "தேவையில்லை. ஆனால் நீங்களும் ஒன்றை யோசித்துப் பாருங்கள். நான் ஒன்றும், உங்கள் வில்லாதி வில்லர்களை உற்றவர்கள் என்று நம்பி, உங்களிடம் போலத் தனியாகச் சென்று, அவர்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதில்லையே! பொது இடங்களில், அந்த மாதிரிக் கடத்த முயன்றால், நம் பொதுமக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அதனால், உங்கள் அச்சமும், கவலையும் அனாவசியமேதான்!" என்றாள் அவள் தெளிவாக.

"கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா!" என்று வாசகம் சொல்வார்கள். மதுரையில் பார்த்திருக்கிறாயா? அவ்வளவு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கும் திருமலை நாயக்கர் மகாலிலேயே, அவரது காவல் படையையும் மீறிக் கள்வர்கள் கன்னமிட்ட இடம் இருக்கிறது. சாதாரணப் பொதுமக்கள், எந்த விதத்தில், உன்னைக் காப்பாற்றிவிட முடியும் என்கிறாய்?" என்று கேட்டான் அவன்.

"அப்படிப் பார்த்தாலும், நாயக்க மன்னருடைய பெரும் படை வீரர்களையே மீறி, அந்தக் கள்வர்கள் கன்னம் போட்டிருக்கிறார்களே! உங்கள் இரண்டு பாதுகாவலர்கள் அந்த வன்முறையாளர்களுக்கு எம் மாத்திரம்?" என்று மடக்கினாள் நளினி.

இவளிடம் என்ன சொன்னால் புரிந்து கொள்வாள் என்று அறியாதவன் போலச் சற்று நேரம் அவளைப் பார்த்தபடி, புவனேந்திரன் புருவம் சுழித்து நின்றான்.

பிறகு, "உண்மையாகவே, இந்தப் பாதுகாப்பு தேவை இல்லை என்று உனக்குத் தோன்றுகிறதா, அல்லது இங்குள்ள சூழ்நிலையில் அது சங்கடமாக இருப்பதால், வேண்டாம் என்கிறாயா? நன்கு யோசித்து எனக்குப் பதில் சொல், நளினி," என்று வரண்ட குரலில் வினவினான்.

அவனது குரலில், 'கண்மணி, ம்மா' விகுதியைக் கைவிட்டு வெறுமனே நளினியென்று அழைத்த விதமும், அவளை எச்சரித்திருக்க வேண்டும்.

ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே அசட்டுத்தனம் என்று அவள் கருதியதைப் போக்கிவிடும் வேகத்தில், "தேவையில்லை... தேவையில்லை... நிஜமாகவே, எனக்குப் பாதுகாப்புத் தேவையே இல்லை!" என்றாள் அவள் அவசரமாக!

"நான் உன்னை யோசித்துப் பதில் சொல்லச் சொன்னேன்!" என்றான் அவன் கோபமாக.

"மனதில் எப்போதும் இருப்பதைச் சொல்ல, எதற்கு யோசனை?" என்றாள் நளினி.

"மனதில் எப்போதும் இருப்பதா?" என்று, அவளது வார்த்தைகளையே மெதுவாகத் திருப்பிச் சொன்னான் புவனேந்திரன். "அப்படியானால், ஏற்கெனவே யோசித்து, ஒரு முடிவுடன் தான் இருக்கிறாய் என்று தெரிகிறது."

"நிச்சயமாக! இனி நீங்கள் தான் யோசிக்க வேண்டும்."

"யோசித்து நான் எடுத்த முடிவு பற்றி, முன்பே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்," என்றான் அவன் - இளக்கமற்ற, கனத்த குரலில்.

அவன் சொன்னது நினைவு வர, நளினி அ
திர்ந்தாள்.



Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:23 pm

சக்திவேலின் காவல் தேவையில்லை என்று, புவனேந்திரனிடம் அவள் கேட்கப் போனபோது நடந்தது, நளினிக்குத் தெள்ளத் தெளிவாக நினைவு இருந்தது.

அவனது விஷயங்கள் எதையுமேதான் அவள் மறப்பது இல்லையே.

அதிலும், இது அவனது முதல் இதழொற்றுதல்.

பிரிவைத் தேர்ந்தெடுத்து விடாதே என்று, அவன் எப்படிக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான்.

அந்த அன்பு பெரு மரமாய் இவ்வளவு வளர்ந்த பிறகு, அவனுக்கு மட்டும் பிரிவது எளிதாகவா இருக்கும்? அதற்காக, அவனும் அவள் பக்கம் வரலாமே.

ஆனால், புவனேந்திரன் ஒரு மாதிரிப் பிடிவாதக்காரன். பெற்றோருக்கு அநியாயம் செய்தார் என்று, பாட்டியைக் கடைசி வரை... மரண வாசலில் ஒரு தரம் எட்டிப் பார்த்தது தவிர, இன்னமும் கூட, அவன் மன்னிக்கவே இல்லை.

ஆனால், முன்பின் பார்த்தே அறியாத பாட்டியின் பாசமும், அவளது காதலும் ஒன்றல்ல.

அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பின் வலிமை பெரியது. அது, அவனை அவள் பக்கம் இழுத்து வந்து விடும் என்று நளினி பிடிவாதமாக எண்ணமிடும் போது, அதை நிரூபிப்பவன் போன்று, புவனன் அவள் புறமாக ஓர் எட்டு எடுத்து வைத்தான்.

ஆனால், அவள் ஆவலாக நோக்குகையிலேயே, கைகளை இறுக மூடிக் கொண்டு, திரும்பி நடந்து அறையை விட்டு வெளியேறி விட்டான்.

வெளியே சென்றவன், அறைக்குள் நடப்பதைக் கவனியாதிருக்க மிகவும் முயன்று கொண்டிருந்த சுதர்சனத்திடம் போனான். "பாருங்கள், அங்கிள்! என் கடந்த காலத்தில் நடந்தது பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். விளக்கி, விலாவாரியாக விவரிக்க முடியாத சிலதைத் தேவையில்லை என்று விட்டிருந்தேன்... அதில்... அங்கிள், நளினிக்கும் இது தெரிய வேண்டியதுதான்..." என்று மேலும் சற்றுத் தடுமாறி விட்டு, அவனே தொடர்ந்து பேசினான்.

"அங்கிள்! ரதிக்குப் பூ மாதிரி முகம். இளமை, சந்தோஷம் எல்லாமாக, அன்றலர்ந்த பூ தவிர, அவள் முகத்துக்கு வேறு உவமை கிடையாது. ஆனால், அவள் காணாமல் போய்... இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு, பிணக் கிடங்கில் பார்த்தபோது, அந்த முகம் எப்படி இருந்தது, தெரியுமா? எனக்கு மறக்காது. இந்தப் பிறவியில் அது மறக்கக் கூடியது அல்ல, அங்கிள். என்னை மணந்த ஒரு காரணத்துக்காக... அவள்... அந்தப் புதுமலர்... கடவுளே..." என்று, மேலே பேச முடியாமல் தவிப்புடன் அவன் நிறுத்திய போது, எல்லோருக்கும் மூச்சடைத்துப் போயிற்று.

சகுந்தலா ஓசையற்று அழவே தொடங்கி விட்டாள்.

முதலில் சமாளித்துக் கொண்டவனும் புவனன் தான்.

தொண்டையைச் செருமிச் சரிப்படுத்திக் கொண்டு, "அங்கிள், ஆன்ட்டி! நீங்கள் இருவரும் என்னைப் போலவே, நளினி மீது நீங்களும் மிகுந்த அன்புள்ளவர்கள் என்பதால், நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நளினி என் மனைவியாக இருப்பதை விட, அவள்... நல்லபடியாக உயிரோடு இருப்பது எனக்கு முக்கியம். இன்னொரு... அதுபோல, இன்னொரு தப்பு நடக்க விட முடியாது, அங்கிள். அதனால் நான் இந்தத் திருமண நிச்சயத்தை முறிக்கிறேன்!" என்று முடித்தான்.

அவரது அலுவல் அறை வாயிலில், முகத்தில் ரத்தப் பசையே இல்லாமல் வெளுத்த முகத்துடன், ஓர் ஆவியைப் போன்று நின்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார், சுதர்சனம்.

மகளின் மனம் அவர் அறியாதது அல்ல.

அது, இப்போது என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கும் என்று உணர்ந்து, "பாருங்கள் புவனேந்திரன். அவள் சின்னப் பெண்! இந்த ஒரு தடவை யோசியாமல்..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.

"இல்லை, அங்கிள். நன்கு யோசித்துத்தான், தனக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்று, நளினி செயல்பட்டிருக்கிறாள். வரக்கூடிய ஆபத்து பற்றி அவளுக்குப் புரியவில்லை என்பதோடு, எதையும் புரிந்து கொள்ளப் பிரியமும் இல்லை. அவசியமற்ற அசட்டுத்தனமாக நிச்சயமாக நினைக்கிறாள். எனவே, மீதம் இருக்கும் ஒரே வழி, ஆபத்துக்கு ஆளாகாத, பாதுகாப்புத் தேவையற்ற ஒரு நிலையை, அவளுக்கு உருவாக்கிக் கொடுப்பதுதான். அதனால் தான், விலகிப் போக முடிவு செய்திருக்கிறேன். இன்னொன்று அங்கிள். இதுவே, இன்னொருவர் என்றால், நிச்சயித்த திருமணத்தை நிறுத்துவதற்காக, நஷ்ட ஈடு எவ்வளவு வேண்டும் என்று நேரடியாகக் கேட்டிருப்பேன். ஆனால், இந்தக் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், சில ஏற்பாடுகளுக்காக நீங்கள் செய்திருக்கும் அதிகப்படிச் செலவுகளை ஈடு செய்யவே நான் விரும்புகிறேன். அதனால்..."

பணமா தருகிறேன் என்கிறான்? பணம் எல்லாவற்றையும் ஈடு செய்து விடுமாமா?

நளினியின் தவிப்பு கொதிப்பாக மாறியது.

அவன் பேச்சில் குறுக்கிட்டு, "அவரது பணம் இங்கே யாருக்கும் தேவையில்லை. அது இல்லாமலே இதுவரை வாழ்ந்தது போல, இனியும் நம்மால் வாழ முடியும் என்று சொல்லி, அவரை வெளியே அனுப்புங்கள், அப்பா!" என்று சீறீனாள்.

அவளை நேராகப் பாராமலே, "இது, இப்படிப் பிரிய நேர்வது, எனக்கும் மிகுந்த வேதனைதான், அங்கிள். மீண்டும், பழைய பாலைவன வாழ்க்கைக்குத் திரும்புவது எனக்கு மட்டும் மகிழ்ச்சியா? ஆனால், அவள் மேல் உள்ள அக்கறையினாலேயே, இதை விடப் பெரிய துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே, வேறு வழியில்லாமல், மனதைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்திருக்கிறேன்! பணம் பற்றிக் கூட, உங்களுக்குத் தேவை என்று நான் அதைக் கூறவில்லை. நொந்த என் மனதிற்கு ஒரு சிறு ஆறுதல் கிடைக்கக் கூடும் என்றுதான். இதற்கு மேல், நான் வேறு என்ன சொல்லட்டும்? கிளம்புகிறேன்," என்ற புவனேந்திரன் அதற்கு மேல் நில்லாமல், அங்கிருந்து போய்விட்டான்.

புவனேந்திரன் இப்படிச் சொல்லிச் சென்றது, வீட்டினர் எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.

அவர்களிலும், நளினிக்கு, ஒரு பயங்கரக் கனவை நிறுத்த முடியாமல், தொடர்ந்து கண்டு கொண்டே இருக்கும் உணர்வு.

புவனனின் அசட்டுப் பயத்தைப் போக்குவதாக எண்ணி அவள் செய்த முயற்சி, இப்படிப் பூமராங்காகத் திருப்பி அடிக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லையே.

அவள் மீது அவனுக்குள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, அந்த அன்பை இழக்க விரும்பாமல், புவனன் தன் வழிக்கு வருவான் என்று அவள் கருதியது மாறி, அந்த அன்புக்காகவே, அவளைப் பிரியத் துணிவான் என்று அவள் நினைக்கவில்லையே.

இது கனவாகத்தான் இருக்கும், அல்லது ஏதோ மனப் பிரமையோ என்றெல்லாம் கூட, அவளுக்குத் தோன்றியது.

ஆனால், அவள் ஏதோ கண்ணாடிப் பாத்திரம், உரக்கப் பேசினாலே உடைந்து விடுவாள் போலப் பார்த்துப் பார்த்துப் பெற்றோர் நடந்து கொண்ட விதம், இது கனவோ, பிரமையோ அல்ல என்றது.

வீட்டு வாயிலில் எப்போதும் இருக்கும் சக்திவேலும் அவனுடைய கூட்டாளி கண்ணனும் காணாமல் போனது, எல்லாம் நனவே என்று மேலும் உறுதிப்படுத்தியது.

சூரியன் கிழக்கே உதித்து, மேற்கே மறைவது போல, வெகு நிச்சயமான நடப்பு!

புவனேந்திரன், அவளை விட்டு, நிஜமாகவே பிரிந்து போய் விட்டான்.

எப்படி முடிந்தது?

அவளைப் பார்த்ததுமே, அவன் கண்கள் பளிச்சிட்டதும், முகம் மலர்ந்ததும், எல்லாம் பொய்யா? நடிப்பா? கனவா?

இல்லை. எல்லாமே உண்மையே!

ஆனால், எல்லாவற்றையும் விட, அவர்களது அன்பை விட, அவர்களது ஆனந்தமான எதிர்கால வாழ்வை விட அவனது பாதுகாப்புப் பைத்தியம் பெரிதாக இருந்திருக்கிறது.

அவர்களது வாழ்வில் பூரண மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும் என்று கருதி, அவள் தவிர்க்க முயன்றது, கடைசியில், அவளது வாழ்வையே அழித்து விட்டது.

மெய்யாகவே, வாழ்க்கையே அழிந்து விட்டது போலத் தான் நளினி உணர்ந்தாள்.

புவனேந்திரன் இல்லாமல் சுகமோ, சந்தோஷமோ அவளுக்கு ஏது?

இனிமேல், தன்னால் வாய்விட்டுச் சிரிக்கவே முடியாது என்று, அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

அதை விடவும், இதயம் இருந்த இடத்தில் புழுவாய் அரித்த இந்த வேதனை! அது என்றேனும் மட்டுப் படக் கூடுமா? அந்த நம்பிக்கையும் இல்லை.

புவனேந்திரனைப் பிரியவே நேர்ந்து விடும், அந்தப் பிரிவு இவ்வளவு வேதனையைத் தரும் என்று முன்பே தெரிந்திருந்தால், வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாமே!

'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல நடந்து கொள்கிறாள் என்று, அவன் முதல் நாள் சந்திப்பிலேயே சொன்னானே. அதற்கு உதாரணமாக நடந்து, மீண்டும் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொண்டாளே!

இப்படியெல்லாம் நினைத்துக் கண்ணீர் வடித்துத் தன்னைத் தானே நோகடித்துக் கொண்ட போதும், மனதாரச் சரியானது என்று ஒத்துக் கொள்ளாத ஒன்றைச் சும்மா வாய் மூடி மௌனமாக ஏற்றுக் கொள்வது, தன் இயல்பு அல்ல என்பதையும் நளினி அறிந்தே இருந்தாள்.

புவனனும், பாதுகாப்பு விஷயத்தில் இளகுகிறவன் அல்ல.

எனவே, அன்று இல்லாவிட்டாலும், சற்றுப் பின்னே எப்படியும் ஒரு நாள் இந்த வாக்குவாதமும், அதன் இந்த முடிவும் நிகழ்ந்தே இருக்கும்.

எனவே, இப்படி இருந்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்று எண்ணி மனதைப் புண்ணாக்கிக் கொள்வது மடத்தனம்!

தன்னைப் புண்ணாக்கிக் கொள்வது மட்டும் மடத்தனம் அல்ல. தன் மேல் அன்பு வைத்த பாவத்துக்காகப் பெற்றோரையும், உடன் பிறந்தவளையும் நோகடிப்பது கூட மடத்தனம் தான்.

'நான் பிளஸ் டூ, பிளஸ் டூ!' என்று எப்போதும் புத்தகமும் கையுமாகப் புருவங்களை உயர்த்திக் கொண்டு அலையும் மஞ்சரி கூட, தன் வழக்கத்துக்கு மாறாக, "கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறாயாக்கா? காபி தரட்டுமா?" என்று ஓடி ஓடி வருவது ஒருவாறு, கண்ணிலும், அதைத் தொடர்ந்து கருத்திலும் பட, நளினி தன்னைச் சமாளித்துக் கொள்ள முயற்சித்தாள்.

சும்மா விழுந்தடித்துப் படுத்திருப்பதும், படுத்துக் கொண்டு அழுவதும், இனிக் கூடாது.

குறுக்கிட்டுக் கொண்டே இருந்த புவனேந்திரன் நினைவைப் பிடிவாதமாக முயன்று ஒதுக்கியபடி, என்ன செய்வது என்று நளினி யோசித்தாள்.

'உன்னத'த்துக்குப் போய்த் தொடர்ந்து பணிபுரிவது முடியாத காரியம்.

தன் நெஞ்சில் தானே கத்தியால் திருகுவது போல, அது முட்டாள்தனமான காரியம்.

வீட்டிலும் வழக்கம் போல எந்த விதமான அலங்காரப் பூ வேலைகளைச் செய்யவும் முடியவில்லை.

அதற்குக் கற்பனா சக்தி வேலை செய்ய வேண்டும். கண்ணும் மனமும் ஒன்றி வேலை செய்ய வேண்டும். எப்போதும் கண்ணுக்குள் புவனேந்திரனை வைத்துக் கொண்டு செய்தால், ஊசி குத்திக் குத்தியே கை புண்ணாகி விடும்.

வேறு என்ன செய்வது என்று அவள் யோசித்த போது, 'உன்னத'த்திலிருந்து அவளது சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஒரு காசோலையும், வேலையைத் திறம்படச் செய்ததற்காக ஒரு நன்னடத்தைச் சான்றிதழும் வந்து சேர்ந்தன.


அங்கே தொடர்ந்து அவள் வேலை செய்வது முடியாது என்று, அவளைப் போலவே, அவனும் எண்ணியிருக்கிறான்.

யாராக இருந்தாலும், அப்படித்தான் யோசித்திருப்பார்கள் என்றாலும், நளினிக்கு என்னவோ, தன்னைப் போலவே ஒத்த மனமாகப் புவனேந்திரனும் நினைத்திருப்பதாகத் தோன்றி, அதற்கோர் அழுகை வந்தது.

ஆனால், அதுவே இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தது.

அடுத்த வேலை தேடப் போவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினாள்.

ஆனால், முழு மனதோடு, நளினி வேலை தேடினாள் என்று சொல்ல முடியாது.

ஆனால், முதல் லாபமாக, அவளது கண்ணீர் நின்றது. வெளியே கண்ட கண்ட அன்னியர்கள் பார்க்க அழ முடியாது அல்லவா? அந்த அளவுக்குச் செல்ல முடியாமல், குறைந்த பட்சமாக, அவளது உடல் உறுப்புகளுக்கேனும் ரோஷம் இருந்தது.

அத்தோடு, அவளது மூளையும் பிடிவாதமாக மற்ற விஷயங்களில் - இந்த உடையில் கழுத்து அமைப்பு நன்றாக இருக்கிறது. இது வண்ணக் கலவை சரியில்லை. இந்த உடல் அமைப்புக்கு இது போலப் பெரிய கட்டங்கள் உள்ள சேலை கட்டவே கூடாது. நீளவாக்கில் கோடுகள் வரும்படி வேலைப்பாடாவது செய்ய வேண்டும்... என்பன போன்ற அவளது வேலை தொடர்பான விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தக் கண் கரிப்பு மெல்ல மெல்ல மறைந்து போகும்.

எனவே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, கண்ணீரும், வேதனையுமாக மற்ற மூவரையும் வருத்திக் கொண்டிருந்தது மாறியது.

வீட்டிலிருந்து கிளம்பியவள், வேலை தேடினாளா, அல்லது சும்மா சுற்றியலைந்தாளா என்று சொல்வதற்கில்லைதான். அலைச்சல் ரொம்பவும் சலிப்பூட்டினால், ஏதாவது பூங்காவிற்குப் போய், அங்கே சும்மா உட்கார்ந்திருப்பதும் உண்டு. சும்மா இருப்பது புவனேந்திரன் நினைவை அதிகமாகக் கொணர்ந்தால், மீண்டும் கிளம்பி ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குப் போய் விடுவாள்.

இப்படி ஒரு குறிப்பின்றி அலைகையில் திடுமென ஒரு நாள், யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவது போல, நளினிக்குத் தோன்றியது.

என்ன இது என்று அவள் மனம் சற்றே படபடத்தது.

அவளை யார் பின் தொடரக் கூடும்?

அதுவும், புவனேந்திரன் அவளைப் பிரிந்து சென்று விட்ட இப்போது!

சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்காக, அவ்வப்போது சடக்கென்று திரும்பிப் பார்த்தால், அப்படி யாரும் அவளைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.

நாலாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.

புவனேந்திரனின் கடத்தல் பிரமை, இப்போது அவளையும் பிடித்துக் கொண்டு விட்டதா?

இந்தப் பைத்தியம் முன்பே அவளைப் பிடித்துத் தொலைத்திருந்தால், பேசாமல் அவனது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தலையாட்டி ஏற்று நிம்மதியாக இருந்திருக்கலாம் என்று தோன்றவும், அவளுக்குத் தொண்டை அடைத்தது.

நடைபாதையில் வைத்து, இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணப் போக்கு, என்று தன்னைத் தானே கடிந்தபடி, நளினி மேலே நடந்தாள்.

மறுநாள் வீட்டை விட்டு வெளியே செல்லுமுன், வாயில்புற ஜன்னல் வழியே, நளினி சுற்றுப் புறத்தை ஆராய்ந்தாள்.

முந்திய நாள் கலக்கத்தை வலியுறுத்தும்படியாக எதுவும் அவள் கண்ணில் படவில்லை... அல்லது தெரு முனைக் கடையின் அருகில் நின்று பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒருவன், பத்திரிகையைத் தாழ்த்தி, அவளது வீட்டை உற்றுப் பார்த்தானோ?



வீட்டைத்தான் பார்த்தானோ, அல்லது தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவன், அலுத்த கண்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகப் பத்திரிகையை விட்டுப் பார்வையை விலக்கியதைப் போய், அவள் தப்பாக எண்ணுகிறாளோ?

அவனை மணக்கப் போகிறவள் என்கிற நிலை மாறினாலே, நளினிக்கு ஆபத்து வராது என்பது, புவனேந்திரனின் கருத்து. அதன்படி, சக்திவேலும், கண்ணனும் அகற்றப்பட்டுப் பத்து நாட்களுக்கு மேலாகிறது.

எனவே, இது, அவளுக்கான காவல் இல்லை என்பது நிச்சயம்.

பின்னே?

மகள் முகத்தில் யோசனையைக் கண்டு, "என்னடாம்மா... கிளம்பவில்லை?" என்று சகுந்தலா வினவினாள்.

தாயிடம் எதையும் சொல்லிக் கலங்க வைக்க மனமின்றி, "ஒன்றும் இல்லையம்மா. ஒரு சேலைக்கு அலங்காரப் பூவேலை செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்," என்று பெற்றவளுக்கு ஒரு காரணம் கண்டு பிடித்துச் சொல்லியபடியே, சும்மா பார்ப்பது போன்ற பாவனையோடு கீழே பார்த்தாள்.

பத்திரிகை படித்தவன் அந்தப் பக்கம் எங்குமே கண்ணில் படவில்லை.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்கிற மாதிரி, அவளுக்கும் தோன்றத் தொடங்கி விட்டது போலும்.

சகவாச தோஷம். புவனனின் சகவாசம்.

முன் தினம் யாரோ பின் தொடர்வது போல, இன்று யாரோ வீட்டைக் கவனிப்பது போல.

இது போன்ற பிரமைகள் தான் புவனேந்திரனுக்கும் இருந்திருக்குமோ? அப்படி ஒரு துக்கமும் நேர்ந்து விட்டதால், இந்தப் பாதுகாப்பு விஷயத்தில், அவன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் போலும்!

மீண்டும் மனம் புவனேந்திரனிடம் சென்று விட்டது மட்டுமின்றி, அவனை நியாயப்படுத்தவும் தொடங்கி விட்டதையும் நளினி உணர்ந்தாள்.

ஆனால், புவனேந்திரனுக்கு இருப்பது, வெறும் பிடிவாதம் மட்டுமல்ல-வெறி, மதவெறி போலத் தீவிரமான ஒன்று.

அந்த வெறிக்குப் பணிந்து, அவன் ஒருவன் கைதி வாழ்க்கை வாழ்வது போதும்.

அவளும் அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.

அந்தப் பயத்தில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவும் கூடாது.

இந்த எண்ணத்தில்தான் உள்ளத்தில் ஆர்வமே இல்லாத போதும், நளினி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றது.

ஆனால், புவனேந்திரனின் அசட்டுப் பயம், வெறி என்று அவளால் வர்ணிக்கப்பட்டது, அன்று அவளுக்கு நடந்தது.

நளினி கடத்தப
்பட்டாள்.



Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:27 pm

கடந்த நாலைந்து நாட்களைப் போலவே, அன்றும் நளினி சில பெரிய கடைகளுக்குள் சென்று சுற்றியலைந்தாள்.

ஒரு கடையில், ஏதோ பேருக்கு ஒரு வேலை கேட்டாள்.

நளினியின் ஃபைலைப் பார்த்து ஆவலோடு, அவளது திறமை, தகுதி முதலியவற்றை விசாரித்த கடை நிர்வாகி, அவளது ஈடுபாடற்ற அரைகுறையான பதில்களில் அதிருப்தியுற்றுக் கையை விரித்து விட்டார்.

நளினியும் அதற்காகப் பெரிதாக வருந்தி விடவில்லை.

'உன்னத'த்தில் பணி புரிந்த பிறகு, அதே போன்ற இன்னோர் இடத்தில் வேலை செய்ய அவளுக்கும் மனமில்லை தான்.

ஏன், வேறு யாரிடமும், எந்த விதமான வேலை செய்யவுமே, அப்போதைக்கு அவளுக்குப் பிடிக்கவே இல்லைதான்.

இந்த வேலை தேடும் படலமே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, மற்றவர்களை வருத்துவதைத் தவிர்ப்பதற்கான சாக்காகத்தான் இருந்தது.

இந்த வருமானம் வந்துதான் வாழ வேண்டும் என்கிற நிலை இல்லாத காரணத்தால், வேலை கிடைக்காததை யாரும் பெரிதாகக் கருதவும் இல்லை.

நளினியுடைய பெற்றோருக்குமே மகள், வெளியே சென்று, நாலு பேர் முகத்தைப் பார்த்துப் புவனேந்திரனின் இழப்பை மறக்க மாட்டாளா என்பதுதான் முக்கியமாக இருந்தது.

இந்தச் சில நாட்களின் பழக்கம் போலவே, ஓரிரு பெருங்கடைகளில் ஏறி இறங்கியதும், தன் கால் போன போக்கில் நளினி நடக்கலானாள்.

மனமும் வழக்கம் போலவே, புவனேந்திரனிடம் ஓடியது.

காவல், காவல் என்று வீதிகளில் சுதந்திரமாக நடக்கக் கூட முடியவில்லையே என்று அவன் மீது எரிச்சல் பட்டாளே! இப்போது சுதந்திரமாக நடப்பது சுகமாகவா இருக்கிறது? இல்லவே, இல்லையே...

நேரே செல்ல முடியாமல், எதுவோ வழியில் தடுப்பதை உணர்ந்து, நின்று நிமிர்ந்து பார்த்தாள் நளினி.

அறிமுகமற்ற ஒரு மனிதன், கையில் ஒரு துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு, "இந்த முகவரி தெரியுமா, மேடம்?" என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

நடைபாதைகளில் கூட்டமில்லாத நேரம். ஆனாலும், அங்கொருவர், இங்கொருவர் போய்க் கொண்டு தான் இருந்தார்கள்.

அருகே நடைபாதை ஓரமாகக் கூடவே, மெல்ல நகர்ந்து வந்த காரும், அந்த அன்னியன் குறிப்பாக அவளை நிறுத்திக் கேட்ட விதமும், மனதை உறுத்த, சட்டென விழிப்புற்று, அவள் வேகமாக விலகிச் செல்ல முயன்றாள்.

ஆனால், அதே வேகத்தில் இலகுவாக அவளோடு கூட நடந்தபடி, "கவனி பெண்ணே, அந்தப் பக்கம் பார்த்தாயானால், துப்பாக்கியில் கை வைத்தபடி, எங்கள் ஆள் நிற்பது தெரியும். மறுப்பின்றி எங்களோடு இந்தக் காரில் ஏறி வந்து விட்டாயானால், உனக்குப் பிரச்சனை இராது! இல்லாவிட்டால், கை, கால், உயிர் என்று என்னவெல்லாம் போகும் என்று சொல்ல முடியாது," என்று புன்னகையோடு பேசி மிரட்டினான்.

ஆனால், அந்த மிரட்டலுக்குப் பயந்து நளினி அவன் காட்டிய காரில் ஏறி விடவில்லை. ஏனெனில், அப்படி அந்தக் காரில் ஏறிச் சென்ற பிறகு, அவள் சொன்ன எதுவும் அவளை விட்டுப் போகாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லையே!

ஆனால் அவன் காட்டிய பக்கமாக அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, உடனே தவறுணர்ந்து, அவள் அவசரமாகத் திரும்புமுன் கிடைத்த சில கணங்கள், அந்தக் கடத்தல்காரனுக்குப் போதுமானதாக இருந்தன.

மென்னியோரமாக விழுந்த அளவான சிறு தட்டில், நளினி உணர்வு மயங்கிச் சரிய, சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த ஓரிருவர் என்னவென்று எட்டிப் பார்க்கும் முன்னதாகக் கார் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளி ஏற்றிக் கொண்டு, கார் பறந்து விட்டது.

போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருந்த சமயம் என்பதால், கார் வேகமெடுப்பதற்கு வசதியாகவும் இருந்தது.

சிறு கூச்சலிடக்கூட நளினிக்கு அவகாசம் இல்லாது போக, இங்கே ஓர் அநியாயம் நடக்கிறது என்று யாருக்கும் தெரியவும் வழியே இல்லாது போயிற்று.

எனவே, புவனேந்திரனிடம் அவள் பெரிதாகச் சொன்ன பொதுமக்களின் உதவி அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

ஆகச் சில மணி நேரம் கழித்து, நளினிக்கு முழுமையாகச் சுய உணர்வு வந்த போது, அவள் கை, கால்கள் கட்டப்பட்டு, ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தாள்.

வலிக்கும் அளவுக்கு இறுக்கமாக இல்லை என்றாலும், தானாக அவிழ்த்துக் கொள்ள முடியாத கட்டுகள் என்று, உடனேயே புரிந்தது.

அவளுக்கு அறிமுகமே இல்லாத சில மனிதர்கள், அந்த அறையில் அவரவர் வசதிக்கு ஏற்ப நின்று கொண்டோ, உட்கார்ந்தோ இருந்தார்கள்!

நளினிக்கு விழுந்த அடி வலுவானது அல்ல.

மன வலிமையும், உடல் ஆரோக்கியமும் உள்ளவள் என்பதால், நளினிக்கும் விரைவிலேயே மயக்கம் தெளியத் தொடங்கிவிட்டது.

சில மணி நேரத்தில், தானாகவே தெளிந்து விடக் கூடிய அளவிலேயே, அந்தக் கடத்தல்காரன் அவனது வலுவைப் பயன்படுத்தியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.

அதனாலேயே, அவன் இந்தப் போர்க்கலையில் எவ்வளவு வல்லவன் என்பதும் புரிபட்டது. புரிந்த அளவில், அவள் மனம் சோர்ந்தது.

இதைத்தானே புவனனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னான். அப்போது அதை அசட்டுத்தனம் என்று எண்ணியதை நினைத்து, இப்போது மனம் வேதனைப் பட்டது.

ஆனால், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் அசட்டுத்தனம் தான். இப்போது என்ன செய்வது என்று யோசிப்பதில் மூளையைப் பயன்படுத்தினால், கொஞ்சமேனும் பலன் இருக்கக் கூடும் என்று யோசிக்கத் தொடங்கினாள் நளினி.

எதிரிக்கு முழுப் பலத்தைக் காட்டுவது முட்டாள்தனம். அதிலும், மயங்கித் தெளிந்து, இப்போதிருக்கும் பலவீனமான நிலையில், உறுப்புகள் வசப்படும் வரையேனும், வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது.

எனவே, அவள் உடனே கண்ணைத் திறந்து பார்த்து விடவில்லை. கண் மூடிய அதே நிலையில் இருந்தவாறே, காதுகளைப் பயன்படுத்திச் சுற்றுப் புறத்தை ஆராயத் தொடங்கினாள்.

இந்தக் கடத்தல் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது பற்றித்தான் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நிச்சயமாக முழுப் பலன் கிடைக்கும் என்பது பெரும்பான்மை அபிப்பிராயமாக இருந்தது.

ஆனாலும், "... இவள் வெறும் காதலிதானே? எத்தனையோ பேரில் ஒருத்தியாகக் கூட இருக்கலாம். இவளுக்காக, அவன், நாம் கேட்கிற பிணைத் தொகையைக் கொடுப்பானோ, என்னவோ. எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது," என்று ஒரு குரல் சந்தேகமும் பட்டது.

காதலிதானே என்று, சற்று இளப்பமாகப் பேசியது, தன்னையா? அதுவும், எத்தனையோ பேரில் ஒருத்தியாமே.

புவனேந்திரன் அப்படிப்பட்டவன் அல்ல என்று கத்த வேண்டும் போல, அவளுக்கு ஆத்திரம் வந்தது.

ஆனால், அவளது வேஷம் கலைந்து போகுமே, ஏமாற்றினாயா என்று ஆத்திரத்தில் என்னவேனும் சித்திரவதை செய்தால்?

சிரமப்பட்டு, எந்தவித மாற்றமும் இல்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு நளினி இருக்க, நல்ல வேளையாக, அவர்களில் ஒருவனே, முன்னவனை மறுத்துப் பேசினான்.


"சே, புவனேந்திரன் அப்படிப்பட்ட ஆள் இல்லையடா. ஐந்து ஆண்டுகளாகப் பெண் வாசனையே இல்லாமல் இருந்திருக்கிறான். அதனால் தான், இவளை வைத்து அவனைப் பிடிக்கும் ஐடியா வந்ததே. சரியான குரங்குப் பயல். பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை என்று இன்னொருத்தியை மணந்து கொண்டு, சும்மா இருப்பதுதானே. அதை விட்டு, நொட்டு, நொசுக்கு என்று கண்டதையும் நோண்டிக் கொண்டு. அந்த முட்டாளுக்கு உயிரை விடுவதற்கு வேறு வழியா கிடைக்கவில்லை?"

உயிரை விடுவதா? யாருடைய உயிர்? புவனேந்திரனின் உயிரா? கடவுளே!

அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல், நளினியின் முகம் மாறிவிட்டது.

அவளைக் கவனித்திருந்த யாரோ, "ஷ்... மயக்கம் தெளிகிறது," எனவும், இனி நடிப்பதில் பலனில்லை என்று உணர்ந்து, அப்போதுதான் மயக்கம் தெளிகிறவள் போன்ற பாவனையுடன், முக்கலும் முனகலுமாக நளினி மெல்லக் கண்ணைத் திறந்தாள்.

போடுகிற வேஷத்தை ஒழுங்காகப் போட வேண்டும், அல்லவா?

கண்ணைத் திறந்தவள், கண் முன்னே காண்பதை நம்ப முடியாதவள் போலக், கண்ணைக் கசக்கிக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தாற்போல, மேலும் முகத்தில் திகைப்பைக் காட்டினாள்.

திகைப்பும் பயமுமாக, "ஐயோ! நீங்களெல்லாம் யார்? என்னை... என்னை ஏன் இங்கே... கடவுளே! என்னை ஒன்றும் பண்ணி விடாதீர்கள். ப்ளீஸ்!" என்று பதறினாள்.

தன்னை என்ன செய்யப் போகிறார்களோ என்பதோடு, புவனேந்திரனின் உயிரைப் பற்றிய அச்சமும் உள்ளே நிஜமாகவே மிக அதிகமாக இருந்ததால், அவளது கலக்கம் பெருமளவு உண்மையாகவே இருந்தது. பார்த்தவர்களுக்கும் அப்படியே தோன்றிற்று.

அவர்கள் நாலு பேர் இருந்தனர். அவர்களுள் தலைவன் போலத் தோன்றியவனை மற்ற மூவரும் பார்க்க, அவன் பேசினான்.

"பாரம்மா, உனக்கும் எங்களுக்கும் இடையே ஒன்றுமே இல்லை..."

அவனது பேச்சில் குறுக்கிட்டு, "பி...பின்னே என்னை ஏன் இப்படி... இப்படிக் கடத்தி வந்திருக்கிறீர்கள்?" என்று, பாதிப் பயமும், பாதி நடிப்புமாகக் கேட்டாள் நளினி.

தன் விதியைக் காட்டிலும், புவனேந்திரனுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறதோ என்பதை அறிந்து கொள்ளும் துடிப்பு அவளுக்கு.

"பாஸ் பேசும் போது, யாரும் குறுக்கே பேசக்கூடாது," என்று அதட்டியவனின் குரலில் நளினி திகைத்து நோக்கினாள்.

அவளிடம் வழி கேட்டவனின் குரல்.

இப்போது, அவனது குறுந்தாடி காணாமல் போயிருந்தது. பதிலாகப் பெரிய மீசை முளைத்திருந்தது.

எவ்வளவு இலகுவாக வேஷம் மாறுகிறார்கள். அவளைக் கடத்தும் போது யாரேனும் பார்த்திருந்தால் கூட இப்போது அவனை அடையாளம் கண்டு, பின் தொடர்ந்து, அவளைக் கண்டு பிடிப்பது கடினம்.

அவனது கண்களும் சந்தேகத்தில் இடுங்க, "என்ன பார்க்கிறாய்?" என்று வினவினான்.

தன் மூளைத் திறனைப் பற்றி, அவர்கள் மட்டமாக நினைப்பதே நல்லது என்று நளினிக்குத் தோன்றவும், "ஓ... ஒன்றுமில்லை...உங்களில் யா...யார் பாஸ் என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதனால்தான்... அது, நீங்களா, அவரா? யார் பேசும் போது, நான் குறுக்கே பேசக்கூடாது?" என்று குரல் நடுங்க விசாரித்தாள்.

அவனது பார்வையில் இருந்த ஐயம் மறைய, "அவர்தான்," என்று முதலில் பேசியவனைச் சுட்டிக் காட்டிவிட்டு, ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் புது மீசைக்காரன்.

சும்மா பார்க்கவில்லை, சுற்றிலும் அவனது பார்வை கவனத்துடன் ஆராய்ந்தது.


இவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்கும் இவர்களிடம் இருந்து எபப்டித் தப்புவது?

மனம் சோர்வுறக் கவலையுடன் தலைவனைப் பார்த்தாள், நளினி.

"குறுக்கிடாமல் கவனி, பெண்ணே. நான் சொன்னது போல, உனக்கும் எங்களுக்கும் இடையே, நல்லது கெட்டது ஒன்றும் கிடையாது. இப்போதைக்கு, நீ எங்களுக்கு ஒரு கருவி. அவ்வளவுதான். ஆனால், அந்தப் புவனேந்திரன் விஷயம் வேறு. அவன் எங்களை நாயாகத் துரத்துகிறான். அதுவும் வேட்டை நாயாக. அவனால், எட்டுப் பேராக இருந்த நாங்கள் நாலு பேரை இழந்து விட்டோம். எப்பேர்ப்பட்ட நாலு உயிர்களைக் கொன்று விட்டான், தெரியுமா? அவர்கள் வீராதி வீரர்கள்."

அந்த வீராதி வீரர்களை மரியாதையோடு நினைவு கூர்பவன் போல, சில வினாடிகள் பேச்சை நிறுத்தினான் அவன்.

நளினியின் மனம் படபடப்புடன், படு வேகமாகவும் வேலை செய்தது.

புவனேந்திரனின் கடத்தல் பயமும், காவலும், இவர்களுக்குப் பயந்து தானா? திடீர்த் திடீரென அவன் காணாமல் போனது இவர்களை வேட்டை நாயாக விரட்டத்தானா?

ஆனால், இவன் சொல்வது போல, நாலு பேரை அவன் கொன்றிருக்க முடியுமா?

கொலை செய்வது சாதாரண விஷயம் அல்ல. அதற்குக் குரூரமான மனம் வேண்டும். அது புவனனிடம் கிடையாது. அவன் பிடிவாதக்காரனே தவிர, ஊகூம், நிச்சயமாகக் கொலைகாரனாக இருக்கவே முடியாது.

ஊகூம்... இருக்காது. அத்தோடு, அவன் எதற்காக இவர்களைத் துரத்த வேண்டும்?

எல்லாம் பொய்.

ஆனால், அவனது பாதுகாப்புப் பைத்தியம்...?

இல்லை. அது வேறு விஷயம். அது ரதிக்காக, அவளது மரணத்துக்காக. மற்றபடி, இவர்கள் கொலை கிலை என்கிறார்களே, அதற்கும், அவனுக்கும் சம்பந்தம் இராது.

எது எப்படியானாலும், புவனன் யாரையும் கொன்றிருக்க முடியாது. அது நிச்சயமாகச் சாத்தியம் அல்ல. இவர்கள், ஏதோ தவறாக எண்ணி, அவனை விரட்டுகிறார்கள். உண்மை தெரிந்தால், இந்த விரட்டல், கடத்தல், கோபம், பயம் எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய் விடக் கூடும்.

நிச்சயமாகப் போய்விடும்.

மனம் நினைத்ததையே, அவள் வாய்விட்டும் சொன்னாள். "பாருங்கள், நீங்கள் ஏதோ தவறாக எண்ணிக் கொண்டு, புவ...புவனேந்திரனைக் கொலைகாரர் என்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவர் அல்ல. ரொம்ப நல்லவர். ஒரு காக்காய், குருவிக்குக் கூடக் கெடுதல் நினைக்காத உத்தமர், அவர்!" என்றாள் அழுத்தமான குரலில்.

அவளைக் கடத்தி வந்த நால்வரும், ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது போல, மற்றவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த விதத்தில், ஏதோ தப்பாக - அவர்களுக்குச் சாதகமாக ஏதோ சொல்லி விட்டோம் என்று நளினி உணர்ந்தாள்.

என்ன அது?

"பரவாயில்லையே, அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாயே! ரொம்...பவே...!" என்று தலைவன் சொல்ல, மற்ற மூவரும் நகைத்தனர்.

குரூரம் கலந்த சிரிப்பு. அவள் நினைத்தது போலக் கொலைக்குத் தேவையான குரூரம்.

ஆனால், இப்போது ஏன் இப்படிச் சிரிக்க வேண்டும்?

உடனடியாகக் கொலை செய்யும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. பி...பின்னே?


அவள் சொன்னது பொய் என்கிறார்களா? அப்படியும் தோன்றவில்லையே.

ஒன்றும் புரியாமல், "ஏ...ஏன் சிரிக்கிறீர்கள்? நான் சொன்னதில் என்ன தப்பு?" என்று திகைப்புடன் கேட்டாள் அவள்.

மறுபடியும் சிரித்துவிட்டு, "நாங்கள் சிரித்தது, அவனைப் பற்றி இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் உன்னால், எங்கள் வேலை இலகுவாக முடியும் போலத் தெரிகிறதே என்ற மகிழ்ச்சியே. ஏனெனில், நீ மிகச் சரியாகச் சொன்னபடி, அவன் நேரடியாக யாரையும் கொல்லவில்லை. ஆனால், சாவது தவிர வேறு வழியில்லாதபடி செய்தான். அவ்வளவே. அப்புறம் என்ன கேட்டாய்? நீ சொன்னதில் தப்பென்ன என்றா? தப்பே கிடையாதும்மா. அந்தப் புவனேந்திரன், ஒரு காக்காய் குருவி என்ன, ஒரு சின்ன ஈ, எறும்பாகவே இருக்கட்டுமே, அவற்றுக்கு ஒரு சின்னக் கெடுதல் செய்வது பற்றியும் கூட, நினைத்தே பார்க்க மாட்டான். நீ சொன்னது சத்திய வாக்கு. ஏனென்றால், காக்காய், குருவி, ஈ, எறும்பையெல்லாம் கொன்று, மனைவி செத்ததற்குப் பழி வாங்க முடியுமா, என்ன?" என்று கேட்டு விட்டு, அவன் அவுட்டுச் சிரிப்பு சிரிக்க, மற்றவர்களும் அதில் கலந்து கொண்டனர்.

ரதி!

அவள் இறந்ததற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இராது என்று எண்ணினாளே. இருந்திருக்கிறது.

இவர்கள் ரதியைக் கொன்ற கொலைகாரர்கள்.

கடன் பாக்கி இருக்கிறது என்றானே, புவனன்.

அந்தக் கடன், மனைவியைக் கொன்ற இவர்களைப் பிடிப்பதுதான் போலும். இவர்களே சொன்னது போல, வேட்டை நாயாக விரட்டியிருக்க வேண்டும்.

அதை நியாயம் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்? இந்த நால்வரையும் சேர்த்துக் கொன்றால் கூடத் தப்பில்லைதான்.

ஆனால், பாதிக் கிணறு தாண்டியவன் கதையாகிப் பாதி ஜெயித்தவனின் தோல்விக்கு, அவள் அல்லவா வழி வகுத்துக் கொடுத்து விட்டாள்.

அவனது நல்லியல்புகளைப் பற்றி அவள் எடுத்துச் சொன்ன விதத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பு பற்றி, இவர்களுக்கு நன்கு தெளிவாகி விட்டது.

அதைப் பற்றித்தான், அவர்கள் நால்வரும் அவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள்.

புவனனின் அன்புக்குரியவளாக இருந்த ரதியைக் கடத்திச் சென்று, அவளை வைத்து மிரட்டி, அவனிடம் இருந்து பணத்தைப் பறித்தது போல, இப்போதும் அவனுடைய அன்புக்குரிய அவளைக் கடத்தி வந்து, மிரட்டி, அவனது உயிரைப் பறிக்கப் போகிறார்கள்.

ஏனெனில், பிரிந்தே போனாலும், அந்தப் பிரிவிற்கான அடிப்படைக் காரணம், அவள் மீது அவன் கொண்டிருந்த அளவில்லாத அன்புதானே?

அந்த அன்பு, அவனது உயிருக்கே உலை வைத்துவிடும் போல இருக்கிறதே!

நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கம
் வந்தது.



Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:30 pm


அவள் சொன்னது பொய் என்கிறார்களா? அப்படியும் தோன்றவில்லையே.

ஒன்றும் புரியாமல், "ஏ...ஏன் சிரிக்கிறீர்கள்? நான் சொன்னதில் என்ன தப்பு?" என்று திகைப்புடன் கேட்டாள் அவள்.

மறுபடியும் சிரித்துவிட்டு, "நாங்கள் சிரித்தது, அவனைப் பற்றி இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் உன்னால், எங்கள் வேலை இலகுவாக முடியும் போலத் தெரிகிறதே என்ற மகிழ்ச்சியே. ஏனெனில், நீ மிகச் சரியாகச் சொன்னபடி, அவன் நேரடியாக யாரையும் கொல்லவில்லை. ஆனால், சாவது தவிர வேறு வழியில்லாதபடி செய்தான். அவ்வளவே. அப்புறம் என்ன கேட்டாய்? நீ சொன்னதில் தப்பென்ன என்றா? தப்பே கிடையாதும்மா. அந்தப் புவனேந்திரன், ஒரு காக்காய் குருவி என்ன, ஒரு சின்ன ஈ, எறும்பாகவே இருக்கட்டுமே, அவற்றுக்கு ஒரு சின்னக் கெடுதல் செய்வது பற்றியும் கூட, நினைத்தே பார்க்க மாட்டான். நீ சொன்னது சத்திய வாக்கு. ஏனென்றால், காக்காய், குருவி, ஈ, எறும்பையெல்லாம் கொன்று, மனைவி செத்ததற்குப் பழி வாங்க முடியுமா, என்ன?" என்று கேட்டு விட்டு, அவன் அவுட்டுச் சிரிப்பு சிரிக்க, மற்றவர்களும் அதில் கலந்து கொண்டனர்.

ரதி!

அவள் இறந்ததற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இராது என்று எண்ணினாளே. இருந்திருக்கிறது.

இவர்கள் ரதியைக் கொன்ற கொலைகாரர்கள்.

கடன் பாக்கி இருக்கிறது என்றானே, புவனன்.

அந்தக் கடன், மனைவியைக் கொன்ற இவர்களைப் பிடிப்பதுதான் போலும். இவர்களே சொன்னது போல, வேட்டை நாயாக விரட்டியிருக்க வேண்டும்.

அதை நியாயம் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்? இந்த நால்வரையும் சேர்த்துக் கொன்றால் கூடத் தப்பில்லைதான்.

ஆனால், பாதிக் கிணறு தாண்டியவன் கதையாகிப் பாதி ஜெயித்தவனின் தோல்விக்கு, அவள் அல்லவா வழி வகுத்துக் கொடுத்து விட்டாள்.

அவனது நல்லியல்புகளைப் பற்றி அவள் எடுத்துச் சொன்ன விதத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பு பற்றி, இவர்களுக்கு நன்கு தெளிவாகி விட்டது.

அதைப் பற்றித்தான், அவர்கள் நால்வரும் அவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள்.

புவனனின் அன்புக்குரியவளாக இருந்த ரதியைக் கடத்திச் சென்று, அவளை வைத்து மிரட்டி, அவனிடம் இருந்து பணத்தைப் பறித்தது போல, இப்போதும் அவனுடைய அன்புக்குரிய அவளைக் கடத்தி வந்து, மிரட்டி, அவனது உயிரைப் பறிக்கப் போகிறார்கள்.

ஏனெனில், பிரிந்தே போனாலும், அந்தப் பிரிவிற்கான அடிப்படைக் காரணம், அவள் மீது அவன் கொண்டிருந்த அளவில்லாத அன்புதானே?

அந்த அன்பு, அவனது உயிருக்கே உலை வைத்துவிடும் போல இருக்கிறதே!

நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது.

ஆனால், அவனுக்கு இங்கே மரணம் காத்திருக்கிறதே.

"வரத்தான் செய்வார். ஆனால், போலீசோடு வருவார். உங்களைப் பிடித்து, ரதியின் மரணத்துக்குப் பழி வாங்க வேண்டாமா?"

காட்டுப் புலியாய் ஓரிருவர் உறும, "ஆனால் உன்னைக் கொன்று விடுவோமே!" என்றான் தலைவன்.

தொண்டையில் அடைத்ததைச் சமாளித்துக் கொண்டு, "செய்யுங்கள். இன்னொரு கொலைக்காகச் சேர்ந்து மாட்டுவீர்கள். எப்படியும் நீங்கள் மாட்டப் போவது நிச்சயம் தானே?" என்றாள் நளினி, அலட்சியம் போலக் காட்ட முயன்றபடி.

"ஏ...ய்...!" என்று கையை ஓங்கிக் கொண்டு முன்னே வந்தான் ஒருவன்.

அந்த அறை விழுந்திருந்தால், அவள் என்ன ஆகியிருப்பாளோ? கழுத்து ஒடிந்திருக்கும். அல்லது, குறைந்த பட்சமாகச் செவிப்பறை கிழிந்திருக்கும்.

ஆனால், "வேண்டாம், பொறு," என்று அவனைத் தடுத்தான் தலைவன். "இதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். எனக்கென்னவோ, இவள் இப்போது நடிக்கிறாள் என்று தான் தோன்றுகிறது. அந்தப் பயலுக்குப் போன் பண்ணாமல் இருப்பதற்காக, இப்படிக் கதை விடுகிறாள்."

"ஆனால், இவள் வீட்டோடு இருந்த காவலர்களை நீக்கியது உண்மைதானே? நாமே பார்த்து அறிந்ததுதானே? அப்புறம்தானே, இவளைப் பின் தொடர்ந்து, நாம் பிடித்து வந்தது?"

சற்றுத் தயங்கி, "உண்மைதான்..." என்று இழுத்தான் தலைவன். "ஆனால், அது நம்மைப் பிடிப்பதற்காக ஏதாவது தந்திரம் என்பதுதான், என் கருத்து. அதனால் தான், இவளைக் கடத்துவதில், இவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தது."

"ஒருவேளை, நாம் அவனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து விட்டோம் என்று தெரிந்ததும், தனக்கும் இவளுக்கும் ஒன்றும் இல்லை என்று நமக்குக் காட்டுவதற்காகப் புவனேந்திரன் திருமணத்தை முறித்திருப்பானோ என்று எனக்குச் சந்தேகம்," என்றான் இன்னொருவன்.

குழப்பம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் நிம்மதிதான். ஆனால், இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வகை அறியாமல், நளினி திகைத்தாள். ஏனெனில், அவர்கள் பேச்சில் அவளுக்குச் சாதகம், பாதகம் இரண்டுமே இருந்தது.

மதில் மேல் பூனை எந்தப் பக்கம் பாயும் என்று யார் சொல்லக் கூடும்?

அந்த வில்லன்கள் எல்லோருமாக எந்தப் பக்கம் சாயக் கூடும் என்று தெரியாததோடு, கட்டுப்பட்டுக் கிடந்த அவளது நிலைமை எப்படியும் மிக மோசமாக இருந்தது.

புவனன் மெய்யாகவே அவளைப் பிரிந்து விட்டான் என்று நம்பினாலும் கூட, அதற்காக அவர்கள், அவளைக் கட்டவிழ்த்து, நல்லபடியாக வீட்டுக்கு அனுப்பிவிடப் போவதில்லை. அதிலும், அவர்கள் நால்வரின் முகங்களையும் தெளிவாகக் கண்டுவிட்ட அவளது உயிர், எந்த வினாடியும் வானத்தில் பறக்கப் போவது நிச்சயம் தான்.

எனவே, அதைக் காப்பது பற்றி நினைத்துப் பார்ப்பது கூட நேர விரயம்.

அந்த நேரத்தில், ஏதாவது செய்து புவனனைக் காப்பாற்ற முடிந்ததானால், அது போதும். அவள் பிறந்ததன் பயனே, அப்போது கிட்டிவிடும்.

மூளையைக் கசக்கி, வேகமாக யோசித்துக் கண்களை மலர்த்தி, "நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? ஐயோ! இது தெரியாமல், அன்றிலிருந்து நான் அழுது கரைந்து, என் எடையே நாலு கிலோ குறைந்து போயிற்றே! இப்படியே சும்மா இருந்தால், வயிற்றுப்பாடு என்ன ஆகும் என்று, வேலைக்காக எத்தனை படி ஏறி இறங்கினேன், தெரியுமா? பேசாமல் வீட்டோடு கிடந்திருந்தால், உங்களை விரட்டியடித்துப் பிடித்துக் கொடுத்து விட்டு, என் புவனனே என்னைத் தேடி வந்திருப்பார் போலத் தெரிகிறதே! அத்தோடு, நானும் உங்களிடம் மாட்டிக் கொண்டு, இப்படிக் கைக்கட்டும், கால்கட்டுமாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேனே, அடடா!" என்று பெரிதாக வருத்தம் காட்டிப் புலம்பினாள்.

"ஆனால்..." என்று, உடனேயே சந்தேகம் காட்டி, "அப்படிக் கொஞ்சமேனும் அன்பு மிச்சம் இருந்திருந்தால், உங்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியிருப்பாரா? ஊம், இந்தப் பணக்காரப் பசங்கள் எல்லோரும் இப்படித்தான். பிடித்து விட்டால், ஓகோ என்று உருகுவது. பிடிக்கவில்லை என்றால் ஒரு வார்த்தையில் வெறுத்து, அப்படியே கை கழுவி விடுவது. அதுவே, அவர் விட்டுப் போனதே, எனக்குப் பெரும் வேதனை! அதற்கு மேல், விஷயம் புரியாத உங்களைப் போன்றவர்கள் பண்ணும் அநியாயம் வேறு!" என்று விசும்பினாள் அவள்.

உள்ளூர இருந்த பயமும், கலக்கமும் சேர்ந்து கொள்ளக் கண்களை அழுந்த மூடித் திறந்து, கொஞ்சம் கண்ணீரையும் கொண்டு வர முடிந்ததால், இந்த நால்வரும் நம்பும்படியாக நடித்து விட்டதாகத்தான் நளினி நினைத்தாள்.

தொடர்ந்த சில வினாடி நேர அமைதியில், அந்த வன்முறையாளர்களின் ஆராய்ச்சிப் பார்வையைத் தாங்கவும் அவளால் முடிந்தது.

"இவள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்குமோ பாஸ்?" என்று ஒருவன் கேட்க, "அவளை அவிழ்த்து விடு!" என்று தலைவன் சொல்லவும், வியப்பும் மகிழ்ச்சியுமாக, அவள் மனம் துள்ளிக் குதித்தது.

"பாஸ், இவள் சொன்னது பொய்யாக இருந்தால்?" என்று கேட்டவாறே, தயக்கத்துடன் அவர்களுள் இன்னொருவன் அவளை நெருங்கினான்.

அவளைக் கொண்டு வந்த புது மீசைக்காரன் அவன் என்பதைக் கண்ட நளினிக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது.

ஏனெனில், அவன் போர்க் கலைகள் தெரிந்தவன். சட்டென்று செயல்படுகிறவன். எனவே, தட்டு, வெட்டு என்று எதையாவது படபடவென்று செய்து திகைக்க வைத்துவிட்டு அவனிடம் இருந்து தப்பி ஓடுவது கடினம்.

தப்பி ஓடுவது பற்றி, நளினி எண்ணமிடுகையிலேயே, "இவள் ஏதாவது தில்லு முல்லு செய்தால், பட்டென்று மண்டையிலேயே போடுவதற்குத் தயாராகத் தடிக் கம்புடன் இவளுக்குப் பின்புறமாக நில்லுங்கள். என்னப்பா, சீக்கிரமாகக் கட்டை அவிழ்க்கிறாயா? இவளது பேச்சு உண்மையா, பொய்யா என்று, இப்போது பார்த்து விடலாம்," என்றான் தலைவன்.

எப்படித் தெரியும்? என்ன செய்யப் போகிறான்?

இவ்வளவு நேரம் பேசிய பாணியைக் கைவிட்டு, தடிக்கம்பு, மண்டையில் போடுவது என்றெல்லாம் சொல்கிறானே!

அவசரப்பட்டு அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்து, கட்டவிழ்த்த பிறகும், நளினி நாற்காலியில் இருந்து எழக்கூட இல்லை. அப்படியே அமர்ந்து, ஒரே நிலையில் இருந்த கை கால்களைத் தளர விட்டபடி, கூட்டத் தலைவனைப் பார்த்தாள்.

"கெட்டிக்காரி. அப்படியே இரு!" என்று விட்டு ஓர் ஓரமாகக் கிடந்த சாக்குப் பையிலிருந்து, ஒரு செல்போனைத் தேடி எடுத்து வந்தான் அவன். "புவனேந்திரன் நம்பரைப் போட்டுத் தருகிறேன். அவனை ஃபைலுடன் இங்கே வரச் சொல்லு."

உள்ளூரத் திகைத்த போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "எனக்காக அவர் வர மாட்டார் என்றேனே!" என்றாள் நளினி, வருத்தப் பாவனையையே தொடர்ந்து.

"அதையும் தான் பார்ப்போமே! அவன் வந்தாலும், வராவிட்டாலும், அது உனக்கு லாபமாகத்தான் முடியும். எங்கள் கருத்துப்படி, அவன் வந்தான் என்றால், நீ அவனோடு சேர்ந்து போகலாம். அப்படி அந்த ராஸ்கல் வராவிட்டால், நீ சொன்னது உண்மை என்று ஆகும். அப்போது, உன்னைக் கடத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, நாங்களே உன்னைத் தனியாக அனுப்பி வைத்து விடுவோம். அதனால், எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்பதில் உனக்கு என்ன பிரச்சனை, சொல்லு."

அவன் ஏதோ விட் அடித்து விட்டாற் போல, எல்லோரும் சேர்ந்து சிரிக்கக் காரணம் புரிந்து, நளினிக்கு வாய் உலர்ந்தது.

அவளைப் பரலோகத்துக்கு அனுப்பி வைப்பது பற்றியல்லவா, அவர்களுடைய தலைவன் பேசுகிறான். அவர்களுக்குச் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

இப்போது அவள் வகையாக மாட்டிக் கொண்டாளே!

இவ்வளவு புத்தி இல்லாமலா, இவர்கள் இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் எல்லாம் செய்ய முடியும்?

இப்போது போன் பண்ண மறுத்தால், அவள் சொன்னது அத்தனையும் பொய் என்று உடனேயே தெளிவாகிவிடும். அதற்காக வேறு, அவளை என்ன மாதிரிக் கொடுமைகள் செய்வார்களோ?

ஆனால், அந்தக் கொடுமைகளுக்குப் பயந்து போன் பண்ணினாலோ, புவனேந்திரன் நிச்சயம் வந்து விடுவான். இந்த அரக்கர்கள் அவனை அழிக்காமல் விட மாட்டார்கள்.

சட்டென ஒன்று அவள் மனதில் பட்டது.

எப்படியும், அவளது சாவு உறுதிதானே! அதைத்தானே, 'அனுப்பி வைப்பதாக'ச் சொல்லி அவர்கள் விலா வெடிக்கச் சிரித்தது.

புவனன் வந்தால், அவனோடு அல்லது தனியாகவேனும் அவளைச் சாகடித்து விடுவது என்பது, இவர்களது முடிவு. இங்கே, இவர்கள் முடிவுதான் நடக்க முடியும்.

எப்படியும் அவள் சாகத்தான் வேண்டும் என்றால், தனியாகச் சாவதே மேல் அல்லவா?

அதிலும், புவனனைக் காப்பதில் சாவது என்றால், அந்தச் சாவுக்கே பெருமைதான்.

அவனோடு சேர்ந்து வாழ முடியாது போகிறதே என்று நெஞ்சை அடைத்துக் கொண்டு வரத்தான் செய்தது. ஆனால், அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இது நேரம் அல்ல.

சுருள முயன்ற முதுகுத் தண்டை நிமிர்த்தி அமர்ந்து, "என்னால் முடியாது. உனக்குத் தேவை என்றால், நீயே புவனனுக்கு போன் செய்து கொள்!" என்றாள் அமர்த்தலாக.

ஆனால், கொத்தாக அவளது கூந்தலைப் பிடித்துத் தூக்கி, அவளை அவன் நிறுத்திய விதத்தில், வலியால் நளினியின் கண்களில் நீர் சுரந்தது.

எட்டி உதைப்பதற்கு வழியின்றி, அந்தத் தலைவன் எச்சரிக்கையோடு நின்றான். மற்ற மூவரும் கூட, அவளைத் தாக்குவதற்குத் தயாராகவே இருந்தார்கள்.

"கிண்டலாடீ? அவன் நம்ப மாட்டான் என்று, உனக்குத் தெரியாது? உன் குரல் அவனுக்குக் கேட்கா விட்டால், நீ எங்கள் வசம் இருப்பதையே, அவன் நம்பப் போவதில்லை. அதிலும் உயிரோடு இருக்கிறாய் என்று, நிச்சயமாக நம்பமாட்டான். ஒரு மடத்தனத்தை, இரண்டாம் முறை செய்து ஏமாற, அவன் ஒன்றும் முட்டாள் அல்ல என்பது, எங்களுக்குத் தெரியும்."

கடவுளே! என்னவோ, அவளே கேட்டால்தான் கவனமாக புவனனே ஃபைலை எடுத்து வருவான், அது இது என்று கதை விட்டானே. கடைசியில், இதுவா விஷயம்?

ரதியைக் கொன்ற பிறகும், அவளைக் கொன்று விடப் போவதாக மிரட்டியே புவனனிடம் பல லட்சங்கள் பறித்தார்களே. அப்போது, இருபத்தோரு வயது இளைஞனாக இருந்த புவனனும், ரதி உயிரோடு இருப்பதாக நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தான்.

ஆனால், இன்றையப் புவனனை அப்படி ஏமாற்ற முடியாது.

தன்னை இவர்கள் முன்பே கொல்லாததன் காரணம் நளினிக்கு இப்போது புரிந்தது. நல்ல விதமாகப் பேசியதன் காரணமும்.

இப்போது புவனனைப் பிடிப்பதற்கு, இவர்களுக்கு அவளது குரல் தேவைப்படுகிறது. அதாவது, அவனைப் பிடிக்கும் வரை, அவளது குரலுக்காக வேனும், அவளைக் கொல்ல மாட்டார்கள்.

ஆனால், தன் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்பதை விடவும், இதில் புவனனைக் காப்பாற்ற ஒரு வழி கிடைத்ததை எண்ணியே, நளினிக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது.

அவனுடன் பேச மாட்டேன் என்று, அவள் பிடிவாதமாக இருந்துவிட்டால், இவர்களால் புவனனை நெருங்க முடியாது.

என்ன, சில பல உதைகள், சித்திரவதைகள் தாங்க வேண்டியிருக்கும். அவ்வளவுதானே? தாங்கிக் கொண்டால் போகிறது.

எனவே, தலைநிமிர்ந்து, "என்ன ஆனாலும், புவனனுக்கு நான் போன் செய்யப் போவது இல்லை. அவரை இங்கே வரவழைக்கப் போவதும் இல்லை," என்றாள் அவள்.

அடி உதைகளை எதிர்பார்த்துதான் நளினி இதைச் சொன்னது.

ஆனால், இந்தத் துறையில் தாங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று அவர்கள், மறுபடியும் அவளுக்கு நிரூபித்தார்கள்.

ஆத்திரத்தில் முகம் சிவக்க, "அவனை நீ என்னடி வரவழைப்பது? இந்த போனில் உன் கதறலைக் கேட்டு, அவனே இங்கே ஓடி வரப் போகிறான். அவனுக்கு, நீ அழைப்பதை விட, நீ உயிரோடு இருக்கிறாய் என்பதற்கான ஆதாரம் தான் தேவை. உன் அலறலும், கதறலும் அதற்குப் போதும்," என்று அவளிடம் சொல்லிவிட்டுத் தன் கூட்டாளிகளைப் பார்த்தான், குழுத் தலைவன்.

பார்வையிலேயே அவனது மனதை அறிந்தவர்கள் போல, இருவர் அவளது கரங்களை இறுகப் பற்றினார்கள்.

"இவள் சாதாரண அடி உதைக்கெல்லாம், வாயைத் திறக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். ஆனால்..." என்று ஒரு குரூரத்துடன் அவளை நோக்கி, "நாங்கள் நாலு பேர் வக்கிரம் பிடித்த நாலு ஆண்கள். நீ ஒரு பெண். எங்களால் உன்னை என்னென்ன மாதிரிக் கேவலப்படுத்திக் கதற வைக்க முடியும் தெரியுமா?" என்று அவன் மிரட்டுகையில் நளினிக்குச் சட்டென ரதியின் நினைவு வந்தது.

'காட்டுப் பூனை போல அலறியடித்துக் கடித்துப் பிராண்டி ஆர்ப்பாட்டம்' செய்தாள் என்று ரதியைப் பற்றிச் சொன்னானே! இப்படித்தானே, அவளையும் மிரட்டியிருப்பார்கள். இருபத்திரண்டு வயதில் தனக்கே வயிறு கலங்கும் போது, பாவம்! உலகம் அறியாத பதினெட்டு வயதுச் சின்னப் பெண் ரதி எப்படி அரண்டு போயிருப்பாள். அதில் பதறியடித்து கண்மண் தெரியாமல் ஓடி, சிக்கி, விடுபடத் துடித்து, கடித்து, பிராண்டி, ஒன்றும் பலனின்றி... கடவுளே! என்ன பரிதாபம்.

"...அப்போது நீ அலறுவதைக் கேட்டு அந்தப் பயல் புவனன், அவனாக இங்கே ஓடோடி வருகிறானா இல்லையா என்று நீயே பார்," என்று, அவளை மேலும் மிரள வைத்து விட்டு, செல்லில் புவனேந்திரன் செல் எண்களை அழுத்தினான், அந்தப் படுபாவி.

எதிர்ப்புறத்தில், புவனேந்திரன் போனை எடுத்திருக்க வேண்டும்.

பேசுவது யார் என்றும் கேட்டிருக்க வேண்டும்.

"எல்லாம் உன் பங்காளி தான், தம்பி! உனக்குப் பிரியமான பொண்ணு எங்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் இங்கே எங்களிடம் படுகிற கஷ்டம் என்ன என்று உனக்குத் தெரிய வேண்டாமா? செல்லைக் காதில் வைத்தபடி, அமைதியாக ஓர் ஐந்து நிமிஷங்கள் கேட்டுக் கொண்டிரு. அப்புறமாக, அவளைத் திரும்பப் பெறுவதற்காக நீ என்ன செய்ய வேண்டும் என்று, நான் உனக்குச் சொல்லுகிறேன்," என்று அவனிடம் கூறிவிட்டு, நளினியிடம் திரும்பினான் அந்த அரக்கர் குழுத் தலைவன்.

பதறக்கூடாது. ரதியைப் போல நிலையிழப்பது, இவர்களுக்கு எக்காளமாக இருக்கும்.

பூனை எலியைப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வது போல, இந்த மாதிரி வக்கிரங்களுக்கு, அது உற்சாகமான பொழுது போக்காக இருக்கும்! அதற்கு இடம் தராமல், முடிந்தவரை, இவர்களுக்கு வலி, வேதனை உண்டாக்க வேண்டும்.

கைகளை அசைக்க முடியாத நிலை, ஆனால், எவனாவது அருகில் நெருங்கினால், காலால் எட்டி உதைத்து, அவன் ஒருவன் இடுப்பையாவது உடைத்து விட வேண்டும் என்று நளினி திட்டமிட்ட போது, "ஐந்து நிமிஷங்கள் அமைதியாகக் கேட்பது எதற்கு? நேரிலேயே பார்க்க, நான் தான் இங்கேயே வந்து விட்டேனே!" என்ற குரலில் பிரமித்துத் திரும்பிப் பார்த்தால், அங்கே வாயில் அருகே புவனேந்திரன் நின்றிருந்தான்.

எல்லோருக்குமே பிரமிப்புதான்!

ஆனால், "ஐயோ!" என்று, ரதியைப் போலவே, அரண்டு மிரண்டு, நிலையிழந்து போனாள் நளினி. ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரர்களிடம், புவனேந்திரன் மாட்டிக் கொண்டான் என்பது மட்டும்தான் அவளுக்குப் புரிந்தது.

ஓர் அசுர பலத்துடன், தன் கைகளைப் பற்றியிருந்தவர்களிடம் இருந்து, தன்னை விடுவித்துக் கொண்டு, ஓடியே போய், புவனேந்திரனை மறைத்தாற் போலக் கைகளை விரித்துக் கொண்டு அவன் முன்னே போய் நின்றாள். "அவரை ஒன்றும் செய்யாதே! முதலில் என்னைக் கொன்று விட்டு, அவரிடம் போ! ஐயோ, அதற்குள் நீங்கள் ஓடி விடுங்களேன்," என்று கதறிப் பதற
ினாள்.






Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:35 pm

இந்தப் பொல்லாத அரக்கர்களிடம் புவனேந்திரன் மாட்டிக் கொண்டு விட்டான் என்பது ஒன்று தவிர, நளினிக்கு வேறு எதுவுமே கண்ணிலோ கருத்திலோ படுவதாகவே இல்லை.

அவளை அணைத்துப் புவனேந்திரன் ஏதோ சொல்ல முயன்றதையும் கூட, அவளால் கவனிக்க முடியவில்லை.

அறைக்குள் இருந்த நால்வரும், எந்த வினாடியில் புவனேந்திரன் மீது பாய்வார்களோ என்ற ஒரே பயத்தில் அவர்கள் மீதே பார்வையைப் பதித்தபடி, "நீங்கள் ஓடிப் போய்விடுங்கள். உங்களைக் கொல்வதுதான் இவர்களது முக்கியத் திட்டம். நான் இவர்களைச் சில நிமிஷங்கள், எப்படியாவது தடுத்து நிறுத்துகிறேன். அதற்குள், நீங்கள் தப்பி ஓடி விடுங்கள். புவன்! ப்ளீஸ். எனக்காகப் பாராதீர்கள். போங்கள்! போங்கள்! தயவு பண்ணிப் போங்களேன்!" என்று, அவனது பிடியிலிருந்து விடுபடத் துடித்ததோடு, அவனைப் பின்புறமாகத் தள்ளவும் முயற்சித்தாள்.

"ஷ்! ஷ், நளினிமா, கண்மணி! கொஞ்சம் அமைதிப் படுத்திக் கொள். இனி ஒன்றும் பயமில்லை," என்று புவனேந்திரன் சொன்னது, அவள் காதுகளில் விழவே இல்லை.

ஆனால், அறையின் உள்ளே இருந்தவர்கள், கையில் அகப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, அவனைத் தாக்குவதற்காக இன்னும் ஏன் ஓடி வரவில்லை?

மாறாக எல்லோரும், தடிக்கம்பை வைத்துக் கொண்டு இருந்தவன் கூட, அதையும் கீழே போட்டு விட்டு, ஏன் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்க வேண்டும்?

ஏன்?

ஒன்றும் புரியாமல் அவள் திகைப்புடன் விழித்த போது, அவளைத் தன்புறம் திருப்பி, லேசாக அணைத்தவாறு, வாயில் வழியிலிருந்து, ஒரு புறமாக ஒதுங்கி நின்றான் புவனேந்திரன்.

வழி கிடைத்ததும், போலீஸ் உடையில் நிறையப் பேர், அந்தக் குடிசைக்குள் செல்வதையும், வன்முறைக் கும்பலுக்கு விலங்கு மாட்டுவதையும், விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கண் சிமிட்டக் கூடத் தோன்றவில்லை.

அவ்வளவு பிரமிப்பு!

இதெல்லாம் எப்படி நடந்தது?

இன்ன இடத்துக்கு, இப்படி வா என்று புவனனிடம், அந்தக் கொலைகாரன் சொல்லவே இல்லையே.

புவனேந்திரனுடன், அவன் பேசிச் சில வினாடிகளுக்குள், இவன் இங்கே வந்தது எப்படிச் சாத்தியப்பட்டது? எப்படி முடிந்தது?

அத்தோடு, இத்தனை போலீஸ்காரர்கள் ஓசைப்படாமல் இங்கே எப்படி வந்தார்கள்?

நளினிக்கு எத்தனையோ கேள்விகள்.

ஆனால், புவனனுக்கு ஆபத்தில்லை என்பதே எல்லையற்ற ஆறுதலைத் தர, சூழ இருப்போரைப் பற்றிய நினைவே இல்லாமல், அவன் தோள் வளைவில் சாய்ந்தபடி நின்றாள்.

கடத்தல் கும்பல் நால்வரையும் கைது செய்து வெளியே கொண்டு வருகையில், போலீஸ் ஜீப் ஒன்று, உறுமிக் கொண்டு வந்து நின்றது.

ஜீப்பைத் தூர நிறுத்திவிட்டு, காவலர்கள் எல்லோரும் சத்தமின்றி வந்து, அந்தப் பாழடைந்த வீட்டைச் சூழ்ந்திருக்கிறார்கள்! கண்டபடி வளர்ந்திருந்த காட்டுச் செடி கொடிகளும், மரங்களும், அவர்கள் ஒளிந்து மறைந்து வர வழி வகுத்திருக்கின்றன.

ஆக, ஒரு விஷயம் - போலீஸ்காரர்கள் எப்படி வந்தார்கள் என்பது தெளிவாயிற்று.

ஆனால், மற்றது?

அவளைக் கூட, எச்சரிக்கையோடு கைப்பற்றியதாக, அந்தக் கடத்தல் குழுத் தலைவன் சொன்னானே! சக்திவேல், கண்ணன் போல யாரும் தன்னைப் பின் தொடர்ந்து, அவளும் பார்க்கவில்லையே!

பின்னே எப்படி?


ஆனால், எதைப் பற்றியும் தீவிரமாகக் கேட்டறியும் ஆர்வம் கூட அவளுக்கு வரவில்லை.

கடந்த சில மணி நேரமாக அனுபவித்த மன உளைச்சலுக்குப் பிறகு, புவனனின் அருகாமை தவிர, வேறு எதையும் நினைக்கக் கூட, அவளுக்குப் பிடிக்கவில்லை! தோன்றவுமில்லை!

பேசாமல், அவனையும், அவளையும் தனியே விட்டு விட்டு, எல்லோரும் இங்கிருந்து போய் விட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்.

ஆனால், அவளது மனநிலை புரியாமல், போலீஸ் அதிகாரி ஒருவர் அவர்கள் அருகே வந்தார்.

"வாழ்த்துக்கள் புவனேந்திரன்! ஐந்து ஆண்டுகள் அயராது பாடுபட்டு, இந்த வன்முறைக் கும்பலைப் பிடித்து விட்டீர்கள். இனி, நிம்மதியாக இருங்கள். இவர்கள் தான் வருங்காலத் திருமதி புவனேந்திரனா? அதிர்ஷ்டக்காரர் நீங்கள். இப்போதே, உங்கள் மீது, உயிரை வைத்திருக்கிறார்களே! அருமையான மண வாழ்வுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!" என்று முறுவலித்தார்.

அதே போல, இன்னோர் அதிகாரியும் வந்து, ஆங்கிலத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். அவரும், 'இனி நிம்மதியாக இருங்கள்!' என்று முன்னவரைப் போலவே சொன்னார்.

"இவர் குஜராத்தில் பெரிய அதிகாரி. முதலிலிருந்து இந்தக் குழுவைப் பிடிப்பதில் உதவி செய்து வருகிறவர். அந்தக் குழு சென்னைக்கு வந்ததில் இருந்து, இந்த அதிகாரியும் சேர்ந்து முழு மூச்சாக உதவி செய்தார்," என்று அதிகாரிகள் இருவரையும் புவனேந்திரன் நளினிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அவர்கள் மூவருமாகப் பேசியதைக் கவனிக்கையில், நளினிக்கு இன்னொரு முடிச்சு அவிழ்ந்தது.

புவனேந்திரன், அவ்வப்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் சென்ற விவகாரம்.

வேட்டை நாயாகத் துரத்தியதாக அந்த வில்லன் தலைவன் சொன்னானே, மோப்பம் பிடித்து, மோப்பம் பிடித்து, அவர்களைத் துரத்திப் பிடிக்கத்தான் சென்றிருக்கிறான்!

"அவர்களில் நாலு பேரை, நீங்கள்... உங்களால் அவர்கள் செத்ததாகச் சொன்னார்கள்..." என்றாள் அவள் மெல்லிய குரலில்.

யோசனையாகப் பார்த்துவிட்டு, குஜராத் அதிகாரி சொன்னார், "ஒரு வகையில், அவர்கள் சொன்னது நிஜம். ஆனால், அவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரவே, புவனேந்திரன் முயன்றார். தப்பிக்க முடியாதபோது, எட்டாம் மாடியிலிருந்து குதித்தும், சயனைட் கடித்தும், தங்களுக்குள்ளேயே சுட்டுக் கொண்டும், அவர்களாகவே செத்தார்கள்," என்று விளக்கினார்.

"எப்படியோ, பிரச்சனை சரியான விதமாக முடிந்தது. இனி, இந்தச் சள்ளையெல்லாம் மறந்து சந்தோஷமாக இருங்கள்," என்று கூறி, இரு அதிகாரிகளும் விடைபெற்றுச் சென்றனர்.

புவனனோடு காரில் திரும்பி வரும்போது, நளினி, தன் குழப்பத்தைச் சொன்னாள். "நீங்கள் எப்படி என்னைத் தொடர்ந்து வந்தீர்கள், புவனன்? அவர்கள் வெகு எச்சரிக்கையோடு என்னைக் கடத்தியதாகச் சொன்னார்களே! நீங்கள் சக்திவேல், கண்ணனையும் விலக்கி விட்டிருந்தீர்கள். பிறகெப்படி உங்களுக்கு விஷயம் தெரிந்தது?" என்று விவரம் கேட்டாள்.

"வெளிப்படையான பாதுகாப்பைத்தான் நான் விலக்கியிருந்தேனம்மா. ஆனால், உன்னைப் பாதுகாப்பின்றி, வினாடி கூட, நான் விடவே இல்லை. இவர்களை நான் விடாமல் தொடர்ந்ததால், பாதிப்பேரை அழித்து விட்டதால், இவர்கள் என்னை அழிக்க முயற்சிப்பார்கள் என்று எனக்கு நிச்சயம். இவர்களின் வழி என்ன? 'பிணைக்கைதி' பிடித்துக் காரியம் சாதிப்பதுதானே, கை வந்த கலை? இவர்களைப் பொறுத்தவரையில், இந்தப் பயம் எனக்கு எப்போதும் இருந்தது.

"கோகுலை அனுப்பி விட்டு ஒதுங்க முயன்றேனே, நினைவிருக்கிறதா? என் நெருக்கம் உனக்கு ஆபத்தாக முடியலாம் என்பதுதான், அப்போதே எனக்கு முக்கியக் காரணமாக இருந்தது.


"பிறகு, நாம் பிரிவது என்று முடிவு செய்தேனே, அன்று, இந்தக் குழுவினர் சென்னைக்கு வந்து விட்டதாக எனக்குத் தகவல் வந்திருந்தது. உனக்குப் பாதுகாப்பை அதிகரிக்கலாம் என்று வந்தால், உன்னை ஆளையே காணோம்," என்றவன். அவளது கையை இறுகப் பற்றி, "அன்று என்னமாகக் கலங்கித் தவித்துப் போனேன், தெரியுமா?" என்ற போது, அவனது குரல் கரகரத்துக் கனத்தது.

பற்றியிருந்த கையைத் தன் மறுகரத்தால் அவள் அழுத்தச் சட்டென, அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன்.

"புவன்!" என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள் நளினி.

"என்ன?"

"நாம் கொஞ்ச நேரம்... வந்து, இதையெல்லாம் தனியே இருந்து பேசுவோமா?"

அவளை விடுவித்து விட்டு, டிரைவரிடம், "வீட்டுக்குப் போப்பா!" என்றான் புவனேந்திரன்.

கூடவே, செல்லை எடுத்து நீட்ட, அதை வாங்கி, வீடு திரும்பச் சற்றுத் தாமதம் ஆகும் என்று தாயிடம் தெரிவித்தாள் நளினி.

அவன் முறுவலிக்கவும், வாய்ச் சொற்கள் அவசியமே படாமல், ஒருவர் மனதை ஒருவர் சரியாக உணர்ந்து செயல்படுவதை, உள்ளூர வியப்புடன் உணர்ந்தாள் அவள்.

புவனேந்திரனின் செல்லில் பேசுவதாகச் சொன்னபின், என்ன, எங்கே என்று சகுந்தலா எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

உயரமான சுற்று மதில், வாயில் காவலர்கள், நாய்கள், கிரில் அடைத்த சுற்று வராண்டா, காவலர் உடையையும், கிரில் அமைப்பையும் சற்று மாற்றி விட்டால், பழைய காலத்து அரண்மனைதான்!

இந்த மனநிலை எப்போதேனும் மாறக் கூடுமா?

கவனம் இருக்க வேண்டியதுதான். ஆனால்...

தனியறைக்குச் சென்றதும், "அப்புறம்?" என்று கேட்டாள் அவள்.

"அதை அவ்வளவு தூரத்தில் இருந்து கேட்டால் எப்படிச் சொல்வது?" என்று கண்ணில் சிரிப்புடன் கேட்டான் புவனன்.

பிகு பண்ணாமல் புன்னகையோடு அருகில் வந்தவளை உட்கார வைத்துத் தானும் அருகமர்ந்து, விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.

"ஆனால், உனக்கு வரக்கூடிய ஆபத்து, அதற்குத் தேவையான பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவம் பற்றிச் சொன்னாலும் உனக்குப் புரியவில்லை. அடிப்படை புரிந்தால்தானே, அதற்கு மேல் விஷயத்தை விளக்கிப் புரிய வைக்க முடியும்? புரிந்து கொள்ளப் பிடிக்காததுதான் பெரும் அபாயமாக இருந்தது. நெருங்கி வந்துவிட்ட கொடியவர்களிடம் இருந்து, உன்னைக் காப்பது பெரிய பிரச்சனையாகக் கண் முன்னே நின்றது. அவர்கள் எப்பேர்ப்பட்ட கொடுமைக்காரர்கள் என்று நேரடியாக அறிந்திருந்ததால், பாதுகாப்பின்றி, உன்னை ஒரு வினாடிக் காலம் சும்மா விடவும் எனக்கு மனமில்லை. எனவே, செக்யூரிட்டி நிறுவனமும், நானும் சேர்ந்து, அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தோம்.

"உனக்குக் காவலாக, ஒருவரையோ, இருவரையோ மட்டுமாக வைக்கவில்லை! அங்கங்கே ஆட்கள், ஒருவர் கண்ணுக்கு நீ மறைகிற போது, செல்லில் அடுத்தவருக்குத் தகவல் போய்விடும். அங்கிருந்து அடுத்த ஆள்! அடுத்த வாகனம்! தொடர்வதாகத் தோன்றாதபடியே, முன்னும் பின்னுமாகத் தொடர்ந்து பாதுகாத்தார்கள்."

"ஆனால், செலவு நிறைய ஆகியிருக்குமே!"

அவளது முகத்தை ஏந்தி, அவன் சொன்னான், "எவ்வளவு ஆனாலும், அதைவிட, நீ முக்கியம் அல்லவா?"

விழிகளில் லேசாக நீர்த் திரையிட, "அப்புறம்?" என்று கேட்டாள் நளினி. "இந்தப் படையினர் இவ்வளவு கவனமாக இருந்ததால்தான், அந்தக் கடத்தல் கும்பலுக்கும், இவர்களைக் கண்டு கொள்ள முடியவில்லை போல!" என்றாள் அவள் வியப்புடன்.

"ஆனால், நாலே பேராகிவிட்டிருந்த அவர்களை, நம் ஆட்கள் கண்டு கொண்டனர். விஷயம் தெரிந்ததும், இன்னொரு திட்டம் போட்டோம். அவர்களைப் பிடித்து உள்ளே போடுவது மட்டும் தான் உன்னை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வழியாகத் தோன்றிற்று. எனவே, உன்னைக் கடத்திச் செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு இடம் கொடுத்தோம். அதே சமயம், உனக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக, 'முன்னைப் போல, நான் ஏமாற மாட்டேன்! பிணை, கிணை என்று எனக்கு வேண்டிய யாரையும் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டினால், கடைசி வரை என் ஆட்களே என்னிடம் தொடர்பு கொண்டால் ஒழிய நம்ப மாட்டேன் என்று நான் சொன்னதாக, அவர்கள் காது கேட்கப் பேச வைத்தேன். கடத்தியதும், உடனே அறிந்து, அங்கங்கே ஒவ்வொரு திசையில் இருந்தும் ஆட்கள் சேர்ந்து, அங்கே வந்து சேர்ந்தோம்."

"அந்தக் கும்பலின் மனோபாவம் தெரிந்து செய்திருக்கிறீர்கள்," என்று மேலும் வியந்தாள் நளினி.

"பின்னே?" என்றான் அவன். "இந்த சுமார் ஐந்தரை ஆண்டுகளாக, அவர்களைத் துரத்துவதுதானே, தொழிலை விடவும், என் முக்கிய வேலையாக இருந்தது. துரத்திப் பிடித்து, ரதிக்குக் கடன் தீர்ப்பது! அவளது மரணக் கடனைத் தீர்த்து விட்டேன்! ஆனால்..." என்று வேதனையோடு பெருமூச்சு விட்டான் அவன்.

ரதியின் நினைவு!

இதில், நளினி என்ன வகையில் ஆறுதல் சொல்ல முடியும்?

பரிதாபத்துக்குரிய அந்தச் சிறு பெண்ணை நினைக்கையில், அவளுக்கே பரிதாபமாகத்தான் இருந்தது.

கூடவே, புவனேந்திரன் வேதனைப் படுவது பொறுக்க முடியாமல், அவன் முதுகை ஆறுதலாக மெல்ல வருடி விட்டாள் அவள்.

மீண்டும் ஒரு பெருமூச்சுடன், புவனனே தொடர்ந்து பேசினான். "என் குற்ற உணர்ச்சி. அதுதான் தாங்க முடியவில்லை. ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு சின்னப் பெண்! என்னவோ அவளைச் சிறப்பாக வாழ வைப்பதாக எண்ணிக் கொண்டு, அவளை மணந்து, அவளைப் பலி கொடுத்து விட்டேன். என்னை மணக்காமல் இருந்திருந்தால், இன்றைக்குக் கூட, எங்கோ அவள் உயிரோடு வாழ்ந்திருக்கக் கூடுமே என்று அதுதான் மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது! வாழ வேண்டிய ஒரு சின்னப் பெண்ணின் அகாலச் சாவுக்கு நான் காரணம் ஆனேனே!" என்று, தன் மனதை மறையாமல் சொன்னான் புவனன்.

"ஐயோ, அது அப்படியில்லை, புவனன்!" என்று தொடங்கி, கடத்தல் குழுத் தலைவன் கூறியதை, அப்படியே சொன்னாள் நளினி. "அவர்கள் செய்த கொலையை, ரதி பார்த்து விட்டாள் என்று அவளைக் கொல்வதற்காகத்தான், அவர்கள் அவளைக் கடத்திச் சென்றது. அதன்படி செய்தும் விட்டார்கள். ஆனால், உங்களிடம் பணம் பறிப்பதே, பிறகு தோன்றிய ஐடியாதான். சரியாகச் சொல்வதானால், ரதியின் வாழ்வு எப்படியும் முடிந்திருக்கும்! ஆனால், அவளது கடைசி நாட்களில், நீங்கள் அவளுக்குச் சொர்க்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று தெளிவாக விளக்கினாள்.

சற்று நேரம் புவனன் ஒன்றுமே பேசவில்லை.

பிறகு, நளினியின் கைகளைத் தன் கரங்களில் எடுத்து, "என் கண்மணி...!" என்று, அந்தக் கைகளில் முகம் புதைத்து, அப்படியே அமர்ந்திருந்தான்.

கைகளில் ஈரம் உணர்ந்த போதும், என்ன சொல்வது என்று புரியாமல், நளினியும் அசையாமலே உட்கார்ந்திருந்தாள்.

உடலை நடுக்கிச் சென்ற ஒரு மிக நீண்ட பெருமூச்சின் பின், புவனன் மெல்ல நிமிர்ந்தான்.

"பிணக் கிடங்கில் ரதியின் முகத்தைப் பார்த்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அதை நினையாமல் நான் தூங்கியது இல்லை நளினிம்மா! அதன் காரணம் நான், நான் என்று, என்னமாய்த் தவித்திருக்கிறேன்... அப்படியில்லை என்று தெரியும் போது, கடவுளே, எப்பேர்ப்பட்ட விடுதலை உணர்ச்சியை எனக்குத் தந்திருக்கிறாய், தெரியுமா? வாழ வேண்டிய வயதில், ஒரு சின்னப் பெண் உயிரை இழந்தாளே என்று, இப்போதும் பரிதாபம் தான்! ஆனால், அதன் காரணம் நான் இல்லை என்று அறியும் போது... அவளது கடைசி நாட்களைச் சந்தோஷமாகக் கழிக்க உதவினேன் என்பது, எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது, தெரியுமா? நளினி, நீ இன்று என்னை மீண்டும் முழு மனிதன் ஆக்கி விட்டாய், கண்ணம்மா! அதற்காக உனக்கு நான் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். சொல்லு. உனக்கு என்ன வேண்டும்? ஒன்றும் வேண்டாம் என்று சொல்லக் கூடாது! ஏதாவது, கட்டாயம் நீ கேட்டே ஆக வேண்டும்."


சில கணங்கள் மௌனமாக இருந்தவளுக்கு, வீட்டினுள் வரும்போது எண்ணியது நினைவு வந்தது.

அவன் முகத்தைப் பார்த்து, "விஷயமே வேறு என்று ஆனதால், இந்தப் பாதுகாப்புப் பிரமை மாறக் கூடும் அல்லவா, புவனன்?" என்று கேட்டாள் அவள்.

"ஓ!" என்று எழுந்தான் புவனேந்திரன்.

இருமுறை குறுக்கும் நெடுக்குமாக நடந்துவிட்டு, "இப்படி யோசி, நளினி. அங்கங்கே ஆட்களைப் பிடித்துப் போய்ப் பணம் பறிப்பதாய்ப் பத்திரிகையில் படிக்கிறோம் தானே? இனிப் பயம் இல்லை என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அதன் பிறகு, அந்த மாதிரியான நிலை நமக்கு நேர்ந்தால், எப்படி இருக்கும், சொல்லு!" என்று கேட்டான் அவன்.

கண்ராவியாகத்தான் இருக்கும். ஆனால், இப்படிக் கூடவே வைத்துக் கொண்டு அலைவதும்... அதுவும் கண்ராவியாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

நளினி பேசாமல் அமர்ந்திருக்கவும், மேலும் இருதரம் அறையை அளந்துவிட்டு, அவள் அருகே வந்து அமர்ந்தான் அவன்.

"ஓகே! உன் எண்ணமும் எனக்குப் புரிகிறது. அதனால், ஒன்று செய்யலாம். வீடு, தொழில் இடங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கட்டும். அத்தோடு, எலக்ட்ரானிக் கருவிகளையும் பொருத்திக் கொள்வோம். இவை போக, நன்கு பழக்கப்பட்ட நாய்கள் வாங்கித் தருகிறேன், எப்போதும், ஒன்றை அருகே வைத்துக் கொள்வோம். இது கூட வேண்டாம் என்று சொல்லிவிடாதேம்மா! ப்ளீஸ்..." என்றான் புவனன் கெஞ்சுதலாக.

தன்னை மீறிச் சிரிப்பு வந்தது நளினிக்கு.

"ம்ம்ம்..." என்று புன்னகையோடு அவள் யோசிக்க, "புரிகிறது, புரிகிறது..." என்று அவசரமாகக் குறுக்கிட்டான் அவன்.

"அந்த ஓர் அறைக்குள் மட்டும், நம்மைத் தவிர வேறு எந்தப் பிராணியையும், காவலுக்காகக் கூட, நானே விட மாட்டேன், கண்மணி! இது உறுதி!" என்று அவன் சூளுரைக்க, அவள் முகம் செந்தாமரையாய்ச் சிவந்து மலர்ந்தது.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: இனி எல்லாமே நீயல்லவோ...   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:46 pm

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!

காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.

பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!

'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!

என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!

பிணம் தின்னிக் கழுகுகள்!

புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?

மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!

ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!

லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.

இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!

மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!

அறை திறந்தே இருந்தது!

உள்ளே அவளும் இருந்தாள்!

அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!

காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.

எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!

அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!

அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.

'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.

கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!

கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!

இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!


சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!

ஆனால், இன்று என்ன ஆயிற்று?

பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!

செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.

"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.

படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?

ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!

அல்லது...

"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"

அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...

"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.

வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"

"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."

"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!

"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."

"ஐயோ!"

சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.

வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?

"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."

"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"

"அவளைப் பார்க்கப் போவதற்கா? கவனி, டீப்! இப்போதைக்கு மீடியாவிடம், எந்தவிதக் குறுக்கீடும் இல்லாமல் தனியாக இருந்து, கதை வசனம் எழுதப் போயிருப்பதாக ஒரு கதை சொல்லியிருக்கிறேன்! அது, அப்படியே இருக்கட்டும்! உன்னிடம் கேட்டாலும், கவனம் சிதறாமல் இருப்பதற்காகத் தனிமை நாடிப் போனதாகச் சொல்லி விடு! அதற்காகவே, போன் எண் கொடுக்கவில்லை. செல் கொண்டு போகவில்லை என்றும்! இருக்கும் இடம் சொல்லு. என் காரில், உன் டிரைவரோடு வருகிறேன். நீ போன காரை, டிரைவரிடம் கொடுத்துவிட்டு, என் காரில் மருத்துவமனைக்குப் போகலாம்!"

அவனுடைய ஏஜண்ட் எலிசா கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு, செல்லை, அந்தப் பெண்ணிடம் நீட்டினான். அவன்!

அவள் கண்ணில் அதிக ஆர்வம் இருந்ததோ?

செல்லை அவளிடம் கொடாமல் நிறுத்தி, அதை ஆராய்ந்தான். எலிசாவுடன் அவன் பேசியது, பதிவாகி இருந்தது! கூடவே, அவனும் அவளுமாக ஒரு போட்டோ! ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு, டீ.வி.க்குக் கொடுத்தால், ஏகப்பட்ட பணம் கிடைக்குமே!

உதட்டைப் பிதுக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அனைத்தையும் அழித்து, அவள் கையில் கொடுத்தான்!

முகம் கன்றி நின்ற அவளிடம், மேலும் சில நோட்டுகளைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு, வரவேற்பில் அமர்ந்து, எலிசாவுக்காகக் காத்திருக்கலானான்.

அவன் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை!

யு.எஸ். சாலைகளில், தூரம் ஒரு பொருட்டல்ல!

ஆயினும், காத்திருந்த அந்த நேரத்தில், அவனது மனம் தவியாய்த் தவித்துவிட்டது!

மித்ராவுக்குத் தாயின் அரவணைப்பு கிடைத்ததில்லை!

சும்மா ஒரு கதை எழுதி, நண்பர்களாக நடிக்கப் போய், அதை ஒரு பெரிய டைரக்டர் பார்த்துத் திரைப்படம் ஆக்க ஏற்பாடு செய்தார்! கதையில் இருந்து மாறுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவனை, அவர் கூடவே வைத்துக் கொண்டது!

ஆனால், டைரக்டர் திடீரென நோயுறவும், ஸ்டுடியோடிவில் அவனையே இயக்கச் சொன்னார்கள்!

படம், பெரும் வெற்றி!

தொடர்ந்த வளர்ச்சியில், சென்ற ஆண்டு ஆஸ்காரே கிடைத்தது!

முதலில் அவனுக்குத் திடீர்ப் புகழ் கிடைத்த போது, ஒட்டிக் கொண்டவள், மித்ராவுடைய தாய்! அந்த வயது, சூழ்நிலையில், அவனுக்கும் தப்பாகத் தெரியவில்லை! கர்ப்பம் என்றதும் திருமணமும், தன் போக்கில் நடந்ததுதான்!

மித்ரா பிறந்தாள்! அதே சமயம், அவனது இரண்டாவது படமும் பெருவெற்றி பெற்ற பிறகுதான், மனைவியாக இருப்பவளின் உண்மை உருவம், அவனுக்குத் தெரிய வந்தது!

அவளுக்கு நடிக்க ஆசை! தன்னைப் பெரிய கதாநாயகி ஆக்குவது, கணவனான அவனது கடமை என்றாள்.

நடிகைக்குரிய எதுவுமே அவளிடம் இல்லை என்று அவன் ஒரேயடியாக மறுக்கவும், பணமாவது கொடு என்று, விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டாள்!

அவள் பணம் கேட்டதை விட, அவனுக்குப் பெரிய அதிர்ச்சி என்ன என்றால், தன் குழந்தை என்பதே இல்லாமல், மித்ராவை விட்டுவிட்டுப் போய்விட்டதுதான்!

அவள் திட்டமிட்டிருந்த எதிர்காலத்துக்குக் குழந்தை இருப்பது சரிப்படாதாம்!

பெற்ற குழந்தையை விடுவது எப்படி முடியும் என்று சில நேரம், அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்! அதாவது, எப்போதாவது ஓய்வு கிடைத்து, தன் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கிற போது, இப்படி ஆச்சரியப்படுவான்!

இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால், நாமும், பெற்று வளர்த்தவர்களை விட்டு, ஆண்டுக் கணக்கில் பிரிந்து தானே இருக்கிறோம் என்று தோன்றும்!

அந்த உறுத்தல் அதிகமாகி, இருமுறை தாய்நாட்டுக்குப் போயிருக்கிறான்!

ஒரு தடவை, மித்ராவைக் கூட, அழைத்துப் போயிருக்கிறான்!

ஆனால், போய் இரண்டே நாட்களில், இங்கிருக்கும் வேலைப் பளு பற்றி, அவனுடைய ஏஜண்ட் எலிசா போன் பண்ணுவாள்!

உடனே, விழுந்தடித்துக் கொண்டு, திரும்பி விடுவான்!
தாயாருக்கு, அது பற்றி வருத்தமும், கோபமும் இருந்தது என்பது அவனுக்குத் தெரியும்!

அதிலும், படிக்க வந்ததை விடுத்து, இன்னொன்றில் ஈடுபட்டு, திருமணம், ரத்து என்று இந்த வாழ்வுக்குப் பழகிப் போனது பற்றி, ரொம்பவே எரிச்சல் தான்!

ஆனால், இந்தப் பணம் சம்பாதிக்க, அங்கே எத்தனை பிறவி எடுக்க வேண்டியிருக்கும்?

சொன்னால், அன்னைக்குப் புரியவில்லை என்பதில், அவனுக்கும் எரிச்சல்தான்!

குழந்தை வளர்கிற முறை சரியில்லை என்று ஒரு வாதம்! சும்மா, அவனைத் திருப்பி வரவழைப்பதற்காக ஒரு சப்பைக் கட்டுதான்!

மற்றபடி, இங்கே மித்ராவுக்கு என்ன குறை?

நீச்சல் குளத்துடன் கூடிய பெரிய வீடு! அவளுக்காகத் தனி நர்சரி! அறைகள்! அவற்றில், அவளுக்குத் தேவையான அனைத்தும்! பொறுப்பான 'ஹவுஸ் கீப்பர்!'

இதற்கும் மேலாகச் சில நாட்களில், மித்ராவை, எலிசா அவள் வீட்டுக்கு அழைத்துப் போவாள். நாள் முழுவதும், அவளுடைய பிள்ளைகளோடு விளையாடிவிட்டுத் திரும்புவாள்.

அங்கே போவது என்றாலே, மித்ராவுக்குக் குஷிதான்!

இதற்கு மேலாக, ஒரு நாலு வயதுச் சிறுமிக்கு என்ன வேண்டும்?

பஞ்சடைத்த ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு, அதற்கு ஜேடி என்று பெயர் வைத்து, வீட்டில் அவள் விளையாடுவதைப் பார்க்கையில், அவனுக்கு வேடிக்கையாக இருக்கும்!

வேறு விலை உயர்ந்த ரோபோ மாடல் பொம்மைகளை வாங்கிக் கொடுத்தாலும், மித்ராவுக்கு இந்தப் பொம்மை மீதுதான் பிரியம் அதிகம்!

அதை ஒரு குழந்தை போலக் கொஞ்சுவது, அவ்வப் போது கண்ணில் படும்.

பெண் குழந்தைகளுக்கே உரித்தான தாய்மை உணர்ச்சி என்று அவன் எண்ணமிடும் போதே, அவளுடைய தாயின் நினைவு இடிக்கும்!

அவள் பெண்ணில்லையா? தாய் என்று நினைக்கக் கூடப் பிடிக்கவில்லை என்றாளே!

ஒருவேளை, தனிமை உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள குழந்தை, இந்தப் பொம்மையைப் பயன்படுத்துகிறாளோ என்று, இப்போது உட்கார்ந்து யோசிக்கும் போது, அவனுக்குத் தோன்றிற்று!

தனிமை உணர்வால்தான், உடனொத்த பிள்ளைகள் வீடுகளுக்கு, இப்படித் துடித்துக் கொண்டு ஓடுகிறாளோ?

இந்தப் பிறந்த நாள் பற்றி, மித்ரா பலமுறை ஆர்வமாக, அவனிடம் சொல்ல வந்தது, அப்போது அவனுக்கு நினைவு வந்தது!

வாழ்த்துக் கார்டு வாங்க வேண்டும்! பரிசு வாங்க வேண்டும்! அங்கே யாரோ நான்சி வருவாள்... மிச்சி வருவான்... இன்னும் யார் யாரோ!

"ஹவுஸ்கீப்பரிடம் சொல்லு" என்றவன், அதற்கு மேல் வெறுமனே 'ஊம்' கொட்டியபடி, சில முக்கியமான குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தது... மித்ராவின் பேச்சு நின்று போனதும், இப்போது ஞாபகம் வந்தது!

தந்தையின் கவனம் தன்னிடம் இல்லை என்று பேச்சை நிறுத்தியிருப்பாளோ? சே!

நெஞ்சு சுட்டது அவனுக்கு! அவளை விட எது முக்கியம்?

இனிக் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்!

தாயின் அரவணைப்பு தான் இல்லை! தந்தையும், யாரோ போல, அவ்வப்போது எட்டிப் பார்ப்பதோடு விட்டு விட்டால் எப்படி?

கூடாது! இனிமேல், தாயுமானவனாக இருந்து, அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்!

கடவுளே! அதற்கு, அவள் நல்லபடியாகப் பிழைத்து எழ வேண்டும்!

இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை, பிழைத்து விடுவாள் என்று எலிசா சொன்னாள் தான்! ஆனால், அப்படிச் சொன்னதில் இருந்தே, உயிருக்கு ஆபத்தான நிலையும் இருந்தது என்று அர்த்தமாகவில்லையா?

முழுக்க ஆபத்து நீங்கியிருக்குமா?

காட்! இந்த எலிசா எப்போது வந்து சேருவாள்?

கண்களோடு, முக அடையாளத்தையும் மறைத்த கறுப்புக் கண்ணாடி, தூக்கிவிட்ட கோட் காலரோடு, பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அவன் காத்திருந்தான்!

எலிசா காரோட்டியோடு வந்ததும், அவனது காரை, எலிசாவின் டிரைவரிடம் கொடுத்துவிட்டு, எலிசாவின் காரில், அவன் கிளம்பினான்.

முதலிலேயே கேட்டுவிட்ட போதும், கார் கிளம்பியதும், மீண்டும் ஒரு தரம், மகளது உடல்நிலை பற்றி, அவன் விசாரித்தான்.

"சொன்னேனே, டீப்! கார் பக்கவாட்டில் பட்டு, அவளைத் தூக்கி எறிந்து விட்டது. விழுந்த வேகத்தில், சில எலும்பு முறிவுகள்! அதிர்ச்சி வேறு! இரவில் உன்னைத் தேடினாள் போல! அக்கறையற்ற தகப்பனாக நீ தோன்றுவது, உன் புகழைக் கெடுத்துவிடும்! அடுத்த பட வசூலையும் கெடுக்கக் கூடும்! அதனால், நீ மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்... என்ன பார்க்கிறாய்? ஓ, இந்தப் போஸ் சரிதானா என்றா? ரொம்ப சரி! டைரக்டர் நீ. உனக்கு, இன்னொருவர் கற்றுத் தர வேண்டுமா?" என்று, முதல் தடவையாக, அவனுள் இருந்த வேதனையை உணர முடியாமல் பேசினாள் எலிசா.

ஆனால், அவளையும் குற்றம் சொல்லுவதற்கு இல்லை!

மனைவி பிரிந்த போது, 'விட்டது தொல்லை' என்பது போலச் சாதாரணமாக இருந்தவன் தானே? அந்த மனைவி பெற்ற பிள்ளையிடம் மட்டும் என்ன, பெரிய பாசம் வந்து விடும் என்று எண்ணியிருப்பாள்!

எலிசாவின் கவலையெல்லாம், மீடியா அவனைத் தவறாகச் சித்தரித்து விடக் கூடாது!

இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றபடி இருந்தாலும், அவனது படங்களில், உள்ளூர ஓர் ஒழுக்கம், நியாயம் இருக்கும்! அதைத் தருகிறவன் கெட்டவனோ என்று ரசிகர்களுக்குத் தோன்றிவிடக் கூடாது! தோன்றினால், அவனது படங்களைப் பார்க்கும் ஆவலும் குறைந்து போய் விடக் கூடும்! எனவே, அந்த நிலை வர விட்டுவிடக் கூடாது!

அவளது கருத்தில் இருப்பது, இதுதான்!

இந்த அக்கறை, அவனுக்காக மட்டுமானது அல்ல!

அவனது வருமானத்தில் பத்து சதவீதம் பெறும் ஏஜண்ட் அவள்! அவனது வருமானம் கூடக் கூடத்தானே, அவளுக்கும் லாபம்?

இன்னும் சில சினிமாத் துறையினரின் ஏஜண்டாக அவள் செயல்பட்டாலும், அவன் வழி கிடைப்பதுதான் பெருந்தொகை! அதற்காகவே...

தலையை உலுக்கிக் கொண்டான் அவன்!

மனம் சரியில்லாமல் இருப்பதால், இப்படியெல்லாம் தோன்றுகிறது போலும்! மற்றபடி, அவனை இந்த நிலைக்கு உயர்த்துவதற்கு, எலிசாவும் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறாள் என்பது, அவனும் அறிந்ததே!

முதல் படத்து டைரக்டர் தொடக்கத்திலேயே நோய்வாய்ப்பட்ட போது, இவனைக் கொண்டே படத்தை முடிக்கலாம் என்று மற்றவர்களை ஒப்ப வைப்பதற்கு, எவ்வளவு வேலை செய்தாள்!

புறம் திரும்பி, "என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினான் அவன்!

"சாலையோரத்து காஸ் ஸ்டேஷன் ஒன்றில், ஒரு காபி மட்டும் குடித்துக் கொள். ஷேவ் பண்ண வேண்டாம்! யார் என்ன கேட்டாலும், இடையூறின்றிக் கதை 'ஸ்கிரிப்ட்' தயார் பண்ணப் போனதாக, அதையே திருப்பித் திருப்பிச் சொல்லு! எங்கே என்பது வேண்டாம்! கூடவே இருந்து, நானும் கவனித்துக் கொள்கிறேன்!"

"சரி."


"மேலே எதுவும் கிளறினால், 'நோ கமென்ட்ஸ்' என்று விடு."

"சரி!"

"வரும் காலத்தில், இப்படி எதுவும் என்றால், என்னோடு தொடர்பு கொள்ளும்படி, உன் 'ஹவுஸ்கீப்'பரிடம் சொல்லி வை! சத்தமின்றிச் செய்ய வேண்டிய வேலையை, ஊரறியச் செய்து விட்டாள்!"

ஹவுஸ்கீப்பர் நல்ல பெண்மணி! வீட்டை முழுதும் அவள் பொறுப்பில் விட்டுவிட்டு, அவன் கவலையற்றிருந்தான்!

எலிசா, ஹவுஸ்கீப்பரைக் குற்றம் சொன்னது, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால், அவள் சொன்னதிலும் தப்பில்லைதான்!

ஓசையற்றுச் செய்திருக்க வேண்டிய வேலை!

அவன் இல்லாத நேரத்தில், பிள்ளைக்குப் பெரிதாக ஒன்று என்றதும் பதறிப் போயிருப்பாள்!

ஆனால், அதையெல்லாம் சொல்லி, எலிசாவிடம் வாதாட மனமற்று, வெறுமனே தலையாட்டி வைத்தான் அவன்!

ஓரளவு, அவன் எதிர்பார்த்தது தான்! விவாகரத்தின் போது எதிர் கொண்டதுதானே?

ஆனால், ஆஸ்காரின் விளைவோ, என்னவோ, பன்மடங்கு அதிகமாகி இருந்தது!

காமிரா ஃப்ளாஷ்களின் கண்ணைக் குருடாக்கும் ஒளி வெள்ளம்! முண்டியடித்தபடி கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு, படை அரணாய் அவனை நெருங்கிய ரிப்போர்ட்டர்கள் கூட்டம்!

அவர்களுக்குள்ளே புகுந்து, மருத்துவமனைக்குள் செல்ல முயன்றான் அவன்!

முன்னும் பின்னுமாக அட்டையாக ஒட்டிக் கொண்டு... அவன் அதைப் பெரிதாகக் கருதவில்லை! இதை விடக் கொஞ்சம் சின்ன அளவில் என்றாலும், ஐந்தாண்டுகளாக அன்றாடம் அனுபவிப்பதுதானே!

ஆனால், அவர்கள் கேட்ட கேள்விகள்!

இப்படி ஓர் அவசரத்துக்குக் கூட அணுக முடியாமல், ரகசியமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

மகளின் விபத்து பற்றிச் சரியாக எத்தனை மணிக்குத் தெரியும்?

தெரிந்த போது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆபத்தான நிலைமையாமே! பிழைப்பாள் என்று தோன்றுகிறதா? பிழைக்காவிட்டால், எப்படி இருக்கும்?

இந்த மாதிரி நிலைமையில், மகள் கூட இருக்க முடியாமல் போகக் காரணம் என்ன? இனி இந்தத் தொழிலில் இருந்து விலகி விடுவீர்களா?

விலகிய பிறகு, என்ன செய்யப் போகிறீர்கள்?

மித்ராவின் நிலைமைக்கு, என்ன காரணம்?

ஆஸ்கார் கிடைக்காத ஆத்திரத்தில், யாரோ முக்கியமானவர்கள் செய்திருப்பதாக எண்ணுகிறீர்களா? அவர்கள் பெயர் சொல்ல முடியுமா?

அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்?

மனைவியோடு, என்ன தகராறில் பிரிந்தீர்கள்?

இந்த விபத்தைப் பயன்படுத்தி, மனைவியோடு சேர்வீர்களா... மனைவி வேறு யாரோடும் வாழ்கிறாளா? விட்டுவிட்டு வருவாளா?

வராவிட்டால், மகளோடு, தாய்நாட்டுக்கே போய் விடுவீர்களா?

அவனை மூட்டை கட்டிக் கடலுக்கு அடியில் புதைக்காத குறை!


ஆத்திரத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதைப் பிடித்துக் கொண்டு, பிலுபிலுவென்று உலுக்குவார்கள்!

யாரிடமும் கை நீட்டிவிடக் கூடாது என்று மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, பிடிவாதமான இறுகலுடன், அதிகம் நெருங்கியவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறி, ஒருவாறு மருத்துவமனைக்குள் சென்றான் அவன்.

"பொறுங்கள், ஜென்டில்மேன்! டீப் அதிர்ச்சியுற்றிருக்கிறார்! மகளைப் பற்றிய கவலை சற்றுக் குறைந்ததும், உங்களைச் சந்தித்து, எல்லா விவரமும் சொல்வார்!" என்று பத்திரிகை, டீ.வி. ரிப்போர்ட்டர்களைச் சமாதானப்படுத்திவிட்டு, எலிசா அவனிடம் ஓடி வந்தாள்!

"'நோ கமென்ட்ஸ்' சொல்லு என்றேனே! மீடியாவிடம் பதமாக நடக்க வேண்டாமா? மகளைப் பற்றிய அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்து வைத்திருக்கிறேன்! வா!" என்று, மித்ராவுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றாள்.

உயிருக்கு ஆபத்து நீங்கி விட்டது என்று, நல்ல சேதியை முதலில் தெரிவித்து விட்டு, "ஐசியுவில் இருந்து மித்ராவை வார்டுக்கு மாற்றி விடலாம். ஆனால், உங்களைப் போன்ற பிரபலங்கள் வந்து போவது, மருத்துவ வார்டு சூழ்நிலையைப் பாதிக்கக் கூடும்! கொஞ்சம் தனிமை காப்பதாக, தனிப்பட்ட வார்டு ஒன்று இருக்கிறது! உங்கள் மகளை, அங்கே மாற்றலாமா?" என்று கேட்டார் வைத்தியர்.

"இன்னும் தனியாக..." என்று தொடங்கியவனை இடையிட்டு, "இப்போதைக்கு, அவளுக்கு மருத்துவக் கண்காணிப்பு அதிகம் தேவை, மிஸ்டர் டீப்! பிரத்தியேக வார்டில் இருப்பது, அவளுக்கு நல்லது!" என்றார் மருத்துவர்!

மாற்றத்துக்கான பணம் கட்டுவது போன்ற வேலைகளைக் கவனிப்பதற்காக எலிசாவை அனுப்பிவிட்டு, அவள் சென்றதும், "டாக்டர், உண்மையைச் சொல்லுங்கள்! என் மித்ராவுக்கு மெய்யாகவே, இனி எந்த ஆபத்தும் இல்லைதானே? இந்த விபத்தின் பின் விளைவாக, வேறு எதுவும் வந்து விடாதே!" என்று கவலையுடன் கேட்டான் அவன்!

தன்னை மீறி, அவன் குரல் கரகரத்தது!

கூர்ந்து நோக்கிவிட்டு, "எல்லாச் சோதனையும் செய்தாயிற்று, மிஸ்டர் டீப்! பின் விளைவாக எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம் இல்லை! ஆனால், இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீங்கள், அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட நேற்றைய இரவில் எங்கே போனீர்கள்? சின்னக் குழந்தைப் பருவத்திலேயே, மித்ராவுடைய தாயார் பிரிந்து போய் விட்டதாகக் கேள்விப்பட்டேன்! அவளே, அன்னையைத் தேடவே இல்லை! ஆனால், பின்னிரவில் மயக்கம் தெளிந்து, வலியும், ஏக்கமுமாக, அப்பா, அப்பா என்று அவள் புலம்பிய போது, நீங்கள் அருகில் இருந்திருந்தால், அப்போதே, சில மணி நேரம் முன்பாகவே, குழந்தை திடப்பட்டிருக்கக் கூடும்!" என்றார் வைத்தியர்!

அந்த நேரத்தில்...

இடையூறு வரக்கூடாது, என்று, அந்தப் பெண்னின் செல்லைக் கூட வாங்கி, அணைத்து வைத்தது, அவனுக்கு வலியுடன் நினைவு வந்தது!

வலி மட்டுமல்ல! குன்றலோடும்!

அவனது ஆறடி உயரம் அரையடியாகக் குறுகிவிட்ட உணர்வு!

விடிகாலையில் எப்போதோ அவள் எழுந்து போட்டோவை எடுத்துவிட்டு, செல்லையும் 'ஆன்' பண்ணியே வைத்திருக்கிறாள்! யாருடைய அழைப்பையும் எதிர்பார்த்திருந்தாளோ என்னவோ? இந்த மாதிரித் தொழிலுக்கு, நேரம் காலம் ஏது?

ஒரு வகையில் அவளது திருட்டுத்தனமும் நல்லதாயிற்று! அல்லது, விபத்து பற்றிய விவரம், அவனுக்கு இன்னமும் தெரிந்திராது!

என்ன கேவலம்!

கேவலம் அவனது நடத்தையில்! மகள் இங்கே உயிருக்குப் போராடுகையில், அவன் சே!

இன்று வரை, தப்பாக நினைத்திராதது, இன்று வேறு மாதிரித் தெரிந்தது!

பத்திரிகையாளர் தொல்லைக்காக மட்டும் தானே, அவன் ரகசியம் காத்தது?

ஆனால், நடந்ததில் தப்பில்லை என்றால், இப்போது இந்த டாக்டரிடம் ஏன் சொல்ல முடியவில்லை?

நடந்த உன்மை மட்டும் வெளியே தெரிந்தால், எல்லோரும், அவனை என்ன நினைப்பார்கள்?

நல்லவேளை! அப்படி எதுவும் நேராமல், எலிசா காப்பாற்றினாள்!

படுக்கையில் கிடந்த மகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கையில் அவனுக்கு என்னென்னவோ தோன்றிற்று!

இந்த வயதில், அவன் எப்படியெப்படி வளர்ந்தான் என்பது நினைவு வந்தது!

விளையாடும் போது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டு அழுத போது, "விளையாட்டில் பட்டதற்கெல்லாம் அழக்கூடாதும்மா!" என்றவாறே தலையைத் திருப்பித் தன் கண்ணைத் துடைத்துக் கொண்ட, தாயின் நினைவு!

கதை சொன்னபடி, வலிக்காமல் ஊசி போட்ட தந்தை!

காயம் நன்றாக ஆறி, தோல் நிறம் மாறும் வரைக் கவனித்த விதம்!

வெறும் சிராய்ப்புக்கே இந்தப் பாடு! அவனுடைய மகள் மறுபிறவி எடுக்கையில், அவன் அந்தப் பகுதியிலேயே இல்லை!

பிரத்தியேக வார்டு, ஸ்பெஷல் அறை என்று மித்ரா மாற, மாற, அவன் மருத்துவமனையே கதியென்று கிடந்தான்!

"பாசமுள்ள தந்தையாக, உன்னைப் பற்றிய செய்திகள் பிரமாதம்! மித்ரா வீட்டுக்கு வரும்வரை, பல்லைக் கடித்துக் கொண்டு, இப்படியே இருந்து விடு!" என்றாள் பூங்கொத்துடன் வந்த எலிசா.

மகளை மெல்ல நடக்க வைத்துக் கொண்டிருந்த அவன், எலிசாவை விசித்திரமாகப் பார்த்தான்!

அவனுக்குப் பல்லைக் கடித்துப் பொறுக்க வேண்டிய அவசியம் இருக்கவே இல்லையே! அந்தச் சின்ன உருவத்துக்கு உதவியும் பணிவிடைகளும் செய்து, அவனுக்குச் சுகமாக அல்லவா இருக்கிறது!

"மருத்துவமனையில் இருந்து, மித்ரா திரும்பி வரும் வரைதான்! அதுவரை இதே விதமான போஸிலேயே இருந்து விட்டால் போதும்! அதுவே, அடுத்த படத்துக்கு அருமையான முன் விளம்பரம் போல ஆகிவிடும்! மித்ரா குணமாகி வீட்டுக்கு வந்துவிட்டால், அப்புறம், நீ பழைய மாதிரியே இருந்து கொள்ளலாம்! நல்ல வேளையாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தான் நடக்கின்றன!"

அவனுள் ஓர் எண்ணம் தலைதூக்கியது!

யோசனையில் இருந்தவனை, வீடு திரும்பிய மறுநாள், குணமடைந்து வந்ததற்காக, மித்ராவை வாழ்த்துவதாக வந்த டெலிபோன் கால் முடிவெடுக்க வைத்தது!

குழந்தைக் குரலில் வாழ்த்திவிட்டு, அப்பா பழகும் ஆன்ட்டிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் ஒருவன்!

யார், யார் வீட்டுக்கு வருவார்கள்? யார் யாரை அப்பா வெளியே கூட்டிப் போவார்? அன்றைக்கு, அவளுக்கு அடிபட்ட போது கூட, அப்பா, அப்படி எந்த ஆன்ட்டியுடனோ தான் போயிருந்தாரா?

மகளின் ஓரிரு பதில்களிலேயே, இன்னோர் இணைப்பைக் காதில் வைத்த தந்தைக்கு விஷயம் புரிந்து போயிற்று!

பரபரப்பான செய்தி வேண்டும்! அது, மட்ட ரகமாக இருந்தால், ரொம்பவே நல்லது! இப்போது, அதற்கான வாய்ப்பு ஒன்று இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

அதைப் பெறுவதற்காக, இந்தச் சிறு குழந்தையைக் கூட விடுவதாக இல்லை!


ஆனால், அந்தக் குழிக்குள், மகளை இழுத்துவிட, அவன் தயாரில்லை! அப்புறம், அவள் வெளியே எங்கேயும் போகவே முடியாது!

இந்தப் பிரச்சினை முடிந்து, மறக்கும் வரையேனும்...

"நீ இப்படி, இந்தச் சூழ்நிலையில், போட்டது போட்டபடி விட்டுவிட்டுக் கிளம்பினால் எப்படி, டீப்?" என்று தொடங்கி, அவனது இந்தியப் பயணத்தைத் தடுக்க, எலிசா எவ்வளவோ முயன்றாள்.

எப்போதுமே, அவன் இந்தியாவுக்குக் கிளம்புகையில், அவள் இப்படி ஏதாவது சொல்வது வழக்கம் தான்! ஓரிரு முறை, பயணமே நின்றிருக்கிறது!

ஆனால், இந்தத் தடவை, அவன் பிடிவாதமாக இருந்தான்.

"ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தானே நடக்கின்றன?" என்று அவள் வார்த்தைகளையே திருப்பிப் படித்து, மேலேயும் சொன்னான் அவன்! "இதற்கு, நான் இங்கே இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே!"

அவள் முகம் போன போக்கைப் பார்த்து மனம் இளகி, "எனக்கு என் தாயாரை ஒருதரம் பார்த்தாக வேண்டும், எலிசா! கதைச் சுருக்கத்தைக் காஸ்டிங் டைரக்டரிடம் கொடுத்து விட்டேன். அவர் நடிகர் நடிகைகள் எல்லாம் பேசி முடித்து, அதன் பிறகு, பட்ஜெட் திட்டமிடும் போது, நான் வந்தால் போதுமே!" என்றான் அவன், விளக்கமாக.

"ஆனால், எழுத வேண்டாமா?"

"எழுதுவதுதானே? அதை எங்கே இருந்தும் செய்ய முடியும்! முக்கியமாக, மித்ராவுக்கு முழுமையான இடமாற்றம் வேண்டும் என்பது, என் கருத்து மட்டுமல்ல, டாக்டருடைய அறிவுரையும் கூட அதுதான், எலிசா!"

அவனது பிடிவாத குணமும், எலிசா அறிந்ததே! அவனே, ஈரேட்டாக இருக்கும் வரைதான் மாற்றங்கள் எல்லாம்! அந்த நிலை தாண்டி விட்டால், மாற்ற முடியாது!

புரிந்து விடவே, "சரி சரி போய்வா!" என்று அவனை ஒத்துப் பேசி, "ஆனால், ரொம்ப நாள் அங்கே தங்கி விடாதே! ஹாலிவுட், ஒரு மாதிரி உலகம். யாருக்காகவும் காத்திருக்காது" என்ற ஓர் எச்சரிக்கையோடு, அவனை அனுப்பி வைத்தாள்!

அவளிடம் சொல்லாத இன்னொன்றும் இருந்தது!

மகளைக் குளிப்பாட்டி, உடை அணிவித்து, சேர்ந்து விளையாடி, தூங்குமுன் கதை சொல்லித் தூங்க வைத்து... இப்படிக் கூடவே இருந்து பலவும் செய்யவும், "நான்சி, மிச்சியுடைய அப்பாக்கள் போல, நீயும் எனக்கு நிஜ அப்பா ஆகி விட்டாயாப்பா?" என்று சிறுமி கேட்டது. அவனுக்குப் பொட்டில் அறைந்தது போல ஆகிவிட்டது.

சமாளித்துக் கொண்டு, "எப்போதுமே, அப்பா, உன் நிஜ அப்பாதான் செல்லம்!" என்ற போது, குழந்தை ஒப்புக்கொள்ளவில்லை!

"ஊகூம்! இதெல்லாம் செய்தால் தான், நிஜ அப்பாவாம்! சும்மா, எப்பவாவது பார்த்து, கிஸ் பண்ணிட்டுப் போகிற அப்பா, சினிமா அப்பா... நீ சினிமா எடுக்கிறதாலே, நீயும் அதே மாதிரி, சினிமா அப்பா ஆகி விட்டேன்னு மிச்சி சொன்னான். ஆனால் இப்போ நீயும் நிஜ அப்பா ஆகிவிட்டே! இல்லையப்பா?" என்றாள் மகள்.

இதற்கெல்லாம் கூட, மகளை ஏங்க விட்டுவிட்டு, அவன் என்ன வாழ்க்கை வாழ்ந்தான்?

இங்கேயே இருந்தால், எல்லாம் பழைய மாதிரியே தான் ஆகிவிடும்! கொஞ்ச காலமேனும், இதிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்! அதற்கு, இங்கிருந்து வெளியேறியாக வேண்டும்!

விமானத்தில் ஏறி, மகளுக்கு பெல்ட்டை மாட்டிவிட்டு, தன் சீட் பெல்ட்டையும் மாட்டி, விமானமும் கிளம்பிய பிறகே, அப்பாடி என்று, சீட்டில் வசதியாகச் சாய்ந்தான் அவன்!

என்னமோ, மேலே விழுந்து பிடுங்கும் ஓநாய்களிடம் இருந்து தப்பிய உணர்வு!

மகளைக் காப்பாற்றி விட
்டதாகவும்!



Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:48 pm

அன்றைக்கு, அண்ணன் வெளிநாட்டுக்குக் கிளம்பி விடுவான். முன் மதியத்தில் கிளம்பும் ரயிலில் மும்பைக்குப் போய், அங்கே அவனது தலைமை அலுவலகத்தில் விவரம் தெரிவித்துவிட்டு, அப்படியே அமெரிக்காவுக்கு விமானம் ஏறி விடுவான்!

பூபாலன் ரயிலில் ஏறும் வரையில், ரயில் புறப்படும் வரையிலும் கூட, அவனோடு கூடவே சந்தனா இருக்கலாம்!

அதன் பிறகு?

பத்து நாட்களுக்கு முன்பாக, அவளுடைய தந்தை, அந்த ஃப்ளாட்டில், அவளோடு இருந்தார். பிறகு...

ஒரே இடத்தில் வேலை. தந்தை தலைமை ஆசிரியர். மகள் ஐந்தாம் வகுப்புக்குப் பாடம் எடுத்தாள். தலைமை ஆசிரியர் மகள் என்பதால், அவளுக்குப் பல சலுகைகளை மற்றவர்கள் அளித்த போதும், முடிந்த வரையில், அவள் அதைப் பயன்படுத்துவது இல்லை! இந்தக் குணமே, அவளுக்கு நிறைய நலம் விரும்பிகளைச் சம்பாதித்துத் தந்தது எனலாம்.

கலகலப்பான தந்தை, சிதம்பரநாதன்! சில தலைமை ஆசிரியர்களைப் போலப் பள்ளியைத் தன் தலை மேலேயே தாங்க முடியாமல் சுமப்பவர் போல முகத்தை உம்மென்று வைத்திராமல், சாதாரணமாகவே இருப்பார், சும்மாவே, சிரித்த முகம் அவருக்கு!

அப்பா, மகள், இருவரும் சேர்ந்தே வேலைக்குப் போனார்கள். கடை கண்ணிக்குப் போனார்கள்.

அதிலும், அவளுடைய அண்ணன் பூபாலன் வெளியூர்க் கல்லூரியில் இடம் கிடைத்துப் படிக்கப் போன பிறகு, தந்தை தான் அவளுக்கு எல்லாம் என்கிற மாதிரி! அப்போதெல்லாம், அந்தத் தந்தையும் இல்லாமல் தவிக்கும் ஒரு காலம் விரைவிலேயே வரப் போகிறது என்று, அவள் கனவில் கூட நினைத்ததில்லை!

கலகலவென்று எத்தனை கதைகள் சொல்வார்!

வில்லி பாரதத்தையும், கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்து மனதிலும் இருத்திக் கொண்டவர், அவர். மக்களுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார்.

நாட்டின் இதிகாசங்களை அறியும் போது தான், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு புரியும் என்பார்! ஆயிரம் நீதி நூல்களைப் படித்தும் மனதில் பதியாத நியாய அநியாயப் பாகுபாடுகள், இவற்றைப் படித்தால் தெரியும் என்பது அவரது கருத்து!

அதனாலேயே, மக்கள் இருவருக்குமே, அவற்றைக் கதைகளாகவே கற்றுக் கொடுத்தும் இருந்தார்!

திடுமென, "மகாபாரதப் போர் நிகழாமல் எப்படித் தடுக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்று கிருஷ்ணரிடம், சகாதேவன் சொன்னான்?" என்று கேட்பார்!

"'பாராளக் கர்ணன், இகல் பார்த்தனை முதலில் கொன்று அணங்கின் காரார் குழல் களைந்து, காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் நான் பிடித்துக் கட்டுவனேல், வாராமல் தடுக்கலாம் மாபாரதம்' என்றான்" என்று பாடலைச் சொல்லி, விளக்கமாக 'கர்ணனுக்குப் பட்டம் கட்டி, அவனை எப்போது இகழ்ந்து பேசும் அர்ஜுனனை முதலில் கொன்று விட்டு, விரித்துப் போட்ட கூந்தலை காட்டி சபதத்தை நினைவூட்டும் திரௌபதியைச் சிறையிட்டுக் கடைசியாக எல்லோரையும் ஆட்டி வைக்கும் உன்னையும், நான் கட்டி விட்டால், பாரதப் போர் மூளாமல் தடுக்க முடியும்' என்று சகாதேவன் சொன்னதையும் சேர்த்து, அவரிடம் தெளிவாகக் கூற வேண்டும்!

தடுமாறினால், திரும்பச் சொல்லிக் கொடுப்பார்! ஆனால், பத்துக்கு மூன்றைச் சரியாகச் சொல்லி விட்டால் கூடச் சிதம்பரம் பூரித்துப் போவார்!

தந்தையைப் பார்த்து, விரும்பி ஆசிரியை ஆன சந்தனா, மாணவ மணிகளின் பல்வேறு பிழைகளைப் பொறுத்துப் போகப் பயின்றதே, அவரைப் பார்த்துதான், அவரது போதனையால்தான்!



"முப்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் எடுத்தாலே, அடுத்த வகுப்புக்குப் போக முடியும் என்று ஏன் வைத்திருக்கிறார்கள்? நூறு மதிப்பெண் எடுக்க, முயற்சி செய்ய வேண்டியதுதான். ஆனால், கவனக் குறைவு, மறதி என்று, மனிதனிடம் எத்தனையோ குறைபாடுகள்! ஆயினும், முப்பத்தைந்து சதம் எடுத்து விட்டாலே, மனிதனாக முன்னேறுவதற்கு, அவன் முயற்சி எடுக்கிறான் என்று நிரூபிக்கப்பட்டு விடுவதாகக் கொள்ளப் படுகிறது! எல்லோருக்கும் ஒரே மாதிரிதானே கற்றுத் தருகிறோம். ஏன் எல்லோரும் நூறு மார்க் வாங்கவில்லை என்று எரிச்சல் படக் கூடாது! ஒவ்வொருவர் ஒவ்வொன்றை, உள்ளே வாங்கிக் கொள்ளும் திறனில் வேறுபாடு உண்டு. கணக்குப் பாடத்தில் முட்டை வாங்குகிறவன், தொழிலில் பெரிய பணக்கணக்கை, மனதிலேயே பிரமாதமாகப் போட்டு, முன்னேறப் பார்த்திருக்கிறேன். யார், யாரிடம் என்ன திறன் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பாராட்ட, ரசிக்க, நீ முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்..."

இப்படி நிறைய, அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்!

அதனாலேயே, வகுப்பில் ஒரு வம்புக்கார வால், "திருவள்ளுவர் தப்பாக எழுதிவிட்டால், எந்த ரப்பரை வைத்து, எப்படி அழித்திருப்பார் மிஸ்?" என்று சந்தேகம் கேட்ட பிறகு, வகுப்புப் பிள்ளைகளுடன் சந்தனாவும் சேர்ந்து நகைத்திருக்கிறாள்.

அது மட்டுமல்ல! வீட்டுக்கு வந்து, தந்தையிடமும் வகுப்பில் நடந்ததைச் சொல்ல, இருவருமே ரசித்துச் சிரித்தார்கள்!

"என்ன கற்பனையெல்லாம் வருகிறது பாரேன்!" என்று வியந்து, இன்னொரு முறை சிரித்துவிட்டு, அவரிடமே இன்னோர் ஐயமும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

"சந்தனா என்று, இது என்ன பெயர், அப்பா? இப்படிப் பெயர், நான் கேட்டதே இல்லை!"

பழைய நிகழ்ச்சியை மனதில் நினைத்து, சன்னமான முறுவலுடன், "நீ, பெண்ணாகப் பிறந்ததும், உனக்கு ஊர்த் தெய்வமான, முப்பிடாரி அம்மனின் பெயரை வைக்க வேண்டும் என்று, உன் தாத்தா ஆசை! ஆனால், அரைத்த சந்தனத்தில் செய்த சிலை போல, அழகாகக் கிடந்தாயா, உன் அம்மாவுக்கு அந்தப் பெயர் தான் தோன்றி விட்டது!" என்றார் அவர். தொடர்ந்து, "அம்மா சொன்னது, எல்லோருக்குமே பொருத்தமாகத் தோன்றிவிட, அதுவே உன் பெயராகிப் போயிற்று! அதுவும், உன் தாத்தா, உன்னைச் சந்தனச் சாந்துக் கட்டி என்று நீளமாகத்தான் கொஞ்சுவார்!"

தொடர்ந்து, நரை மீசையுடன் திடகாத்திரமான ஒருவர், அவளைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொஞ்சிய சந்தோஷமான நினைவுகள், அவளுக்குத் தோன்றும்!

அதுதான் அப்பா!

துன்பங்களைப் பேசுவதும் இல்லை. கற்பனை செய்ய விடுவதும் இல்லை!

இல்லையென்றால், மனைவியை இழந்து, இந்த பதினெட்டு ஆண்டுகளாகத் தாயுமாகி, இரு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய சிரமம் பற்றி, எவ்வளவோ சொல்லிப் பிள்ளைகளின் மனதில் சுமையேற்றி இருக்கலாம்!

ஆனால், அதெல்லாமே, அவர் ரசித்துச் சொன்ன தினுசில், வேடிக்கை விளையாட்டாக மாறிவிடும்!

இட்லி மிளகாய்ப் பொடியை வாங்கி வந்து, தெரியாமல் ஒரே மாதிரி இருந்த சர்க்கரை டப்பாவில் போட்டு வைத்து விட்டு, அதையும் காலை வேளையில் அவசரத்தில் கவனியாமல், இட்லிக்கு அதே பொடியைப் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தது, இனிப்பும் காரமுமாகப் பிள்ளைகளுக்கு அந்தச் சுவை பிடித்துப் போகவே, ஒரு பெரிய ஜோக்காக மாறியது!

அவ்வப்போது, சுவையில் ஏதாவது கூடக் குறைய இருந்தாலும், 'அதுபோலத்தான்' என்று கிண்டலாகப் பேசும் அளவுக்கு!

பதினைந்து வயதில் தொடங்கி, மெல்ல மெல்லத் தந்தைக்கு உதவியாகத் தொடங்கி, சந்தனா சமையல் செய்கையில் ஏதாவது தப்புத் தவறுகள் நேர்ந்தாலும், இதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டே மூவரும் உண்டு விடுவார்கள்!

அந்த மகிழ்ச்சி, இனி என்றேனும் கிடைக்குமா?


"என்னடாம்மா? அப்பா நினைவா?" என்று கனிவாகக் கேட்டபடி, அண்ணன் அருகில் வந்து அமர்ந்த போதுதான், சந்தனாவுக்குச் சுய உணர்வு வந்தது.

பாவம்! அவள் இப்படிக் கலங்கினால், அவனால் எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல முடியும்?

"சந்தோஷமான நினைவுதாண்ணா! சர்க்கரையும் இட்லிப் பொடியும் சேர்த்து உண்போமே, அதை நினைத்தேன்! இப்படி, அப்பாவைப் பற்றிய எல்லாமே மகிழ்ச்சிகரமான நினைவுகள் தானே? உனக்குச் சாப்பாடு, தனித் தனியாக, மதியத்துக்கு, இரவுக்கு என்று கட்டி வைத்து விட்டேன். நீ சாமான்கள் எல்லாம் எடுத்து வைத்தாயிற்றா?" என்று, அண்ணனுக்கு முகம் காட்டாமல் எழுந்தாள் அவள்.

தந்தையின் வளர்ப்புதானே அவனும்!

கூடவே எழுந்தபடி, "இந்த ஒப்பந்தம் மட்டும் இல்லையென்றால், நான் பேசாமல் இங்கேயே இருந்து விடுவேன்!" என்றான் அவன் வருத்தத்துடன்! "இடையில் விட்டால், நாம் சில லட்சங்கள் கட்ட நேரும். ஆனாலும், இருப்பதை வைத்து, எப்படியோ கட்டி விடலாமே என்று தான் எனக்கும் தோன்றுகிறது! எதற்கும், நிறுவனத்தில் ஒரு தரம் கேட்டுப் பார்க்கப் போகிறேன், சாந்தும்மா. ஏனென்றால்..." என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை அவசரமாக இடை மறித்தாள் தங்கை.

"அந்த மாதிரி மட்டும், எதுவும் கூடவே கூடாது, அண்ணா! உன் எதிர்காலம் நல்லபடியாக அமைந்துவிட்டது என்று, அப்பா எவ்வளவு மகிழ்ச்சியோடு, உன்னை அனுப்பினார்! அதைக் கெடுப்பதா? நினைத்துக் கூடப் பாராதே! அப்படி நீ போகாமல் இருந்தால், அப்பாவின் ஆசையை, நான் தான் கெடுத்து விட்டதாக, அதுதான் எனக்கு அதிக வேதனையாக, குற்ற உணர்வாக இருக்கும்! என்ன? எண்ணி மூன்றே நாட்கள்! அப்புறம், விடுதிக்குப் போய் விட்டால், அங்கே புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், அவர்களோடு பழகுவது என்று மனம் மற்றதில் ஈடுபடத் தொடங்கி விடும். அப்புறம் பார்த்தால், வேலை. இப்படி, என் நேரம் சரியாகப் போய் விடும்! ஓய்ந்த நேரத்தில் நினைக்கக் கூட, நமக்குத் தான் அப்பாவைப் பற்றி எத்தனையோ சந்தோஷமான நினைவுகள் இருக்கின்றனவே! நீ சும்மா தேவையற்று என்னைப் பற்றிக் கவலைப்படாதே!" என்று, உள்ளே இல்லாத தெம்பை, வெளியே காட்டிப் பேசி, அண்ணனின் மனதை அமைதிப்படுத்தினாள்!

"இருந்தாலும், சின்னப் பெண் நீ. உன்னைத் தனியாக விட்டுப் போக, மனமே வரமாட்டேன் என்கிறதேம்மா! முன்பாவது, அப்பா இருந்தார்!" என்றவனின் கண்களில் குபுக்கெனக் கண்ணீர் பொங்கியது!

சந்தனாவுக்கும் வேதனைதான்!

ஆனால் அதைக் காட்டினால், காரியம் கெட்டுப் போகும் என்று உணர்ந்து, "ஐயோ! என்னண்ணா இது? ஆண் பிள்ளை அழலாமா? கடல் கடந்து போகிறோமே என்று பார்க்கிறாயா? இந்தக் காலத்தில், அதெல்லாம் ஒரு தூரமே அல்ல! உலகமே ஒரு 'குளொபல் வில்லேஜ்' ஆகிவிட்டது என்று நாம் பேசிக் கொண்டிருந்தது மறந்து விட்டதா? நீ வெளிநாட்டுக்குப் போகாவிட்டாலும், இங்கே சென்னையிலேயா இருக்க முடியும்? மும்பையில் தானே இருக்க வேண்டும்? அதற்கும், வெளிநாட்டுக்கும் ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! அதற்காக, வேலையையே விட்டு விட யோசிக்காதே! மும்பையும் 'சிலிக்கான் வாலி'யும் ஒன்றுதான் என்பேன். இந்தப் ப்ராஜக்டை நல்லபடியாக முடித்து விட்டு வந்தால், சென்னைக்குப் பதவி உயர்வுடன் கூடிய மாற்றம் தருவதாக, உன் அலுவலகத்தில் சொல்லியிருந்தார்களே, நினைவில்லை? அதனால், கண்ணைத் துடை... இல்லை, முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு புறப்படு! வா! அப்பா படத்துக்கு முன்னே நின்று சொல்லிக் கொள்ளும் போது, இப்படி அழுத முகமாகவா, நிற்பது? ம்! போய் முகத்தைக் கழுவு!" என்று பூபாலனை விரட்டினாள்!

பூபாலனுக்கும், ஒருவாறு தங்கை சொல்வது சரியென்று தோன்றிவிட, மெல்லத் தலையாட்டிவிட்டு, முகம் கழுவச் சென்றான்.

ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியெல்லாம், சந்தனாவுக்கு ஒரே அறிவுரை தான். கதவை எப்போதும் உட்புறம் பூட்டிக்கொண்டு இருக்க வேண்டும். பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருக்கும் கிரில் கதவைப் பூட்டுப் போட்டுப் பூட்ட வேண்டும்! எப்பொழுதும்! வேலைக்காரம்மா உள்ளே இருக்கும் போதும், பூட்டுதான்! வேலை முடிந்து, அந்தம்மா போகிறபோது மீண்டும் திறந்து விட்டுக் கொள்ளலாம்! இந்த விஷயத்தில் சோம்பல் படவே கூடாது!


அவன் திரும்பத் திரும்பச் சொன்ன விதத்தில், சந்தனாவுக்குப் போரடித்துப் போயிற்று! சிரிப்புக் கூட வந்தது எனலாம்! ஆனால், அண்ணன் சொல்வது, அவள் மீதுள்ள அக்கறையால் அல்லவா? எனவே, அவ்வப்போது கண்கள் பளிச்சிட்ட போதும், பதில் பேசாமல் சாதுவாய்க் கேட்டுக் கொண்டாள்!

ரயில் நிலையத்திலும், பூபாலன் இன்னொரு தரம் வீட்டுப் பாதுகாப்புப் பற்றித் தொடங்கவும், குறுக்கிட்டு, "அண்ணா, திடீரென்று நான் ரொம்ப மக்காகி விட்டேனோ என்று சந்தேகமாக இருக்கிறது!" என்றாள், அப்பாவி போல.

திகைப்புற்று, "ஏம்மா, அப்படி? எனக்கொன்றும் அப்படித் தோன்றவில்லையே! எப்போதும் போலப் பளிச்சென்று தானே, இருக்கிறாய்... ஏன், ஏதேனும் புரியவில்லையா? அப்படி எதுவும் இருந்தால், இப்போதே என்னிடம் கேட்டுவிடு!" என்று, அவளுக்கு மூத்த அண்ணனாய் உதவ முன் வந்தான் அவன்.

"ஆமாம் அண்ணா! இதற்கு விளக்கம் நீதான் சொல்லித் தர வேண்டும்!" என்று கவலையாகத் தொடங்கினாள் தங்கை. "நம் வீட்டில், இந்த மூன்று நாட்களும் எப்படி இருக்க வேண்டும் என்று, கிட்டத்தட்ட முப்பது தடவை சொல்லி விட்டாய்! இன்னமும் என் மண்டையில் அது ஏறிய மாதிரி, உனக்குத் தோன்றவில்லை போல இருக்கிறதே. அதுதான் சந்தேகம் வந்து விட்டது!" என்று சாதுவாகவே கேட்டுவிட்டுச் சட்டெனக் கண் சிமிட்டிக் குறும்பாகச் சிரிக்கவும், அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது!

"வாலு!" என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, "நிஜமாகவே அத்தனை தடவையா சொன்னேன்?... ம்ம்ம்... இருக்கும், இருக்கும்! பத்திரிகையில், அடுத்த தெருவில் நடந்த திருட்டைப் பற்றிப் படித்ததில் இருந்து, எனக்கு அதே நினைவாகத்தான் இருக்கிறது! நீ எச்சரிக்கையோடு இருப்பாயல்லவா?" என்று கவலையுடன் கேட்டான் பூபாலன்.

"என்னண்ணா நீ, இந்த வீட்டில் நான் இருக்கப் போவது, மிஞ்சி மிஞ்சி மூன்றே நாட்கள் தானே? எதிர் ஃப்ளாட்டில் வேறு சுந்தரிக்கா குழந்தை பெற வந்ததில் இருந்து, உறவினர் வருவதும் போவதுமாக நடமாட்டம் நிறைய இருக்கிறது! பயமே படாதே!" என்றவள், அவன் மீண்டும் தொடங்கு முன் அவசரமாக "அண்ணா, அங்கே வேலை, வேலை என்று நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்து விடாதே! 'சுவரை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும்' என்பது போல, ஆரோக்கியத்துக்கு அப்புறம் தான், மற்றது எல்லாம்!" என்றாள் சந்தனா.

"நல்லவேளை, நினைவுபடுத்தினாய்...!" என்று பூபாலன் மறுபடித் தொடங்கினான். "பார் சந்தனா, அந்த வேலை பார்க்கும் மகளிர் விடுதியில் உணவு எல்லாமே நன்றாக இருக்கும் என்று தான் சொன்னார்கள்! ஆனால், எப்படியும், உன் சமையல் போலச் சுவையாக இருப்பது கடினம் தான்! அதற்காகச் சரியாகச் சாப்பிடாமல், உடம்பைக் கெடுத்துக் கொண்டு விடக் கூடாது! ஆனால், மற்ற பல இடங்களுக்கு, இந்த ஹாஸ்டல் உணவு பிரமாதம் என்று கேள்வி. அதைவிட முக்கியமாக, மிகவும் பாதுகாப்பான இடம்! அதனால் தான், கெஞ்சிக் கூத்தாடி, இதில் உனக்கு இடம் பிடித்தேன். சரியாக ஒன்றாம் தேதி மாலைக்குள் போய்விடு! இல்லாவிட்டால், கிடைத்த இடம், வேறு யாருக்காவது போய்விடும்! அங்கே இடம் பிடிக்கப் பெரிய போட்டி இருக்கிறது!"

அன்பும் அக்கறையுமாக, ஒருவருக்கொருவர் இப்படியே ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கையில் திடுமென ரயில் கிளம்பும் நேரம் வந்தது!

தன்னை மீறிக் கண்ணீரைச் சொரிந்த இருவரையும் பிரித்தவாறு, ரயில் கிளம்பிச் சென்றது!

இந்தப் பரந்த உலகில் யாருமே இல்லாதது போன்ற வெறுமையை உணர்ந்தபடி, தூரத்தில் புள்ளியாகி மறையும் ரயிலை வெறித்தவாறு, சந்தனா தனித்து
நின்றாள்!







THANKS :

C
HENNAI LIBRARY


Last edited by Fathima on Sun May 30, 2010 8:22 am; edited 1 time in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:51 pm

ரயில் கண்ணுக்கு மறைந்த பிறகும் கூட சந்தனாவுக்கு, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்லப் பிடிக்கவில்லை!

எங்கே செல்வது?

வீட்டை நினைக்கவே, மனம் கலங்கியது.

அவளது வெகு சிறு வயதில் மறைந்து விட்ட தாயின் நினைவு அவளை அதிகம் வருத்தியதில்லை!

ஆனால், தந்தை, அண்ணன் இருவருமே இல்லாமல், தன்னந் தனியே, அந்த வீட்டில், அவள் எப்படி இருப்பாள்?

புரிந்துதான், அவள் தங்குவதற்காக, வேலை பார்க்கும் மகளிர் விடுதிகளை அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல விடுதியில், பூபாலன் அவளுக்கு இடம் பிடித்துத் தந்திருக்கிறான்!

ஆனால், அந்த இடத்துக்குப் போவதற்கு, இன்னும் மூன்று நாட்கள் இருந்தன.

அந்த மூன்று நாட்கள், எப்படியோ சமாளித்து, அவள் இந்த வீட்டில் தான் இருந்தாக வேண்டும்!

இருபத்தியிரண்டு வயதில், இதைவிட, எவ்வளவோ மனோதிடம், தைரியம் இருக்க வேண்டும் என்று, தனக்குத் தானே எவ்வளவோ சொல்லிக் கொண்ட போதும் வீடு திரும்ப, அவளுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது!

எதிரே ரயில் நிலையக் கடிகாரம், மணி பனிரண்டைக் காட்டியது!

பள்ளியில், மதிய உணவு இடைவேளை நேரம்!

தந்தையின் அறையை ஒட்டியிருந்த வராந்தாப் பகுதியில் அமர்ந்து சாப்பாட்டுப் பாத்திரத்தைப் பிரிப்பது நினைவு வந்தது!

எளிய உணவுதான்! ஏதாவது கலந்த சாதம் அல்லது, இட்லி தோசை! அதுவே, அமிர்தமாகத் தோன்றும்!

அன்று கூட...

இல்லை, நினைக்கக் கூடாது! அன்றைய தினத்தை இயன்றவரை நினையாதிருப்பது நல்லது! நினனவு வந்துவிட்டால், அப்புறம் இந்தக் கனவுகளால் வேறு நஷ்டம்!

முயன்று, மனதை வேறுபுறம் திருப்பினாள் சந்தனா.

இன்னமும், அரைநாள் வகுப்புகள் இருந்தன...

'நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம், அம்மா! குறைந்தது, ஒரு மாதத்துக்கேனும் வேலை கொடுத்தாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு, உன் இடத்துக்கு, நாங்கள் யாரையும் நியமிக்கவில்லை! நாங்களே, ஒருவர் மாற்றி ஒருவர் உன் வகுப்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்! அதனால், உன்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வந்து, வேலையைப் பார்! வேலையில் ஈடுபடுவது, உன் மனதுக்கும் நன்றாக இருக்கும் என்பதால்தான் சொல்லுகிறேன்' என்று முன்பு உதவித் தலைமை ஆசிரியையாக இருந்து, இப்போது தந்தைக்குப் பதிலாகத் தலைமை ஆசிரியை ஆகியிருக்கும் சரசுவதி ரங்கநாதன் ஏற்கனவே, சந்தனாவிடம் சொல்லியிருந்தார்!

எனவே, அவள் பள்ளிக்குப் போவது, யாருக்கும் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை! சொல்லப் போனால், அவளது பொறுப்பைப் பகிர்ந்து கொண்டு, அதிக வேலை செய்யும் மற்றவர்களுக்குப் பளு குறையும்!

அப்போது பள்ளிக்குப் போனால், ஒன்றிலிருந்து, மூன்று வரையிலான வகுப்புகளை எடுக்கலாம்!

அப்புறம், அங்கே மற்றவர்களோடு வேலை, மறுநாள் பாடம் பற்றிப் பேசிவிட்டு, சற்றுத் தாமதமாகவே வீடு திரும்பலாம்!

எப்படியும், குறைந்தது நாலு மணி நேரம், அவள் வீட்டுக்குப் போகத் தேவையிராது!

முன்புறமாகச் சென்று, வரிசையில் நின்று, ஆட்டோ பிடித்துப் போவதை விட, கார் பார்க் வழியே பக்கவாட்டில் சென்றால், பள்ளிக்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரலாம்! அன்று எடுக்க வேண்டிய பாடம் பற்றித் தயார் பண்ணவும் சற்று அவகாசம் கிடைக்கும்!

அவசரமாகத் திரும்பிப் பக்கவாட்டு வழியில் வேகமாகச் சந்தனா நடக்கலானாள்.

கார்ப் பார்க்கின் முதல் மூலை திரும்புகையில், செல்லில் பேசியவாறே, கைப்பையை மூடியபடி, காரினுள் ஏறிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி!

அவளது பெயரின் மூலமான சந்தன வண்ணச் சேலை!

ஐம்பதைத் தாண்டியவளாகத் தோன்றிய அந்தப் பெண்மணி, கார் கதவைச் சாத்தவும் கார் வேகமெடுத்து அங்கிருந்து வெளியேறியது!

டிரைவர் காரை ஏற்கனவே ஸ்டார்ட் செய்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவாறே முன்னேறிய சந்தனா திடுக்கிட்டு நின்றாள்!

அந்தப் பெண்மணி, காரில் ஏறிய இடத்தில் ஒரு பர்ஸ் கிடந்தது!

ஏதோ கொஞ்சம் சில்லரையை மட்டும் வைக்கிற மாதிரிச் சின்னது அல்ல, அது! நிறைய ரூபாய் நோட்டுகளை ரகம் வாரியாக வைக்கக் கூடிய தினுசு.

பணம் நிறைய இருந்து, தப்பான யார் கையிலாவது மாட்டிக் கொண்டு விடப் போகிறதே என்று எண்ணிய சந்தனா, வேகமாகச் சென்று அந்தப் பர்சை எடுத்தாள்.

பர்சோடு வேகமாகச் சாலையை அடைந்து, இரு புறமும் ஆராய்ந்தாள். அந்தக் கார் சென்ற இடமே தெரியவில்லை!

அருகில் வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி, பள்ளி முகவரியைக் கொடுத்துவிட்டு, பர்சை நிதானமாகத் திறந்து பார்த்தாள்.

நல்ல வேளையாக, அவள் அஞ்சியது போலப் பர்சில் அதிகப் பணம் இருக்கவில்லை!

பர்சைத் தவறவிட்ட பெண்மணி யார் என்று அறிய வசதியாக, அந்தப் பெண்மணியின் விசிட்டிங் கார்டு பையினுள் இருந்தது!

அதன்படி, அடையாறுப் பக்கமாக, அந்தம்மாவின் வீடு இருந்தது! பள்ளி தாண்டிப் பாதி தூரம், மறுபுறம் செல்ல வேண்டும்!

செல்லலாம்! அந்த வீட்டைத் தேடிச் சென்று, நேரிலேயே கொடுத்துவிட்டு, அதன் பிறகே வீடு திரும்பலாம்! இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் கழியக் கூடும்! என்றாலும் கூட அதைச் செய்ய, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது.

அந்த அம்மாள் கட்டியிருந்த சேலை, ஏறிய கார், கைப்பை, பையைப் பற்றியிருந்த கையில் அணிந்திருந்த கடிகாரம், மோதிரம் அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், அந்தப் பெண்மணி, சற்று அதிகப்படிப் பணம் படைத்தவள் என்பது, நன்றாகவே தெரிந்தது!

பணக்காரர்களைக் கண்டால், சந்தனா சத்தமின்றி ஒதுங்கி விடுவாள்! படிக்கிற காலத்திலேயே!

ஒரிரு முறை கவனித்து விட்டு, அவளுடைய தந்தையே, அவளிடம் கேட்டிருக்கிறார்!

"பாவம்மா, அந்தக் கோகிலா! ஆசையாக உன்னிடம் பேசவந்தால், காது கேளாத மாதிரி, ஒதுங்கி ஓடிவிட்டாயே! அவள் என்ன, சிங்கமா? புலியா?" என்றவருக்கு, "அவள் பணக்காரிப்பா!" என்று சந்தனா கூறியிருக்கிறாள்.

"அந்தக் கோகிலாவுடைய தலையாட்டிக் கூட்டத்தைக் கவனித்திருக்கிறீர்களாப்பா? அவள் எழுந்தால், எல்லோரும் எழ வேண்டும். அவள் பொட்டு வைக்காமல் வந்தால், இவர்கள் வைத்திருந்த பொட்டைக் கூட, எடுத்து எறிந்துவிட வேண்டும். மணியடித்தால் கூட, வகுப்பறைக்குள் அவள் தான் முதலில் செல்ல வேண்டும்! மற்ற எல்லோரும், அவளுக்கு அப்புறம்தான்! ஏன், ஓர் ஆசிரியருக்கு வணக்கம் சொல்வதானாலும் கூட, அவளுக்குப் பிறகுதான் மற்றவர்கள் சொல்லலாம்! இன்றைக்கு, அவளாக என்னைத் தேடி வந்தாலும், விரைவிலேயே, மற்றவர்களைப் போல, நானும் அவளுக்கு வாலை ஆட்ட வேண்டும் என்று கோகிலா எதிர்பார்ப்பாள் தானே? அதெல்லாம், என்னால் முடியாதுப்பா!" என்று அவள் உறுதியோடு கூறிய போது தந்தை அவளை மாற்றச் சற்றும் முயற்சிக்கவில்லை!

ஏனெனில், அவருக்கும் கிட்டத்தட்ட அதே குணம் தான்!

பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு, பணக்காரர்களை ஒதுக்க முடியாது என்றாலும், நெருப்பில் குளிர் காய்கிற மாதிரிதான், அவர் செல்வந்தர்களிடம் பழகுவார்!

வெளிப்படையாக விலகுவதும் கிடையாது, ஒட்டுவதும் இல்லை! ஆனால், எல்லோருக்கும் பிரியமானவர்!

எப்பேர்ப்பட்ட மனிதர்! அவரைப் போய்... என்று பெருமூச்சு விட்ட சந்தனா, சட்டெனத் தலையை உலுக்கி, மீண்டும் கையில் இருந்த பர்சைப் பார்த்தாள்.

விசிட்டிங் கார்டில் உள்ள டெலிபோன் எண்ணுக்கு போன் செய்து, பர்சை வாங்கிப் போக, யாரையேனும் அனுப்பச் சொல்லலாமா என்று யோசித்தபடி பர்சை மேலும் ஆராய்ந்த போது, விசிட்டிங் கார்டோடு, ஒரு சிறுவனின் படம், அந்தச் சிறுவனோடு கூடிய ஒரு குடும்பப் படம். சிறுவன், இளமைப் பருவத்துள் காலடி எடுத்து வைத்த போது எடுத்த படம், ஒரு கிரெடிட் கார்டு, கூடவே மருத்துவமனையின் அடையாள அட்டை ஒன்றும் இருப்பதைப் பார்த்தாள் அவள்!

சந்தனாவின் பள்ளிக்கு அடுத்த தெருவில் இருந்த மருத்துவமனைதான்! 'சுகம்' என்று பெயர் வெளியே இருந்து பார்க்க, நன்றாகத்தான் இருக்கும்.

அட்டையைத் திருப்பிப் பார்த்தால், அன்று மாலை ஆறு மணிக்கு, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரோடு சந்திப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது!

பர்சை, அதற்கு உரியவரிடம் சேர்ப்பிக்கும் வழி, இப்போது சந்தனாவுக்குப் புரிந்து போயிற்று!

பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியையிடம் 'ரிப்போர்ட்' செய்த போது, சந்தனாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார் அவர்!

தானே ஆசிரியர்கள் அறைக்கு அவளை அழைத்துச் சென்று, "உங்கள் அதிகப்படி வேலைப் பளுவைக் குறைப்பதற்காகத் தன் துயரத்தை ஒதுக்கி வைத்துவிட்டுச் சந்தனா சீக்கிரமாகவே வேலைக்கு திரும்பியிருக்கிறாள்! பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனைவி இறந்து ஒரே வாரத்தில், சிதம்பரம் சார் வேலைக்குத் திரும்பியது, எனக்கு இப்போது நினைவு வருகிறது! நாங்கள் எல்லோரும் ஒரே செட்! உன் அம்மா சாருவுக்காக அவர் உள்ளூர உருகியது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை வெளிக் காட்டாமல், சிதம்பரம் சார் அவ்வளவு வேலை செய்வார்! கடமை உணர்ச்சி மிகுந்த அந்தத் தந்தைக்கு ஏற்ற மகள்!" என்று பாராட்டவும், சந்தனாவுக்குச் சற்று வெட்கமாக இருந்தது!

அவள் ஒன்றும் வெறும் கடமை உணர்ச்சி மட்டுமே காரணமாய், அதற்காக மட்டுமாகப் பள்ளிக்கு வரவில்லையே! அந்த வகையில், இந்தப் புகழ்ச்சிக்கு அவள் ஏற்றவளும் அல்ல!

ஈடு செய்வதற்கு, முழுக் கவனத்துடன் வேலை செய்ய வேண்டும் என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டு, அதன்படியே வேலையையும் தொடங்கினாள் அவள்.

பள்ளி நேரம் முடிந்ததும், இந்தப் பத்து நாட்களாக அவளது வகுப்புகளில் நடந்த பாடம், அடுத்துச் செய்ய வேண்டியது பற்றி உடனொத்த ஆசிரியர்களோடு பேசி விட்டு, அவர்கள் கிளம்பிய பிறகே, சந்தனா பள்ளி அலுவல் அறைக்குச் சென்று, அங்கே ஒரு பெரிய கவரை வாங்கி வந்து, ரயில் நிலையத்தில் கண்டெடுத்த பர்சை அதனுள் வைத்து ஒட்டினாள்.

முகவரியைக் குறித்து வைத்துக் கொண்டு, பர்ஸ் உர்மையாளரின் விசிட்டிங் கார்டைப் பார்சலின் மீது ஒட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி, 'சுகம்' மருத்துவமனைக்குச் சென்றாள்.

அங்கே, அந்தப் பர்ஸ்காரப் பெண்மணி அறிமுகம் ஆனவராக இருந்தாள்!

"மாதாமாதம் பரிசோதனைக்காக வருகிறவர்கள் ஆயிற்றே! அத்தோடு, பெரிய டாக்டருக்கு வேண்டியவர்கள் வேறு! இன்றைக்கு ஆறு மணிக்கு அந்தம்மா வருவார்கள். வந்ததும் தன்னிடம் கூட்டி வரவேண்டும் என்று, பெரிய டாக்டர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்! அப்போது உங்கள் பார்சலைக் கட்டாயமாக, மேடத்திடம் கொடுத்து விடுகிறேன்!" என்று உறுதி கூறிய வரவேற்புப் பெண், சிறு தயக்கத்துடன், "நீங்கள், மிஸ்?..." என்று வினவினாள்.


ஒரு கணம் குழப்பத்துடன் நோக்கிய சந்தனாவுக்கு உடனே அந்தப் பெண்ணின் தயக்கம் புரிந்தது.

லேசாக முறுவலித்து, தன் கைப்பையைத் திறந்து, தன் ஆசிரியப் பதவிக்கான அடையாள அட்டையை எடுத்துக் காட்டினாள்.

"தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், மேடம்! அடையாளம் தெரியாமல், யாரிடமும், எதையும் வாங்கி வைக்கக் கூடாது என்று எங்களுக்குக் கட்டளை இருக்கிறது! வெடிகுண்டு மிரட்டல் கலாச்சாரம் பெருகிவிட்டதல்லவா? அதனால்தான்..." என்றபடி, சந்தனாவின் பெயரையும், வேலையையும் குறித்துக் கொண்டாள் அவள்.

"பயங்கரவாதம் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த எச்சரிக்கை அவசியம் தானே?" என்று, அவளோடு ஒட்டிப் பேசிவிட்டு, "மறக்காமல் கொடுத்து விடுங்கள். நான் அப்புறமாக அவர்களிடம் போன் பண்ணிப் பேசிக் கொள்கிறேன்!" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள் சந்தனா!

எப்படியும், பர்ஸ் கிடைத்துவிட்டதா என்று, அந்தப் பெண்மணியிடம் உறுதிப் படுத்திக் கொள்ளும் கடமை அவளுக்கு இருக்கிறதுதானே? என்னதான் மெதுவாகப் பார்சல் பண்ணி, மெதுவாக நடந்து வந்து கொடுத்த போதும், மணி ஐந்து கூட ஆக மறுத்தது!

இப்போதும், மறுபுறம் திரும்பி நடந்தால், பத்தே நிமிஷத்தில் வீடு வந்துவிடும்!

அவ்வளவு பக்கம் தான்!

ஆனால்...

இன்னொரு கிளை வழியே சென்று, தெரு மூலையில் இருந்த பூங்காவுக்குப் போய், உள்ளே இருந்த இரும்பு பெஞ்ச் ஒன்றில், அலுப்புடன் அமர்ந்தாள்!

நல்ல வேளையாகச் சிறுவர், சிறுமியர் சிலர் பூங்காவுக்கு வந்திருந்தனர்!

அவர்கள் விளையாடுவதைப் பார்த்திருப்பதில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்லபடியாகவே, கழிந்து விட, லேசாக இருள் பரவத் தொடங்கியதும், எழுந்து வீட்டை நோக்கிச் சந்தனா நடக்கத் தொடங்கினாள்.

இரவில், ஒரு வேளை பசித்தால்... என்று, தெருமூலைக் கடையில் சின்னதாகப் பாதி ரொட்டியை வாங்கிக் கொண்டு மெதுவாகவே நடந்து வந்தாள்.

படியேறிப் போய், யந்திரமாய் கதவைத் திறந்து, கதவருகே இருந்த ஸ்விட்சைக் கையால் தடவிப் போட்டவள், கண் முன்னே தென்பட்ட காட்சியில் விதிர்வித்து, மூளைமரத்துச் சிலையா
கிப் போனாள்!



Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 2:54 pm

சந்தனாவின் உள்ளே புழுவாய் அரித்துக் கொண்டிருந்த வலி மட்டும்


இல்லை என்றால், வீட்டில் ஒரு வேறுபாட்டை, அவள் முதலிலேயே கண்டிருப்பாள்.

அவர்களது வீட்டின் முன் கதவுக்கு மூன்றடி முன்னதாகத் தொடங்கி, வழி முழுவதும், இரும்பு கிரில் போடப் பட்டிருந்தது. கதவும் கிரில் தான். அந்தக் கதவின் பூட்டு, சாவியால் தொட்டதுமே முன்பே திறந்து கொண்டதே!

பூட்டவில்லைபோல என்று அரைகுறையாக எண்ணினாளே தவிர, அவளோ, அண்ணனோ அப்படிக் கவனம் அற்றவர்கள் அல்ல என்பது, தோன்றவில்லையே!

யாரோ... யாரோ என்ன, திருடர்கள், அந்தப் பூட்டை உடைத்து, அடுத்து, கதவிலேயே பதித்திருந்த தாளையும் எப்படியோ திறந்து, உள்ளே வந்திருக்கிறார்கள்! வந்து, பூபாலனும் அவளுமாக ஒதுக்கிக் கட்டி வைத்திருந்த எல்லாவற்றையும் பிரித்து, கலைத்து வீசி எறிந்து வீட்டைக் களேபரமாக்கிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்!

எதையெல்லாம் திருடிப் போனார்களோ?

கண்டபடி குப்பையாய் வீசி இறைத்திருக்கும் இந்தக் குவியலில் என்ன காணாமல் போயிருக்கிறது என்று எப்படித் தெரியும்?

அதற்கு முன், அந்தத் திருடர்கள் போய் விட்டார்களா? அல்லது இங்கேயே ஒளிந்து...

நெஞ்சு படபடக்க, சந்தனாவின் பார்வை அங்குமிங்கும் பாய, அவள் அச்சத்துடன் பின்னடைகையில், பின்புறம் இருந்து அழைப்பு மணி ஓசை கேட்கவும், உடல் நடுங்கப் பற்றி அலறி விட்டாள்!

அவளது அலறல் சத்தம் கேட்டு, எதிர் வீட்டில் இருந்து, அந்த வீட்டு அம்மாளும், மகனும் ஓடி வந்தார்கள்!

"சந்தனா, என்னடியம்மா? என்ன? எதற்குக்... கத்..." என்றபடி ஓடி வந்த அம்மாள், வீடு கிடந்த நிலையைப் பார்த்ததும், "ஐயோ!" என்று தானும் அலறினாள்!

"என்னடி இது? நாங்கள் சுந்தரியையும் பிள்ளையையும் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு, கொஞ்சம் முன்னால் தான் வந்தோம்! அப்போ... அம்மாடியோவ்! நம்ம ஃப்ளாட்டிலே கூடத் திருட்டா? எத்தனை பேர் வந்தார்களோ? நல்லகாலம், நீ தனியாக இருந்து, அவர்களிடம் மாட்டியிருந்தால், கடவுளே! உன்னைக் கொன்று கூட..." என்று அவள் ஏதேதோ சொல்ல, "அப்பா, அப்பா, இங்கே சந்தனக்கா வீட்டில் திருட்டு!" என்று மகன் கத்த, "என்னது? என்னது? திருடன் உள்ளே இல்லையே, முதலில் அதைப் பார்! சுந்தரிம்மா, உள்ளே பூட்டிக்கொள்!" என்று உரக்கக் கூவியபடி, எதிர் வீட்டுக்காரரும் வந்து சேர்ந்தார்.

"என்னென்ன போச்சோ தெரியலியே!"

"இரண்டு பக்க வீட்டிலும் ஆள் இல்லாதது தெரிந்துதான், திருடன் வந்திருக்கிறான்! எத்தனை பேரோ தெரியலியே!"

"நல்ல வேளை! எதிரே நம் வீட்டை உடைக்கவில்லை! பூட்டு உடைந்திருந்ததா?"

"எதெது திருட்டுப் போயிருக்கிறது என்று பார்த்தாயா?"

"அச்சோ! எதையும் தொடக்கூடாது! போலீசுக்குச் சொல்லி விட்டாயா?... டேய், நீ போய் செகரட்டரியைக் கூட்டி வா!"

இப்படி ஆளாளுக்கு ஏதேதோ பேசினார்களே தவிர, சந்தனாவின் நடுக்கம் அதிகமாவதை யாருமே கவனிக்கவில்லை!

காற்றில் ஆடும் சருகைப்போல, அவளது உடம்பு தூக்கிப் போடுகையில், "நீ முதலில் உட்காரம்மா!" என்று சோஃபாவில் கிடந்த துணிகளை ஒதுக்கி, யாரோ அவளது தோளைப் பற்றி உட்கார வைத்தார்கள்!

அப்பாடி என்று கண் மூடித் தலை சாய்த்து அமர்ந்தாள் சந்தனா.

"ஐயையோ, எதையும் தொடக்..." என்று பதறிய எதிர் வீட்டு அம்மாளின் பேச்சில் குறுக்கிட்டு, "அவளுக்கு அதிர்ச்சி! உடம்பு நடுங்குவதைப் பாருங்கள்! உடனே, குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடுக்க வேண்டும்! நிறையச் சர்க்கரை போட்டு, டீ... இங்கே சமையல் அறை எங்கே இருக்கிறது?" என்று கேட்டபடி, சந்தனாவின் சில்லிட்டிருந்த கையைப் பற்றி, வேகமாகச் சூடு வரத் தேய்த்து விட்டாள், அவளை உட்கார வைத்த பெண்மணி.

"நான் கூடப் பார்த்திருக்கிறேன் அம்மா! இனிப்பாக டீ குடித்தால், அதிர்ச்சி குறைந்து, தெம்பு வரும் என்று, வகுப்பில் முதல் உதவியில் சொல்லிக் கொடுத்தார்கள்! ஆன்ட்டி இங்கே கிச்சன், அது!" என்று காட்டினான் சுதாகர், எதிர் வீட்டுப் பையன்!

"ஏய், பொறுடா! ஏதேனும் பெரிய பொருள் போயிருந்தால், ரேகையைக் கெடுத்து விட்டீர்கள் என்று போலீஸ் தகராறு பண்ணுவார்கள்! கனகம், நீ போய் நம் வீட்டில் டீ போட்டு எடுத்து வா!" என்று மனைவியை அனுப்பினார் எதிர் வீட்டுக்காரர். "அங்கே பேத்தியைக் கொஞ்ச உட்கார்ந்து விடாமல், சீக்கிரமாக வா! சுதா, நீயும் கூடப் போய், அம்மாவை விரட்டிச் சீக்கிரம் கொண்டு வரச் சொல்லு!" என்று மனைவியையும், பின்னோடு மகனையும் அனுப்பி வைத்தார்.

அதன் பிறகே, சந்தனாவின் அருகில் அமர்ந்து, அவளது கைகளைச் சூடு வரத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணியைச் சரிவரக் கவனித்து, "நீங்கள் யார் என்று தெரியவில்லையே! இந்த வீட்டில், இதற்கு முன்னால், உங்களைப் பார்த்ததாக..." என்று இழுத்தார் அவர்!

"பார்த்திருக்க மாட்டீர்கள்!" என்றாள் அந்த அம்மாள். "இப்போதுதான், முதல் தடவையாக வருகிறேன்! நன்றி சொல்ல வந்தால், பாவம், பலன் கருதாமல் எனக்கு உதவி செய்த இந்த நல்ல பெண்ணுக்கு இப்படியொரு பிரச்சினை!" என்றாள் வருத்தத்துடன்!

உட்கார்ந்ததிலும், தொடர்ந்து, அந்த அம்மாள் கைகளைத் தேய்த்து விட்டதிலுமாக, ஓரளவு சுரனை வந்திருக்கவே, சந்தனாவும், தலை திருப்பி, அந்தப் பெண்மணியைப் பார்த்தாள்.

என்ன உதவி?

யார் இந்த அம்மாள்?

சந்தனாவின் கண்களில் கேள்வியைக் காணவும், லேசாக முறுவலித்து, "நான் தானம்மா, நீ கண்டெடுத்துக் கொடுத்த பர்சின் சொந்தக்காரி! அதில் இருந்த பணம் ஒன்றுமில்லாவிட்டாலும், அந்தப் படங்கள், எனக்கு விலை மதிப்பற்றவை!... அதற்காக நன்றி செலுத்த வந்தேன்! என் பெயர் தான், கார்டில் பார்த்திருப்பாயே, மீனாட்சி!" என்றாள் பெரியவள்.

பேச்சின் நடுவில் மீனாட்சி அம்மாளின் முகத்தில் இருள் படிந்து விலகினாற் போல, ஒரு தோற்றம்! கூடவே, இன்னும் ஏதோ புரியாதது போன்ற சிறு உறுத்தல்!

எதையும் முனைந்து கேட்கத் தோன்றாமல், அப்படியே அமர்ந்திருந்தாள், சந்தனா.

சற்றுக் கவலையுடன் எதிர் வீட்டுக்காரர் எட்டிப் பார்க்கும் போதே, ஆவி பறக்கும் டீக்கப்புடன் எதிர் வீட்டுக் கனகம் வந்து சேர்ந்தாள்! பின்னோடு, ஒரு ட்ரேயில் இன்னும் சில கப்புகளுடன், சுதாகரன்.

சந்தனாவிடம் முதல் கப்பைக் கொடுத்துவிட்டு, மீனாட்சியைப் பார்த்து, "நீங்களும் குடியுங்கள்!" என்று, அவளிடமும் ஒரு கப்பை நீட்டினாள்.

"சந்தனாதான் முக்கியம்! ஆனால், எனக்கும் தேவை போலத்தான் தோன்றுகிறது! நன்றி!" என்று கப்பை வாங்கிக் குடித்தாள் மீனாட்சி.

குடித்தபடியே, சந்தனாவின் முகத்தைப் பார்த்து, "என்னம்மா, எப்படி உன் வீட்டைக் கண்டு பிடித்தேன் என்று குழப்பமாக இருக்கிறதா? பள்ளிக் கவரில்தானே பர்சைப் போட்டுப் பாக் பண்ணியிருந்தாய்! நேரே, உன் பள்ளிக்குப் போனேன். உன் பெயரைத்தான், மருத்துவமனையில் அந்தப் பெண் வாங்கி வைத்திருந்தாளே! பள்ளியில் உன் பெயரைச் சொன்னதுமே, வீட்டு முகவரியைத் தந்தார்கள்! வந்தால்... இப்போது, கொஞ்சம் பரவாயில்லையாம்மா? என்னென்ன போயிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறாயா? போலீசுக்குத் தெரியப்படுத்தும் போது கேட்பார்கள்..." என்றாள்.

இனிப்பான டீ உள்ளே போகவும், சந்தனாவுக்குப் பழைய தெம்பு, ஓரளவு திரும்பியது போல இருந்தது!

சற்று யோசித்து விட்டு, மீனாட்சியின் கேள்விக்குப் பதிலாக, "பெரிதாகத் திருட்டுப் போக, வீட்டில் ஒன்றும் கிடையாது!, வீட்டைக் காலி செய்வதால், தங்கம், வெள்ளி எல்லாம் பாங்க் லாக்கரில் வைத்து விட்டோம்! இன்றைக்குப் பணமும் வீட்டில் வைத்திருக்கவில்லை! ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில்தான், திருடன் இப்படி வீசி எறிந்திருக்கிறான் என்று தோன்றுகிறது!" என்றாள் சந்தனா மெதுவாக.

"அதுவும் நல்ல காலம் தான்..." என்று எதிர் வீட்டுக் கனகம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மகள் சுந்தரியின் குரல் அழைக்கவும், "இதோ வந்துவிட்டேன் கண்ணு" என்றவாறு, தன் வீட்டுக்குள் விரைந்தாள் அந்த அம்மாள்.

கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்த மீனாட்சி அம்மாள், நின்று யோசனையோடு பார்க்கையில், "ஒன்றும் போகவில்லை என்றால், போலீசுக்குப் போவானேன்? சுந்தரி வீட்டு மனிதர்கள் வந்து கொண்டு இருப்பதாகத் தகவல் வந்தது! அவர்கள் இங்கே இருக்கும் போது போலீஸ்காரர்கள் வருவதும், போவதுமாக... ஏற்கனவே, ஒருதரம் பட்டாயிற்று! இப்போது எதற்கு சந்தனா?" என்றார் எதிர் ஃப்ளாட்டுக்காரர்!

அவள் தனியே இருப்பதால், சும்மாச் சும்மா தன்னையல்லவா கூப்பிடுவார்கள் என்றும் அவர் தயங்குவது, சந்தனாவுக்குப் புரிந்தது!

சுந்தரியுடைய பிள்ளையைப் பார்ப்பதற்காக, அவருடைய சம்பந்தி வீட்டார் வந்து விட்டால், அவர்களைக் கவனிக்கவே, அவருக்கு நேரம் சரியாக இருக்கும்!

அவர்களை விட்டு, எனக்காக வந்து நில் என்று அழைப்பது தப்பு!

அத்தோடு, சம்பந்தி வீட்டார் முன்னிலையில், அடிக்கடி, போலீசார் வந்து போவது நன்றாக இராது என்றும் எண்ணுகிறார்!

"அத்தோடு நீயும், உடனே ஹாஸ்டலுக்குப் போகப் போகிறாய்! போலீஸ், அது இது என்றால், குடி வருகிறவர்களுக்கு வெறுத்துப் போகும்! ஒன்றும் போகவில்லை என்றால், எதற்கு வீணாக? பேசாமல் வீட்டை ஒதுக்கி விட்டுப் படுத்துத் தூங்கி, நன்றாக ஓய்வெடு, வரட்டுமா? சுதா, கப்புகளை எடுத்துக் கொண்டு வா!" என்று கிளம்பினார் அவர்.

சந்தனாவின் விழிகள் அச்சத்தால் அகன்றன.

படுத்துத் தூங்குவதா?

இந்த வீட்டிலா?

அண்ணன் சொன்ன அடுத்த தெருத் திருட்டு நினைவு வர, அவள் முகம் வெற்றுத் தாளாய் வெளுத்தது!

அங்கே, தனித்திருந்த பெண்ணைக் கொன்றே விட்டார்கள்!

பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அந்தத் திருடர்கள், மறுபடியும் வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

இப்போதே கூட, யாரேனும், எங்கேனும் ஒளிந்திருக்கிறார்களோ, என்னவோ, என்று எண்ணும்போதே, சந்தனாவின் நெஞ்சு படபடத்தது!

அச்சத்துடன் அவளது பார்வை சுழலுவதைக் கவனித்து மீண்டும் அருகமர்ந்து, அவளது கையைப் பற்றி வருடி, "இங்கே, உன்னோடு யாரும் இல்லையாம்மா?" என்று மீனாட்சி வினவினாள்.

"இ... இல்லை..." என்ற சின்னவளின் முகம் கசங்கியது. "அப்பா... அப்பா இறந்து, அதற்கு வந்துவிட்டு, அண்ணன் இன்று தான்..." என்று தொடங்கி கண்ணீரிடையே விவரம் சொன்னாள்.

"மூன்று நாட்கள் தானே, சமாளித்து விடலாம் என்று நினைத்தேன், ஆன்ட்டி! ஆனால் இப்போது... பயம்ம்...மாக..."

வாக்கியத்தை முடிக்க முடியவில்லை அவளால்!

ஆறுதலாக அவளைத் தட்டிக் கொடுத்து மீனாட்சி அம்மாள் ஒரு யோசனை சொன்னாள். "பாரம்மா, சின்னப் பெண் நீ! இங்கே, நீ தனியே இருப்பது, அதுவும் இன்றைய நிலையில், சற்றும் சரியல்ல! ஓர் இரண்டு நிமிஷம் உட்கார்ந்திரு! இதோ வந்து விடுகிறேன்!" என்று எழுந்து எதிர் ஃப்ளாட்டுக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் வந்த வீட்டுக்காரக் கனகத்திடம், "இன்று ஒரு நாள், சந்தனா உங்கள் வீட்டில் தங்க வசதிப்படுமா?" என்று வினவினாள்!

"இல்லையே!'" என்று கையைப் பிசைந்தாள் அந்தப் பெண்மணி. "சுந்தரி... என் மகள் வீட்டில், மாப்பிள்ளை, அவர் அம்மா, அப்பா, என்று குடும்பமே வருகிறார்கள்! இரண்டு நாள் இருந்து, புண்ணியாகவாசனம் எல்லாம் முடித்துக் கொண்டு போவார்கள்! அவர்கள் வசதியைப் பார்க்க வேண்டும்!..."

"நிச்சயமாய்!" என்றாள் மீனாட்சி அம்மாள்! "ஆனால், அந்தச் சின்னப் பெண்ணைத் தனியாக விட முடியாது! அதனால்... அவளை, என் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்..." என்றவள், எதிர் வீட்டம்மாவின் முகம் போன போக்கைக் கவனித்து, "காலம் இருக்கிற நிலையில், யாரையும் நம்பி விட முடியாதுதான்! உங்கள் பையனையோ, கணவரையோ விசாரித்துத் திருப்தியானதும், காரிலேயே திருப்பி அனுப்பி விடுகிறேன்! என் கார்டு தருகிறேன். 'சுகம்' மருத்துவமனையில், பெரிய அளவில் எனக்குப் பங்கு இருக்கிறது! அங்கே கூட விசாரிக்கலாம்! அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்று கூடத் தெரியாமல் இருக்கும் எத்தனையோ ஃப்ளாட்வாசிகள் போல இல்லாமல், சந்தனாவிடம் அக்கறையாக இருக்கிறீர்கள்! அதனால் தான் உங்களிடம் கேட்க வந்தேன்!"

மீனாட்சி மேலே பேசிய விதத்தில், கனகத்துக்கு ஒரு மாதிரி மனம் குளிர்ந்தது!

மருமகன் வீட்டார் வர இருக்கும் இந்த நேரத்தில் யாரை அனுப்புவது என்று அவள் யோசிக்கையில், "என்னது?" என்று சுதாகர் அருகே வந்து, அன்னையின் கையில் இருந்த கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, "அட, இங்கேதான் என் சினேகிதன் பரசு இருக்கிறான்! அவன் ஏழில்! நீங்கள் ஆறா? வாசலில் தொடங்கி, வரிசையாக அசோக மரம் இருக்குமே!" எனவும், கனகம் நிம்மதியோடு தலையாட்டினாள்.

"உங்களுக்கு வீண் தொல்லை. ஆனால், நன்றி ஆன்ட்டி! என்னாலும், இன்று, இங்கே தனியாக இருக்க முடியாதுதான்!" என்று எல்லையற்ற ஆறுதலோடு, சந்தனாவும் மீனாட்சியோடு கிளம்பி வி
ட்டாள்.






Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 3:13 pm

மீனாட்சி அம்மாளின் வீட்டுக்குக் கிளம்பிய போது, அன்று ஒரு நாளை மட்டும் தான், சந்தனா மனதில் எண்ணியிருந்தாள்.

அன்றைக்கு அந்த அவர்களது ஃப்ளாட்டில் தங்குவது, தன்னால் முடியாது என்பது மட்டும் தான் அவள் மனதில் இருந்தது.

அதற்குச் சரியாக, மீனாட்சி அம்மாளும் அவளது வீட்டுக்கு அழைக்கவும், வேறு எதையும் யோசியாமலே, அவள் கிளம்பி விட்டாள்.

எதிர் வீட்டுப் பெண்மணியும், அதற்குச் சாதகமாகப் பேசினாள் என்பது நிம்மதியைத் தந்தது.

இல்லையென்றால், நல்லது நினைக்கும் ஒருத்தியை எதிர்த்துக் கொண்டு வந்தோமே என்று, அவளுக்கு உறுத்தியிருக்கும்.

ஆனால், அவளது ஒப்புதல், சந்தனாவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரவே, புது இடத்துக்குப் போகிறோம் என்கிற உணர்வே இல்லாமல், காரிலேயே, அவளுக்குத் தூக்கம் வந்து விட்டது.

"அதிர்ச்சியின் பின் விளைவு!" என்று மீனாட்சி சொன்னது, லேசாகக் காதில் விழுந்தது. அப்புறமாக, அண்ணா நகரில் மீனாட்சி அம்மாளின் வீட்டு வாயிலில், அவள் எழுப்பியது தான் சந்தனாவுக்குத் தெரியும்.

அவ்வளவு ஆழ்ந்த தூக்கம்!

மீனாட்சி அம்மாளின் வற்புறுத்தலுக்காக இரண்டு தோசைகளை விழுங்கி விட்டுப் பழக்க தோஷத்தில் பல்லைத் துலக்கி, அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் கிடந்த படுக்கையில் விழுந்தவள், மீண்டும் சில மணி நேரம், உலகை மறந்து உறங்கினாள்.

அதன் பிறகு... அந்தக் கனவு!

ஏதோ ஒரு பயணம்!

சந்தனாவும், அவளுடைய தந்தையும் சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்! வண்ண வண்ணப் பூக்களுடன் கூடிய செடிக் கொடிகளும், மரங்களும் நிறைந்த மலையில், அவற்றை ரசித்தபடி, ஆனந்தமாக ஏறிப் போகிறார்கள்!

திடுமென பேய்மழையுடன் சூறைக்காற்று எங்கிருந்தோ வீசக் கண் மண் தெரியாமல் ஓடுகிறார்கள்! ஓடிக் கொண்டே பார்த்தால், அவள் மட்டுமாய்த் தனியே ஓடிக் கொண்டு இருக்கிறாள்! அவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தெரிகிறது!

அந்த இருட்டு, மழையில் பதறிக் கொண்டு, தந்தையைத் தேடுகிறாள்! திடுமென அவரது திகைத்த முகம் மட்டும் தூரத்தில் தெரிகிறது! ரத்தக் காயங்களுடன்!

ஓடி அவரை அடைகிற வேகத்தில் கீழே விழுந்து, உடல் நடுங்க எழுந்து அமர்ந்த சந்தனாவுக்குச் சற்று நேரம், சுற்றுச் சூழல் ஒன்றுமே புரியாத நிலை! கண்களைக் கசக்கி, கைகால்களை உதறி, தலையை உலுக்கி, ஒருவாறு தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்ட பிறகே, கனவு வேகத்தில் படுக்கையில் இருந்து, உருண்டு கீழே விழுந்திருப்பது அவளுக்குப் புரிந்தது!

இங்கே எப்படி வந்திருக்க முடியும் என்பதும்!

இது, அந்த நல்ல பெண்மணி மீனாட்சி அம்மாளின் வீடு!

திருட்டு நடந்த வீட்டில், சந்தனா தனித்திருக்க வேண்டாம் என்று, தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

அந்தப் பர்சைத் திருப்பிக் கொடுத்த ஒரே காரணத்தால்! நல்லது செய்தால், நல்லதே நடக்கும் என்று, தந்தை சொல்வது சரிதான்!

ஆனால், அந்தக் கனவு!

வாழ்நாள் முழுவதும், அது அவளைத் தொடருமா?

திருப்பித் திருப்பி, அதே கனவு என்று இல்லை!

முந்தியது, கடலில் ஒரு படகுப் பயணம்!

புயலில், ஒரு பனிப் பாறையில் படகு மோதிக் கவிழ்கிறது!


ஆனாலும், அதிலும், இதே போலத் தந்தையைத் தேடி அலைகிறாள்! கடைசியில் ரத்தம் வழியத் தந்தையின் திகைத்த முகம்.

அண்ணன் கூட இருந்தபோது, தந்தையின் பகுதியை மட்டும் விட்டுவிட்டு, அவனிடம் தன் கனவை விவரித்தாள்.

வேடிக்கையில் பிரியம் உள்ள அவன், "பனிப் பாறையா? டைட்டானிக் எத்தனை தடவை பார்த்தாய், அருமைத் தங்கையே? அதில் உள்ள காட்சி கனவாகவே வரத் தொடங்கி விட்டதே!" என்று சிரித்தான்.

கூடச் சேர்ந்து முறுவலித்துவிட்டு, சந்தனா சும்மா இருந்து விட்டாள்.

இது, தந்தையின் மறைவுடன் தொடர்பு உள்ள ஒன்று என்பது, அவளுக்கு நிச்சயம்! அதைச் சொல்லி, அவனையும் புண்படுத்துவானேன்?

ஆனால், இன்றையக் கனவில், சந்தனா சற்று அதிகமாகவே மிரண்டு போனாள். வாழ்க்கை முழுவதும், இந்தப் பயங்கரமான கனவுகள், அவளை வருத்தப் போகின்றனவா?

மெல்ல எழுந்து, படுக்கையில் அமரப் போனவள் தயங்கினாள்.

இத்தோடு, அப்படியே படுத்துத் தூங்கி, மறுபடியும் அந்தக் கனவு வந்து விட்டால்?

கனவில் தந்தையைப் பார்க்கையில், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது! அதுவும், அப்பா இறந்து விட்டதாக நினைத்தோமே இதோ இருக்கிறாரே என்று இரட்டிப்பு சந்தோஷம்!

ஆனால், அவரைக் காணாமல், அதுவும் பயங்கரமான சூழ்நிலையில் இங்கும் அங்குமாய், அவரைப் பதற்றத்துடன் தேடும் போது... இன்னொரு தரம் அதைத் தாங்க முடியாது!

இன்னமும், குளிர் காய்ச்சல் வந்தது போல, உள்ளே நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.

கொஞ்சம் நடந்து உடலில் சூடேறினால், இந்தப் படபடப்பும், பதற்றமும் குறையக் கூடும்! ஆனால், அடுத்தவர் வீட்டில், அதுவும் முதல் முதலாக வந்திருக்கையில், இரவில் தனியே அங்குமிங்கும் அலைவதும் தப்பு! யாரும் பார்த்தால் தப்பாக எண்ணத் தோன்றும்!

அதுவும், முதல் முதலாக அன்றுதான் சந்தித்த ஒருத்தியை, அந்த அம்மா நம்பி வீட்டுக்குக் கூட்டி வந்திருப்பதே அதிசயம் என்கையில்...

யோசித்துவிட்டு, விளக்கைப் போட்டவள், படுக்கையில் தலைப்புறமாக ஒரு சிறு முக்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தோட்டத்துப் புறமாக இருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி நின்றாள்.

தோட்டத்திலிருந்து வந்த மிதமான குளிர் காற்று, முகத்தில் மோதிச் செல்கையில், உடலும் மனமும், மெல்ல இறுக்கம் தளர்வதை உணர்ந்தாள்.

இந்தப் பெரிய தோட்டத்தில் காலார நடந்தால், இன்னமும் நன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணியபடியே பார்த்தவளுக்கு, உள்ளூர ஒரு திகைப்பு உண்டாயிற்று!

அவள் இருந்த அறைக்கு, ஓர் அறை தள்ளி, இன்னோர் அறையில் இருந்தும், ஜன்னல் வழியே, விளக்கொளி, தோட்டத்தில் விழுந்து கொண்டிருந்தது!

ஒரு பெண் தலையின் நிழலும் கூட!

அது மீனாட்சி அம்மாளாக இருக்கும் என்று சந்தனாவால், ஊகிக்க முடிந்தது! ஆனால் இரவில் தூக்கமின்றித் தவிக்கும் அளவுக்கு அந்த அம்மாவுக்கு என்ன துன்பம்? மருத்துவமனைக்குக் கூடப் போயிருந்தாரே?

எந்தத் துன்பமும் இருக்கக் கூடாது கடவுளே என்று வேண்டிக் கொண்டு, கூடவே, வேறு கனவு எதுவும் வரக் கூடாது என்று தனக்காகவும் கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு, சந்தனா, விளக்கை அணைத்து விட்டுப் பிடிவாதமாகப் படுக்கப் போனாள்.

இன்னும் ஓரிரு மணி நேரமாவது, கட்டாயமாகத் தூங்கியாக வேண்டும்!

ஒழுங்கான உறக்கம் இல்லாவிட்டால், பள்ளியில் சரியானபடி பாடம் எடுக்க முடியாது! அத்தோடு, அங்கே வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை வேறு இருக்கிறது!

சற்று அதிகாலையிலேயே எழுந்து, ஒட்டியிருந்த குளியலறையில் குளித்து, மீனாட்சி அம்மாளின் உந்துதலின் பேரில், முந்திய நாள் இரவு எடுத்து வந்திருந்த சல்வாரில் அவள் வெளியே வந்த போது, பணியாள் போலத் தோன்றிய ஒரு பெண் அவளை அழைத்துப் போக வந்திருந்தாள்.

"அம்மா கூட்டி வரச் சொன்னாங்க."

சாப்பாட்டு அறையில், வீட்டு எஜமானி காத்திருந்தாள்.

இரவு சரியாக தூங்காததின் அடையாளமாக அவளது கண்களைச் சுற்றிலும் கருவளையத்தைக் கண்ட சந்தனாவுக்கு, அதன் காரணம் தானோ என்று ஒரு சந்தேகம் திடுமெனத் தோன்றி வாட்டிடலாயிற்று!

என்னவோ இரக்க குணத்தினால், அவளை அழைத்து வந்து விட்ட போதும், அவளைப் பற்றி மீனாட்சி அம்மாளுக்கு என்ன தெரியும்? இந்தப் பெண் எப்படிப் பட்டவளோ, என்னவோ என்று, அதன் காரணமாக விழித்திருந்தாள் என்றால்?

ஆனால், சந்தனாவைக் கண்டதும் மீனாட்சி முகம் மலர்ந்த விதம், அந்தக் குன்றலைப் போக்கி, அவளுக்கு நிம்மதி அளித்தது.

"வாம்மா! வா, உட்கார். காலையில் உனக்கு என்ன சாப்பிட்டுப் பழக்கம்? காபியா? டீயா? பலகாரத்தோடா? அப்புறமா அல்லது..." என்று கேட்டுக் கொண்டே போனவளைப் புன்னகையோடு, இடைமறித்து, "எப்படி என்றாலும் ஒன்றுதான் ஆன்ட்டி! எப்படியும் பள்ளிக்குக் கிளம்புமுன், ஒரு காபி பழக்கம்! அவ்வளவுதான்! இப்போது வெறும் காபி மட்டும் தந்தீர்களானால், சீக்கிரமாக வீட்டுக்குப் போய், பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு, பள்ளிக்குப் போக நேரம் சரியாக இருக்கும்..." என்றவள், மீனாட்சி அம்மாளின் கண்கள் பளிச்சிடவும், சிறு திகைப்புடன் அவளை நோக்கினாள்.

"நீ அவசரப்படுவது சரிதான் என்று நினைத்தேன்! பள்ளிக்குத் தாமதமாகப் போனால் பெஞ்சில் ஏற்றிவிட மாட்டார்களா, என்ன?" என்று பெரியவள் முறுவலிக்கவும், சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிட்டது!

அவள் ஆசிரியை! அவளைப் போய்ப் பெஞ்சில்...

சிரித்துவிட்டு, "அப்பா அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆன்ட்டி! கற்றுக் கொடுப்பவர்களே தாமதமாகப் போனால், பிள்ளைக்கு நேரம் தவறாமை எப்படி வரும் என்று இதில் ரொம்பக் கண்டிப்பு" என்ற பெண்ணின் முகம், தந்தையின் நினைவில், லேசாக வாடியது!

கவனியாதது போல, "முதலில் சாப்பிடு நேற்றுக்கூட இரவில் சரியாகச் சாப்பிடவில்லை! இப்போதும் பட்டினியாகப் போனால், பிள்ளைகளுக்குச் சரியாகக் கத்த எப்படி முடியும்? கார், அந்தப் பக்கம் போக வேண்டியிருக்கிறது! அப்படியே, உன்னைக் கொண்டு விடச் சொல்லுகிறேன். இப்போது நாம் சாப்பிடுவோம்!" என்ற மீனாட்சி, உட்புறமாகப் பார்த்து ஏதோ சைகை செய்யவும், உள்ளிருந்து வந்த பணிப்பெண், தட்டு வைத்துப் பரிமாறலானாள்.

இதற்கு மேல் மறுப்பது நன்றாயிராது. கூடவே, காரைக் கூடத் தனக்காக மட்டுமே தான் அனுப்புகிறாள் இந்த அன்பான பெண்மணி என்றும் தோன்றிய போதும், இன்னொரு காரணம் சொல்லும் போது, அதையும் தான் எப்படி மறுப்பது?

இரவு தூங்காதது பற்றிக் கேட்கலாமா என்று சந்தனா யோசிக்கும் போதே, "இரவில் நீ சரியாகத் தூங்கவில்லையேம்மா! புது இடம் என்பதாலா? அல்லது... அப்பா... அங்கே வீடு பற்றியா?" என்று மீனாட்சி வினவினாள்.

"எ... எல்லாம் சேர்ந்து என்று நினைக்கிறேன்..." என்ற பதிலுடன், ஒரு கணம் மௌனமாக இருந்தவள், உடனேயே, "நீங்களும் தூங்கவில்லையே, ஆன்ட்டி?... உடம்புக்கு ஒன்றுமில்லையே? டாக்டரிடம் வேறு போய் வந்திருக்கிறீர்கள்?" என்று மனதில் சிறு உறுத்தலோடு வினவினாள்.

உச்சுக் கொட்டிவிட்டு, "கொஞ்ச நாளாக சிறு படபடப்பு! அது, பெரிதாக ஒன்றும் இல்லை!" என்றாள் விட்டேற்றியாக.

ஆரோக்கியம் பற்றி மீனாட்சி காட்டிய அலட்சியத்தோடு, வீட்டு மனிதர்களாக அதுவரை யாரும் கண்ணில் படாததும் மேலும் மனதை உறுத்த, "வீட்டில் வேறு யார்... நீங்கள் த... தனியாகவா இருக்கிறீர்கள், ஆன்ட்டி?" என்று கவலையுடன் வினவினாள் சின்னவள்.


"தலைவிதி!" என்றாள் மீனாட்சி கசந்த குரலில், சுருக்கமாக.

"ஆன்ட்டி..."

சந்தனாவை நிமிர்ந்து பார்த்த மீனாட்சியின் முகத்தில் சிந்தனை தெரிந்தது!

"வாம்மா... ஹாலில் உட்கார்ந்து காபியைக் குடிப்போம்! அப்படியே, நானும் உன்னோடு கூட வருகிறேன்.. உனக்குத் துணையாக இல்லை! மருத்துவமனையில் சில கணக்குகள் பார்க்க வேண்டும்! அத்தோடு... ஒரு யோசனை! வாயேன் யோசிப்போம்!"

காரில் செல்லும் போதுதான், மீனாட்சி தன் யோசனையைச் சொன்னாள்.

சந்தனா தன்னந் தனியே அந்த வீட்டில் மூன்று தினங்களைக் கழிப்பதை விட, மீனாட்சியின் வீட்டிலேயே இருந்து விட்டால் என்ன?

ஒன்றாம் தேதி குடிவரும் ஆட்களுக்காக வீட்டை ஒதுக்கிக் கொடுப்பது ஒன்றுதானே, அந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலை? சந்தனாவின் துணிமணிகளை எடுக்கச் செல்லும் போது, இரண்டு ஆட்களைக் கூட்டிப் போய், அதைச் செய்து விடலாம்!

சந்தனா அந்த வீட்டில் தனியே இருக்க வேண்டாம் என்பதற்காகச் சொல்லுகிறாள்! ஆனால், ஒரு பிரியமாக இருக்கிறாள் என்பதற்காக அவள் தலையிலேயே சுமையாய் ஏறி உட்காரலாமா? அது தப்பு அல்லவா?

"ஆன்ட்டி, வேண்டாம். என்னைத் தூண்டாதீர்கள்! என் பொறுப்பை நான் தான் செய்ய வேண்டும்! உங்களிடம் தள்ள முடியாது! அத்தோடு, இந்த ஒரு நாள் நீங்கள் செய்ததே பெரிய உதவி! இதற்கு மேல், நான் உங்களைத் தொல்லை செய்வது தப்பு!" என்றாள் சந்தனா.

"தொல்லையே அல்லம்மா!" என்றாள் பெரியவள், "வீட்டில், எந்த வேலையையும் நான் செய்வது இல்லை! அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வீட்டில் நான் தனியாக அல்லவா இருக்கிறேன்! நீயே கவலையாகக் கேட்டாயே, அப்படிக் கேட்க நாதியற்ற தனிமை! சந்தனா எனக்கு என்னவோ, உன்னைப் பார்த்ததுமே, முற்பிறவிப் பந்தம் போல மிகவும் பிடித்துப் போயிற்று! நீ, இங்கே சில நாட்கள் இருப்பாய் என்றால், சில நாட்கள் என்ன? எப்போதுமே இருந்தாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. எனவே உனக்காக என்று எண்ணாமல், எனக்காக, என் மகிழ்ச்சிக்காக, இங்கே வாயேன்!" என்றாள் வற்புறுத்தலாக!

"ஆன்ட்டி, நீங்கள் சொல்வதைக் கேட்டால், என்னவோ, உங்களுக்காக நான் தான் தியாகம் பண்ணுகிற மாதிரி, எனக்கே தோன்றிவிடும் போல இருக்கிறது! ஆனால், அது பொய் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்! அத்தோடு அண்ணா நகரில் இருந்து, எங்கள் பள்ளிக்கு வருவதும் ரொம்பக் கஷ்டம், ஆன்ட்டி! நேர் பஸ்சில் கூட, ஒரு மணி நேரத்துக்கு அதிகம் ஆகும்."

"பஸ்சில் போனால்தானே? தினமும், 'சுக'த்திலிருந்து எனக்குக் கணக்கு வழக்குகளும், அன்றாட நிலவரங்களும் வரும். அவைகளில் கையெழுத்திட்டுக் காலையில் அனுப்புவேன்! அதே காரில், நீ பள்ளிக்குப் போய் வாயேன்! முதலில், இன்றோடு சேர்ந்து இந்த மூன்று நாட்கள் நம் வீட்டிலேயே இரு! அதன் பிறகு மற்றதைப் பார்ப்போம்!"

மீனாட்சி அம்மாள் தனிமையின் கொடுமையில் மிகவும் நொந்து போயிருக்கிறாள் என்பது, சந்தனாவுக்குப் புரிந்தது!

பார்க்கப் போனால், சந்தனாவுக்கும், இப்போது கிட்டத்தட்ட அதே நிலைதான்! அக்கறை காட்ட யாருமற்ற தனிமை!

ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்! மீனாட்சி அம்மா, ஓர் இக்கட்டில் உதவியவளும் கூட! ஒரு மூன்று நாட்கள், அவளோடு கூட இருப்பதில் என்ன தப்பு?

இப்படித்தான் சந்தனா, மீனாட்சி அம்மாவின் வீட்டுக்கு வந்தது! மூன்று நாட்களுக்காக மட்டுமே என்று!

ஆனால், அந்த மூன்று நாட்களில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், பெண்கள் விடுதியைப் பற்றிய நினைவையே, சந்தனாவின் மனதில் இருந்து அகற்ற
ி விட்டது!


Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 3:37 pm

மும்பையில் இருந்து, பூபாலன் பள்ளி எண்ணுக்கு போன் செய்த போது, மீனாட்சி அம்மாவைப் பற்றிய எதையுமே, சந்தனா அவனிடம் சொல்லவில்லை!

திருட்டு, எதிர் வீட்டாரின் உதவ முடியாத நிலை பற்றியெல்லாம் சொன்னால், மற்றதை மறந்து, உடனேயே சென்னைக்கு வந்து நிற்பான்! அவனது எதிர்காலம், பாழாகிப் போகும்!

எனவே, எந்தவிதச் சந்தேகமும் தோன்றாதபடிக்கு, முன்பு திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதுபோலத் தோன்றுமாறு, பேசிவிட்டு போனை வைத்தாள்.

அன்று பள்ளி முடிகிற நேரத்துக்கு, மீனாட்சியும் வந்து விட, இருவருமாகச் சந்தனாவின் வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டைப் பார்த்த பிறகு, தன் வீட்டுக்கு வருமாறு மீனாட்சி அவளை வற்புறுத்தத் தேவையே இருக்கவில்லை!

இங்கே, தனியே இருக்க முடியாது என்பது, சந்தனாவுக்கு, சர்வ நிச்சயமாகத் தெரிந்து போயிற்று!

அதே போல, மீனாட்சி அம்மாவைப் பிரிந்து, ஏதோ ஒரு புதிய இடத்தில் வசிப்பது முடியாது என்றும், அடுத்த மூன்று நாட்களில், அவளுக்குத் தெரிந்து போயிற்று!

அந்த அளவுக்கு, மீனாட்சி பிரியமாக இருந்தாள்!

பிரியம் என்றால், அன்பைக் கொட்டி அமுக்குவது போல அல்ல! சும்மா கேலியும், சிரிப்புமாகவே!

விருந்தோம்பல் என்கிற பெயரில், அளவு மீறித் திணிப்பது இல்லை!

அவள் நினைத்ததற்கு ஓர் இட்லியோ, ஒரு ஸ்லைஸ் ரொட்டியோ, சந்தனா குறைவாக உண்டாள் என்றால், "எனக்கும் ஒரு டிக்கெட் இலவசமாகத் தருவாய் அல்லவா?" என்று கேட்பாள்!

முதலில் புரியாமல், "எதற்கு டிக்கெட்?" என்று சந்தனா கேட்டதுண்டு!

பதிலாக, "அதுதானம்மா, நீ கலந்து கொள்கிற அழகிப் போட்டிக்கு!" என்பாள் சாதாரணமாக.

"நானா? அழகிப் போட்டியா?" என்று சந்தனா குழம்புகையில், "ஆமாம்மா! அதற்குத்தானே, ஒல்லியாக ஒடிந்து விழுகிற மாதிரி இருக்க வேண்டும்? அப்படி மெலிவதற்காகத்தானே, நீ இப்படிச் சாப்பாட்டைக் குறைக்கிறாய்?" என்று அப்பாவி பாவனையில் மீனாட்சி கண்ணை உருட்ட, சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிடும்!

முதல் தடவை இப்படிக் குழம்பிய போதும், அடுத்த முறை "தரலாம்! ஆனால் அப்புறம் உங்களுக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை வந்துவிட்டால், எனக்குப் பரிசு எப்படிக் கிடைக்கும்? அதனால், தரவே மாட்டேன்!" என்று சந்தனா பதில் கொடுக்க, மீனாட்சி விழுந்து விழுந்து சிரிப்பாள்!

நேரமாகிவிட்டது என்று வேகமாகச் சென்றால், "பார்த்துப் போம்மா! எங்கள் அண்ணா நகரில், நிறையப் புதையல்கள் உண்டு. அங்கங்கே விழுந்து, அதையெல்லாம் நீ தட்டிக் கொண்டு போய்விட்டால் எப்படி?" என்பாள்.

"பரவாயில்லை! உங்களுக்கு மட்டும், புதையலில் கொஞ்சூண்டு பங்கு தருகிறேன்!" என்று சந்தனாவும் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போவாள்!

இந்தக் கேலி, சிரிப்புகளூடே, மீனாட்சியை உள்ளூர ஒரு சோகம் அரிப்பதைச் சந்தனா கண்டு பிடித்திருந்தாள்.

யாரும் கவனியாத போது, எங்கேயோ நிலைக்கும் பார்வை, ஒரு சின்ன வார்த்தையில் கண்ணில் தோன்றும் நிராசை...

காரணம் என்னவாக இருக்கும் என்று தெரிந்தால், இந்த வருத்தத்தை குறைக்க முயற்சி செய்யலாமே என்று தோன்றினாலும், அது பற்றிக் கேட்க, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது! அதிகப்படி உரிமை எடுத்துக் கொண்டு மூக்கை நுழைப்பது போலத் தோன்றி விடக்கூடாதே என்ற பயம்!

அந்தரங்கங்களை, அவரவராகத்தான் சொல்ல வேண்டும்! தூண்டித் துருவி அதிகப்படுத்தி விடக் கூடாது என்கிற இன்னோர் அச்சமும் அவளுக்கு இருந்தது!

எனவே, எதையும் பாராதது போலக் காட்டிக் கொண்டு, பெரியவளைச் சிரிக்க வைப்பதில் முனைவாள் சின்னவள்!


மீனாட்சியும் முட்டாள் அல்ல! சந்தனாவின் முயற்சியைப் புரிந்து கொண்டு, தானும் முயன்று எதையாவது சொல்லி நகைக்க முயற்சிப்பாள். சற்று நேரத்தில் அது மெய்யான சிரிப்பாகவே மாறிவிடும்!

உடல்நிலையைப் பற்றி அதிக அக்கறையற்று மீனாட்சி அம்மாள் இருப்பதைக் கவனித்து, அவளது மாத்திரை, மருந்துகளைப் பற்றிக் காலை, இரவு வேளைகளில் நினைவூட்டுவதையும், சந்தனா வழக்கமாக்கிக் கொண்டாள்.

அந்த மூன்று தினங்களிலேயே, இப்படி ஒருவருக்கொருவர் காட்டிய அக்கறையும், கரிசனமும், இருவரையும் பிணைத்து விட, தன் வீட்டிலேயே தங்கி விடும்படி மீனாட்சி மீண்டும் கேட்ட போது, சில நிபந்தனைகளோடு, சந்தனாவும் விருப்பமாகவே சம்மதித்தாள்.

முதலாவதாகத் தன் முடிவின் காரணங்களை, அண்ணன் பூபாலனிடம் தெரிவித்தாள்.

தங்கையின் மன அமைதி, மகிழ்ச்சி, பதுகாப்பு முதலியவற்றை முக்கியமாகக் கருதிய பூபாலனும், தன் நண்பர்கள் மூலம் மீனாட்சி அம்மா பற்றி விசாரித்து விட்டு, அவளது முடிவை நல்லவிதமாகவே ஏற்றான்.

அடுத்து, தன் செலவுக்கான பணத்தை மீனாட்சி வாங்கிக் கொண்டே ஆகவேண்டும் என்பதில் சந்தனா பிடிவாதமாக இருந்தாள்.

"என்னம்மா, வீட்டில் பொதுவாகச் செய்வதுதானே? உன் ஒருத்திக்காக, அதிகமாக என்ன ஆகிவிடப் போகிறது?" என்று பெரியவள் ஆட்சேபித்த போது, "ஒட்டுண்ணியாக உறிஞ்சி வாழ என்னால் முடியாது ஆன்ட்டி! அங்கே, அண்ணன் பார்த்து வைத்திருக்கும் விடுதியில் உள்ள கட்டணம் நீங்களும் வாங்கிக் கொள்ள வேண்டும்!" என்றாள் உறுதியான குரலில்.

"இல்லாவிட்டால், நான் இங்கே இருக்க முடியாது, ஆன்ட்டி!" என்றாள் மென்மையாகவும்.

"சரிம்மா!" என்று விட்டுக் கொடுத்த போதும், "ஆனால் அந்த மாதிரி விடுதி எல்லாம் லாப நோக்குடன் நடத்தப்படுகின்றவை! உன்னிடம், நான் சம்பாதிக்க வேண்டுமா? குறைத்துக் கொடு!" என்றாள் மீனாட்சி.

சந்தனாவும் இறங்கி வந்து, விடுதிச் செலவில் எழுபத்தைந்து சதவீதம் கொடுப்பதாக முடித்தார்கள்!

அதே போல, அவளுக்காக காரை அனுப்புவதையும், சந்தனா ஒப்புக்கொள்ளவில்லை.

ஏனெனில், மீனாட்சியின் பார்வைக்கான காகிதங்கள், காரில் அனுப்பப்படுவது இல்லை என்று அதற்குள் அவள் கண்டுபிடித்திருந்தாள். ரகசியமான குறிப்புகள் கூரியர் மூலமும் மற்றவை, அந்தப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பணிகுச் சென்று வரும் ஒருவரிடமும் அனுப்பப்பட்டன. திருப்பி அனுப்புவதும், அப்படித்தான்.

எனவே, பள்ளிக்குச் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் வேன் ஒன்றில் ஏற்பாடு செய்து கொண்டாள்.

தடுக்க மாட்டாமல், "ஆனாலும், உனக்குக் கொஞ்சம் அதிகப்படியான சுதந்திர புத்திதான்! உன் அப்பா உன்னைப் பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டார்!" என்று மீனாட்சி குறைப்பட்ட போது, "இல்லாவிட்டால், இந்தக் காலத்தில் வாழவே முடியாது ஆன்ட்டி! நசுக்கி விடுவார்கள்! தைரியம், புருஷ லட்சணம் மட்டுமல்ல, இப்போது பெண்கள் லட்சணமும் கூடத்தான்!" என்று சந்தனா சிரிக்க, மற்றவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்!

இரு பெண்களுக்கும், வயது வேற்றுமையை மீறிப் பல விஷயங்களில் மனம் ஒத்துப் போயிற்று!

பொது விஷயங்களில், உணவுச் சுவையில்... இலகுவாகப் பேசியபடி காலாற நடப்பதில்கூட!

'பெஞ்சில் ஏற்றுவது' என்று, மீனாட்சி கூறிய அப்போதிலிருந்தே, அவளுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்ற ஊகம், சந்தனாவுக்கு இருந்தது! அவளுடைய தந்தையும், மகளுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார்!

எனவே, வீட்டில் அடிக்கடி சிரிப்புச் சத்தம் கேட்கலாயிற்று!

ஒரு நாள் பள்ளி வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தைத் திருத்திக் கொண்டிருந்த சந்தனா, திடுமென வாய்விட்டுச் சிரித்தாள்!

கேள்வியாக நோக்கிய மீனாட்சியிடம், "ஒன்றுமில்லை, ஆன்ட்டி! குறிக்கோளை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று கேள்வி. இவன், முதலில் நாம் தாயாராக வேண்டும் என்று எழுதியிருக்கிறான்," என்று விளக்கவும் "தயார், தாயாராகிவிட்டதா?" என்று மூத்தவளும் சேர்ந்து நகைத்தாள்.

அதே போலச் சந்திரனில் பேசினால் கேட்காது. ஏன் என்று கேட்டால், பேசுவதற்கு அங்கே மனிதர்கள் இல்லாததுதான் காரணம் என்று பதில் சொன்ன புத்திசாலியைப் பற்றி, ஒருநாள் சந்தனா மீனாட்சியிடம் விவரித்தாள்.

"ஒலி பயணம் செய்யத் தேவையான காற்று இல்லாததால் தான் என்று சொல்லிக் கொடுத்தாலும், ஒத்துக் கொள்ளாமல் எப்படியும் பேசுவதற்கு மனிதர்கள் இருந்தால் தானே, அவர்கள் பேசுவது கேட்கும் என்று அதிலேயே நிற்கிறாள். ஆன்ட்டி! சொல்லிச் சொல்லிப் பார்த்து, அலுத்துப் போய், காற்று பற்றி எழுதினால், மதிப்பெண் கிடைக்கும் மற்றது எழுதினால் முட்டை கிடைக்கும் என்ற பிறகுதான், அவள் ஓரளவு வழிக்கு வந்தாள், ஆன்ட்டி! இத்தனைக்கும், கண்ணாடிக் கதவுக்கு அந்தப் பக்கம் நின்று, பேசிக் கூடக் காட்டிவிட்டேன். அப்படியும் சந்திரனில், கண்ணாடிக் கதவு கிடையாது மிஸ், என்று எனக்குக் கற்றுத் தருகிறாள், அந்த புத்திசாலி!" என்றாள் சந்தனா, சிரிப்புடனேயே.

இதுபோல, மீனாட்சியும் சொல்லுவாள்!

அவளுடைய தோழி ஒருத்தியைப் பெண் பார்க்க வந்தார்களாம்! "அப்போதெல்லாம், ரேடியோதான் சந்தனா. தோழி வீட்டில் புதிதாக ரேடியோ வாங்கியிருந்தார்கள்! சத்தமாக வைத்திருந்தார்கள்! விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சி! அப்போதே பழைய பாடல் ஒன்று, ரொம்பப் பிரிபலமானது! 'வாட்டசாட்டமான காட்டுப் பயல் வந்தானம்மா, இந்த வீட்டில் நுழைந்தானம்மா' என்று ரேடியோ பாடுகிறது. மாப்பிள்ளை வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார்! நாங்களெல்லாம் எப்படிச் சிரித்திருப்போம் என்று, நீயே கற்பனை செய்து பார்!"

சிரித்து விட்டு, "கற்பனை செய்யும் போதே, ஒரு சின்ன சந்தேகம், ஆன்ட்டி! பெண் பார்க்க வந்தது, தோழியையா? அன்றி, உங்களையா?" என்று சாதுவாய் விசாரித்தாள் சந்தனா.

"போக்கிரி, வாயைப் பார்! அங்கிள், அந்தக் காலத்து டாக்டர்! முழுக்கைச் சட்டையும், டையுமாகக் கம்பீரமாக இருப்பார்! அவரைப் போய்க் காட்டுப் பயல் என்கிறாயா? உன்னை..." என்று சந்தனாவின் காதைத் திருகுவது போலப் பாவனை செய்தாள், மீனாட்சி!

"ஐயோ!" என்று வலிப்பது போல், சின்னவள் நடிக்க, இருவருமே, சிரிப்பில் மூழ்கினர். இப்படிப் பழைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்கையில், ஒரு நாள், "முன்பு ஒரு விளம்பரம் வரும், சந்தனா, 'நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? பலவீனமாக இருக்கிறீர்களா?' என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டுவிட்டுக் கடைசியாக, இந்த டானிக்கைச் சாப்பிடுங்கள் என்று, விளம்பரம் முடியும்! விளம்பரங்களைக் கிண்டலடிப்பது, தீபுவுக்கு, மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு!..." என்று தொடங்கி, முதல் முறையாக மகனைப் பற்றி, மீனாட்சி அம்மா பேசினாள்!... "இந்த ஒவ்வொரு கேள்விக்கும், 'ஆமாம்... ஆமாம்.. அட ஆமாம்ப்பா' என்று சொல்லிக் கொண்டிருப்பான்! இன்று, ஒரு கேள்வியாக, 'நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறீர்களா?' என்று விளம்பரத்தில் கேட்க, இவனும் சற்றும் யோசியாமல், 'ஆமாம்ப்பா, ஆமாம்!" என்று சொல்லிவிட்டு, அதே சமயத்தில் அறைக்குள் தற்செயலாகச் சென்றுவிட்ட என்னைப் பார்த்து விழித்தான் பார்! இப்போதும், அந்த முகம் கண்ணிலேயே நிற்கிறது!" என்று நகைத்தாள் பெரியவள்.

கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு, "தீபு என்றால் உங்கள் மகனா ஆன்ட்டி?" என்று வினவினாள் சந்தனா.

கண்களில் மெல்லச் சிரிப்பு மறைய, "ஆமாம்! பிள்ளையே பிறக்காதோ என்றிருந்த சமய்ம் உண்டாகிப் பிறந்தான்! எங்கள் வாழ்வில் ஒளியேற்றப் பிறந்தவன் என்று, இந்தப் பெயர் வைத்தோம்! ஆனால், அவன் அயல் நாட்டுக்கு ஒளியேற்றப் போய்விட்டான்..." என்ற மீனாட்சி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிப் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பது போலும் என்று சந்தனாவுக்குத் தோன்றியது.
இப்போது ஒரு நெகிழ்வில் வாயை விட்டுவிட்டு, அப்புறம் ஏன் சொன்னோம் என்று வருந்துவது, அன்பில் விரிசல் விழ வைத்துவிடும்! அப்படி விரிசல் விழுந்து, கிட்டத்தட்ட தாய் போல எண்ணத் தொடங்கியிருந்த, இந்தப் பிரியமான பெண்மணியைப் பிரிய நேருமானால்?

சந்தனாவால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை!

அத்தோடு, அவரவர் அந்தரங்கங்கள் அவரவருக்கு! இவ்வளவு அன்பிருந்தும், சந்தனா மட்டும், எல்லாவற்றையும் மீனாட்சி அம்மாவிடம் ஒப்பித்து விட்டாளா என்ன?

முறுவலித்து, "எங்கோ ஓர் இடத்தில் ஒளியேற்றினால் சரிதானே ஆன்ட்டி! இப்போது, நீங்கள் அந்தக் 'காட்டுப் பய்ல்' மாதிரி, வேறு கதைகள் இருந்தால், சொல்லுங்களேன்" என்று கேட்டுக் கொண்டாள். "எனக்கு என்னவோ, அந்த நிகழ்ச்சி உங்கள் வீட்டில் தான் நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் போகவே மாட்டேன் என்கிறது!" என்று, ஓரக் கண்ணால், குறும்பாக நோக்கினாள்.

சிரித்தவாறே, கையை நீட்டிச் சின்னவளின் கன்னத்தை வருடினாள், மீனாட்சி.

"அருமையான பெண்ணம்மா நீ!" என்றவள், தொடர்ந்து, தான் சந்தித்த வேறு சில பல வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

அவற்றுள் ஒன்று, அவளது எட்டாம் வகுப்பில், 'ஹோம் சயன்ஸ்' தேர்வில், அவரை நல்ல பலன் தர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, அவரைச் செடிக்குப் பதிலாக, 'அவரை' அதாவது கணவரை என்று எடுத்துக் கொண்டு, சில மாணவிகள் எழுதிய பதில்!

இருவரும் விழுந்து விழுந்து சிரித்த போது, சந்தனாவுக்கு, வீட்டில் தமையன், தந்தையோடு ஜோக்கடித்துச் சிரிக்கும் அதே உணர்வு!

மீனாட்சி அம்மா வீட்டுச் சமையல்காரம்மா கூட, சந்தனாவிடம் தனியே வந்து, "அம்மா இப்படிச் சிரித்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து, ஏழெட்டு வருஷம் ஆகிப் போச்சும்மா! அய்யாவும் போய், சின்னவரும் வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட பிறகு, ஆளே மாறிப் போய், வெறும் எந்திரம் மாதிரி, நடமாடினாங்க. எப்படியோ, அது மாறி அவங்க நல்லா ஆனால் சரி! அதனாலே, நீ மட்டும், எங்கம்மாவை விட்டு, எங்கேயும் போய்விடாதேம்மா!" என்று கூறிவிட்டுப் போனாள்!

இந்த ஆன்ட்டியை விட்டுப் போவதா?

நினைக்கக் கூட முடியவில்லை, சந்தனாவால்!

பெண் துணையின்றி வளர்ந்தவள் சந்தனா! அதனால், மீனாட்சி அம்மாவை, ஒரு தாய் போல என்று அவளால், ஒப்புமை கட்டி நினைக்க முடியவில்லை!

ஆனால், உலகில் யாருமே இல்லை என்று தன்னந்தனியே நின்றவளுக்கு, நானிருக்கிறேன் என்று, ஆதிமூலமாய், அபயகரம் கொடுத்தவள் ஆயிற்றே!

கோடி ரூபாய் கொடுத்தால் கூட, அந்த அபயகரத்தை விட்டுப் போவதா?

"நானாக ஒரு போதும் இங்கிருந்து போகவே மாட்டேன்!" என்று சமையல்காரம்மாவிடம் உறுதி கூறிய போது சந்தனா முழுமனதோடு, தன் வார்த்தைகளை நம்பித்தான் சொன்னாள்!

ஆனால், அங்கே இருக்கப் பிடிக்காமல், மனம் வெறுத்து, அந்த வீட்டை விட்டுத் தானாகவே ஒரு நாள் வெளியேறுவாள் என்று அப்போது அவளுக்குத் தெரியாது!
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 4:38 pm

அன்று சந்தனா வீடு திரும்பக் கிளம்பிய நேரம், வழக்கம் போலத்தான்.

ஆனால், வெகு அதிசயமாக வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவாக இருக்கவே, எப்போதும் வரும் நேரத்துக்குக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் முன்னதாகவே, சந்தனா வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.

ஆனால், அதிலும் ஒரு சிறு பிரச்சினையாக, கேட்டைத் திறந்து விடுவதற்கு, வாயில் காவலன், கேட் அருகே இல்லை!

பெரிய கேட், சின்ன கேட் இரண்டின் அருகிலும் இல்லாமல், பின்புறமாக அவன் ஏதோ தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான்!

பொதுவாக ராசையா வேலையில் அலட்சியம் காட்டுகிறவன் இல்லை!

ஆனால் தோட்டக்காரனுக்கு உதவியாக கொத்திக் கிளறி, முரட்டு வேலை ஏதாவது செய்து கொடுப்பான்!

அன்றும் அது போலச் செய்து கொண்டிருந்த போதுதான், சந்தனா திரும்பி வந்தது!

ஆனால், கேட் திறந்து விட அவன் இல்லாததையும் அவளுக்குப் பிரச்சினை என்று சொல்லிவிட முடியாது!

அப்படி வாயில் கதவருகில் யாரும் இல்லாதபோது, தடையின்றி உள்ளே வருவதற்கு, அந்த வீட்டு மனிதர்கள் அறிந்த ரகசியம் ஒன்று உண்டு!

சின்ன கேட்டின் உட்புறமாகக் கையை நன்றாக நீட்டிப் பக்கவாட்டுச் சுவரில், சற்றுத் தள்ளிப் பதித்திருந்த தாளைத் திறந்து கொண்டு, உள்ளே செல்வார்கள்.

கேட் தாண்டி, நாலு எட்டுதான் உள்ளே வைத்திருப்பாள்!

அதற்குள், "இவ்வளவு தூரம் தாண்டி, இங்கேயுமா இந்தத் தொல்லை? மரியாதையாக, வந்த வழியே திரும்பிச் செல்! அல்லது, உன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்!" என்று அதட்டியது, ஓர் ஆண் குரல்!

குரல் ஆணினதாக இருந்ததோடு, வெகு கடுமையாகவும் இருக்கவே, பக்கத்து வீட்டில் தான் ஏதோ, காற்று வீசிய தினுசில், இந்த வீட்டில் இருந்து பேசுவது போல் தோன்றிவிட்டது என்று எண்ணியவளாய், சந்தனா மேலும் வீட்டை நோக்கி நடக்கலானாள்.

"சொல்லிக் கொண்டே இருக்கிறேன், திமிராக உள்ளே வருகிறாயா? பெண் என்பதால், சும்மா இருப்பேன் என்று நினைத்தாயா? ஏய் ராசையா, இவளைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைப் பூட்டு!" என்றபடி, வீட்டின் உள்ளிருந்து வாயில் வராந்தாவுக்கு வந்து, வாயில் காவலனுக்கு ஒருவன் உத்தரவிடவும், சந்தனாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போயிற்று.

இந்த வீட்டில், யார் இவன்? அதுவும், இந்த அதட்டலோடு?

அவள் வியந்து நோக்குகையிலேயே, அவனது குரலுக்கு ஓடி வந்த ராசையா, சந்தனாவைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றான்.

"என்னடா, பெண்ணைப் பார்த்ததும் விழித்துக் கொண்டு நிற்கிறாய்? இதுகள் எல்லாம், பெண்களே அல்ல! பிசாசுகள்! காரியம் சாதிப்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்! திருட்டுத்தனமாகக் கதவைத் திறந்து கொண்டு வருகிறாள், பார்! போ! போய் அடித்து விரட்டு! மீண்டும் இந்தப் பக்கம் வரவிடாதே!" என்று மீண்டும் அவன் அதட்டிய விதத்தில், சந்தனாவுக்கு ஒரு விஷயம் தெளிவாயிற்று.

இந்த அளவுக்கு உரிமையோடு வீட்டு வேலையாளை விரட்டுவது என்றால், இவன் இந்த வீட்டுக்கு உரியவனாகத் தான் இருக்க வேண்டும்!

அப்படியானால், எங்கோ விளக்கேற்றப் போய்விட்டதாக, மீனாட்சி அம்மா வருத்தத்துடன் சொன்ன அந்த தீபன், இந்த மனிதனா? ஆன்ட்டியுடைய சொந்த மகன்!

ஆன்ட்டியின் அமைதிக்கும் இவனது ஆத்திரத்துக்கும்!

உள்ளே கைவிட்டுக் கதவைத் திறந்ததால், தப்பாக நினைத்து விட்டானா?

இப்படிக் குற்றவாளி போல, வீட்டுக்கு வெளியே நின்று விளக்கம் சொல்ல, சந்தனாவுக்குப் பிடிக்கவில்லை.


அதைவிடத் தன்னைப் பற்றிய விளக்கத்தைத் தானே சொல்வதை விட, வேலையாள் சொல்வது நல்லது என்றும் தோன்றவே, தீபனுக்குப் பதில் சொல்ல முயற்சி கூடச் செய்யாமல், சும்மா பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

அதற்கு ஏற்ப ராசையாவும், "அய்யா, இந்த அம்மா கொஞ்ச நாளா, நம்ம வீட்டிலேதான் இருக்கிறாங்க. இவங்க கிட்டே, அம்மாவுக்கு ரொம்பப் பிரியம். இந்தம்மா வந்தப்புறம்..." என்று விளக்கத் தொடங்கினான்.

ஆனால், அவன் பேச்சை மதியாமல், "ஓகோ! மோப்பம் பிடித்து, முன்பே வந்து காத்திருக்கிறாளோ! பார் பெண்ணே, அதெல்லாம் என்னிடம் ஒன்றும் பலிக்காது! முதலில் இங்கிருந்து வெளியே நட!" என்று உறுமினான் தீபன்.

இப்போது, சந்தனாவுக்கும் கோபம் வந்திருந்தது!

அவனுக்கு முன்பிருந்தே அங்கிருக்கும் வேலையாள் ஒரு விளக்கம் சொல்கிறான். அதை என்னவென்று கூடக் கேளாமல், வாய்க்கு வாய் வெளியேறு, வெளியேறு என்றால் எப்படி?

பிசாசுப் பட்டம் வேறு!

எந்தப் பெண், அவனை எப்படி ஏமாற்றினாளோ?

அதற்காக, என்னமோ இவன் மகா மன்மதன் போலவும், இவனுக்காகவே, சந்தனா இந்த வீட்டுக்கு வந்து, காத்துக் கிடப்பது போல, என்ன அசட்டுத் தனமான பேச்சு!

அப்படி எந்த ஆண் மகனுக்காகவும், அவள் ஒரு போதும் காத்துக் கிடக்கவே மாட்டாள்!

அதை அவனிடம் விளக்கிவிடும் எண்ணத்தில், "பாருங்கள் மிஸ்டர் தீபன்..." என்று சந்தனா தொடங்கும்போதே ஆத்திரத்துடன் குறுக்கிட்டான் அவன்!

"முடியாது! பார்க்கவும் முடியாது! கேட்கவும் முடியாது! முதலில், இங்கிருந்து வெளியே போ! அல்லது, உன்னையும் உன்னை அனுப்பியவர்களையும், கேஸ் போட்டு, உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்!"

அனுப்பியவர்களா?

இவனை வளைத்துப் பிடிக்க, ஒரு கூட்டமே வேலை செய்வதாக எண்ணினானா?

என்ன திமிர்! என்ன கர்வம்!

இனி, இவனிடம் பேசிப் பயன் இல்லை!

பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டு, ஓர் அலட்சிய பாவனையுடன் வீட்டை நோக்கி நடந்தாள் சந்தனா!

அவன் கொதி நிலைக்குப் போய்விட்டான் போலும்! "ஏய்! ஓர் அடி முன்னே எடுத்து வைத்தாலும், அப்புறம் உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..."

தீபன் ஆத்திரத்துடன் கத்திக் கொண்டிருக்கும் போதே, "என்ன இங்கே சத்தம்?" என்ற மீனாட்சியின் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து, அவளும் வெளியே வந்தாள்!

சந்தனாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, "வாம்மா! இன்று சீக்கிரமே வந்துவிட்டாய் போல!" என்று கனிவோடு வரவேற்றாள்.

பதிலுக்கு முறுவலித்து, "இன்னும் ஐந்து நிமிஷம் முன்னாலேயே உள்ளே வந்திருப்பேன், ஆன்ட்டி! ஆனால், உங்கள் பிள்ளைக்குத்தான் ஏதோ பிரச்சினை!" என்று கிண்டலாக, மீனாட்சியுடைய மகனைக் கண்ணால் காட்டினாள் சின்னவள்!

ஆத்திரத்துடன் அன்னையை நெருங்கினான் தீபன். "அம்மா, இவளை நம்பாதீர்கள். பாருங்கள், இங்கே ஏதாவது செய்தி கிடைக்கும் என்று, உங்களோடு ஒட்டிப் பழகிக் கொண்டு, உங்கள் வீட்டிலேயே, குடி வந்து விட்டாள், இவள்! என்ன கதை சொன்னாளோ, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்! முதலில் இவளை வெளியேற்றுங்கள்!"

"சேச்சே, நிறுத்துப்பா! என்ன பேச்சு இது, தீபன்? நீ சொல்லுகிற மாதிரி எதுவும் இல்லை! எனக்குச் சந்தனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்..." என்ற தாயைக் குறுக்கிட்டு, "என்னம்மா தெரியும்? இவளை முதல் தடவையாக இப்போதுதான் பார்க்கிறேன்! அதற்குள், இவளுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது. நான் யார் என்று தெரிந்திருக்கிறது! எப்படி முடியும்? என் வார்த்தைக்கு மாறாக, நீங்களாக என்னைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டீர்கள்! என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகே இங்கே வந்திருக்கிறாள் என்று, இதிலிருந்தே தெரிந்து விடவில்லையா?" என்று வாதாடினான்.

மீனாட்சியிடம் பேசிய பிறகு, சிரித்த முகமாக வீட்டு வாயிலின் படிகளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்த சந்தனா, வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

தன்னைப் பற்றிப் பேசக்கூடாது என்று, இவன் தான் தாயிடம் சொல்லி வைத்திருக்கிறானா?

ஒரே மகன் என்றாலும், அந்த மகன், அவனுடைய குடும்பத்தார் ஒருவரின் புகைப்படத்தைக் கூட, அந்த வீட்டில் பார்த்திராதது நினைவு வந்தது, இன்னமும் அவளது ஆச்சரியத்தை அதிகரித்தது!

இந்தத் தீபன் தான் தடுத்திருக்க வேண்டும்!

இவனைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்று ரகசியம் காக்கும் அளவுக்கு, இவன் அப்படியென்ன கொம்பன்? அல்லது குற்றவாளியா?

அதனால் தான், பர்சில் இருந்த படங்களை, மீனாட்சி ஆன்ட்டி, அவ்வளவு முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும்.

ஆனால் எதற்காக?

"சும்மா, அதையே சொல்லிக் கொண்டிராதே, தீபன். நான் தான் ஒரு தரம், பேச்சு வாக்கில், என் மகன் என்று, உன் பெயரைச் சந்தனாவிடம் சொல்லி விட்டேன்! அது, நீதான் என்று எப்படித் தெரியும் என்று, அடுத்த கேள்வி கேட்காதே! இந்த வீட்டில் நின்று, இந்தக் கத்துக் கத்துகிறவன் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று, ஒரு முட்டாள் கூடப் புரிந்து கொள்வாள்" என்று சற்றே அலுத்த குரலில் கூறிய மீனாட்சி, சந்தனாவிடம் திரும்பி, "நீ உள்ளே போம்மா! இன்றைய சிற்றுண்டி, உனக்குப் பிடித்த குழிப் பணியாரம். இதோ, இவனுக்கும் அது பிடிக்குமே என்று செய்யச் சொன்னேன்! போய், முகம் கழுவிவிட்டுச் சாப்பிடு" என்று கூறவும், அதற்கு மேல் அங்கே நில்லாமல், சின்னவள் உள்ளே சென்றாள்.

மாடியில் வாயிற்புறத்தை நோக்கிய அறை அவளுக்குத் தரப்பட்டிருப்பது! எனவே தொடர்ந்து தாயும் மகனும் பேசியது, அறைக்குள் சென்ற பிறகு, அவள் விரும்பாவிட்டாலும் அவளது காதுகளில் தெளிவாக விழுந்தது!

"உங்களுக்கு உலகம் தெரியாது, அம்மா! இவளை, இங்கே இருக்க விடுவது, நல்லதில்லை!" என்றான் மகன்.

"எனக்கு உலகம் தெரியாதா? அப்படி உலகம் தெரியாத அம்மா எப்படியோ போகட்டும் என்று தானே, இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டாய்! சரி. அது உன் வாழ்வு, உன் விருப்பம்! சந்தனாவுக்கு என்று, இங்கே, இப்போது யாரும் இல்லை! அவள் வீட்டில், திருட்டு வேறு நடந்து, தவித்துக் கொண்டு நின்றாள் பாவம்! எனக்கும், இந்தத் தனிமை, தாங்க முடியாத பாரமாகி விட்டது! அதனால், எனக்குத் துணையாக, அவளை, நான் தான் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்! இரு மாதங்களாக, எனக்கு அவள் தான் ஒரே துணை! இனி, நீ கிளம்பிய பிறகும், அவள் தான் துணையாக இருக்கப் போகிறாள்!" என்றாள் மீனாட்சி அம்மா சற்று அழுத்தமான குரலில்!

"அது, தேவையில்லை, அம்மா! இதை இப்போதைக்கு மனதோடு வைத்துக் கொள்ளுங்கள்! இந்த முறை, என் மனதில் வேறு கருத்து இருக்கிறது! இனி, இங்கேயே இருந்து விடலாமா என்ற எண்ணத்தில் தான், இப்போது வந்ததே!"

நம்பாமல், 'உச்'சுக் கொட்டினாள் அன்னை!

"கடந்த இரண்டு முறை வந்த போதும் கூட, நீ இப்படித் தான் ஏதோ சொன்னாய்! ஆனால், உன் ஏஜெண்ட் தான், உனக்கு நன்றாக அமெரிக்க மோகத்தை ஏற்றி வைத்திருக்கிறாளே! சுயநலம் பிடித்தவள்! இரண்டே நாளில், ஏதாவது சாக்கிட்டு, அவள் ஒரு போன் பண்ணிக் கூப்பிட்டாள் என்றால், குடிகாரன் பேச்சு மாதிரி, எல்லாம் அத்தோடு சரி! உடனே, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவாய்!..."


"இல்லைம்மா! இந்தத் தடவை மித்ராவுக்காகவேனும்..."

"மித்ராவைக் காட்டி, என்னை மடக்கப் பார்க்காதே! முதலில் ஒரு மாதமேனும் இருந்து காட்டு! அப்புறமாக, உன்னை நம்புகிறேன்! ஆனால், சந்தனா விஷயத்தில் தலையிடாதே! அவளை, நான் தான் கட்டாயப்படுத்தி, இங்கே கூட்டி வந்தேன்! அவள் இங்கே தான் இருப்பாள். அவளைப் போகச் சொல்ல முடியாது!" என்றாள் தாயார் உறுதியான குரலில்!

"என்னவோ, எனக்குப் பிடிக்கவில்லை! எதற்கும், நான் இங்கே தங்க நினைப்பது பற்றி, அந்தப் பெண்ணிடம் வாய் விட்டு விடாதீர்கள்! அப்புறம், அவள் ஏதாவது பத்திரிகைக்குச் செய்தி கொடுத்து, ஒரே களேபரம் ஆகிவிடப் போகிறது!" என்று, தாயை எச்சரித்தான் தீபன்.

"ஆமாம், நீயும், உன் பத்திரிகையும்! யார் யாரோ, எது எதற்கோ பயப்படுகிறார்கள்! உனக்கு, இது ஒரு ஃபோபியா!" என்றாள் தாயார் சற்று அலட்சியமாகவே!

"இந்த மீடியாக்காரர்கள், செய்திக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது! டயானாவின் மரணம் எப்படி நடந்தது, நினைத்துப் பாருங்கள்! அந்தப் பெண்ணின் வீட்டில் நடந்த திருட்டே, அவள் நம் வீட்டில் நுழைவதற்கான நாடகம் என்பது தான் என் கருத்து! ஆராய்ந்து பார்த்தால், அதுதான் உண்மையாகவும் இருக்கும்!" என்றான் மகன்.

என்ன உளறல் இது என்ன சந்தனா யோசிக்கையிலேயே, "முழுப் பைத்தியமாக மாறுமுன், உன் ஃபோபியாவுக்கு ஏதாவது சிகிச்சை செய்!" என்று மீனாட்சி எரிச்சலாகக் கூறிய விதத்தில், அவளுக்குச் சிரிப்பு வர, அந்த சிரிப்புடனேயே திரையை ஒதுக்கிக் கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்!

தாயும் மகனும், அதே இடத்தில், வீட்டின் முன்புறத் தோட்டத்தில் தான் நின்றனர்.

தீபனின் எரிச்சல் மிகுந்த முகம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது!

அதே நேரத்தில், ஜன்னல் திரையின் அசைவை உணர்ந்து விழி உயர்த்தி நோக்கிய தீபனின் பார்வையில், அவளது சிரித்த முகம் பட்டுவிட, அவனது கண்கள் கனலை உமிழ்ந்தன.

எரித்து விடுவான் போல, எவ்வளவு கோபம்!

துணி கொண்டு துடைத்தாற் போல அவளது சிரிப்பு தானாக மறைய, உள்ளூர வாட்டத்துடன், சந்தனா உள்ளே திரும்பினாள்.

மீனாட்சி அம்மாவுடைய மகனுக்கு, அவளிடம் ஏன் அவ்வளவு வெறுப்பு?

காரணம் எதுவாக இருந்தாலும், அவனது வெறுப்பு அவளை மிகவும் பாதித்தது என்பது மட்ட
ும் நிஜம்!


Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 4:44 pm

மீனாட்சி அம்மா மிகவும் நல்லவள்! பல தரும காரியங்களில் ஈடுபட்டிருந்தாள்.

நூறு சதவீதம் ஆரோக்கியமான உடல்நிலை கிடையாது!

ஆனாலும், அதற்காக, முகத்தை சீர்யசாக வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்.

கேலியும் சிரிப்புமாக, மிகவும் சந்தோஷமான மனோ பாவம் உடையவள்!

அதனாலேயே சந்தனாவுக்கும், அவளை மிகவும் பிடித்துப் போய், வேற்று வீடு என்கிற எண்ணமே இல்லாமல், சந்தனா அந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள்!

தந்தையைப் பற்றிக் கூடப் பல சந்தோஷமான சம்பவங்களை, அவ்வப்போது பெருமையாகவும், சிறு ஏக்கங்களுடனும் மீனாட்சி அம்மாளிடம் பேசி, அவளால் ஆறுதல் அடைய முடிந்திருக்கிறது!

இப்போது, மகன் வரவினால், அந்த நிலை மாறிவிடும் போல இருக்கிறதே என்று சந்தனா வருத்தத்துடன் நினைத்தாள்.

அண்ணன் வரும் வரை, பாதுகாப்பாக இங்கேயே இருப்பது, அவன் வந்த பின்னும் அந்தப் பக்கத்திலேயே வீடு பார்த்து வசிப்பது என்று எண்ணியதெல்லாம், தலைகீழாக மாறியது.

அந்த வீட்டில் தீபனுக்கு எந்த அளவு அதிகாரம் உண்டோ, சந்தனாவுக்குத் தெரியாது! ஆனால், ஒரு மகனின் உரிமை, மற்ற எதையும் விட அதிகம் தானே?

வீட்டு அம்மாவுடைய மகனுக்கு அடியோடு பிடிக்காத போது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, அவளுக்கும் விருப்பம் இருக்கவில்லை!

அதுவும், அவன் தாயுடன் தொடர்ந்து தங்கும் விருப்பத்துடன் வந்திருந்தால், அவனது விருப்பத்துக்குத்தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும்! பானகத் துரும்பு மாதிரி, அவன் முகம் சுளிக்க, அவள் அங்கே இருப்பது சரியல்ல!

இந்தப் பிரச்சினைக்குச் சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவாறே, மெல்லக் கீழே இறங்கிச் சென்றாள் சந்தனா.

படிகள் ஹால் பகுதிக்குத் திரும்பும் போதே, யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு சந்தனாவுக்கு.

தீபனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, சோஃபாக்கள் போடப்பட்டிருந்த பக்கம் பாராமலே, உட்புறம் திரும்பியவளின் பார்வை வட்டத்தில், அவனது நெடிய உருவம் போல எதுவும் தெரியாது போகவும், விழி திருப்பிப் பார்த்தாள் அவள்.

அந்தப் பெரிய சோஃபாவுக்குள் புதைந்து விடுவாள் போல, ஒரு சிறுமி!

அவளது நாலைந்து வயதுக்குரிய ஆரோக்கியமோ, துறுதுறுப்போ தெரியவில்லை!

ஒரு துணிப் பொம்மையை அணைத்தபடி, தன் நீல நிறக் கண்களால், சந்தனாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்கள் அன்னியமாய் நீல நிறமாக இருந்த போதும், அறிமுகமான ஏதோ அவளிடம் இருப்பதாகத் தோன்ற சந்தனா அவளைப் பார்த்துப் புன்னகை செய்து, "ஹல்லோ?" என்றாள்.

பள்ளியில் புது மாணவிகளிடம் பேசி, இளக வைத்துப் பழக்கம் தானே?

ஆனால், இந்தச் சிறுமியின் பாணி வேறு மாதிரி இருந்தது! சந்தனாவை ஒரு தரம் சந்தேகமாக நோக்கிவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

ஆனால், அந்த சந்தேகமான பார்வையே, அவள் யாரென்று சந்தனாவுக்குக் காட்டிக் கொடுத்தது! அறிமுகமான சாயலும் புரிந்தது!

இவள் தீபனுடைய மகள்! மீனாட்சி ஆன்ட்டியுடைய பேத்தி!

தந்தையின் அதே சந்தேகத்தைச் சிறுமியின் கண்களில் பார்த்ததும், சந்தனாவின் முடிவு இன்னமும் வலுப்பெற்றது!

அவனுக்கு, இவள் ஒரு மகள் தானா? வேறு பிள்ளைகளும் இருக்கிறார்களா? மனைவி?

யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?


சாப்பாட்டு அறைக்குள் சென்று, மீனாட்சி அம்மாள் சொன்னதற்காக, இரண்டு பணியாரங்களைக் கொறித்து விட்டு, பரீட்சை நோட்டுகள் திருத்தும் வேலை இருப்பதாகச் சொல்லிக் கையில் காபியை வாங்கிக் கொண்டு சந்தனா மீண்டும் அவளது அறைக்குத் திரும்பும் வரை, வேறு யாரும் அவள் கண்ணில் படவில்லை!

ஆனால், அதற்குள் வேறு யாரும் குறுக்கிடாத அந்தத் தனிமையில், "சந்தனாம்மா, தீபன் என்ன சொன்னாலும், அதைப் பெரிதாக நினைக்காதே! இந்த நாட்டுப் புத்தியும், அந்த நாட்டுப் பழக்கமுமாக, அவனுக்குள் ஒரே குழப்பம்! அதில், யாரைப் பார்த்தாலும், சந்தேகம்! அவன் மனைவி பிரிந்துவிட்ட விவகாரம் விஷயத்தை... விஷத்தை என்று தான் சொல்ல வேண்டும்... அதை ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிறது! இந்தக் குழப்பத்தில் அவன் ஏதாவது உளறினால், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதேம்மா! எனக்காக, இங்கே இருந்து விடும்மா! ப்ளீஸ்!" என்று மீனாட்சி, மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள்.

அப்படியே, வீட்டின் முன்புறமாக, அதட்டலாக மகனின் குரல் கேட்கவும், "அங்கேயே யாரைப் பார்த்துக் கத்துகிறானோ..." என்றவாறு அவசரமாக எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றாள்!

தீபனோடு வேறு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று மீனாட்சி சொல்லவே இல்லை!

அப்படியே யார் யார் வந்திருந்த போதும், ஆன்ட்டி அறிமுகம் செய்து வைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு, சந்தனா அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவை மீனாட்சியுடனே சேர்ந்து உண்பது, அங்கே வந்த பின் அவளது வழக்கம்!

இருவரும் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கலகலப்பாகப் பேசியபடி, உண்ணும் அந்த நேரத்தைச் சந்தனா ஆவலாக எதிர்பார்ப்பாள்!

ஆனால், இன்று தயக்கமாக இருந்தது!

சாப்பாட்டு மேஜையில் அவளை வீட்டை விட்டு வெளியேற்றச் சொன்ன மகனும் இருப்பானே!

தந்தையின் மனதைப் பிரதிபலிக்கும், அவனுடைய மகளும் கூட இருக்கலாம்!

இவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்பது, எவ்வளவு சங்கடமாக இருக்கும்!

சங்கடம் அவளுக்கு மட்டுமல்ல!

மகனை எதிர்த்துப் பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்கச் சொன்ன மீனாட்சி அம்மாவுக்கும், கஷ்டம்தான்!

பசியில்லை என்று, பேசாமல் அறையில் இருந்து விடலாமா என்று கூட, ஒரு தரம் அவளுக்குத் தோன்றியது!

ஆனால், இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று யோசித்து, அறையில் கொஞ்சம் பிஸ்கட்டுகளைக் கூடச் சந்தனா வாங்கி வைத்திருக்கவில்லை!

பட்டினியும், அதன் விளைவாகச் சரியாகத் தூங்காமலும் இருந்துவிட்டு நாளைக்குப் பள்ளிக்குப் போனால், வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாகப் பள்ளியில் உருப்படியாக என்ன வேலை செய்ய முடியும்?

அது மட்டுமல்ல!

மீனாட்சி ஆன்ட்டி முட்டாள் அல்ல!

எதற்காகப் பசியில்லை என்கிறாள் என்று புரிந்து, நிச்சயமாக வருத்தப்படுவாள்.

பட்டினியாக இருக்க விடவும் மாட்டாள்! அந்தப் பெரியவள் வந்து, அவளை வருந்தி அழைத்துச் சாப்பிட வைத்து, அதெல்லாம் வேறு ஆன்ட்டிக்குக் கஷ்டம்!

அத்தனையையும் யோசிக்கையில், கௌரவம் பாராமல், பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு போய், இரண்டு வாய் எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவது மேல் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

ஒரு வேளை, தீபனே, அவனுடைய அன்னைக்காகச் சற்று இளகி, நல்லபடியாக நடந்துகொள்ளலாம்!


நல்லதே நினைக்கலாமே என்று எண்ணினால் கூட, அவளுக்கு அதில் நம்பிக்கை வர மறுத்தது! அவளது ஜன்னலை நிமிர்ந்து பார்த்த அவனது கோப முகம், அவ்வளவு எளிதாக மாறக் கூடியது அல்ல!

ஆனால், சந்தனா அஞ்சிய மாதிரி, அசம்பாவிதமாக, அவளை வாயிலில் வைத்து விரட்டியது போல, உணவருந்தும் போது, நிகழவில்லை! 'டேபிள் மானர்ஸ்' என்பார்களே, அது போல சாப்பிடுகையில் தீபன் உணவு வேலை நாகரிகம் கடைப்பிடித்தான் போலும்! சந்தனாவிடம் தனியாக எதுவும் பேசவில்லை என்றாலும், கடுகடுக்கவும் இல்லை!

அவன் தாயிடம் 'சுகம்' மருத்துவமனையைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டான்.

ஆனால் அப்படி அவன் விசாரித்தது, வெறும் உரையாடலுக்காக மட்டுமாகக் கேட்டது போலத் தோன்றாதது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பல ஆண்டுகளாக எட்டிக் கூடப் பாராத, என்னவென்று கேட்டுக் கூட இராத தொழில் மீது, அவனுக்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?

மீனாட்சி அம்மாவுக்கும் அதே ஆச்சரியம் இருந்ததோ என்னவோ, முதலில் சற்று விட்டேற்றியாகவே பதில் சொன்னவள், தொடர்ந்து மகனின் கேள்விகளில் வியப்பும், திருப்தியும் அடைந்து, விவரமாகவே விடை கூறலானாள்!

தொடர்ந்து, தாயும் மகனுமாக, மருத்துவமனை, அதில் புதிதாகத் தொடங்கி இருக்கும் சில துறைகள், அவற்றின் வேலை முறைகள் பற்றி, அலசி ஆராயத் தொடங்கினார்கள்.

விஷயம் எதுவும் புரியாததால், இந்த உரையாடல் போரடித்த போதும், ஒரு வகையில், சந்தனாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது! அவள் காரணமாகப் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையே, மனவேறுபாடு வந்து விடவில்லை! நல்லபடியாகப் பேசுகிற நிலையில் தான் இருக்கிறார்கள்! பெரு நிம்மதி!

ஆனால், இந்த நிம்மதி நிலைக்க வேண்டுமானால், ஆன்ட்டியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது! அதை மீறி, அவளது திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும்!

அதன் முதல்படியாக, மாலையில் மீனாட்சி அம்மா மருத்துவமனைக்கு வருவதாகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரித்தாள்.

மீனாட்சி விவரம் கேட்டதற்கு, "ஒரு சின்ன வேலை! கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது! ஆனால், டெஸ்ட் நோட்டுகள் திருத்த வேண்டும். வெளியே போவதால், திரும்பி வருவதற்கு, வேனைப் பிடிக்க முடியாது! நீங்கள் வருவது தெரிந்தால், மருத்துவமனையில் வைத்து விட்டு என் வேலையைப் பார்க்கப் போவேன்! நீங்கள் வரும்போது, கொண்டு வந்துவிடலாம்! எனக்குச் சுமை மிச்சம்!" என்றாள் சின்னவள்!

"கொண்டு வந்துவிடலாம்! ஆனால், அவ்வ்...வ்ளோ நோட்டுத் திருத்துவாயே! நோட்டிகளின் பளு தாங்காமல், டயர் வெடித்துவிட்டால், என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது!" என்றாள் மீனாட்சி சோகமாக!

"அதெல்லாம் வெடிக்காது, ஆன்ட்டி! குறைந்தது நூறு கிலோ கனத்தில், நான் உங்களோடு வரும்போதே வெடிக்காத டயர், வெறும் இந்த மூன்று கிலோ சுமையில் தானா வெடிக்கப் போகிறது? நடக்கவே நடக்காது! பயமே படாதீர்கள்!" என்று சிரித்தாள் சந்தனா.

வழக்கமாக, மீனாட்சியும் அவளும் பேசிக் கொள்கிற தினுசில்தான்!

ஆனால், "நூறு கிலோவா? சேச்சே! அவ்வளவு மோசமாகக் கற்பனை கூடப் பண்ண முடியாது!" என்று விட்டு, அவளை ஏற இறங்க அளவிடுபவன் போலப் பார்த்து, "மிஞ்சி மிஞ்சி அறுபது கிலோ சொல்லலாம்! அதுவும் உயரத்தைக் கொண்டுதான்!" என்று தீபன் கூறவும், பிரமிப்பை மீறிக் கொண்டு, அவனது அளவிடும் பார்வையில், சந்தனாவின் உடல் சிலிர்த்தது.

ஆனால் உடனேயே, "புதிதாகத்தானே, இந்த வேலையில் சேர்ந்திருப்பாய், அதற்குள் டெஸ்ட் வைப்பதையெல்லாம் உன் பொறுப்பில் விடுகிறார்களா?" என்று அவன் சந்தேகத்துடன் கேட்கவும் அவளுக்கு எரிச்சல் வந்தது!

இவன் புத்தி என்ன மாதிரியெல்லாம் வேலை செய்கிறது!


இவனைப் பற்றித் துப்பறிந்து, ஏதோ பத்திரிகை, டீவிக்கு விவரம் கொடுப்பதற்காக, அவள் இந்த வேலையில் சேர்ந்து, அவன் தாயின் கவனத்தைக் கவர்ந்து இந்த வீட்டிற்குள் புகுந்திருக்கிறாளாம்!

"நான் சென்ற ஆண்டிலிருந்தே வேலை பார்க்கிறேன்!" என்று ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள் அவள்!

அயராமல், "ஓ அப்போதே, இதற்காகத் தொடங்கிவிட்டாயா?" என்று தீபன் கேட்கவும், அவள் தான் அயர்ந்து, வாயடைத்துப் போனாள்!

மீனாட்சி ஆன்ட்டி சொன்ன மாதிரி, இவனுக்குப் பைத்தியம் தான் பிடிக்கப் போகிறது!

பெரியவளின் கண்களிலும் ஒருவிதச் சலிப்பைக் காணவும், சட்டென விழி தாழ்த்தித் தட்டில் பார்வையைப் பதித்தாள் சந்தனா.

ஆனால், திருத்த வேண்டிய நோட்டுப் புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி, 'சுகம்' மருத்துவமனையில் கொடுத்து விட்டு, அண்ணன் இடம் பார்த்து வைத்திருந்த விடுதிக்குப் போய்க் கேட்டால், அங்கே இடமே இல்லை என்றார்கள்!

"எங்கள் இடத்துக்குப் போட்டி அதிகம்மா! அப்போதே, உங்கள் அண்ணன் பெரிய சிபாரிசோடு வந்ததால், இடம் கொடுத்தோம்! நீங்கள் தான் வரவே இல்லையே! அப்போதே, அந்த இடத்துக்கு வேறு ஆள் வந்துவிட்டது! இனி, இப்போதைக்கு, இங்கே இடம் கிடையாது!" என்றார்கள் கண்டிப்பாகவே!

அதை மட்டுமே நம்பிச் செல்லவில்லை அவள்!

உடன் வேலை செய்வோர், இன்னும் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சென்று, வேறு சில இடங்களில் விசாரித்ததிலும், அவளுக்குத் தோல்விதான் கிடைத்தது!

இல்லை, இல்லை என்று கேட்கக் கேட்க, அவளுக்குத் தன் மீதே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது!

தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஓடுகிற கதையாக அண்ணன் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தை அலட்சியமாக விட்டுத் தொலைத்து விட்டு, இப்போது இப்படி அலைகிறாளே!

எவனோ ஒரு மடத் திருடன் உருப்படியாய் ஒன்றும் இல்லாத வீட்டுக்குத் திருட வந்தான் என்றால், அவன் மீண்டும் வருவானோ என்று பயப்படுகிறவள், அவனை விடவும் எவ்வளவு பெரிய மடச்சி!

அப்படிப் பயந்து, அடுத்தவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு, இடம் கொடுத்த நல்ல பெண்மணிக்கு, இப்போது எவ்வளவு தொல்லை!

தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி, அவள் சோர்வுடன் வீடு திரும்பினால், கண்ணில் ஆவல் மின்ன, அவளைத் தேடி வந்தாள், தீபனுடைய மகள் மித்ரா!

பிரியமாக அழைத்த போது முகத்தைத் திருப்பிக் கொண்ட மித்ராவிடம், நட்பு, பாசம், பிரியம் என்று சந்தனா பெரிதாக எதையும் எதிர்பார்த்து விடவில்லை!

முக்கியமான காரணம், அவள் தீபனுடைய மகள்!

தன் மனதில் இருக்கும் விஷத்தில், எத்தனை சதவீதத்தை, மகள் மனதிலும் அவன் புகுத்தி வைத்திருக்கிறானோ!

சின்னப் பெண்! உடனடியாகப் புதியவளான சந்தனாவிடம் சிரிக்க வேண்டும் என்றோ, அவளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாதுதான்!

ஆனால், அப்படித் தயங்குகிற குழந்தைகள் வெட்கப்படுவார்கள்... அல்லது பயத்துடன் பார்ப்பார்கள்!

இரண்டும் இல்லாமல், குழந்தை முகம் திரும்பியதே விசித்திரம் தான்! கூடவே, அந்த சந்தேகமான பார்வை வேறு!

அதிலும், உணவருந்தும் போது, சந்தனாவை மித்ரா கண்டு கொள்ளவே இல்லை எனவும், தந்தையின் வெறுப்பு, சிறுமியின் மனதிலும் ஏறியிருப்பதாகவே, அவள் எண்ணியிருந்தாள்!
ஒரு சின்னக் குழந்தையின் மனதைக் கெடுத்து வைத்திருக்கிறானே என்று உள்ளூர, வருத்தமும் இருந்தது!

ஆனால், மித்ராவே அவளைத் தேடி வரவும், ஆச்சரியத்தோடு, சந்தனாவுக்குச் சந்தோஷமும் உண்டாயிற்று!

வீடு வரும் போது இருந்த சோர்வு மறைந்துவிட, முறுவலோடு அவளை வரவேற்றாள்.

மித்ராவின் மனதில் மிச்சமிருந்த தயக்கத்தை நீக்கும் முயற்சியாக, "உன் பாப்பா ரொம்ப அழகாக இருக்கிறாளே! இவள் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் விசாரித்தாள்.

சந்தனா நினைத்தபடியே, மித்ராவின் முகம் மலர்ந்தது! "பாப்பா பெயர் ஜேடி!" என்று சந்தோஷமாகச் சொன்னவள், சந்தனாவை ஆச்சரியமாகப் பார்த்து, "உனக்கு இங்கிலீஷ் தெரிகிறதே! சமையல் லேடி, தோட்டக்காரன் ஒருத்தருக்கும் தெரியலை! கிராண்ட்மா மட்டும் பேசுது! அதுவும், கோயிலுக்குப் போயிருக்குது! அப்பாவும் வேலை செய்கிறப்போ, வேறே யார்கிட்டேயும் பேச முடியலை! ஒரே போர்!" என்று மனதில் உள்ளதைக் கொட்டினாள்.

பாவம்! தனிமையில் போரடித்துப் போயிருக்கிறாள்.

இன்று, ஆன்ட்டி கோயிலுக்குப் போகிற நாள்!

தந்தையும், ஏதோ வேலை செய்யப் போய்விடவே, இவளோடு பேச ஆள் இல்லை!

பாட்டியோடு கோயிலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே யாரும் துப்புத் துலக்க வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், தந்தை அனுமதித்திருக்க மாட்டான்!

என்ன பயம்?

அப்படி என்ன பெரிய மனிதன்... அல்லது, குற்றவாளியேதானா?

சேச்சே! அப்படியெல்லாம் இராது! மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன், கிரிமினலாக இருக்க முடியாது!

தலையை உலுக்கி விட்டுக் கொண்டு, சிறுமியோடு உரையாட முயன்ற சந்தனா திகைத்தாள்!

அங்கே வீட்டில் என்ன செய்வாய்? எப்படிப் பொழுதைப் போக்குவாய் என்று, புதிதாக அறிமுகமான ஒரு சிறுமியிடம் கேட்கும் எந்தக் கேள்வியை மித்ராவிடம் கேட்டாலும், அவளுடைய தந்தை குற்றம் சாட்டியது போல, அவளைப் பற்றித் துப்புத் துலக்குவதாகவே அமைந்தது!

ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியாமல், அவளோடு இணைந்து பேசுவது எப்படி?

யோசித்து விட்டு, "அங்கே உனக்குப் பிடித்த மாதிரி, டீவி நிகழ்ச்சிகள் நிறைய உண்டா? என்று வினவினாள்.

அப்பாடா! குடைவது போல இல்லாத ஒரு கேள்வியைக் கண்டு பிடித்துவிட்டாள்!

தோள் வரை கிடந்த, அடர்ந்த கூந்தல் துள்ளிவிழ, "ஆமாம்! ஆனால் எனக்கு என் கம்ப்யூட்டரில் சிடி போட்டுப் பார்ப்பதுதான் ரொம்பப் பிடிக்கும்!" என்று மித்ரா உற்சாகத்துடன் பதில் சொன்னது மிக அழகாக இருந்தது!

அவளை அள்ளி அணைக்கும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஹாரிபாட்டர் பார்ப்பாயா? ஹாரிபாட்டரில் எது ரொம்பப் பிடிக்கும்?" என்று மேலே விசாரித்தாள் சந்தனா.

"பறக்கும் கார் வருமே! அதுதான் ரொம்ம்...பப் பிடிக்கும்!"

"அப்புறம்?"

"நார்னியா... அது கூட மாஜிக்தான்! அப்புறம் 'டிஜிமோன்'... டிஜிமோன் தெரியுமா?"

நல்லவேளையாக, அந்த ஜப்பானியக் கார்ட்டூன் பற்றி சந்தனா அறிந்து வைத்திருந்தது, மித்ராவின் மனதில், சந்தனாவிடம் மதிப்பை ஏற்படுத்தியது!
இன்னும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகள், அவற்றுள் நான்சிக்குப் பிடித்தது, மிச்சிக்குப் பிடித்தது என்று இருவரும் அரட்டையில் ஈடுபட்டனர்!

இடையே எப்படியோ மித்ரா, சந்தனாவின் மடிக்கு வந்து சேர்ந்திருந்தாள்!

"மிச்சி வீட்டிலே பகல்லே யாரும் கிடையாதா? அவன் பெரியவர்களோட..." என்று சந்தோஷமாக அளந்து கொண்டிருந்த சிறுமியின் குரல் சட்டென நின்று விட, அவசரமாகச் சந்தனாவின் மடியிலிருந்து குதித்துக் கீழிறங்கினாள் அவள்!

"மித்ரா!" என்ற அதட்டலும், மாடிப்படியில் கேட்ட அழுத்தமான காலடிச் சத்தமும் காரணத்தை விளக்கிவிட, அதுவரை மறக்கப்பட்டுப் பக்கத்தில் கிடந்த பொம்மையைத் தூக்கிச் சிறுமியின் கையில் கொடுத்தாள் சந்தனா.

அவசரத்தில் தடுமாறிப் பொம்மையைத் தவற விட்டு, மீண்டும் எடுத்துக் கொண்டு அவள் விரைகையில், அவளுடைய தந்தை அங்கேயே வந்துவிட்டான்!

"இங்கே என்ன வேலை உனக்கு?" என்று அவன் அதட்டிய போது, சந்தனாவுக்கே திக்கென்றது!

அச்சத்தில் கண்கள் விரிய விழித்த மித்ரா, சட்டென, சந்தனாவைக் கை காட்டினாள்!

"இ...இந்த ஆன்ட்டிதான்... ஆன்ட்டிதான் வா வா என்று, என்னைக் கூப்பிட்டு..." என்று குரல் நடுங்கக் கூறினாள்.

ஒரு கணம் பிரமித்த போதும், சந்தனாவுக்கு உடனே விஷயம் புரிந்தது!

தந்தையின் கோபத்துக்கு அஞ்சிய சிறுமி, தான் தப்பிப்பதற்காகப் பொய் சொல்லியேனும், அதைத் திசை திருப்பப் பார்க்கிறாள்!

சந்தனாவின் திசைக்கு!

ஆனால், 'சும்மா ஆடுகிற ஒன்று, கொட்டுக் கண்டால்...' என்று சொல்வார்களே என்று எண்ணியவாறே சின்னவளைப் பார்த்தாள் சந்தனா.

மித்ராவின் பெரிய விழிகளில் கலக்கத்தைக் காணவும், சட்டென சுதாரித்து, "ஆமாம் மிஸ்டர் தீபன், உடன் விளையாட யாரும் இல்லாமல், குழந்தை கீழே போரடித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். அதனால் தான் கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம் என்று கூட்டி வந்தேன்!" என்று பழியைத் தன் பேரிலேயே போட்டுக் கொண்டாள்!

மித்ராவின் பெரிய கண்கள் மீண்டும் விரிந்து, இப்போது தந்தையையும், சந்தனாவையும் மாறி மாறிப் பார்த்தன.

மித்ராவை விடப் பெரியவர்கள் என்றாலும், வகுப்புப் பிள்ளைகளோடு நன்றாகவே பழகும் வழக்கத்தால், அவளது மனதில் இருப்பதைச் சந்தனாவால் ஊகிக்க முடிந்தது!

சந்தனா காட்டிக் கொடுக்காததால், அவளைப் பற்றி நன்றியுணர்ச்சி! அவளைப் பொய்யாக மாட்டி வைத்த கூச்சம்!

கூடவே தந்தை இதை நம்புவானோ, மாட்டானோ என்ற கலக்கம்!

தீபனோ, "அடடா! என்ன இரக்க குணம்! அப்படியே தெருவில் இறங்கிப் போய், அங்கே பிச்சையெடுத்துத் திரிகிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதுதானே?" என்றான் இளக்காரமாக!

பழமொழி ரொம்பவே சரிதான்! ஓர் இணுக்குக் கிடைத்ததும், எவ்வளவு அவமதிப்பாகப் பேசுகிறான்! மித்ராவைக் காட்டிக் கொடுக்காமல், இவனை உணர வைப்பது எப்படி என்று சந்தனா யோசிக்கையிலேயே, அவன் தொடர்ந்தான்.

"குழந்தைக்குப் போரடிக்கிறதே என்று இந்தம்மா விளையாட்டுக் காட்டினாளாமே! யாரிடம் இந்தக் கதை! தனியே இருந்த பிள்ளையை, யாரும் அறியாமல் பிடித்து வந்து, என்னைப் பற்றித் தூண்டித் துருவி, விசாரித்துக் கொண்டிருக்கிறாய்! இப்போது, கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன் என்பதால், இந்தக் கதை விடுகிறாய்! இந்த மாதிரிப் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு, நான் ஆளல்ல! அதை முதலில் தெரிந்து கொள்!" என்றான் கடுமையான குரலில்!

சந்தனாவுக்கும் சீற்றம் மிகுந்துவிட, "அப்படி எதை விசாரித்து அறிந்து விடுவேன் என்று இந்தப் பயம்? அங்கே யுஎஸ்சில் அடுக்கடுக்காய்ச் செய்துவிட்டு வந்த கொலைகளைப் பற்றியா? அல்லது, கொள்ளைகள் பற்றியா? எதற்காக இப்படிப் பயந்து நடுங்குகிறீர்கள்?" என்று ஆத்திரத்துடன் கேட்டு விட்டாள்.

ஒரு கணம் திகைத்துப் பேச்சிழந்து நின்ற தீபன், சட்டெனத் தலையைப் பின்னே தள்ளி, வாய்விட்டு நகைத்தான்!

மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்க்குள் உலகத்தைப் பார்த்த யாசோதைக்குக் கூட, இவ்வளவு பிரமிப்பு ஏற்பட்டிராது!

வரிசைப் பற்கள் பளிச்சிட, கனைப்போ காட்டுத்தனமோ இல்லாமல், இவனுக்குப் போய், இப்படி ஒரு சிரிப்பா?...

சந்தனா வியந்து நிற்க, மித்ரா மகிழ்ச்சியோடு கையைக் கொட்டிக் குதித்தாள்.

"ஹைய்யா! அப்பா சிரிச்சாச்சுது! அப்பாவுக்குக் கோபம் போயாச்சுது!"

'அப்பா' வை மட்டும் தமிழில் சொல்லி அவள் குதித்தது, சந்தனாவிடமும் புன்னகையை வரவழைத்தது!

அவன் சிரிப்பு மறைய, சந்தனாவைக் கூர்ந்து ஆராய்ந்தான்.

அதன் பின் "நடிப்பு பிரமாதம்!" என்றான்.

"என்ன நடிப்பு?" என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டாள் சந்தனா.

பெரியவர்களின் குரல் மாறுபடுவதைக் கவனித்த மித்ரா, அவர்கள் இருவரும் வெட்டுவது போலப் பார்த்து நின்ற அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்!

"என்ன நடிப்பா? அது தெரியாமலா நிஜம்போல, அப்படி நடித்தாய்? அடேயப்பா! ஊகூம்! இவ்வளவு கெட்டிக்கார நடிகையை வீட்டில் வைத்துக் கொண்டு, என்னால் நிம்மதியாக இருக்கவே முடியாது! அதனால், சீக்கிரமே வேறு இடம் பார்த்துக் கொண்டு, இங்கிருந்து போய்விடு தாயே!" என்றான் தீபன்!

வேறு இடம் பார்ப்பதா?

அன்று அடைந்த தோல்விகள் சந்தனாவின் மனதில் பவனி வந்தன!

இவன் வேறு, சும்மாச் சும்மா போ போ என்று கொண்டு!

அப்படிச் சொல்வதைக் கேட்க நேரும் போது, அடுத்தவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று யோசிக்கவே தோன்றாதா?

வருத்தத்தை மறைத்து, எரிச்சலைக் காட்டி, "அதை என்னை இங்கே அன்போடு அழைத்து வந்த உங்கள் அம்மா சொல்லட்டும் போய்விடுகிறேன்!" என்றாள் அலட்சியமாக!

தீபனின் முகம் கன்றியது!

அவனுடைய அம்மாவாவது இவளைப் போகச் சொல்வதாவது! நடக்கிற காரியமா?

"அம்மாவைத்தான் நன்றாக மயக்கி வைத்திருக்கிறாயே!" என்றான் அவன் கைத்த குரலில்.

"ஆமாம்! மீனாட்சி ஆன்ட்டி பச்சைக் குழந்தை! சாக்லேட்டைக் கொடுத்து மயக்கி விட்டேன்!" என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் சந்தனா.

"என்னது?"

நிமிர்ந்து, "இது ஆன்ட்டி எனக்குக் கொடுத்திருக்கும் அறை! இங்கிருந்து நீங்கள் வெளியே போனால், நான் என் வேலையைப் பார்க்க வசதியாக இருக்கும்!" என்றவள், அவன் இளக்காரமாக ஏதோ சொல்ல வாய் திறக்கவும், அவசரமாக, "இந்த வேலையை!" என்று, அருகில் அரை மீட்டர் உயரத்துக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளி நோட்டுப் புத்தகங்களைக் காட்டினாள்!
கட்டின் மேலே இருந்த காகிதத்தில் 'ஐந்தாம் வகுப்பு, மாதத் தேர்வுப் புத்தகம், தமிழ்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை, அவன் உற்றுக் கவனிப்பதைக் கண்டதும், அவளுக்குச் சுருசுருவென்று, உள்ளே புகைந்தது!

எதிலும் சந்தேகமா? விட்டால், மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிட்டுக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தையும் சோதிப்பான் போல!

"நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நான் மனச்சாட்சிப்படி வேலை செய்கிறவள்! இந்தக் காலத்தில், தமிழ் நோட்டுகளைச் சரியாகத் திருத்த, நேரம் அதிகம் பிடிக்கும்! அதனால், தயவு பண்ணிச் சற்று சீக்கிரமாக இடத்தைக் காலி செய்தீர்கள் என்றால், நான் வேலையைத் தொடங்க வசதியாக இருக்கும்!" என்றாள் குரலில் சிறு எள்ளலை விரவி!

ஆனால், "சற்று முன், என் மகளை ஏமாற்றிக் குல்லாப் போட்டுக் கொண்டிருந்த போது, இந்த மனசாட்சி எங்கே...கொஞ்சம் ஓய்வெடுக்கப் போயிருந்தது போல!" என்று தீபன் அவளது குரலிலேயே திருப்பிக் கொடுக்கவும், அவளுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது!

ஆனால், இவன் கூடச் சேர்ந்து சிரிக்கிறவன் இல்லையே!

அல்லது சிரிப்பானோ?

இப்படித்தான் என்று நம்ப முடியாத பிறவி! எதற்கு வம்பு?

முகம் மாறாமல் காத்து, "என்ன செய்வது? சில பேரின் சகவாசத்தில், உலகமே மறந்து போகிறது! வேறு சில பேரைப் பார்க்கிற போது தானே, கஷ்டமான கடமைகள், அவசரமாக நினைவு வருகின்றன!" என்றாள் நக்கலாக அவள்.

இப்போது, அவளைக் கூர்ந்து நோக்கினான் தீபன்.

பிறகு, "கவனி! என் பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு! அளவு மீறி, அதைச் சோதிக்காமல் இருப்பது, உனக்கு நல்லது!" என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து சென்றான்.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 4:55 pm

சந்தனா ஓரளவு எதிர்பார்த்தது போலவே, விரைவிலேயே ஒரு நாள், அவளுடைய தந்தை வேலையென்று அவனது அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டிருந்த நேரத்தில், மித்ரா அவளைத் தேடி வந்து நன்றி தெரிவித்தாள்.

"அன்றைக்கு அப்பாவுக்குக் கோபம் என்றதும் ரொம்பப் பயந்துவிட்டேன், ஆன்ட்டி! பெரியவர்கள் யார் கிட்டேயும், நான் பேசினால் அப்பாவுக்குப் பிடிக்காது! ஒரு தரம் போனிலே பேசினதுக்கே, அப்பா போனையே உடைச்சிட்டார்! இப்போ, போன் இல்லையே, என்னையே உடைச்சிடுவாரோன்னு பயமாய் இருந்தது..."

முகத்தில் பாவனை காட்டி அவள் பேசிய தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!

அதைக் காட்டிக் கொள்ளாமல், "அதனாலே, ஆன்ட்டியை உடைத்தால் பரவாயில்லை என்று, என் தலையில் பழியைப் போட்டுவிட்டாயாக்கும்!" என்றாள் கிண்டலாக.

ஒரு கணம் பேந்த விழித்துவிட்டு, "நீ பெரிய ஆள் இல்லையா? பெரியவர்களை உடைக்கவே முடியாது, அடித்தாலும் திருப்பி அடிப்பாங்களோன்னு பயந்து, அடிக்க மாட்டாங்கன்னு, மிச்சி சொன்னானே! அதனாலேதான், அப்படிச் சொன்னேன்!" என்றவள் சந்தனாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "உன்னை உடைக்கலை! ஆனால், அப்பா உன்னை அடித்தாரா?" என்று கண்கள் விரியக் கவலையுடன் கேட்டாள் குழந்தை.

இல்லை என்பது போலத் தலையசைத்தவளுக்கு, சின்னப் பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. காரணகாரியம் கண்டுபிடித்து, இப்படித்தான் என்று முடிவு வேறு!

ஆனால், கோபத்தில் போனை உடைப்பது என்றால்?

யார் மீதோ உள்ள கோபத்துக்கு போன் பலியாகியிருக்க வேண்டும்!

யார் மீது? என்ன கோபம்?

அர்த்தமற்று, அவளிடம் ஆத்திரப்படுகிறானே, அது போலத்தானா?

அல்லது, அதற்கு அர்த்தம் இருக்கிறதா?

தீபனின் திருமணமும், மனைவியின் பிரிவும், பத்திரிகையாளர்களால், பெரிய பிரச்சினை ஆகியிருக்குமா?

அவனுடைய மனைவியின் பிரிவு பற்றி, ஒரே ஒருதரம் குறிப்பிட்டது தவிர, மீனாட்சி ஆன்ட்டியும், மகனின் வாழ்வு பற்றி எதுவும் சொன்னது இல்லை!

தன்னைப் பற்றி எதுவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்ற மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார் என்பது, சந்தனாவின் ஊகம்!

மனதை மறையாது அவளிடம் பேசும் ஆன்ட்டியே சொல்லாத போது, அதைத் துருவிக் கேட்டு, அவருக்குத் தருமசங்கடத்தை ஏற்படுத்தச் சின்னவளுக்கும் விருப்பம் இல்லை!

அத்தோடு, மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் என்பது தவிர, தீபனுக்கும் அவளுக்கும் என்ன இருக்கிறது?

ஆன்ட்டியே சொல்லுகிற மாதிரி, அவனது பணி பற்றிய அழைப்பு வந்ததும், திரும்பவும் யுஎஸ்சுக்கு ஓடப் போகிறான் என்பதும் நிச்சயம்! அப்படித் திட்டம் இல்லையென்றால் தான், மருத்துவமனை நிர்வாகத்தை தாய்க்கு உதவியாக நேரில் போய்ப் பார்த்திருப்பானே!

அவன் இங்கே தங்கப் போவதில்லை என்பதற்கு, இது ஒன்றே, நிச்சயமாக சான்று!

அப்படியே, இந்தியாவிலேயே அவன் இருப்பதானாலுமே, இங்கே உள்ள கோடிக் கணக்கான மனிதர்களில், அவனும் ஒருவனாக இருக்கப் போகிறான்!

அவனைப் பற்றி யோசித்து, மனதைக் குழப்பிக் கொள்ளுவானேன்?

அதை விடவும், நல்ல தங்குமிடம் ஒன்றைக் கண்டு பிடித்துப் போய்விட்டால், தீபனுக்கும் அவளுக்கும் தொடர்பே இருக்கப் போவதில்லை!

முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும்!

சந்தனா யோசித்து ஒரு முடிவுக்கு வருகையில், "என் மேலே கோபமா ஆன்ட்டி?" என்று கேட்டது ஒரு சின்னக் குரல்!

திகைப்புற்றுப் பார்த்தால், தன் பொம்மையை இறுகக் கட்டி அணைத்தபடி, அவள் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சிறுமி!

பொம்மையை அவள் அணைத்திருந்த விதம், சந்தனாவை ஒரு மாதிரித் தாக்கியது!

ஏதோ, தனக்கு வேறு துணையே இல்லாத மாதிரி...

இவளை என்ன செய்வது?

சட்டென மனம் உருக, அவளை அருகிழுத்து, "அப்படி யார் சொன்னது? மித்ராக் குட்டிகிட்டே கூட யாருக்காவது கோபம் வருமா என்ன? மித்ரா என்றாலே என்ன அர்த்தம் தெரியுமா? சினேகிதி! உலகத்தில் எல்லோருமே, உன்னிடம் நட்பாகத்தான் இருப்பார்கள்! அதாவது, நீ எனக்கு சினேகிதி. நான் உனக்குச் சினேகிதி!" என்றுரைத்து, சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சந்தனா!

சிறுமியும் சந்தோஷமாகப் பதிலுக்கு அவளை முத்தமிட, அவர்களுக்கிடையே, ஒரு ரகசிய ஒப்பந்தம் அமுலாகத் தொடங்கிற்று!

அன்றிலிருந்து சந்தனா வீட்டில் இருக்கும் சமயங்களில் தீபன் வேலை என்று அவனது அறைக்குள் புகுந்துவிட்டான் என்றால், மித்ரா விழுந்தடித்துக் கொண்டு, சந்தனாவிடம் ஓடி வந்து விடுவாள்.

அது, இது என்று சிறுமி ஏதாவது தன் யுஎஸ் தோழர்கள், அவர்களோடு சேர்ந்து விளையாடும் இடம், அங்கே இருக்கும் விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் பற்றிச் சொல்லுவாள்.

பொறுமையாகக் கேட்பதோடு, இங்குள்ளது பற்றி சந்தனா சொல்லுவாள்.

படக்கதைப் புத்தகங்களை வாங்கி வந்து, இதிகாசக் கதைகளைக் கற்றுக் கொடுத்தாள். அவளுடைய தந்தை செய்தது!

கிரேயான், க்ளே வாங்கி வந்து கொடுக்கவே, படங்கள் வரைவதும், உருவங்கள் செய்வதும், உற்சாகமான பொழுது போக்காயிற்று!

முதலில், மீனாட்சி அம்மாள் சத்தம் கேட்டாலும் மித்ரா ஓடி விடுவாள்.

ஆனால், விரைவிலேயே பாட்டி தன் பக்கம் என்று தெரிந்து விடவும், அவ்வப்போது, அவளையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டாள் பேத்தி!

ஆனால் எல்லாமே, எப்போதுமே வெகு சுமுகமாகவே இருந்தது என்று சொல்ல முடியாது!

பெரும்பாலும் தனித்திருந்து வளர்ந்தவள் என்பதால், சில பிடிவாதங்கள், முசுட்டுத்தனம், காட்டுக் கத்தல் எல்லாம் மித்ராவுக்கும் இருக்கவே செய்தது!

இவள் நம்மிடம் பிரியமாக இருக்கிறாளே, இன்னும் எவ்வளவு சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்று, குழந்தைகளுக்கே உரிய முறையிலும், மித்ரா நடந்துகொள்ளத்தான் செய்தாள்.

ஆனால், பள்ளி ஆசிரியை என்கிற முறையில், இந்த மாதிரிப் பிள்ளைகளையும் சமாளித்துப் பழகியிருந்ததால், மித்ராவைச் சமாளிப்பதும், சந்தனாவுக்குக் கடினமாக இருக்கவில்லை!

மீனாட்சிக்குச் சந்தனாவிடம் நம்பிக்கை இருந்ததால் இதில் தலையிடுவது இல்லை!

தீபன், அவனது கம்ப்யூட்டர் வேலையில் முழுகிவிட்டால், அவனை வெளியே பார்க்கவே முடியாது என்பதால், அவனது தலையீடும் இராது போகவே, கண்டிப்பும் கனிவுமாகச் சந்தனா, மித்ராவைக் கவனித்ததில், சிறுமியின் உடலும் தேறலாயிற்று!

அத்தோடு, ஒரே வீட்டில் இருக்கையில், ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருப்பது கடினம் என்று தீபனுக்குமே புரிந்திருந்ததால், சில பொதுவான நேரத்துக்கு உரையாடல்களை, அவனும் தடுக்க முயன்றதில்லை.

அதனால், தீபன் முன்னிலையிலும் கூட, ஒரேயடியாக அன்னியமாகக் காட்டிக் கொள்ளாமல், ஓரளவுக்குச் சந்தனாவும் மித்ராவும் சாதாரணமாகப் பேச முடிந்தது! ஆனால், அவன் அறியாமல் அறைக்குள் கொட்டமடிப்பதை மட்டும் இருவருமே அவன் அறியக் காட்டிக் கொள்வதில்லை!

அன்று இரு பெண்களும் மட்டுமாகச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்!

தீபன் வேலையிலிருந்து வெளியே வரவில்லை!

மீனாட்சி, மருத்துவமனை வேலையாகச் சென்றவள், இன்னமும் திரும்பியிருக்கவில்லை!

அன்றையச் சிற்றுண்டி, புட்டு!

பொதுவாக இங்குள்ள சிற்றுண்டி வகைகளை பிடிக்காவிட்டால், ரொட்டியில் வெண்ணை, ஜாம் தடவிக் கொடுத்துவிட்டால், மித்ரா சந்தோஷமாகச் சாப்பிட்டு விடுவாள்.

அவளே, இப்படிச் சாப்பிடு நன்றாக இருக்கும் என்று சந்தனா சொன்னால், அவளிடமிருந்து வாங்கி ருசி பார்த்துவிட்டு, உரிய அளவு உண்ணவும் பழகி இருந்தாள்.

ஆனால், அன்றைக்கு என்னவோ, தனக்கு எதுவும் வேண்டாம், ஃபிரிஜ்ஜில் இருக்கும் சாக்லேட்டுகள் அத்தனையும் வேண்டும். பார்க்கவே நன்றாக இல்லாத புட்டுக்குப் பதிலாகச் சாக்லேட்டைத்தான் சாப்பிடப் போகிறேன் என்று அடம் பிடித்தாள் மித்ரா!

தானாகச் சொல்லிப் பார்த்துவிட்டு, சமையல்காரம்மா, சந்தனாவிடம் முறையிட்டாள்.

சந்தனா மென்மையாகச் சொல்லச் சொல்ல, மித்ராவின் பிடிவாதம் அதிகம் ஆயிற்று!

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "இந்தப் புட்டைத் தான் சாப்பிட வேண்டும்! பிடிக்காவிட்டால், ரொட்டி, சாக்லேட் கிடையவே கிடையாது!" என்று சாவி கொண்டு பூட்டக் கூடிய, அந்தப் பழைய காலத்து ஃப்ரிஜ்ஜைப் பூட்டிச் சாவியைச் சமையல்காரம்மாவிடம் சந்தனா கொடுத்துவிட, மித்ரா அழத் தொடங்கினாள்!

"ஷ்! என்ன மித்ரா..." என்று சந்தனா அவளை அமைதிப் படுத்த முயலுகையில், "அவள் கேட்பதைக் கொடுத்துவிட வேண்டியதுதானே?" என்று தீபனின் குரல் கேட்கவும், திகைப்பில் சந்தனா துள்ளிக் குதிக்காத குறை எனலாம்!

தந்தையைக் கண்டதும், மித்ரா சலுகையாக, இன்னும் அழுதாள்.

"எலிசா ஆன்ட்டி, எனக்கு எவ்வளவு சாக்லேட் கேட்டாலும் கொடுப்பாளே! சந்தனாவையும் கொடுக்கச் சொல்லு!" என்று அழுதாள் சிறுமி!

சந்தனா முகத்தில் ஐயம் தெரிந்ததோ, என்னவோ, "உடனே, தப்பாக நினைக்க வேண்டாம்! எலிசா என் ஏஜண்ட்! என்னை விடப் பத்து வயது பெரியவளும் கூட!" என்று எரிச்சலுடன் மொழிந்தான் தீபன்!

அத்தோடு நிறுத்தாமல், "பெரிய ஒழுக்க சிகரம்! தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே, மோசம் என்று எண்ணிக் கொள்வது! அல்லது, தன்னைப் போல என்றோ, என்னவோ?" அவள் காதுகளில் விழுமாறு, தெளிவாகவே முணுமுணுத்தான்!

ஆத்திரமுற்று, "சாக்லேட்டை அள்ளி அள்ளிக் கொடுப்பாளாமா? அப்படியானால், ஆன்ட்டி அன்று சொன்னது போல, அவள் உங்களைக் கெடுப்பதோடு நில்லாமல், மித்ராவையும் கெடுக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று சுள்ளெனச் சொல்லிவிட்டாள் சந்தனாவும்!

"ஏய், ஜாக்கிரதையாகப் பேசு! மித்ராவுக்கு விபத்து நடந்த போது, உடனே வந்து செயல்பட்டு, அவளது உயிரைக் காப்பாற்றியது, எலிசாதான்! அவளுக்கு இல்லாத அக்கறையும் அன்பும், உனக்கு இருக்க வாய்ப்பில்லை! வெறும் பந்தாக் காட்ட வேண்டாம்!" என்று கோபத்துடன் தூக்கி எறிந்து பேசினான் அவன்!

உண்மையான அக்கறையை, அவன் அலட்சியமாகப் பேசியது எரிச்சலூட்ட, "அப்படி அவள் வந்து காப்பாற்றுகிற நிலையில் மகளை விட்டுவிட்டு, நீங்கள் அப்படி என்ன வெட்டி முறித்துக் கொண்டு இருந்தீர்களாம்?" என்று குத்தலாகக் கேட்டு, அவனை மட்டம் தட்டினாள் அவள்.

அவள் மட்டந் தட்டத்தான் சொன்னாள்! ஆனால், உண்மை சுடும் அல்லவா?

சூடு தாங்காமல், அவளிடம் தப்புத் தேடினான் தீபன்.

"அப்படியானால், அதைத் தெரிந்து கொள்ளத்தான், இத்தனை முயற்சியுமா? என்னவோ, வேலை அது, இது என்று நிஜம் போல அளந்தாயே!" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் விஷயம் மறக்கப்பட்டு விடப் போகிறதே என்று எண்ணிய மித்ரா "சாக்லேட், சாக்லேட்!" என்று, காலை உதைத்துக் கத்தினாள்!

"அதைக் கொடுத்துதான் தொலையேன்!" என்றான் அவன் எரிச்சலுடன்.

"நல்ல பொறுப்புள்ள தந்தை! இப்படி யாருக்குக் கிடைப்பார்!" என்று ஏளனமாகச் சிலாகித்துவிட்டு, மித்ராவிடம் திரும்பினாள்.

தீபன் ஆத்திரத்துடன் முறைத்ததை, அவள் கண்டுகொள்ளவே இல்லை!

அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியவள், பள்ளி அனுபவம் கைகொடுக்க, கண்டிப்பான குரலில், "மித்ராம்மா, நீ எவ்வளவோ நல்ல பெண் என்று நினைத்தேன்! இப்படிக் காலை உதைத்துக் கத்துவது, நல்ல பெண்கள் செய்வதா? சொல்லு!" என்று அதட்டிக் கேட்டாள்.

"அது..." என்று ஒரு கணம் தடுமாறிவிட்டு, "ஆனால், நீ சாக்லேட் தரமாட்டேன் என்கிறாயே!" என்று காரணம் சொன்னாள் சிறுமி!

"எப்படித் தருவது? நீ நல்ல பெண்ணாக இருந்தால், அதற்குப் பரிசாகச் சாக்லேட் மாதிரி இனிப்புகளைத் தரலாம்! ஆனால், ஒழுங்காகச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது, எப்படிப் பரிசு கொடுப்பது? அதற்கும் மேலாக, இப்போது மோசமாக வேறு நடக்கிறாயே! இந்த வீட்டில் வேறு யாரும் சாக்லேட் சாப்பிடுவதில்லை! மித்ரா நல்ல பெண். அவளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்று நல்ல நல்ல சாக்லேட் எல்லாம் வாங்கி வைத்தால், அதை உனக்குக் கொடுக்க விடாமல், நீயே பண்ணுகிறாயே!"

சற்று விழித்து விட்டு, "ஆனால், எனக்குச் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதே!" என்றாள் சிறுமி.

"சாப்பிடு! முதலில் இந்தச் சிற்றுண்டி எவ்வளவு ருசி தெரியுமா? புட்டரிசி என்று இதற்கென்றே தனியாக உள்ள புட்டரிசி என்ற ஒரு தினுசு அரிசியில் மாவு செய்து, தேங்காய்ப் பூ, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய், இனிப்பு எல்லாம் போட்டு, மிகவும் நன்...றாக இருக்கிறது! இந்தப் பலகாரத்தில், நீ இவ்...வளவு வளருவதற்கு வேண்டிய எத்தனை சத்துக்கள் இருக்கிறது, தெரியுமா? இதெல்லாம் சாப்பிட்டால், சீக்கிரமே... உன் அப்பா மாதிரி, உயரமாக வளர்ந்து விடலாமே! சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு, சாக்லேட்டை வாங்கிக் கொள்! வா! சீக்கிரம்!" என்று, சந்தனா நிறைய ஆசை காட்டவும், மித்ரா யோசித்தாள்.

அவளும் வெறும் அழும்பு பிடிக்கும் பெண் அல்ல என்பதால், "அப்படியானால், சாப்பிட்டதும் சாக்லேட் தரணும்!" என்ற நிபந்தனையோடு புட்டை உண்ண வந்தாள்.

"மித்திக் குட்டி நல்ல பெண் என்பதுதான் எனக்குத் தெரியுமே!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "கட்டாயம் தருவேன்! ஆனால், இன்னொரு தடவை இப்படிக் காலை உதைத்து அசிங்கமாகக் கத்தினால் அப்புறம், இரண்டு நாட்களுக்குச் சாக்லேட்டே கிடையாது!" என்று அதையும் பிள்ளை மனதில் பதிய வைத்தாள் சந்தனா!

கிண்ணத்தில் தனக்கென்று கொஞ்சம் புட்டை எடுத்து வைத்த தீபன், கீழ்க் கண்ணால் அவர்கள் இருவரையும் ஒரு தரம் பார்த்து விட்டுக் கிண்ணத்துடன் அங்கிருந்து அகன்றான்!
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 4:58 pm

தீபனின் பார்வையைச் சந்தனா பெரிதாக நினைக்கவில்லை!

அவனைப் பொறுத்தவரையில், சந்தனா கெட்டவள்! அவனைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து, அதாவது அவனைப் பற்றிய மோசமான விவரங்களைக் கண்டறிந்து, ஏதோ அமெரிக்கப் பத்திரிகைக்கு அனுப்புவதற்காகவே, வேறு ஏதோ காரணத்தைக் காட்டி அவனுடைய அன்னையை ஏமாற்றி, இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள்!

யார் என்ன சொன்னாலும், இந்த எண்ணத்தை அவன் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை!

போகட்டும்! அவனது கருத்து அவனோடு என்று சந்தனாவும் அதைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டாள்!

எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை அவனாக ஏற்படுத்தியதோடு, அதையே குரங்குப் பிடியாக ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தால், அதைப் பற்றி நினைப்பதே, நேர விரயம் தானே?

தன்னை ஒருவர் தப்பாக நினைப்பது, அதுவும் மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் அப்படி எண்ணுவது அவளுக்கு வருத்தம் தான்!

ஆனால், ஆன்ட்டியின் அபிப்பிராயப்படியே, தீபன் இன்னும் சில நாட்களில், தன் மாபெரும் சொர்க்கம் அமெரிக்காவுக்குப் பறந்துவிடப் போகிறான்! அங்கே போய், அவன் என்ன நினைத்தாலும், அது அவளைப் பாதிக்கப் போவது இல்லையே!

இங்கேயே, அப்படித்தான், பாதிப்பின்றி தான் இருக்க வேண்டும்! ஆனால், ஏனோ அவளால் ஒரேயடியாக அப்படி அலட்சியப் படுத்த முடியவில்லை!

அதனாலேயே ஒருவேளை, அவன் இங்கேயே இருந்து விடக் கூடுமோ என்ற எண்ணத்தில், தங்குவதற்கான இடத்துக்காக, நல்ல விடுதி ஒன்றைத் தேடிக் கொண்டேதான் இருந்தாள்!

ஆனால் மித்ரா?

அவளைப் பற்றிய கவலை, சந்தனாவுக்கு இருந்தது!

தந்தை சங்கமித்ரனின் பெயரில் பாதியை மகளுக்கு வைத்ததோடு மகள், தந்தை இருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதாகத் தீபன் எண்ணுகிறான் என்பது, சந்தனாவின் அபிப்பிராயம்!

மற்றபடி, தந்தை விட்டுச் சென்ற தொழிலையும் அவன் பார்க்கவில்லை!

பெற்ற மகளுக்கு வேண்டியதையும் செய்யவில்லை!

இந்த வயதில் அவள் அங்கே தனிக் குழந்தையாக வளர்வது போலத்தானே தெரிகிறது!

எப்போதோ ஒரு முறை சந்திக்கும் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் தவிர, அங்கே மித்ரா தனிமைச் சிறையில் தான் இருந்திருக்கிறாள்!

அவனுக்குப் பிடிக்காதுதான்! ஆனாலும், குழந்தையின் தனிமை ஏக்கம் பற்றித் தீபன் கிளம்பும் முன், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று, சந்தனா தீர்மானித்திருந்தாள்!

மித்ராவிடம் இருந்த பரிதாபத்தினாலேயே அவளுடைய தந்தைக்கு மறைத்து, அவளுடன் நெருங்கிப் பழக, சந்தனாவுக்குத் தயக்கமே வரவில்லை!

இங்கே இருக்கும் வரையேனும், மித்ராவுக்கு ஒரு துணை இருக்கட்டுமே!

இந்த எண்ணத்தினால், தீபன் அறியாமல், மித்ரா அவளது அறைக்கு வருவதும், பேசிப் பழகுவதும், தொடர்ந்து நடந்தது!

தீபன் அறியாமல் இது நடப்பதாகத்தான் சந்தனா நினைத்திருந்தாள்!

ஆனால், சில நாட்கள் கழித்து, ஒரு விடுமுறை தினத்தன்று, மீனாட்சியும், மித்ராவும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்த பிறகு, அவளது அறைக் கதவைத் தட்டி, அறைக்குள் வந்த தீபன் வேறு சொன்னான்!

அந்த நேரத்தில், அவனை, அதுவும் அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றவளின் தோளைப் பற்றி நகர்த்திவிட்டு, அறையினுள் வந்து, தன் மகள், சந்தனாவின் அறைக்கு அடிக்கடி வருவது, தனக்குத் தெரியும் என்றவன், "நீ எதற்காக என் மகளுக்கு இப்படி வலை விரிக்கிறாய் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்" என்றும் சேர்த்துச் சொன்னான்!

வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா என்ன, மீனா? என்ன உளறல் என்று தோன்றியது சந்தனாவுக்கு! அத்தோடு, எப்போது பார்த்தாலும், ஏதாவது இல்லாத பொல்லாத குறை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று அவளுக்குக் கோபமும் வந்திருந்தது!

"வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா மீனோ, மானோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! ஆனால், உங்களுக்கு என்னவோ தெரியும் என்றீர்களே, அது என்னது, என் மனதுக்குள்ளே எனக்கே தெரியாமல் ஒளித்து வைத்திருந்தது, நீங்கள் கண்டுபிடித்துவிட்ட சிதம்பர ரகசியம்?" என்றாள் கிண்டலாக. "சொன்னால், அய்யோ பாவம், எதையும் அறியாத நானுமே அதைத் தெரிந்து கொள்ளுவேனே!"

"ஓகோ! இப்படி ஏளனமாகப் பேசினால், உண்மை, பொய்யாகிவிடும் என்கிற எண்ணமா?"

"அந்த உண்மை எது என்று சொன்னால் தானே, அது உண்மையா, பொய்யா என்பது தெரியும்?" என்று, மீண்டும் மட்டம் தட்டும் குரலிலேயே கேட்டாள் சந்தனா!

நல்லவேளை, ஆன்ட்டி இங்கே இல்லை! அவர்கள் எதிரில், அவர்களுடைய மகனை இப்படி மட்டம் தட்ட மனம் வராது!

"எது உண்மை என்று எனக்குத் தெரியும்! உன் சர்டிஃபிகேட் அவசியம் இல்லை!" என்றான் அவன் உதாசீனமாக.

"சந்தோஷம்! ஆனால், உண்மை உண்மை என்கிறீர்களே, அந்த உண்மை என்னவென்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! உண்மை சொல்வது, உங்களுக்கு அவ்வளவு கடினமா?"

இது நிஜமாகவே, நன்றாகத் தைக்கும் என்று எண்ணுகையில், சந்தனாவுக்கு உற்சாகமாகக் கூட இருந்தது!

தானுண்டு, தன் வேலையுண்டு என்று சும்மா இருக்கிறவளை, எத்தனை முறை இப்படி வலிக்கப் பேசியிருப்பான்! இப்போது, அவன் முறை! படட்டுமே என்று எண்ணும்போதே, இதற்காக வேறு தன் மீது ஆத்திரப்படுவானே என்று, அவளுக்குப் பெருமூச்சும் வந்தது!

"என்ன? கிண்டலாகப் பேசினால், சமாளித்து விடலாம் என்று எண்ணமா?"

"நீங்கள் தான், என்னவென்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே!"

"சொல்லாமலேதான், தெரியுமே என்று நினைத்தேன்! காது குளிரக் கேட்கத்தான் ஆசை என்றால், இதோ சொல்கிறேன், கேட்டுக்கொள்! அம்மாவை ஏமாற்றி, இந்த வீட்டுக்குள் வந்தாய்! அடுத்துச் சின்ன குழந்தையை மயக்கி, அவள் மூலமாக, என்னையும் வளைத்துப் போட்டு விடலாம் என்பது உன் திட்டம்...!"

சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை!

வந்ததில் இருந்து, அவளிடம் கடுமையாக மட்டும் தான் பேசியிருக்கிறான்! நல்ல வார்த்தையே.. நல்ல வார்த்தை இருக்கட்டும், மனிதனுக்கு மனிதன் காட்டும் சுமுகம் கூடக் கிடையாது. இருந்திருந்து, இவனை வளைத்துப் போடுவதா?

எதற்கு?

அருகில் இருந்து கொத்திப் பிடுங்கிக் கொண்டே இருப்பதற்கா?

என்ன மடத்தனம்!

அவனிடமே கேட்டாள், "அப்படி உங்களை எதற்காக சார், நான் வளைத்துப் போட்டாக வேண்டும்?" என்று, புருவம் உயர்த்தி விசாரித்தாள் அவள்.

எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டு, அவளை ஊடுருவுவது போலப் பார்த்தான் தீபன்.

பிறகு, "எத்தனையோ காரணங்கள்! முக்கியமாக யுஎஸ் மோகம்! அதுதானே, உங்களுக்கெல்லாம் தலையாய குறிக்கோள்! அதை அடைவதற்குத்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாமே!" என்றான் ஏளனமாக.

"இதை, நீங்கள் சொல்லுகிறீர்களா? தன் முதுகு தனக்குத் தெரியாது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! என்னவோ படிக்கப் போய், அந்த நாட்டிலேயே ஐக்கியமானவர்!..."


மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் உன்னைப் பற்றிச் சொன்னேன்! அதற்குப் பதில் சொல்!" என்றான் அவன்.

"தாராளமாகச் சொல்லுகிறேன்!" என்று நிமிர்ந்தாள் சந்தனா. "யுஎஸ் ஒன்றும், யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத பூலோக சொர்க்கம் அல்ல. அதை அடைவதற்காக என்னத் தியாகம் வேண்டுமானாலும் செய்வதற்கு! இப்போது, என் அண்ணனே அங்கேதான் இருக்கிறான்...!"

"யாரை மோப்பம் பிடிக்க?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் தீபன்!

எரிச்சலுற்று "சே!" என்றாள் சந்தனா.

"எப்போது பார்த்தாலும், இதே பேச்சா? என் அண்ணனை, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அங்கே அனுப்பியிருக்கிறார்கள்! எனக்காகவே, அண்ணன் திரும்பி வந்து விடுவதாக இருக்கிறான். அவனே இங்கே திரும்பி வந்துவிடும் போது, நான் எதற்காக அங்கே போக ஆசைப்பட வேண்டும்?"

"இதை, நம்பச் சொல்லுகிறாயா?" என்றான் அவன் பதிலுக்கு.

இதைவிட, நம்ப மாட்டேன் என்று நேராகவே சொல்லியிருக்கலாம்!

அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் சந்தனா.

"நான் நிஜத்தைச் சொன்னேன்! நம்புவதும், நம்பாததும், உங்கள் விருப்பம்! குதிரையைத் தண்ணீரிடம் கொண்டு போய் நிறுத்தத்தான் முடியும்! குடிக்க வைக்க முடியுமா? அது போலத்தான் இதுவும்! சொல்ல மட்டும் தான் முடியும்! ஆனால் ஒன்று! உங்களைப் போல, உண்மை சொல்லுவது, எனக்குக் கடினம் அல்ல!" என்றாள் அவள்.

சற்று அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றத்தான் செய்தது!

ஆனால், அவனுக்கு இது அவசியம்! எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றும் தோன்றிவிட, சற்று அலட்சிய பாவனையுடனேயே நின்றாள்.

மறுபடியும் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு, "ஆசிரியர் மகள் என்றாயில்லையா? அதற்கு ஏற்பப் பிரமாதமாகப் பேசுகிறாய்! அந்த வகையில், உன்னைப் பாராட்டத்தான் வேண்டும்! ஆனால், உன் நோக்கம் எனக்குத் தெரியும்!" என்று தீபன் கூறவும், சந்தனாவின் மனம் சோர்ந்தது!

இவனிடம் பேசியது எல்லாம் வீண்!

விடையை வைத்துக் கொண்டு கணக்கு எழுதுவது போல, இவன் முடிவு செய்துவிட்டு, அதற்காக ஆதாரங்களைச் சேகரிக்கிறான். அவள் என்ன சொன்னாலும், செய்தாலும், அவன் விரும்பிய விதமாகத்தான், அதைச் சித்தரிக்கப் போகிறான்!

எனவே, இவனிடம் என்ன சொன்னாலும், எந்தப் பயனும் இராது!

எப்போதும் இப்படித்தானே, போகிறான் என்று அலட்சியப்படுத்த முடியாமல் உள்ளே வலித்தது!

ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், தலையைத் திருப்பிக் கொண்டு, "தெரிந்து விட்டதல்லவா? ரொம்பவும் சந்தோஷம். இனி வெளியே போங்கள்!' என்று அசட்டை காட்ட முயன்றாள் அவள்.

"போவதா? உன் நோக்கம் தெரிந்து விட்ட பிறகும், அதற்கு வேண்டியதைச் செய்யாமல் வெளியே போனேன் என்றால் என்னைப் பற்றி என்ன நினைப்பாய்?" என்றதோடு, கதவைத் தாளிட்டான் அவன்!

"என்ன..." என்று அவள் திகைப்புற்றுத் திரும்பவும், "திருமணத்துக்கு மட்டும் ஆசைப்படாதே! ஒரு சூடு எனக்குப் போதும்! ஆனால், மற்றபடி உனக்கு ஏமாற்றம் இராது! பண விஷயத்தில், நான் எப்போதுமே தாராளமாகத்தான் இருப்பேன்!" என்றபடி, அவளைப் பற்றி அணைத்தான் தீபன்!

தீபன் இப்படிச் செய்யக்கூடும் என்ற எண்ணம் சற்றும் இல்லாததாலோ என்னவோ, சந்தனா சில வினாடி நேரம் செயலற்றுப் போனாள்!

ஆனால், அதைச் சம்மதமாக எண்ணி, அவன் செயல்பட்ட விதத்தில் வெகுண்டு, இரு மடங்கு பலத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு, அவனைப் பிடித்துத் தள்ளினாள்.

சற்றுத் தடுமாறியபோதும், இலகுவாகவே சமாளித்துக் கொண்டு, "ரொம்பவும் பிகு பண்ண வேண்டாம், சந்தனா!" என்றான் தீபன்! "அப்புறம், அதை நிஜம் என்று நான் நம்பிவிட்டால், உனக்குத்தான் நஷ்டம்!"

என்ன மனிதன் இவன்...?

நிஜத்தை, நிஜம் என்று நம்பிவிட்டால் என்கிறான்!

உண்மை, பொய் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத...

ஒரு கணம் தயங்கிய போதும், 'அடிமுட்டாள்' என்று வாக்கியத்தை, மனது முடிக்கத்தான் செய்தது!

பட்டப் பகலில்! அவனுடைய தாய் வீட்டில்! அந்தத் தாயும், அந்த வீட்டிலேயே இருக்கையில்!

இதிலெல்லாம் நீக்குப் போக்காக இருக்கிற நாட்டில் இப்போது வாழ்ந்தாலும், இவன் பிறந்து வளர்ந்தது, இங்கே தானே?

அப்படியென்ன ஒரு வெறி, அவளை நம்பவே கூடாது என்று?

ஏன் இப்படி?

ஏன், எப்படி என்று யோசிக்கிற நிலையெல்லாம் முடிந்து போயிற்று!

என்னதான் வெறி என்றாலும், கடைசி எல்லையையும், தீபன் தாண்டிவிட்டான்.

இனி...

எஃகு நாணின் விறைப்புடன் நிமிர்ந்து நின்று, கை நீட்டிக் கதவைக் காட்டினாள் சந்தனா. "போங்கள் வெளியே!"

"சந்தனா..."

"உடனே வெளியே போங்கள்! அல்லது... மூன்றாம் அறையில் உங்கள் அம்மா தூங்கிக் கொண்டு இருப்பது, உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்! இந்தப் பிற்பகல் தூக்கம், திடுமெனக் கலைந்து, பதற்றத்துடன் எழுவது, ஆன்ட்டியின் உடல் நிலைக்கு நல்லதல்ல என்பதும் தான்! இதற்கு மேல், நீங்கள் இங்கே நின்றால், அப்படி அவர்கள் விழித்தெழும்படியாக, நான் கத்திக் கூச்சலிட வேண்டியிருக்கும்! அதற்கு, ஒரு கணம் கூடத் தயங்க மாட்டேன். அதனால்... ம்! கெட் அவுட்!" என்றாள் உறுதியான குரலில், அழுத்தம் திருத்தமாகச் சந்தனா!

ஒரு வினாடி, அவள் முகத்தில் எதையோ தேடுவான் போலப் பார்த்தான் அவன்.

கருங்கல் சிலை மாதிரி, கதவைக் காட்டிய கை கூட இறங்காமல், அவள் அப்படியே நிற்கவும், சட்டெனத் திரும்பி வெளியே சென்றான்.

மாடிப் படிகளில், அவனது காலடியோசை தேய்ந்து மறையும் மட்டும், சந்தனா நின்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை!

அப்புறம் கூட, சில பல நிமிஷங்கள் அவளிடம் அசைவே இல்லைதான்.

அறை ஜன்னலின் அருகருகாகப் பறந்து சென்ற, அந்த விட்டு மாமரக் கிளியின் கீச்சிடல் மட்டும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வரவில்லை என்றால், இன்னும் எவ்வளவு நேரம், அப்படியே நின்றிருப்பாளோ!

பசிய நிறத்தில் அம்புகளாய் வானத்தில் பாயும், அந்தக் கிளிகளை, ஆன்ட்டியும், அவளும் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பார்கள்!

ஆனால், இனி, அது முடியாது!

ஒரு போதும்!

சட்டென சுற்றுப் புறம் புரிந்தவள் போன்று, சந்தனா ஓடிச் சென்று கதவைச் சாத்தி, உட்புறம் தாளிட்டாள்.

இந்தத் தாளிடலை, அந்த வீட்டில், அவள் முக்கியமாக நினைத்தது கிடையாது!

அதுவரை!

ஆனால், இனி இது முடியாது!


அந்தத் தேவையோடு, அவள் அங்கே இருப்பதே கூடாதே!

இருந்தால், அவளது மறுப்பு வெறும் பிகுதான் என்று, அவன் நிச்சயமாக நினைப்பான்!

அப்புறம்... சே!

தலைமை ஆசிரியருடைய மகள் என்பதாலோ, என்னவோ, சந்தனாவுக்கு, இந்த மாதிரியான அவமதிப்புகள் நேர்ந்ததே இல்லை எனலாம்!

எப்போதுமே மதிப்பும், மரியாதையும் தான்! பண்பும், பிரியமும் தான்!

எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்து, இன்று...

சேசே! அதைப் பற்றி நினைக்கக் கூடாது! இனி என்ன செய்வது என்று மட்டும் தான்...

'விண் விண்' என்று தெறித்த தலையைப் பிடித்தபடி, சந்தனா யோசிக்க முயன்றாள்.

எப்படியும், இந்த வீட்டை விட்டுப் போயாக வேண்டும்! எங்கே, எப்படி என்று மட்டும் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்!

சிரமப்பட்டு, வலியை ஒதுக்கி யோசித்ததில், உடனடித் தீர்வுக்கு, ஒரே ஒரு வழி அவளுக்குத்
தென்பட்டது!

Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitimeSun May 23, 2010 5:01 pm

அன்றைய மதியத் தூக்கம் முடிந்து, மாலைக் காபிக்காக மீனாட்சி அம்மாள் கீழே வந்து உட்கார்ந்த போது, மகன் தீபனும் உடன் வந்து அமர்ந்தான்.

எப்போதேனும் வேலை இல்லாத சமயங்களில், அவன் அப்படி வருவது உண்டுதான் என்பதால், மீனாட்சிக்கு அதில் அதிசயம் ஏதும் தோன்றவில்லை!

ஆனால், "சந்தனாவுடைய அண்ணன் எங்கேம்மா இருக்கிறார்?" என்று கேட்டது ஆச்சரியமாகத்தான் இருந்தது!

சந்தனாவின் பெயரைக் கேட்டாலே, எண்ணெயில் விழுந்த அப்பமாகக் குதிக்கிறவன், அவளுடைய உறவைப் பற்றியெல்லாம் விசாரிக்கிறானே!

வியப்புடன் நோக்கி, "ஏன் கேட்கிறாய்?" என்று பதில் கேள்வி கேட்டாள் அன்னை!

"என்னம்மா நீங்கள்? அதிகப் பழக்கம் இல்லாத பெண்! அவளை வீட்டுக்குக் கூட்டி வந்து வைத்திருக்கிறீர்கள்! அவளுடைய உற்றம், சுற்றம் எப்படி, எங்கே என்று விசாரிக்கக் கூடாதா?" என்று குறையோடு கேட்டான் மகன்.

பழக்கம் இல்லாத ஒருத்தியைத் திருமணமே செய்தவன், என்னைக் கேட்கிறாயா என்று எழுந்த கேள்வியை உள்ளேயே அடக்கினாள் அன்னை!

அவனே, அதில் நொந்துவிட்டவன்! அதை, இப்போது குத்திக் கிளறுவதில் என்ன லாபம்?

ஒருவேளை, அவளை வைத்து எடை போடுவதால் தான், சந்தனாவிடம், இப்படிக் காய்கிறானா?

அத்தோடு, இந்தப் பத்திரிகைப் பிரச்சினை வேறு!

மகனை நியாயப் படுத்துகிறோம் என்று உணர்ந்து, அந்த வகை எண்ண ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக் கொண்டு, அவன் கேட்ட விவரங்கள் அனைத்தையுமே தாயார் தெரிவித்தாள்.

"தாய் இல்லாததால், உறவுகள் பழக்கம் ரொம்பவே விட்டுப் போயிற்று போல! ஆனால், அண்ணன் தங்கைக்குள் பாசம் அதிகம்! தந்தை இறந்த பிறகு, தங்கையைத் தனியாக இங்கே விட்டுவிட்டு, யுஎஸ் போகவே அவனுக்கு மனமில்லை. ஆனால், போக மறுத்தால், தந்தை இவ்வளவு காலம் சேர்த்து வைத்தது அனைத்தையுமே கட்ட வேண்டிய நிலைமையாம்! அதனால் சந்தனா தான், அண்ணனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாள்! மொத்தத்தில், ஆறு மாத வேலை என்றாலும், முடிந்தவரை, அதைச் சீக்கிரமே முடித்துவிட்டுத் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறானாம்!"

எல்லாமே, சந்தனாவாகச் சொன்னவையாகத்தான் இருக்கிறது!

"அந்த அண்ணனின் முகவரி உங்களிடம் இருக்கிறதாம்மா?"

திரும்பி மகன் முகத்தைப் பார்த்தாள் பெற்றவள். "என்னடாப்பா சந்தேகமா? பூபாலன் வந்துவிட்டால், சந்தனாவைக் கூட்டிப் போய்விடுவானே, அவளைப் பிரிய நேருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! நீயானால்..."

"ஐயோ, என்னம்மா நீங்கள்! ஓர் அன்னியப் பெண்! நம் பொறுப்பில் இருக்கிறாள்! ஏதோ ஓர் அவசரம் என்றால், ஒரு காய்ச்சல் என்றால் கூடத் தகவல் தெரிவிக்கவேனும், அவளுடைய உறவினர் முகவரி வேண்டாமா? அதற்காகக் கேட்டால், என்னென்னமோ சொல்லுகிறீர்களே!

"அவள் இங்கே என்னோடு தங்க வந்தபோது, தங்கை தனியே தவிக்க நேராமல், உடன் வைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்து, அந்தப் பையன் யுஎஸ்சில் இருந்து ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனது விலாசம் முழுதாக இருக்கிறது! பாவம்! தாயில்லாவிட்டாலும், பெரியவர், பிள்ளைகளைப் பண்போடு வளர்த்திருக்கிறார்!"

"அந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்!" என்று தீபன் கேட்கவும், "கேட்பாய் என்று நினைத்தேன்!" என்றாள் தாய் ஒரு மாதிரிக் குரலில்! "நல்ல மனிதர்களைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சந்தேகப்படுகிறாயே!" என்று சற்று வருத்தமும் பட்டாள்!

இப்போது, மகன் தன்னை மறைக்க முயற்சிக்கவில்லை! "என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தாலும், போதாது என்று தான் சொல்வேன், அம்மா! அத்தோடு, எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவரை, நம்பாமல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஏமாற்றத்துக்கு இடமிராது! அந்த முகவரியைத் தருகிறீர்களா?"


யாரை நம்பலாம் என்று கூட அறிந்து கொள்ளத் தெரியாமல், இவன், அங்கே என்ன தான் வாழ்க்கை நடத்துகிறானோ என்று உள்ளூர அலுத்தபடி, "தாராளமாகத் தருகிறேன்! அவர்கள் யாருமே, தங்கள் முகவரியையோ, டெலிபோன் எண்ணையோ யாருக்கும் தரக்கூடாது என்று சொன்னதே இல்லை!" என்று மகனுக்கு ஒரு சிறு குட்டுக் கொடுத்துவிட்டு, பூபாலனின் முகவரியை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள் அன்னை!

தாயின் செல்லை வாங்கி, எலிசாவோடு தொடர்பு கொண்டு, பூபாலனின் முகவரியை அவளிடம் சொன்னான் தீபன்.

"இந்த முகவரி சரிதானா என்று செக் பண்ண வேண்டும், எலிசா!" என்றான்.

எதிர் முனையில் அவள் ஏதோ கேட்கவும், "என் அம்மா மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண்ணுடைய அண்ணன்! அம்மா ஏமாந்துவிடக் கூடாதே என்று தான்! என்னது? நான் வருவதா? பா...ர்க்கலாம்! கொஞ்ச நாள் ஆகட்டும்! அதன் பிறகு சொல்கிறேன்! வைத்துவிடு...பை!" என்று செல்லை அணைத்தான் தீபன்!

"என்ன? கூப்பிடத் தொடங்கிவிட்டாளா? என்றைக்கு டிக்கெட் எடுக்கப் போகிறாய்?" என்று மீனாட்சி எரிச்சலோடு கேட்க, "இப்போதைக்கு இல்லைம்மா! நிஜம்!" என்று அழுத்திச் சொன்னான் அவன்.

தன் பொம்மையோடு வந்து, "பசி!" என்றாள் மித்ரா. "இன்றைக்கு ஏன் கிராண்ட்மா, சந்தனா சிற்றுண்டி சாப்பிட வரவில்லை? என்னை மட்டும், கட்டாயம் சாப்பிடணும் என்பாளே?" என்று, சந்தனாவைத் தேடினாள்.

"ஆமாம், அவள் ஏன் இன்னும் வரவில்லை?" என்றாள் மீனாட்சியும்!

சமயத்தில் சமையல்காரம்மாவும் வந்து, "அவங்க அறைக் கதவு சாத்திருக்கம்மா! நானும், கூப்பிட்டுப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்! சந்தனாப் பொண்ணு, பதிலே சொல்லவில்லை! பாத்ரூமிலே இருக்கிறாளோ என்று வந்துவிட்டேன்!" என்றாள்.

ஆட்டம் காட்டுகிறாளா, அல்லது அவனைச் சந்திக்கக் கூடாது என்று எண்ணுகிறாளா?

எதுவானாலும் வயிறு காய்ந்தால், தானாக வருவாள் என்று நினைத்த தீபன், "ஏதாவது முக்கியமாக முடிக்க வேண்டிய வேலையாக இருக்கும், அம்மா! நோட்டுத் திருத்துவது, பாடம் தயார் பண்ணுவது என்று நீங்கள் தான் கடமை, கண்ணியத்தோடு வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே! ஆனால், அப்படி ஒன்றும், ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யமாட்டாள் என்று நினைக்கிறேன்! பசித்தால், தானாக வந்து சாப்பிடுவாள், நீங்கள் முதலில் சாப்பிட வாருங்கள்!" என்று, தாயையும் மகளையும் உண்ண அழைத்துப் போனான்.

மகனோடு பேசிக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் அவனோடு உணவருந்தச் சென்றாலும், உள்ளூர ஏதோ நெருட சந்தனாவை அழைத்து வருமாறு, சமையல்காரம்மாவை மீண்டும் அனுப்பி வைத்தாள் மீனாட்சி.

மீண்டும் பதில் இல்லை என்றானதும், சந்தனா யாரையும் அலட்சியம் செய்கிற பெண் இல்லையே என்று எண்ணி சமையல்காரி, என்னவோ என்று, சட்டெனப் பதறிப் போனாள்.

கீழே விழுந்து, கிழுந்து அடி ஏதும் பட்டிருந்தால்?

கதவுக் குமிழைத் திருகினால், கதவு உடனே திறந்து கொண்டது! உட்புறம் தாளிடவே இல்லை!

அறையின் உள்ளேயோ, குளியல் அறையிலோ சந்தனா இல்லை என்றானதும், சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு, படுக்கையை ஒட்டியிருந்த முக்காலி மீது மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதம் கண்ணில் பட்டது!

அதைப் பிரித்துப் படிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று உணர்ந்து, கடிதத்தை அப்படியே எடுத்துப் போய், மீனாட்சியிடம் கொடுத்தாள்.

"அறையில் சந்தனா இல்லையம்மா! இந்தக் கடிதாசி மட்டும் முக்காலி மேலே இருந்தது!"

ராட்சசி! எல்லாவற்றையும் எழுதியிருப்பாளோ என்று, சட்டென தீபனின் முகம் கன்றிவிட்டது!


அன்னையின் ஒழுக்க விதிகளே வேறாயிற்றே!

"என்னது?" என்று பதட்டத்துடன் மீனாட்சி கடிதத்தைப் பிரிக்கையிலேயே, "நான் படிக்கிறேன் அம்மா! நீங்கள் அமைதியாக இருங்கள்!" என்று பிடுங்காத குறையாகக் கடிதத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு, அப்பாடி என்றிருந்தது!

சந்தனாவின் சுருக்கமான கடிதத்தில், அவனது பெயரே இல்லை!

அவளுக்குத் தங்குவதற்கு, ஒரு நல்ல் விடுதியில் இடம் கிடைத்துவிட்டது! இன்றே வந்தால் தான், இடம் உறுதி என்பதால், ஒரே செடி மாற்றுடையோடு போவதாகவும், பிறகு வந்து மற்றவைகளை எடுத்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.

"உங்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்புவதுதான் சரியான முறை, ஆன்ட்டி! ஆனால், என் மீதுள்ள அன்பினால், தடுக்கப் பார்ப்பீர்கள்! உங்களை மீறிச் செல்ல நேருமே என்றுதான், இப்படிக் கிளம்புகிறேன், ஆன்ட்டி! நீங்கள் எனக்குச் செய்திருக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி!" என்றவள், அந்த வீட்டில் இருக்கையில் தன் மீது அன்பு காட்டிய சமையல்காரம்மா, ராசையா, பணிப்பெண் எல்லோருக்குமே நன்றி தெரிவித்ததோடு, 'மித்திக் குட்டிக்கு அன்பைச் சொல்லவும்' என்று முடித்திருந்தாள்!

கடிதத்தை உரக்கப் படித்து முடித்த போது, அவனது பெயர் விடுபட்டிருந்ததே, இப்போது முகத்தில் அறைந்தது போலத் தீபனுக்குத் தோன்றியது!

அவனால் தான் போயிருக்கிறாள் என்று காட்டியிருக்கிறாள்!

அவளது இந்தியப் பண்பாட்டுக்கு, அவனது செயலைச் சாதாரணமாக எடுத்து, உரிய மதிப்புக் கொடுத்து, ஒன்றுமில்லை என்று விட்டுவிடத் தெரியவில்லை!

அப்படி, அவன் என்ன முரட்டுபலம் காட்டி, அவளை பலாத்காரமா பண்ணிவிடப் போகிறான்? முட்டாள், என்று எண்ணியவனுக்குத் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்கையில், சந்தனா மீது கோபமும் வந்தது!

ஏதோ, சரியாக இதே சமயத்தில், அவளுக்கு ஒரு விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது! இல்லாவிட்டால் முழுங்கிக் கொண்டு சும்மாதானே இருந்திருப்பாள்! இப்போதும், அப்படியே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே என்று எரிச்சலுடன் நினைத்தான்!

அழத் தயாராக இருந்த மகளையும், முகம் வாடியிருந்த தாயையும் சமாதானம் செய்து, வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசி உற்சாகப் படுத்துவதிலேயே, அன்றைய மாலை முழுவதையும் தீபன் செலவிட நேர்ந்தது!

அப்போதும், அதில் முழு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாத நிலைதான்!

இபப்டி வீட்டை விட்டுப் போவாள் என்று தெரிந்திருந்தால் எப்போதும் போல ஒதுங்கியே இருந்திருப்பான்!

சந்தனா, இவ்வளவு அழகாக இல்லாமல் இருந்து தொலைந்திருந்தாலும், இந்தப் பிரச்சினை நேர்ந்திராது!

பளிச்சென்று கண்ணைக் கவர்கிற அழகோடு, வீட்டில் ஒருத்தி வளைய வந்தால், ஓரிரு சமயம் இப்படியும் நடக்கக்கூடும் தானே?

இதற்குப் போய், இப்படி வீட்டை விட்டே வெளியேறி விட்டால், எத்தனை பேருக்கு மனது கஷ்டப்படும் என்று யோசிக்க வேண்டாமா என்று, சந்தனா மீதே எரிச்சல் பட்டான் தீபன்!

இந்த அழகில் அவள் ரொம்பத்தான் பாசம் உள்ள பெண் என்று உருகுகிறார்கள், இந்த அம்மா! அப்படிப் பாசம் இருக்கிறவள் என்றால், தன் பிரிவால் ஒரு முதியவளும் குழந்தையும் பாதிக்கப் படுவார்களே என்று, வீட்டை விட்டு வெளியேறு முன் யோசித்திருக்க மாட்டாளா என்ன?

என்னதான் முயன்றும், வீடு களையிழந்து தெரிந்தது!

மித்ரா, தன் பழைய வழக்கப்படி, பொம்மையை அணைத்துப் பிடித்தபடி, ஒரு சோபா மூலையில் முடங்கி விட்டாள்.

மீனாட்சி அம்மாள், மருத்துவமனைக் கணக்குகளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவள், கண்ணாடி கூடப் போடாமல், விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்!


ஹால் டீவி ஓடிக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்ப்பார் இல்லாமல், சமையல்காரம்மா கூடத் தலையைப் பிடித்துக் கொண்டு கண் மூடிக் கால் நீட்டி அமர்ந்திருந்தாள்!

தன் எழுத்து வேலையைத் தொடங்கிய தீபன், அதில் மனம் ஒன்றாமல் எழுந்து வெளியே வந்தபோது, கண்ட காட்சி இதுதான்!

என்ன இது?

எவளோ ஒருத்தி, ரத்த சம்பந்தமே இல்லாதவள், சில மாதங்கள் இருந்துவிட்டு, அவளுடைய அண்ணன் வந்ததும் அவனோடு இந்த வீட்டை விட்டுப் போய்விடப் போகிறவள்! அவள் இல்லை என்பதற்காக, எல்லோரும் ஏதோ வீடு மாதிரித் துக்கம் காக்கிறார்கள்!

இத்தனைக்கும், சந்தனா நல்லவளா, கெட்டவளா என்பது கூட, இன்னமும் நிச்சயமில்லை!

எரிச்சலோடு நடந்து போய், டீவியை ஆஃப் செய்தான் தீபன்!

என்ன என்பது போல, வெறுமனே அவனைப் பார்த்தாள் அவளுடைய அன்னை!

தூக்கம் கலைந்த மாதிரி, வாரிச் சுருட்டி எழுந்து, "நேரமாகிவிட்டதா, தம்பி? டிபன் எடுத்து வைக்கட்டுமா?" என்று வினவிய சமையல்காரம்மா, ஹாலின் பழைய காலத்துக் கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.

"இன்னும் நேரமாகவில்லையே! தம்பிக்குப் பசித்து விட்டதா? பலகாரமே வைத்து விடட்டுமா, அல்லது, கொறிக்கிற மாதிரி ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று மீண்டும் கேட்டாள்.

"ஒன்றும் வேண்டாம்! ஆனால், நீங்கள் எல்லோரும், ஏன் இப்படி ஒரேயடியாக டல்லடிக்கிறீர்கள்? அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, சாதாரணமாக இருங்களேன்!" என்றான் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்!

'உச்சு'க் கொட்டினாள் மீனாட்சி அம்மாள்.

"என்னவோ, சந்தனா இங்கே இருந்தால், பள்ளியில் நடந்தது, பேப்பரில் வந்தது என்று ஏதாவது சொல்லுவாள்! நாம் சொல்லுவதையும் கேட்பாளா, அவள் இல்லாதது, கையொடிந்த மாதிரி, வேலையே ஓட மாட்டேன் என்கிறது! நாலைந்து நாட்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! போகட்டும் போ! நாங்கள் எப்படியோ சமாளிக்கிறோம்! நீ போய், உன் வேலையைக் கவனி!" என்று தாயார் சொல்லவும் தான், தீபனுக்குச் சுரீலென உறைத்தது!

அவனும் வேலை ஓடாமல் தான் எழுந்து வந்தான்!

அப்படியானால், அவனும், சந்தனா வீட்டில் இல்லாததை உணர்கிறானா?

எப்படி?

நம்ப முடியவில்லை அவனால்!
Back to top Go down
Sponsored content





ரமணி சந்திரன் நாவல்கள் Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் Icon_minitime

Back to top Go down
 
ரமணி சந்திரன் நாவல்கள்
Back to top 
Page 1 of 2Go to page : 1, 2  Next
 Similar topics
-
» திருமதி.ரமணிசந்திரனின் சில நாவல்கள் (Part 14)
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» சிவகாமியின் சபதம்
» திருமதி. ரமணிசந்திரனின் சில நாவல்கள் (Part 1)
» திருமதி. ரமணிசந்திரனின் நாவல்கள் (Part 2)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: