arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: படித்து ரசித்தது...Oh ! no!...படித்து சிரித்தது !! Sat Aug 07, 2010 4:08 am | |
| படித்து ரசித்தது...Oh ! no!...படித்து சிரித்தது !! 1) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா???... இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???
2) நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது, அ) பாட்டியா???? ஆ) காக்காவா???
உடனடியா பதில் தேவை......!!!!
3) ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க.... எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட answer paper கொடுக்குறாங்க... என்ன கொடும சார் இது????....
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது...
6) ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான், ஐயா.
7) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!!
Doctor: ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது..
நோயாளி: இல்ல பரவால்ல.. கேளுங்க Doctor ஐயா..
Doctor: operation'க்கு அப்பறம் நான் fees'ஜ யார்கிட்ட போய் வாங்கறது???
9) நோயாளியின் உறவினர் : Doctor! எனக்காக நீங்க ஒரு காரியம் பண்ணணும்...!
Doctor: Sorry...நான் operation மட்டும்தான் பண்ணுவேன்.... காரியம் நீங்கதான் செய்யணும்!
10) Doctor : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீனும் கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி doctor அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????
11) நபர் - 1: ஏண்டா..! நாளைக்கு ஒரு நாள் லீவு இருக்கே நான் எங்க சித்தி வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்..... நீ எங்கே போகப் போறே..???
நபர் - 2: நான் 'Zoo'வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா...
நபர் - 1: அது சரி... அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற இடத்துக்குதானே போக முடியும்!!!..
12) நபர் - 1: நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதுக்கு "அந்த மாடு எங்க மேயுதோ?"ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில மரியாதை அவ்வளவுதானா???
நபர் - 2: ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு... அது நீ தானா???
13) நபர் - 1: "இப்ப இருக்கற பொருளாதார சூழ்நிலையில கம்பெனி தடுமாறுது. அதனால உங்களை வேலையை விட்டு அனுப்பறோம்"னு சொன்னாங்களா???.. நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க????
நபர் - 2: இப்ப இருக்கற பொருளாதார சூழ்நிலையில வேலைக்கு வர்றதும் கூட எனக்கு கஷ்டமாத்தான் இருக்குன்னு சொல்லிட்டேன்!
14) Love marriage'கும் arranged marriage'கும் என்ன வித்தியாசம்???
நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage! பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!!
15) தற்கொலை, கொலை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?....
உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை.. உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை....
16) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது..... ஏனெண்டா Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!
17) உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?....ரொம்ப சிம்பிள். உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு type பண்ணி, ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்க பேர type பண்ணுங்க...அப்புறமா ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்களோட காதலன் அல்லது காதலி பேர type பண்ணுங்க..
இந்த SMS'ஜ யாருக்கு அனுப்பணும்னு தெரியணுமா??? கொஞ்சம் கீழ வாங்க.............. <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> வேற யாருக்குமில்ல, இந்த SMS'ஜ உங்க அப்பாவுக்குத் தான் அனுப்பணும். உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு!!!…. எப்புடி??????
18) வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?
வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய ”குருவி” பட டிக்கேட் ஓசில தந்தான். சரி போனா போகுதுனு மூனு மணி நேரம் தெணற தெணற படம் பாத்தேன்... அதான்!
தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே???!!
வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான். இவன் ரொம்ம்ம்மப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது???
19) Customer : இந்த TV என்ன விலை?
Sales man : 1,00,000 ரூபாய் Sir!
Customer : அப்படி என்ன special இந்த TV'ல????
Sales man : TVல விஜய் படம் வந்தா இது தானாவே வேற channel மாத்திடும்.
Customer : அப்படீனா நாம 1,50,000 ரூபாய் கூட குடுத்து வாங்கலாமே. பணத்த விட உயிர் முக்கியம் இல்லையா??!!!!
20) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா???? ஆ..சொல்லட்டுமா???? ????? பக்கத்து “பெருமாள் கோவில்”ல சுண்டல் போடுறாங்க... ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?.... | |
|
NaviNesh
Posts : 249 Points : 572 Join date : 2010-05-24 Age : 35 Location : The Little World Of Cuties
| |