BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவிருந்தாளி – கவிதை Button10

 

 விருந்தாளி – கவிதை

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

விருந்தாளி – கவிதை Empty
PostSubject: விருந்தாளி – கவிதை   விருந்தாளி – கவிதை Icon_minitimeMon Mar 15, 2010 3:06 pm

விருந்தாளி – கவிதை


நீ இல்லாமலேயே கூட

நான் அழகாய்த்தான்

இருந்திருக்கிறேன்!

நீ வந்ததிலிருந்து

காலையில் எழுந்தவுடன்

உன்னைக் கவனிக்கத்தான்

சரியாக இருக்கிறது!



-
கோபம் வந்தால்

யாரையாவது கடித்து தொலைத்து

வம்பில் மாட்டி விடுகிறாய்!

கிடைக்கும் பொருள்களை எல்லாம்

தூள் தூளாக்குகிறாய்!

ஆனாலும்…

உன்னைப் புகழ்கிறார்கள்!

நீ வந்ததிலிருந்துதான்

நான் இன்னும்

அழகாய் இருக்கிறேன் என்று

அம்மா ஆசையோடு சொல்லிக் கொள்கிறாள்!


-
அடக்கமாய் இருந்தாய் உள்ளே!

ஆசையை வளரவிட்டேன் உன்மீது!

மூன்றாம் வகுப்பில் படிக்கிறபோது

முந்திரிக் கொட்டையாய்

ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்தாய்!


-
ஒரு நாள்-

தோழிகளெல்லாம் கிண்டல் செய்ய…

என் வருத்தத்தையும் பாராமல்

ஏமாற்றிவிட்டு ஓடிப்போனாய்!

முதன் முதலாய் வந்த நீயே…

முதன் முதலாய் பிரிந்தாய்!



-
இப்போது நான்…

பொக்கையோடு நிற்கிறேன்!

பிரிந்து சென்ற

பால் பல்லே…

இப்போது … திருப்தியா?

Anand
நன்றி; மங்கையர் மலர்
Back to top Go down
 
விருந்தாளி – கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விருந்தாளி – கவிதை
» கவிதை நேரம்
» ~~அழையா விருந்தாளி~~
» கவிதை by newdust
» கவிதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: