என் இனிய BTC உறவுகளே... வணக்கங்கள்!
எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்.
நம்மில் பலரும் விரும்பத்தகாத ஏதேனும் ஒரு சிக்கலில் இருக்கலாம், விடுபடும் உத்தி என்னவெனத் தெரியாமல் இருக்கலாம். இக் கட்டுரைப் படி செயற்பட்டு எம்மத் தெளிவுபடுத்திக் கொள்ளலாமா என் BTC நண்பர்களே…!!!
உங்களால் தாங்க முடியாத ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால் விட்டுவிடுங்கள்.
இது வீரத்தைக் காட்டுவதாக இல்லையே, சரிதான். கற்சுவர் என்று தெரிந்தும் உங்கள் தலையால் முட்டிப் பெயர்க்க நினைத்தால் அது உங்கள் விடா முயற்சியைக் காட்டுவதாக இருக்கலாம். வலியை நீங்கள் எவ்வளவு தாங்குவீர்கள் என்று அறிவிப்பதாக அமையலாம். ஆனால் அது வீரமில்லை, வெறும் முட்டாள் தனம்.
இந்த உலகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு கஷ்டங்கள், ஏமாற்றங்கள், மன வலிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாம் நிலைதவறாத ஆளுமையை நிலைநாட்ட வேண்டுமென்றால் வாழ்க்கை நமக்கு அளிக்கும் நம்மால் தாங்கக்கூடிய உதைகளைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தவிர்க்க முடியாத துன்பங்கள் எதிர்கொள்ளும் போது நாம் 4 விதமாக அவற்றைச் சமாளிக்க வேண்டும்:
1)துன்பத்தை முதல் காரியமாக ஒத்துக்கொள்ளுங்கள், அதை எதிர் கொள்ளாதது போல் பாசாங்கு செய்யாதீர்கள்.
2)வாழ்க்கையின் பல சுழற்சிகளில் இது தவிர்க்க முடியாதது என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.
3)அதற்கேற்ப சமாளியுங்கள் – வெற்றிகரமான ஆளுமையின் முக்கிய குணாதிசயமே- மாற்றங்களை- முக்கியமாக மனதுக்குப் பிடித்தமில்லாத மாற்றங்களைச் சமாளிக்கும் முயற்சியில் வெற்றி காண்பது தான்.
4)சூழ்நிலையை அமைக்கும் விதமாக செயற்படுங்கள். எந்த சூழ்நிலையையும் மாற்றி அமைக்க நீங்கள் ஏதாவது செய்ய முடியும். அது என்ன என்று கண்டு பிடியுங்கள். உடனடியாகப் புத்திசலித்தனமாகச் செயற்பட்டால் மனக் கஷ்டம் தீரும், பிரச்சனைக்கும் பரிகாரம் கிடைக்கும்.
இந்த 4 நடவடிக்கைகள் வரிசைப் படி மேற்கொண்டால் நீங்கள் எப்பேர்ப்பட்ட தவிர்க்க முடியாத துன்பத்தையும் எதிர் கொள்ளலாம்.
துன்பம் தவிர்க்க இயலாதது என்னும் போது திட உணர்வும், மன அளவில் உடல் அளவில் உறுதியும் நம்பிகையும் உங்கள் எதிர்கொள்ளும் திறமையை வலுப்படுத்தும்.
ஆனால் எல்லாத் துன்பங்களும் தவிர்க்க இயலாதவை அல்ல. அதை எதிர்கொள்வதா அல்லது விட்டுவிடுவதா என்பதை உங்கள் சொந்த நன்மையை மனதில் கொண்டு நீங்களே தான் தீர்மானிக்க வேண்டும்.
துன்பங்களை எதிர்கொண்டு மோதும்போது உங்கள் மன வலிமை திடம் பெறுகிறது, மன உறுதி, உடல் உறுதி இவை புடம் போடப்படுகிறது. உங்கள் மீதான உங்கள் நம்பிக்கையை வளர்க்கிறது.
துன்பத்தை எதிர்கொண்டு சமாளிக்க முடியும்; அதனால் மனவலிமை வலுப்பட்டுப் பிரச்சனைக்குப் பரிகாரம் காணும் பயிற்சியாகவும் அது அமையும் என்றால் தாராளமாக எதிர்கொள்ளுங்கள். சவால்களைச் சமாளிப்பதில் இடைஞ்சல்களைத் தகர்ப்பதில் ஏற்படும் (த்ரில்) வியப்பு உணர்ச்சியில் வாழ்வின் இன்பம் அடங்கியுள்ளது.
உங்கள் விடாமுயற்சியைக் காட்டவோ, வலி தாங்கும் வைராக்கியத்தைக் காட்டவோ, பலியான பிம்பம் உருவாக்கவோ கற்சுவற்றில் முட்டாதீர்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கற்சுவர்கள் உள்ளன, தொடர்ந்து முட்டினால் அது உங்களைப் பலி வாங்கிவிடும், தெரிந்தும் முட்டாதீர்கள், விட்டு விடுங்கள்.
கற்சுவர் என்றால் என்ன ? சில உதாரணங்கள்.
வாழ்க்கைப் பாதையில் சமீபத்திலோ வெகு நாட்கள் முன்னமேயோ நீங்கள் ஒரு தவறான சாலையைத் தெர்ந்தெடுத்து விட்டீர்கள். அந்த நேரம் அது சரியான சாலை என்று தோன்றியது. ஆனால் அந்த சாலையில் இப்போது உங்கள் மகிழ்ச்சியை, வெற்றியை மறைத்து நிற்பது- ஒரு கற்சுவர். அந்த சாலைக்குள் மேலும் நடக்காதீர்கள்.சரியான சாலையைத் தேர்ந்தெடுங்கள் இப்போதே.
தவறான உத்தியோகத்தில் சகிக்க முடியாதபடி மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். விட்டுவிடுங்கள். தவறான வியாபாரத்தில் குறைவானலாபம், வாய்ப்புக்களின் மத்தியில் நீங்கள் உழைத்து வரலாம்.விட்டுவிடுங்கள். பொருந்தா திருமணங்கள் வாழ்கையில் கல்தூண்கள். விட்டுவிடுங்கள். விறுவிறுப்பான சம்பாஷணையோ, சந்தோஷமான அனுபவங்களோ பயனுள்ள தோழமையோ கிடைக்காத ஒரு குழுவில் நீங்கள் சிக்கியிருக்கலாம். விலகிவிடுங்கள்.
சகிக்க முடியாத சூழ்நிலையிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களை யாரும் கோழை என்று கூறிவிடுவார்களோ என அஞ்சாதீர்கள். நீங்கள் அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை என்றால் யாரேனும் ஏதாவது சொல்வார்களோ என்று எண்ணி கற்சுவற்றில் மோதி உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதைக் காட்டிலும், விட்டுவிடுவது மிகவும் புத்திசாலித்தனம். தைரியமான செயல். வேறு பல பயனுள்ள நல்ல அனுபவங்களை நாடிச் செல்ல வழிவகுக்கும்.
விட்டுவிடப் பயப்படாதீர்கள்.
- நன்றியுடன் ........... ப்ரியமுடன்